என் மலர்
உள்ளூர் செய்திகள்
- அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று கண்டன உரையாற்றினார்.
- ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க.வினர் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி கருணாபுரம், மாதவச்சேரி, வீரசோழபுரம், மாடூர் உள்ளிட்ட கிராமங்களை சேரந்தவர்கள் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து 57 பேர் உயிரிழந்தனர். 150-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், முண்டியம்பாக்கம், புதுவை ஜிப்மர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சாராய விற்பனையை தடுக்க தவறிய தி.மு.க. அரசை கண்டித்தும், மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த சம்பவத்திற்கு தார்மீக பொறுப்பேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும். இதற்கு உறுதுணையாக இருந்த தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை கண்டித்தும், காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் கள்ளக்குறிச்சியில் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று கண்டன உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க.வினர் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டதிற்கு வந்திருந்தவர்கள் மாவட்ட செயலாளர் இரா.குமரகுரு வரவேற்புரையாற்றினார். இதில் முன்னாள் அமைச்சர் மோகன், முன்னாள் எம்.பி. காமராஜ், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் அழகுவேல்பாபு, பிரபு, கள்ளக்குறிச்சி ஒன்றிய செயலாளர்கள் ராஜசேகர், தேவேந்திரன், சின்னசேலம் ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன், அய்யம்பெருமாள், தியாகதுருகம் ஒன்றிய செயலாளர்கள் அய்யப்பா, கிருஷ்ணமூர்த்தி, மற்றும் நகர செயலாளர் பாபு, ஜெயலலிதா பேரவை செயலாளர் ஞானவேல் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர கிளை கழக நிர்வாகிகள், மகளிரணியினர் கலந்து கொண்டனர்.
- சேர்வலாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மட்டும் 2 மில்லி மீட்டர் மழை பெய்தது.
- குளிர்ந்த காற்று வீசுவதால் இதமான சூழ்நிலை நிலவி வருகிறது.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக பிற்பகலில் லேசான சாரல் மழை பெய்து வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் வானம் மேக மூட்டமாக காட்சியளித்தது. ஆனால் மழை எதுவும் பெய்யவில்லை. அதேநேரம் கடந்த சில நாட்கள் பெய்த சாரல் மழை காரணமாக அணைகளுக்கு குறைந்த அளவில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பிரதான அணையான பாபநாசம் அணைக்கு 433 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
143 அடி கொண்ட அந்த அணையின் நீர்மட்டம் தற்போது 87.80 அடியாக உள்ளது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 98.16 அடியாகவும், மணிமுத்தாறு அணையில் நீர் இருப்பு 77.94 அடியாகவும் உள்ளது. கடந்த ஆண்டு இந்த 3 அணைகளிலும் தற்போதைய அளவை விட பாதிக்கும் கீழாகவே நீர் இருப்பு இருந்தது. சேர்வலாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மட்டும் 2 மில்லி மீட்டர் மழை பெய்தது.
இன்று காலை முதலே மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வானில் கருமேகங்கள் திரண்டு காணப்படுகிறது.
குளிர்ந்த காற்று வீசுவதால் இதமான சூழ்நிலை நிலவி வருகிறது. ஒரு சில இடங்களில் லேசான சாரல் மழை பெய்து வருகிறது.
தென்காசி மாவட்டத்தில் சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கேரளாவில் பெய்து வரும் மழையின் எதிரொலியாக தென்காசியில் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டி அமைந்துள்ள பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்த வண்ணம் உள்ளது. சிவகிரி பகுதியில் மட்டும் 1 மில்லி மீட்டர் மழை பெய்தது.
அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் சாரல் மழை பெய்த வண்ணம் உள்ளது. இன்று காலை வரை ராமநதியில் 8 மில்லிமீட்டரும், கருப்பாநதியில் 5.5 மில்லி மீட்டரும், குண்டாறில் 2 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. 84 அடி கொண்ட ராமநதி அணை நீர்மட்டம் 66 அடியை எட்டியுள்ளது.
குண்டாறு அணை நீர்மட்டம் 32 அடியை நெருங்கி உள்ளது. அடவிநயினார் அணையில் 67 அடி நீர் இருப்பு உள்ளது.
