என் மலர்
உள்ளூர் செய்திகள்
- கடந்த ஒரு வாரமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.
- அணைக்கு வரும் தண்ணீரை விட குறைந்த அளவிலேயே திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
சேலம்:
கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை தீவிரமாக பெய்து வருவதால் அங்குள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
இதே போல் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மழை பரவலாக பெய்து வருகிறது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக கடந்த ஒரு வாரமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.
மேட்டூர் அணைக்கு நேற்று வினாடிக்கு 31 ஆயிரத்து 575 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் இன்று 33 ஆயிரத்து 148 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டமும் 104.76 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு 7500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் அது 2500 கனஅடியாக குறைக்கப்பட்டது.
மேலும் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு தொடர்ந்து 600 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் தண்ணீரை விட குறைந்த அளவிலேயே திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. தற்போது அணையில் 71.14 டி.எம்.சி..தண்ணீர் இருப்பு உள்ளது.
- தனியார் பேருந்துகளில் வசூலிக்கும் கட்டணத்தை கட்டுப்படுத்த வேண்டும்.
- பேருந்துகளின் எண்ணிக்கை, ஓட்டுநர்களின் எண்ணிக்கை குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
சென்னை:
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தீபாவளிப் பண்டிகை உள்ளிட்ட பண்டிகை நாட்களில் அரசுப் பேருந்துகளை கூடுதல் எண்ணிக்கையில் இயக்கவும், தனியார் பேருந்துகளில் வசூலிக்கும் பேருந்துக் கட்டணத்தினை கட்டுப்படுத்தவும் அரசாங்கம் நடவடிக்கை எடுப்பது என்பது வழக்கமாக நடைபெறும் ஒன்று.
இந்த நிலையில் தீபாவளியை முன்னிட்டு அரசே தனியார் பேருந்துகளை எடுத்து இயக்கப் போகிறது என்றும், இதற்காக புதிய பேருந்துகளை வாங்கி, நிறுத்தி வைக்க முடியாது என்றும், கூடுதலாக ஊழியர்களை நியமிக்க முடியாது என்றும் தெரிவித்திருப்பதைப் பார்த்தால், அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு மூடுவிழா எடுக்க தி.மு.க. அரசு முடிவு செய்துவிட்டதோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. இந்த நடைமுறை முறைகேடுகளுக்கு வழிவகுக்கும்.
எனவே, அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் வசம் உள்ள அனைத்துப் பேருந்துகளையும் முழு வீச்சில் இயக்கி, மக்களின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும். தனியார் பேருந்துகளில் வசூலிக்கும் கட்டணத்தை கட்டுப்படுத்த வேண்டும், அரசுப் போக்குவரத்துக் கழகங்களை தனியார்மயமாக்கும் போக்கினை கைவிட வேண்டும். பேருந்துகளின் எண்ணிக்கை, ஓட்டுநர்களின் எண்ணிக்கை குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- போலி மருத்துவர் அங்கமுத்துவை அஞ்செட்டி போலீசார் கைது செய்தனர்.
- உரிமையாளர்கள் இல்லாததால், உண்மை கண்டறியப்படும் வரை, மருந்து கடைகளுக்கு சீல் வைத்தனர்.
தளி:
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுகா பருவநள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அங்கமுத்து (வயது54). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே உள்ள கோட்டையூர் கிராமத்தில் ஒரு வீடு எடுத்து அருணாச்சலா மெடிக்கல் என்ற கிளினிக் நடத்தி வந்துள்ளார்.
10 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்த இவர் ஆங்கில கல்வி ஏதும் பயிலாமல் அரசு விதிகளுக்கு புறம்பாக ஆங்கில மருத்துவ சிகிச்சைகளை அளித்து வந்துள்ளார்.
இதுகுறித்து இணை இயக்குனர் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் கிருஷ்ணகிரி மருத்துவர் தர்மருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

கைதான அங்கமுத்து
அவரது உத்தரவின் பேரில் தேன்கனிக்கோட்டை தலைமை மருத்துவ அலுவலர் கிரிஜா தலைமையில் ஓசூர் சரக மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர் ராஜீவ் காந்தி, கோட்டையூர் கிராம நிர்வாக அலுவலர் இளம் பிரதி உள்பட மருத்துவ குழுவினர் கோட்டையூர் கிராமத்திற்கு சென்று அந்த வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில் அங்கமுத்து 10 வகுப்பு வரை படித்துவிட்டு அரசு விதிகளுக்கு புறம்பாக போலியாக பொது மக்களுக்கு மருத்துவம் பார்த்தது தெரியவந்தது.
