என் மலர்
உள்ளூர் செய்திகள்
- கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு என விஜய் அறிவித்தார்.
- தங்கள் கட்சி, தொடங்கிய காலம் முதல் கூட்டணி கட்சியின் ஆதரவில் தான் ஆட்சிக்கு வந்துள்ளீர்கள்.
விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நேற்று விக்கிரவாண்டியில் வைத்து நடந்து முடிந்தது. இதில் மற்ற அரசியல் கட்சிகளை மறைமுகமாக விமர்சித்து விஜய் பேசிய விஷயங்கள் பேசுபொருளாகி வருகிறது. மேலும் கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு என விஜய் அறிவித்தார்.
திமுக கூட்டணியில் உள்ள திருமாவளவனின் விசிக சார்பில் சமீபத்தில் இந்த கோரிக்கை ஒலிக்கத் தொடங்கிய நிலையில் தற்போது விஜய் கூறியுள்ளது அதை மீண்டும் தூண்டுவதாக அமைந்துள்ளது. இந்நிலையில் அமைச்சரவையில் இடம் வேண்டும் என்று திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் சார்பில் கோரிக்கை எழுந்துள்ளது. இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் சரவணன் முதல்வர் ஸ்டாலினுக்குக் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில்,
தமிழக முதல்வரும் இந்தியா கூட்டணி கட்சி தமிழக தலைவருமான மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு வணக்கம். தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அவர்கள் நேற்று நடைபெற்ற அவர்களது கட்சி மாநாட்டில் 2026 இல் நடைபெறுகின்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால் தங்கள் கட்சி கூட்டணி ஆட்சிக்கு தயார் என பேசி உள்ளார்.
ஆகவே தாங்கள் தற்பொழுது நமது கூட்டணி கட்சிகளுக்கு மந்திரி சபையில் இடம் அளிக்க வேண்டும். தங்கள் கட்சி, தொடங்கிய காலம் முதல் கூட்டணி கட்சியின் ஆதரவில் தான் ஆட்சிக்கு வந்துள்ளீர்கள்.
எனவே தமிழகத்தில் தங்கள் தலைமையில் கூட்டணி ஆட்சி மலர்ந்தால் நல்லது. இதை தான் தமிழக மக்களும் எதிர்பார்க்கிறார்கள். எனவே தமிழக மக்களின் எண்ணத்தை நிறைவேற்றி தமிழகத்திற்கு தாங்கள் முன் உதாரணமாகத் திகழ வேண்டும் என்று தமிழக மக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் இது தனது சொந்த கருத்து என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
- ரெயில் பாதை அமைக்கும் பணிகள் காரணமாக, கடந்த ஆண்டு தற்காலிகமாக நிறுத்தம்.
- வேளச்சேரியில் இருந்து சிந்தாதரிப்பேட்டை வரை மட்டுமே ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தன.
சென்னை கடற்கரை மற்றும் வேளச்சேரி இடையேயான பறக்கும் ரெயில் சேவைகள் நாளை முதல் தொடங்குவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
ரெயில் பாதை அமைக்கும் பணிகள் காரணமாக, கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 27ம் தேதி முதல் சென்னை கடற்கரை- வேளச்சேரி ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
அதன் பிறகு, வேளச்சேரியில் இருந்து சிந்தாதரிப்பேட்டை வரை மட்டுமே ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில், 4வது ரெயில் பாதை அமைக்கும் பணிகள் தற்போது நிறைவடைந்ததால் சென்னை கடற்கரை- வேளச்சேரி இடையே இனி புறநகர் ரெயில் சேவை வழக்கம்போல் இயங்கும் என தெற்கு ரெயில் அறிவித்துள்ளது.
- மாணவியின் தாய் அளித்த புகாரின் பேரில், உடற்கல்வி ஆசிரியர் கைது.
- உடற்கல்வி ஆசிரியர் தியாகராஜனை ஏற்கெனவே சஸ்பெண்ட் செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவு.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள புனித ஜான்போஸ்கோ பள்ளி மாணவியை நடுரோட்டில் உடற்கல்வி ஆசிரியர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் உடற் கல்வி ஆசிரியர் ஒருவர் பள்ளி சீருடையில் இருக்கும் மாணவியை கன்னங்களில் ஆக்ரோஷமாக அரைகிறார். பின்னர், தலையிலும் தாறுமாறாக அடித்து துன்புறுத்துவது பதிவாகியுள்ளது.