மலைப்பகுதியில் பெய்யும் மழையின் காரணமாக குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அதில் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்து வருகின்றனர். மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்து குளித்து செல்கின்றனர்.
- விக்கிரவாண்டி தொகுதியில் 56 வேட்பாளர்கள், வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
- மனுக்கள் பரிசீலனை இன்று மாலை அல்லது நாளை காலை உத்தேச வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும்.
விக்கிரவாண்டி:
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் ஜூலை 10-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 14-ந் தேதியன்று விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் தொடங்கி 21-ந்தேதியுடன் முடிவடைந்தது.
இத்தொகுதியில் போட்டியிடுவதற்காக தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா, பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயா, ஆகியோர் உட்பட 16 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
இவர்களில் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவாவுக்கு மாற்று வேட்பாளராக அவரது மனைவி வனிதா, பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணிக்கு மாற்று வேட்பாளராக ரங்கநாதன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயாவுக்கு மாற்று வேட்பாளர் கலைச்செல்வி, தமிழ் தாயக மக்கள் முன்னேற்ற கட்சி வேட்பாளர் முகமது ஹனீபாவுக்கு மாற்று வேட்பாளராக முகமது இலியாஸ் ஆகிய 4 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். இவர்களை தவிர சுயேச்சை வேட்பாளர்களாக சதீஷ், விஜயா, அரசன், இசக்கிமுத்து உள்பட 36 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
விக்கிரவாண்டி தொகுதியில் 56 வேட்பாளர்கள், வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மேலும் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா 3 மனுக்களும், பா.ம.க. வேட்பாளர் அன்புமணி 2 மனுக்களும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா 2 மனுக்களும், தாக்கம் கட்சி வேட்பாளர் முத்தையா 2 மனுக்களும், அம்பேத்கரைட் பார்ட்டி ஆப் இந்தியா கட்சியை சேர்ந்த சரசு 2 மனுக்களும், தமிழ் தாயக மக்கள் முன்னேற்ற கட்சி வேட்பாளர் முகமது ஹனீபா 2 மனுக்களும், அகிம்ஷா சோசியலிஸ்ட் கட்சியை சேர்ந்த ரமேஷ் 2 மனுக்களும் தாக்கல் செய்துள்ளனர். அந்த வகையில் மொத்தம் 64 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
இந்த மனுக்கள் மீதான பரிசீலனை இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. மனுக்கள் பரிசீலனை இன்று மாலை அல்லது நாளை காலை உத்தேச வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும். மனுக்களை வாபஸ் பெறுவதற்கு 26-ந்தேதி (புதன்கிழமை) கடைசி நாளாகும். அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
- புஷ்பலதா மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
- 2 நோயாளிகள் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.
திருப்பூர்:
திருப்பூர் பாராபாளையம் மகாலட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி புஷ்பலதா (வயது 50). தனியார் பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 21-ந் தேதி இரவு வேலைக்கு சென்று திரும்பும் போது மங்கலம் சாலையில் பாரப்பாளையம் சந்திப்பில் நிகழ்ந்த விபத்தில் புஷ்பலதா காயமடைந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்ற அவர் உடனடியாக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில் புஷ்பலதா மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து புஷ்பலதாவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முன்வந்தனர்.
அதன் அடிப்படையில் 2 சிறுநீரகங்கள் தானமாக பெறப்பட்டது. பின்னர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு 2 சிறுநீரகங்கள் அகற்றப்பட்டது. அதில் ஒன்று கோவையில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கும் , மற்றொன்று சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இதன் மூலம் 2 நோயாளிகள் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.
உறுப்புகளை தானம் செய்த புஷ்பலதாவின் உடலுக்கு திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சார்பில் முதல்வர் முருகேசன் மற்றும் உயரதிகாரிகள் மரியாதை செலுத்தி அனுப்பி வைத்தனர். அரசு சார்பில் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் மரியாதை செலுத்தினர். மேலும் பொதுமக்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர்.
- உண்மையான தொண்டனை அடையாளம் காண முடியாதவர், உண்மையான தலைவனாக இருக்க முடியாது.