இதனையடுத்து மருத்துவ குழுவினர் போலி மருத்துவர் அங்கமுத்துவை பிடித்து அஞ்சடி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து போலி மருத்துவர் அங்கமுத்துவை அஞ்செட்டி போலீசார் கைது செய்தனர்.
அதனைத் தொடர்ந்து மருத்துவ குழுவினர் அவர் நடத்தி வந்த தனியார் கிளினிக்கை பூட்டி சீல் வைத்தனர்.
அதேபோல், கோட்டை யூரில் உள்ள சாமுண்டீஸ்வரி மற்றும் அருணாச்சலா ஆகிய இரு மருந்து கடைகளில், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதாக புகார் வந்தது. அங்கு உரிமையாளர்கள் இல்லாததால், உண்மை கண்டறியப்படும் வரை, மருந்து கடைகளுக்கு சீல் வைத்தனர்.
- மதுரை கூடல் நகர் பொதிகை நகரில் உள்ள முதியோர் இல்லத்தில் மழைநீர் புகுந்ததால் அங்கிருந்த முதியோர்கள் கடும் அவதியடைந்தனர்.
- குடியிருப்பு பகுதியில் சூழ்ந்துள்ள தண்ணீரை அகற்றுவதற்கு தொடர்ச்சியாக பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
மதுரை:
மதுரையில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவும் பலத்த மழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது. குறிப்பாக, செல்லூர், புதூர், கூடல்புதூர், ஆனையூர் உள்ளிட்ட பகுதிகளில், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால், மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
நேற்று மதியம் 2½ மணி முதல் மாலை 5½ மணி வரை பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. குறிப்பாக புறநகர் பகுதிகளில் 3 மணி முதல் 3.15 மணி வரை 15 நிமிடத்தில் மட்டும் 4.5 சென்டிமீட்டர் (44.5 மில்லி மீட்டர்) மழைப்பொழிவு இருந்ததாகவும், காலை முதல் மாலை வரை 9.8 சென்டிமீட்டர் மழைப்பொழிவு பதிவானது.
புறநகர் பகுதிகளான புதூர், சர்வேயர் காலனி, பனங்காடி, பாரத நகர்,பி.பி.குளம், முல்லை நகர் பகுதியில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. மதுரை கூடல் நகர் பொதிகை நகரில் உள்ள முதியோர் இல்லத்தில் மழைநீர் புகுந்ததால் அங்கிருந்த முதியோர்கள் கடும் அவதியடைந்தனர்.
உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான தொட்டப்பநாயக்கணூர், செட்டியபட்டி, வி.பெருமாள்பட்டி, பண்ணைப்பட்டி, அல்லிகுண்டம், வாலாந்தூர், செல்லம்பட்டி, உத்தப்பநாயக்கணூர், வெள்ளைமலைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 3 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. கனமழை காரணமாக வி.பெருமாள்பட்டி, பண்ணைப்பட்டி மற்றும் சடையாண்டிபட்டி பகுதிகளில் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீர்நிலைகள் உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. கொங்கபட்டி, உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 4-வது வார்டு நீராவி மேட்டுத்தெரு பகுதிகளிலும் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் மக்கள் கடும் அவதியடைந்தனர்.

இந்நிலையில் மதுரையில் தொடர்ந்து மழை பெய்த நிலையில், வைகை ஆற்றில் அமைச்சர்கள் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி ஆய்வு செய்தனர். அவருடன் மாவட்ட கலெக்டர், கண்காணிப்பு அலுவலர் ஆகியோரும் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வு மேற்கொண்ட பின்னர் அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* மதுரையில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
* குடியிருப்பு பகுதியில் சூழ்ந்துள்ள தண்ணீரை அகற்றுவதற்கு தொடர்ச்சியாக பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
* பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உணவுகள் ஏற்பாடு செய்யப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
* மதுரையில் பல்வேறு இடங்களில் சூழ்ந்துள்ள தண்ணீரை வெளியேற்ற இன்னும் 3 நாட்கள் ஆகும் என்று கூறினார்.
- வெள்ளி விலையில் மாற்றமில்லை.