- நீங்கள் என்ன என்னை வேண்டாம் என்று சொல்வது, நான் கூறுகிறேன் எனக்கு பாஜக வேண்டாம்.
தமிழக பா.ஜ.க. இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில பொதுச்செயலாளர் திருச்சி சூர்யா, கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதால், மாநில தலைமையின் அறிவுறுத்தலின்படி அனைத்து பொறுப்புகளில் இருந்தும் கடந்த 20-ந்தேதி நீக்கப்பட்டார்.
இந்நிலையில் திருச்சி சூர்யா எக்ஸ் தளத்தில்,
உண்மையான தொண்டனை அடையாளம் காண முடியாதவர், உண்மையான தலைவனாக இருக்க முடியாது. கட்சியில் மீண்டும் சேர்க்க வேண்டும் என்று கெஞ்சுவதற்காக இந்த பதிவுகள் இல்லை. நீங்கள் என்ன என்னை வேண்டாம் என்று சொல்வது, நான் கூறுகிறேன் எனக்கு பாஜக வேண்டாம். வேண்டவே வேண்டாம்.
என் மேல் நடவடிக்கை எடுக்க நிர்பந்தித்த உத்தமர்களின் யோக்கியதையையும், தமிழ்நாட்டில் பாஜக வளராமல் பார்த்துக் கொள்ள கங்கணம் கட்டிக் கொண்டு வேலை பார்ப்பவர்களையும் அம்பலப்படுத்துவதே தற்போதைய மிஷன். என் மேல் நடவடிக்கை எடுத்த வீராதிவீரர்களுக்கு பாஜகவுக்கு குழி தோண்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க துணிச்சல் ஏன் வரவில்லை. பயமா?
அண்ணாமலை இவ்வளவு நாள் தம்பியாக பார்த்தார். இந்த தம்பியின் மறுபக்கத்தை பார்ப்பார். உடன் இருப்பவரின் பலம் எதிர்த்து அடிக்கும்போது தான் தெரியும்.
அதிகபட்சம் அமார் பிரசாதையும் கல்யாண ராமனையும் தமிழ்நாடு காவல்துறையை வைத்து கைது செய்தது போல் எனக்கும் வலை விரிப்பார்.
கூட இருப்பவர்களை கழுத்தறுப்பது தான் அவருக்கு கைவந்த கலை ஆச்சே... எதையும் சந்திக்க தயாராக இருக்கிறேன்... என்று தெரிவித்துள்ளார்.
- இலங்கையில் உள்நாட்டு சண்டை நிறைவடைந்த காலகட்டத்திலும் அகதிகளாக தமிழர்கள் வந்தனர்.
- இலங்கை அதிகாரிகள் இந்திய தூதரக அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.
ராமேசுவரம்:
இலங்கையில் உள்நாட்டு சண்டை நடைபெற்ற காலகட்டத்தில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளை சேர்ந்த தமிழர்கள் அகதிகளாக தொடர்ந்து படகுகளில் தனுஷ்கோடி, ராமேசுவரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வந்தனர். அவர்களை போலீசார் அழைத்து சென்று மண்டபம் கேம்ப் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் தங்க வைத்தனர். இதன் பின்னர் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள முகாம்களுக்கு மாற்றப்பட்டும் வருகிறார்கள்.
இந்த நிலையில், இலங்கையில் உள்நாட்டு சண்டை நிறைவடைந்த காலகட்டத்திலும் அகதிகளாக தமிழர்கள் வந்தனர். தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நேரத்திலும் 300-க்கும் மேற்பட்டவர்கள் அகதிகளாக தமிழகம் வந்துள்ளனர். இவர்கள் அனைவருமே தமிழகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. இதில், மீன்பிடிக்க செல்லவும், கச்சத்தீவு திருவிழாவிற்கும் செல்லவும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில், ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்று மூன்று படகுகளுடன் 22 மீனவர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இலங்கை கடற்படையினர் நடத்திய விசாரனையில் தீபன் (வயது 35), சுதாகர் (42) ஆகிய இரண்டு பேர் மண்டபம் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வ முகாமில் உள்ள அகதிகள் என்பது தெரியவந்தது. சட்ட விரோதமாக விதிகளை மீறி கடலுக்கு சென்ற அவர்களிடம் மீன் பிடிக்க செல்வதற்கான எந்தவித ஆவணங்களும் இல்லை.
இதுகுறித்து இலங்கை அதிகாரிகள் இந்திய தூதரக அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்துள்ளனர். அகதிகளை அழைத்து சென்றது குறித்தும் கண்காணிக்க தவறிய அதிகாரிகள் குறித்தும் மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகள் விசாரனையை மேற்கொண்டு வருகின்றனர்.
- ஆஸ்திரேலியாவை தோற்கடித்து அரை இறுதிக்கு நுழையும் ஆர்வத்தில் இந்தியா இருக்கிறது.
- வங்காளதேசம் புள்ளி எதுவும் பெறவில்லை.
செயின்ட்லூசியா:
20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் 'சூப்பர் 8' சுற்று ஆட்டத்தில் 'குரூப் 1' பிரிவில் உள்ள இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
இந்திய அணி ஆப்கானிஸ்தான் (47 ரன்), வங்காளதேசம் (50 ரன்) அணிகளை வீழ்த்தி இருந்தது. ஆஸ்திரேலியாவை தோற்கடித்து அரை இறுதிக்கு நுழையும் ஆர்வத்தில் இந்தியா இருக்கிறது.
இந்திய அணி தோற்றாலும் பாதிப்பு இருக்காது. ஏனென்றால் ரன்ரேட் நன்றாக இருக்கிறது. அதே நேரத்தில் மோசமாக தோற்கக் கூடாது. இந்த நிலைமை நடைபெறாமல் இருக்க ஆஸ்திரேலியாவை வீழ்த்துவது நல்லதாகும்.
இதே பிரிவில் நாளை காலை 6 மணிக்கு நடைபெறும் கடைசி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்-வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன. 'குரூப் 1'-ல் இந்தியா 4 புள்ளிகளுடனும், ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் 2 புள்ளிகளுடனும் உள்ளது. வங்காளதேசம் புள்ளி எதுவும் பெறவில்லை.
- சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
- தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம்.
சென்னை:
கள்ளக்குறிச்சியில் நடந்த விஷச்சாராய சாவுகள் தொடர்பாக மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கருத்து தெரிவித்தார். அப்போது அவர், 'தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுக்கடைகளில் மதுவகைகள் தாராளமாக கிடைக்கும் போது விஷச் சாராயம் எப்படி கிடைக்கிறது? எனவே இந்த விஷயத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றார்.
நிர்மலா சீதாராமனின் இந்த கருத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி சம்பவம் மிகவும் வேதனையானது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளி கள் கைது செய்யப்பட்டு சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடந்து வருகிறது. ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷனும் அமைக்கப்பட்டுள்ளது.
அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் சி.பி.ஐ. விசாரணை கேட்கலாம். நிர்மலா சீதாராமன் இந்த விவகாரத்தை அரசியல் ஆக்குகிறார். பொறுப்புள்ள மந்திரி இதை அரசியல் ஆக்காமல் இனிவரும் காலங்களில் இந்த மாதிரி சம்பவங்கள் நிகழாமல் இருக்க ஆலோசனை வழங்கலாம்.
ஒட்டுமொத்த தமிழ்நாடும் புறக்கணித்துவிட்ட நிலை யில், ஏதாவது காரணங்களை வைத்து எப்படியாவது அரசியல் செய்ய முடியுமா? என்று பார்க்கிறார். அது எடுபடாது.
நடிகர் கமல் மிதமாக குடித்து கொள்ளலாம் என்று தனது கருத்தை வெளியிட்டு உள்ளார். நாங்கள் காந்திய வாதிகள். முழு மதுவிலக்கைத்தான் விரும்புகிறோம்.