- ஒரு கிராம் வெள்ளி ரூ.107-க்கும் பார் வெள்ளி ஒரு லட்சத்து ஏழாயிரம் ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
சென்னை:
தங்கம் விலை தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வருகிறது. கடந்த மாதம் (செப்டம்பர்) 1-ந் தேதி ஒரு கிராம் தங்கம் விலை ரூ.6,695-க்கும், ஒரு பவுன் ரூ.53 ஆயிரத்து 560-க்கும் விற்பனையானது. அதே மாதம் 24-ந் தேதி ஒரு கிராம் தங்கம் 7 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு பவுன் ரூ.56 ஆயிரத்தை தொட்டது. அதன்பிறகு, தங்கத்தின் விலை தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வருகிறது. தங்கம் விலையின் புதிய உச்சமாக கடந்த 19-ந் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.7 ஆயிரத்து 280-க்கு விற்பனையானது. ஒரு பவுன் ரூ.58 ஆயிரத்து 240 என்ற புதிய உச்சத்தை அடைந்தது.
இந்த நிலையில், நேற்று தங்கம் சவரனுக்கு ரூ.80 உயர்ந்த நிலையில் இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. தங்கம் கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.7,360-க்கும் சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ஒரு சவரன் ரூ.58,880-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.107-க்கும் பார் வெள்ளி ஒரு லட்சத்து ஏழாயிரம் ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
25-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,360
24-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,280
23-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,720
22-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,400
21-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,400
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
25-10-2024- ஒரு கிராம் ரூ. 107
24-10-2024- ஒரு கிராம் ரூ. 110
23-10-2024- ஒரு கிராம் ரூ. 112
22-10-2024- ஒரு கிராம் ரூ. 112
21-10-2024- ஒரு கிராம் ரூ. 110
- சத்தம் கேட்டு எழுந்த வீட்டில் உள்ளவர்கள் வெளியில் பார்த்த போது யானை நின்றிருந்தது.
- ஒற்றை காட்டு யானை, தோட்டமூலா குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தோட்டமூலா பகுதி உள்ளது. இந்த பகுதி வனப்பகுதியொட்டி இருப்பதால் அடிக்கடி வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து வருகின்றன.
குறிப்பாக ஒற்றை காட்டு யானை ஒன்று அவ்வப்போது இரவு நேரத்தில் ஊருக்குள் புகுந்து, குடியிருப்புகளை சேதப்படுத்தி, பொருட்களை சேதப்படுத்துகிறது.
இந்த நிலையில் சம்பவத்தன்று நள்ளிரவில் வனத்தை விட்டு வெளியேறிய ஒற்றை காட்டு யானை, தோட்டமூலா குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது.

வெகுநேரமாக குடியிருப்பு பகுதிக்குள் சுற்றி திரிந்த யானை அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன்பு நின்றிருந்த தென்னை மரத்தை வேரோடு பிடுங்கி சாய்த்தது.
சத்தம் கேட்டு எழுந்த வீட்டில் உள்ளவர்கள் வெளியில் பார்த்த போது யானை நின்றிருந்தது. இதனால் அதிர்ச்சியான அவர்கள் கதவை பூட்டி கொண்டு பாதுகாப்பாக இருந்தனர். மேலும் வனத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
மேலும் குடியிருப்பு பகுதிகளையும் சேதப்படுத்தி சென்றது. தொடர்ந்து யானை அட்டகாசத்தில் ஈடுபட்டு வருவதால், இந்த யானையை பிடித்து முதுமலை காப்பகத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- திருவள்ளுவர் சிலையை யுனெஸ்கோ பாரம்பரிய தளமாக அறிவிக்க மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன்.
- கடிதம் வாயிலாக வலியுறுத்தியுள்ளேன் என கூறியுள்ளார்.
கன்னியாகுமரி:
குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
உலக பொதுமறை தந்த திருவள்ளுவர் புகழை உலகமெங்கும் கொண்டு சென்றிடும் வகையிலும், அவருக்காக கன்னியாகுமரியில் கட்டப்பட்ட சிலையின் சிறப்பை பறைசாற்றும் வகையிலும், திருவள்ளுவர் சிலையை யுனெஸ்கோ பாரம்பரிய தளமாக அறிவிக்க மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன். இதுதொடர்பாக கடிதம் வாயிலாக வலியுறுத்தியுள்ளேன் என கூறியுள்ளார்.
- ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
- பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென குமரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் விஜய் வசந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.
குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விட்டுவிட்டு சாரல் மழை பெய்து வந்தது. கடந்த 2 நாட்களாக மாவட்டம் முழுவதும் மழை வெளுத்து வாங்கியது. தொடர் மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென குமரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் விஜய் வசந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:- குமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் தொடர் கன மழை காரணமாக அணைகள் நிரம்பி உபரி நீர் திறந்து விடப்படும் நிலையில் உள்ளது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆகவே நீர் நிலைகளின் அருகில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
- மாநாட்டு திடலில் இடம் பெற்றுள்ள கட்-அவுட்கள் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
- மாநாட்டு திடலில் 100 அடி உயரமுள்ள கொடிக்கம்பம் நேற்று காலை நடப்பட்டது.