ஆபத்தில்லாமல் குடிக்கலாம் என்பது சமூகத்தில் மது குடிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பது போல் ஆகிவிடும். ஆரோக்கியமான வாழ்வுக்குத்தான் வழிகாட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- போலீசாரிடம் அ.தி.மு.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
- போலீசார் பாதுகாப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
கடலூர்:
தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசை கண்டித்தும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளசாராயம் குடித்து 60 பேர் பலியான சம்பவத்திற்கு பொறுப்பேற்று சட்ட ஒழுங்கை பாதுகாக்கத் தவறிய முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பதவி விலக வலியுறுத்தியும் கடலூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே இன்று காலை நடைபெறுமென அறிவிக்கப்பட்டது. இதற்காக மஞ்சக்குப்பம் தபால் நிலையம் அருகில் மேடை அமைக்கப்பட்டது. அந்த சாலையில் கட்சி கொடிகள், பேனர்கள் கட்டப்பட்டது.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு கடலூர் புதுநகர் சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையை அகற்றும் நடவடிக்கையை தொடங்கினர்.
இத்தகவல் அறிந்த அ.தி.மு.க. மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.சி.சம்பத் அறிவுறுத்தலின் பேரில் மாவட்ட அவைத்தலைவர் சேவல் குமார் தலைமையிலான நிர்வாகிகள் விரைந்து வந்தனர்.
ஆர்ப்பாட்டம் நடைபெறுவது தொடர்பாக ஏற்கனவே மனு அளித்து விட்டோம். இதனை தொடர்ந்து மேடை, பேனர் மற்றும் கொடி வைக்கப்பட்டுள்ளது. எதற்காக திடீரென்று நள்ளிரவில் மேடை, பேனர் ஆகியவற்றை அகற்ற வந்துள்ளீர்கள்? என போலீசாரிடம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் நடத்துவதற்கு அனுமதி இல்லை என்பதால் மேடையை அகற்றுகிறோம் என கூறிய போலீசார், மேடையை அகற்றும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து அ.தி.மு.க.வினர் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபோது சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளிடம் பேசி கொள்ளவும் என அங்கிருந்த போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து போலீசார் அ.தி.மு.க. கொடிகளை அகற்ற முயன்ற போது, அ.தி.மு.க. நிர்வாகிகள் தாமாக முன்வந்து 300-க்கும் மேற்பட்ட கொடிகளை அகற்றினார்கள்.
இதனைத் தொடர்ந்து இன்று காலை மாவட்ட செயலாளர் எம்.சி.சம்பத் தலைமையிலான நிர்வாகிகள் சம்பவ இடத்தில் திரண்டனர். இதனால் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்து, நள்ளிரவில் மேடை, கொடிகள், பேனர்களை அகற்றிய சம்பவம் கடலூர் மாநகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- படகுகளை விடுவிக்க மத்திய,மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 500-க்கும் மேற்பட்ட விசைப்பட குகள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி பெற்று 3,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
நேற்று அதிகலையில் கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அங்கு 5 ரோந்து படகில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர்.
இதனைதொடர்ந்து, அதே பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த ரெஸ்மன், ஜஸ்டீன், கெரின் என்பவர்களுக்கு சொந்தமான மூன்று விசைப்படகுகளை சிறைபிடித்தனர். அதில் இருந்த 22 மீனவர்களை கைது செய்தனர். இதனைதொடர்ந்து, மூன்று படகுகளுடன் 22 மீனவர்களை காங்கேசம் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றனர்.
மூன்று படகுகள் பறிமு தல் செய்யப்பட்ட நிலையில் 22 மீனவர்களை நீரியல் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழங்கு பதிவு செய்து ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி விசாரனைக்கு பின் ஜூலை 5-ந்தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்ட நிலையில் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
ராமேசுவரத்தில் இருந்து தடைகாலம் நிறைவடைந்து மீன்பிடிக்க சென்ற நிலையில் 22 மீனவர்கள் மூன்று விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றுள்ளனர். இதற்கு கண்டனம் தெரிவிப்பதுடன் கைது நடவடிக்கையை இலங்கை அரசு நிறுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும் தற்போது கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க மத்திய,மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுருத்தி திங்கட்கிழமை ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை மீனவர்கள் தொடங்கினர். இதில், 560-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
- ஊரக சாலைகளை மேம்படுத்த தமிழக அரசு தொடர்ந்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
- 3 ஆண்டில் 16,000 கி.மீ., நீளமுள்ள சாலை, மேம்பால பணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழக சட்டசபையின் 4-வது நாளான இன்று கேள்வி நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர்.
வில்லிவாக்கம் பகுதியில் பணிபுரியும் மகளிருக்கான மகளிர் தங்கும் விடுதி கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.
இதையடுத்து 110 விதியின் கீழ் அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:
* தமிழகத்தில் தொடர்ந்து உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறோம்.
* ஊரக சாலைகளை மேம்படுத்த தமிழக அரசு தொடர்ந்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
* கிராமம், நகரம் என்ற வேறுபாடின்றி சாலை மேம்பாட்டை தமிழக அரசு செய்து வருகிறது.
* பேருந்து செல்லும் சாலை, குக்கிராமங்களை இணைக்கும் சாலைகளை மேம்படுத்த அரசு தொடர்ந்து முன்னிலை அளிக்கிறது.
* தரமான சாலைகள் கிராப்புற மக்களின் வருமானத்தை உயர்த்துவதாக அமைகிறது.
* கடந்த 2 ஆண்டுகளில் சுமார் 8 ஆயிரம் கி.மீ. நீளமுள்ள ஊராட்சி, ஒன்றிய சாலைகளை மேம்படுத்தும் பணி முடிக்கப்பட்டுள்ளது.
* 3 ஆண்டில் 16,000 கி.மீ., நீளமுள்ள சாலை, மேம்பால பணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
* கிராம ஊராட்சி சாலைகளை மேம்படுத்த 4000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது
* 2 ஆண்டுகளில் கிராமப்புறங்களில் உள்ள 10 ஆயிரம் கி.மீ. சாலைகள் ரூ.4000 கோடியில் மேம்படுத்தப்படும் என்று கூறினார்.
- ஜெயமுருகன் உடலை அவரது குடும்பத்தினர் புதைத்தனர். இதுபோல் இளையராஜா உடலை எரித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
- பிரேத பரிசோதனை முடிந்து அறிக்கை தயாரித்த பின்னரே ஜெயமுருகன் கள்ளச்சாராயம் குடித்து இறந்தாரா என்பது தெரிய வரும்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி அருகில் உள்ள மாதவச்சேரி கிராமத்தைச் சேர்ந்த ஜெய முருகன் (45) மற்றும் அதே ஊரைச் சேர்ந்த இளைய ராஜா (35) ஆகிய இருவரும் கடந்த 18-ந் தேதி கருணாபுரம் கிராமத்தில் விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்ததில் 2 பேரும் இறந்து போனார்கள்.
இதையடுத்து ஜெயமுருகன் உடலை அவரது குடும்பத்தினர் புதைத்தனர். இதுபோல் இளையராஜா உடலை எரித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இறந்து போன ஜெயமுருகன் மற்றும் இளையராஜா குடும்பத்திற்கு அரசின் சார்பில் ரூ.10 லட்சம் நிவாரண உதவி கேட்டு உறவினர்கள் மாவட்ட கலெக்டர் பிரசாந்திடம் முறையிட்டனர்.
இளையராஜா உடலை எரித்து விட்டதால், புதைக்கப்பட்ட ஜெயமுருகன் உடலை மட்டும் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.
இதன்படி சென்னை மற்றும் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ மனையில் இருந்து மருத்துவக் குழுவினர் நேற்று மாலை மாதவச்சேரி சுடுகாடு பகுதியில் புதைக்கப்பட்டிருந்த ஜெயமுருகன் உடலை வருவாய்துறையினர் மற்றும் போலீசார் முன்னிலையில் ஜே.சி.பி. எந்திரம் மூலம் வருவாய் துறை மற்றும் போலீசார் முன்னிலையில் தோண்டி எடுத்தனர்.
பின்னர் பிரதே பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேதபரிசோதனை முடிந்து அறிக்கை தயாரித்த பின்னரே ஜெயமுருகன் கள்ளச்சாராயம் குடித்து இறந்தாரா என்பது தெரிய வரும்.