திரையுலக உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கி, முதல் மாநாட்டை அறிவித்துள்ளார்.
அதன்படி, அந்த மாநாடு கொள்கை விளக்கத் திருவிழா என்று குறிப்பிட்டு பிரமாண்டமாக விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் நாளை நடைபெறுகிறது.
விஜய் எந்த மாதிரியான அரசியலை முன்னெடுக்கப்போகிறார் என்று பலரும் கேள்விகளை அவரை நோக்கி வீசி வந்த சூழலில், மாநாட்டு திடலில் இடம் பெற்றுள்ள கட்-அவுட்கள் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

மேடையின் இடது புறத்தில் பெரியார், காமராஜர், அம்பேத்கர், சுதந்திரப் போராட்ட தியாகிகள் வேலு நாச்சியார், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த அஞ்சலை அம்மாள் ஆகியோரது கட்-அவுட்கள் இடம் பெற்றுள்ளது.
இதில் பெண்களுக்கு என்று முதல் முறையாக தனி அங்கீகாரத்தை இந்த மாநாடு அளித்திருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பதாக உள்ளது. மேலும் மேடையின் வலதுபுறம் தமிழ் அன்னை, சேர, சோழ, பாண்டியர்கள் மற்றும் அவர்களுடன் விஜய் நிற்பது போன்ற கட்-அவுட்களும் மாநாட்டு திடலில் கம்பீரமாக காட்சி தருகின்றன. மாநாட்டு திடலில் நுழைவாயில் இரு புறமும் விஜய் கட்அவுட் வைக்கப்பட்டுள்ளது.
மாநாட்டு திடலில் 100 அடி உயரமுள்ள கொடிக்கம்பம் நேற்று காலை நடப்பட்டது. ராட்சத கிரேன் மூலமாக, தொழிலாளர்கள் இதை அங்கு நிறுவினர்.
இந்த கம்பத்தில் 20 அடி நீளமும், 30 அடி அகலமும் கொண்ட கொடி பறக்க விடப்படுகிறது. கயிறு வைத்து இழுத்தும், ரிமோட் மூலமாகவும் இந்த கம்பத்தில் கொடியை ஏற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் தற்போது விஜய், ரிமோட் மூலம் கொடியேற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கொடியேற்றினாலே, அந்த கொடி உச்சத்தை தொடுவதற்கு குறைந்தது 10 நிமிடங்கள் ஆகும். இடி தாங்கி வசதியுடன் இந்த கம்பம் அமைக்கப்பட்டுள்ளது.
நாளை ஏற்றப்படும் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடி அந்த இடத்தில் 5 வருடங்களுக்கு பறக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநாட்டில் அதிகளவு தொண்டர்கள் கூடுவதால் தொழில்நுட்ப சாதனங்கள் இயங்குவதற்கு ஏற்ற வகையில் தற்காலிக செல்போன் டவர் ஒன்றும் அங்கு அமைக்கப்பட்டுள்ளது.
இதுதவிர 700 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி, வெகுதொலைவில் இருந்து மாநாட்டை பார்க்கும் வகையில் பெரிய டிஜிட்டல் திரைகள் அமைக்கும் பணி, 100-க்கும் மேற்பட்ட குடிநீர் தொட்டிகள், 350 நடமாடும் கழிவறைகள் அமைப்பது என்று அனைத்து வித பணிகளும் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.
இன்று மாலையுடன் அத்தனை பணிகளையும் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் முடித்து, தமிழக வெற்றிக் கழகத்தினரிடம் ஒப்படைக்க உள்ளனர்.
இதை தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நாளை மாலை 4 மணியளவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் முதலாவதாக மாநாட்டு மேடைக்கு வரும் விஜய் அங்கிருந்தபடி, ரிமோட் மூலமாக 100 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சி கொடியை ஏற்றி வைக்க உள்ளார்.
கொடியேற்றிய பின், மாநாட்டு மேடையில் இருந்து தொண்டர்களை சந்திக்க, அங்கு சுமார் 600 மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்பட்டுள்ள 'ரேம்ப்'(நடைபாதை) மீது நடிகர் விஜய் நடந்து சென்று தொண்டர்களை உற்சாகப்படுத்திய பிறகே மாநாட்டு மேடைக்கு வர உள்ளார்.
மாநாட்டின் தொடக்கமாக பல்வேறு கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். கலை நிகழ்ச்சிகள் முடிந்ததும், மாநாட்டுக்காக நிலம் கொடுத்த விவசாயிகள் மற்றும் மாநாட்டு பணிகளுக்கு உதவி செய்தவர்களுக்கு விஜய் சால்வை அணிவித்து கவுரவிக்கிறார்.
- ஆலங்குளம் கண்மாய் நிரம்பியதால் முல்லை நகருக்குள் வெள்ளம்.
- முழங்கால் அளவிற்கு வெள்ளம் சூழ்ந்துள்ளதால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.
மதுரையில் நேற்று கனமழை கொட்டித்தீர்த்தது. மாலை 3 மணிக்குப் பிறகு 15 நிமிடத்தில் 4.5 செ.மீட்டர் மழை பெய்ததால் வெள்ளக்காடாக மாறியது. கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அக்டோபர் மாதம் மழை பெய்தததாக கூறப்படுகிறது.
இந்த கனமழையால் முல்லை நகர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் ஆலங்குளம கண்மாய் நிரம்பியதுதான். முல்லை நகர் கிருஷ்ணாபுரம் காலனி 8-வது தெரு மற்றும் அதன் அருகாமையில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
நேற்று மாலையுடன் மழை நின்றாலும் இந்த பகுதிகளில் முழங்கால் அளவிற்கு மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. வீடுகளுக்குள் வெள்ளம் சென்றுள்ளதால் மக்கள் மாடி மற்றும் பாதுகாப்பான இடத்திற்கு சென்றுள்ளனர்.
வெள்ளம் வடியாததால் மக்களின் இயல்பு வாழ்த்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் நேற்று வந்து பார்வையிட்டனர். வெள்ளத்தை அப்புறப்படுத்துவதற்கு பணிகளை மெற்கொள்வதாக தெரிவித்தனர். ஆனால் இன்று காலை வரை யாரும் வரவில்லை. இப்படியே இருந்தால் காபி, டீ, கஞ்சி காய்த்து குடிப்பது எப்படி என பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்தனர்.
வெள்ளம் பாதித்த பகுதிகளில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் காணொலி மூலம் ஆய்வு கூட்டம் நடத்தினார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளையும் துரிதமாக மேற்கொள்ளுமாறு அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
அமைச்சர் மூர்த்தி வெள்ள நீர் அகற்றும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. இரண்டு நாட்களுக்குள் வெள்ள நீர் அகற்றும பணி முழுமையாக நிறைவு பெறும் எனத் தெரிவித்துள்ளார்.
- செல்லூர், புதூர், கூடல்புதூர், ஆனையூர் உள்ளிட்ட பகுதிகளில், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
- மதுரை மாநகராட்சியில் தேங்கிய மழைநீரை உடனடியாக அப்புறப்படுத்தி நோய் பரவாமல் காக்க வேண்டியது அரசியல் கடமையாகும்.
சென்னை:
மதுரையில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவும் பலத்த மழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது.
குறிப்பாக, செல்லூர், புதூர், கூடல்புதூர், ஆனையூர் உள்ளிட்ட பகுதிகளில், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால், மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நேற்று மதியம் 2½ மணி முதல் மாலை 5½ மணி வரை பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. குறிப்பாக புறநகர் பகுதிகளில் 3 மணி முதல் 3.15 மணி வரை 15 நிமிடத்தில் மட்டும் 4.5 சென்டிமீட்டர் (44.5 மில்லி மீட்டர்) மழைப்பொழிவு இருந்ததாகவும், காலை முதல் மாலை வரை 9.8 சென்டிமீட்டர் மழைப்பொழிவு பதிவானதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மதுரையில் ஓரிரு நாள் பெய்த மழைக்கே ஏன் இந்தளவு பாதிப்பு என்பதை ஆராய்ந்து மாநகராட்சி தெளிவுப்படுத்த வேண்டும்.
மதுரை மாநகராட்சியில் தேங்கிய மழைநீரை உடனடியாக அப்புறப்படுத்தி நோய் பரவாமல் காக்க வேண்டியது அரசியல் கடமையாகும்.
மதுரையில் மழை பாதிப்பு குறித்து தமிழக அரசு விளக்கம் தர வேண்டுமென தெரிவித்துள்ளார்.
- 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
- மழை காரணமாக தேனி, மதுரை, நெல்லை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான டானா புயல் நேற்று அதிகாலை ஒடிசாவில் தீவிர புயலாக கரையை கடந்தது.
இதன் தொடர்ச்சியாக தெற்கு கேரள கடற்கரையையொட்டிய தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக மேலும் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் மிதமான மழையும், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் 2 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி மற்றும் நெல்லையில் காலை 10 மணி வரை இடி மற்றும் மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
மழை காரணமாக தேனி, மதுரை, நெல்லை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.