மாவட்ட அளவிளான கைப்பந்து போட்டியில் பங்கேற்றபோது கை கடிகாரத்தை மாணவி திருடியதாக கூறி ஆசிரியர் தாக்கியுள்ளார். ஆனால், கீழே கிடந்த கை கடிகாரத்தையே மாணவி எடுத்து கொடுத்ததாக சக மாணவிகள் தெரிவித்துள்ளனர். இதனால், உடற்கல்வி ஆசிரியர் மாணவியை அடித்து துன்புறுத்தியுள்ளார்.
இந்நிலையில், பள்ளி மாணவியை அடித்து துன்புறுத்திய வீடியோ வெளியான நிலையில் உடற்கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாணவியின் தாய் அளித்த புகாரின் பேரில், உடற்கல்வி ஆசிரியர் தியாகராஜனை பாகலூர் போலீசார் கைது செய்தனர்.
மேலும், உடற்கல்வி ஆசிரியர் தியாகராஜனை ஏற்கெனவே சஸ்பெண்ட் செய்து ஓசூர் புனித ஜான்போஸ்கோ பள்ளி தாளாளர் உத்தரவிட்டுள்ளார்.
- பள்ளிகளுக்கு இ மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
- வெடிகுண்டு மிரட்டல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாடு முழுவதும் சமீப காலமாக வெடிகுண்டு மிரட்டல் சம்பவமங்கள் அதிகரித்து வருகுிறது. குறிப்பாக, விமானங்கள், பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில், சென்னை குரோம்பேட்டை அருகே உள்ள 2 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
அஸ்தினாபுரம் அருகே உள்ள என்.எஸ்.என் மற்றும் ரோசரி ஆகிய பள்ளிகளுக்கு இ மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் பள்ளிகளுக்கு விரைந்த பெற்றோர் குழந்தைகளை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.
மாணவர்கள் அனைவரும் வெளியே அனுப்பிய நிலையில், வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் பள்ளியை ஆய்வு செய்து வருகிறது.
வெடிகுண்டு மிரட்டல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விஜய் மாநாட்டை எதிர்பார்த்ததை விட அதிக வெற்றியுடன் நடிகர் விஜய் நடத்தி முடித்து இருக்கிறார்.
- விஜய் தனது பேச்சில் தி.மு.க., பா.ஜ.க. இரண்டு கட்சிகளையும் நேரடியாக தாக்கி பேசியுள்ளார்.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் [தவெக] முதல் அரசியல் மாநாடு நேற்று விக்கிரவாண்டியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. மாநாட்டை எதிர்பார்த்ததை விட அதிக வெற்றியுடன் நடிகர் விஜய் நடத்தி முடித்து இருக்கிறார்.
மாநாட்டில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கட்சியின் கொள்கைகளையும், எதிர்கால திட்டங்களையும் தனக்கே உரிய பாணியில் பேசி வெளியிட்டார்.
மேலும், விஜய் தனது பேச்சில் தி.மு.க., பா.ஜ.க. இரண்டு கட்சிகளையும் நேரடியாக தாக்கி பேசியுள்ளார்.
இதுகுறித்து பாஜக மாநில பொதுச்செயலாளர் ராம ஸ்ரீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
அப்போது அவர் கூறுகையில், "விஜய் அரசியல் வெற்றி அடையாது" "Mr.விஜய், ஒரு நாள் பேச்சிலேயே உங்கள் அரசியல் பல் இளித்துவிட்டது. வசனகர்த்தா எழுதிக் கொடுத்த சினிமா பாணி வசனங்களை சிறப்பாக பேசி நடித்திருக்கிறீர்கள். உங்கள் மாநாடு வெற்றிதான். உங்கள் அரசியல் வெற்றி அடையாது" என்றார்.
- தீக்காயம் ஏற்படுவோருக்கு உடனடியாக சிகிச்சை அளித்து பாதுகாக்க சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் தனி வார்டு அமைக்கப்பட்டு உள்ளது.
- பட்டாசு தீக்காயத்தினால் பாதிக்கப்படும் குழந்தைகள் முதல் பெரியவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ குழு 24 மணி நேரமும் தயாராக இருக்க வேண்டும்.
சென்னை:
தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு விபத்துக்களில் தீக்காயம் ஏற்படுவோருக்கு உடனடியாக சிகிச்சை அளித்து பாதுகாக்க சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் தனி வார்டு அமைக்கப்பட்டு உள்ளது.
கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி, ராஜீவ்காந்தி, ஸ்டான்லி மருத்துவமனைகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீயினால் ஏற்படும் விபத்து மற்றும் அதன் பின் விளைவுகளுக்கு சிகிச்சை அளிக்க தீக்காயம் சிறப்பு சிகிச்சை பிரிவு 1981-ம் ஆண்டு 10 படுக்கைகளுடன் தொடங்கப்பட்டது.
தீக்காய விபத்து அதிகரித்ததால் அங்கு சிறப்பு தீக்காய சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டு தற்போது 75 படுக்கைகளுடன் செயல்பட்டு வருகிறது.
இதனை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆய்வு செய்தார். பட்டாசு தீக்காயத்தினால் பாதிக்கப்படும் குழந்தைகள் முதல் பெரியவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ குழு 24 மணி நேரமும் தயாராக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
சிறிய காயம் மற்றும் பெரிய பாதிப்பு உள்ளவர்களுக்கு விரைவாக சிகிச்சை அளித்து பாதுகாக்க தேவையான மருத்துவ சேவை வழங்க வேண்டும் என்று கூறினார்.
பின்னர் அமைச்சர் மா. சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தீ விபத்து ஏற்படும்போது 108 ஆம்புலன்ஸ் மூலம் தமிழகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் அவர்களை மீட்டு உரிய நேரத்தில் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவ மனைக்கு அழைத்து வரப்ப டுகிறார்கள்.
இந்த தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் வார்டுகளில் லாமினார் பிளோ எனப்படும் சீராக காற்றை ஒரே திசையில் போக வைக்கும் ஒரு உன்னத தொழில் நுட்ப முறை செயலில் உள்ளது. இதனால் தீக்காயங்களில் ஏற்படும் தொற்று வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.
இந்த தீக்காய பிரிவின் சிறப்பு என்னவென்றால், அறுவை சிகிச்சை அரங்குகள் ஒரே கட்டமைப்பில் செயல்படுகின்றன. அதனால் உடனடி அறுவை சிகிச்சைகளோ அல்லது மற்ற அறுவை சிகிச்சைகளோ எந்த ஒரு தாமதமும் இல்லாமல் நடக்கின்றன. இங்கு தோல் வங்கியும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
தீக்காய சிகிச்சையின்போது உள் நோயாளிகளின் நலன் கருதி அவர்களது சிகிச்சை மேம்பட மற்ற சிறப்பு பிரிவு மருத்துவர்கள் சிறு நீரக பிரிவு, குடல், மன நல மருத்துவர், மகப்பேறு மருத்துவர் உதவியுடன் செயல்பட்டு வருகிறது.
அனைத்து மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட மற்றும் வட்ட மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர், இயற்பயிற்சியாளர், செவிலியர், நர்சு, உதவியாளர் ஆகியோருக்கு தீக்காயம் குணப்படுத்துவது பற்றிய சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. இதுவரை 95 மருத்துவமனைகளுக்கு இந்த பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடம் அரசு மற்றும் ஜிக்கா நிதி உதவியுடன் சுமார் ரூ.8.80 கோடி செலவில் அதிநவீன கருவி கள் இந்த துறைக்கு வழங்கப்பட்டுள்ளது. மூன்று நுண்அறுவை சிகிச்சை நுண்ணோக்கி கருவிகள், ஒரு அதி அழுத்த பிராண வாயு சிகிச்சை கருவி, ஒரு லாசர் கருவி, தோல் எடுக்கும் கருவிகள், தோல் வலைப்பின்னல் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டுகளில் தீபாவளியின்போது பட்டாசு விபத்தினால் தீக்காயம் அடைவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- அ.தி.மு.க.வை போலவே காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர்கள், மாவட்ட தலைவர்கள் விஜய்க்கு ஆதரவான மனநிலையுடன் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
- விஜய்யின் ஆட்சியில் பங்கு என்ற அறிவிப்பை விடுதலை சிறுத்தைகள் கட்சி முதல் கட்சியாக வரவேற்று பாராட்டு தெரிவித்து உள்ளது.
சென்னை:
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநில மாநாட்டை எதிர்பார்த்ததை விட அதிக வெற்றியுடன் நடிகர் விஜய் நடத்தி முடித்து இருக்கிறார்.
மாநாட்டில் அவரது பேச்சை கேட்க 6 லட்சம் முதல் 8 லட்சம் தொண்டர்கள் வரை திரண்டதாக கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் திரண்டதாக தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் தெரிவிக்கிறார்கள்.
மாநாட்டில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கட்சியின் கொள்கைகளையும், எதிர்கால திட்டங்களையும் தனக்கே உரிய பாணியில் பேசி வெளியிட்டார். குறிப்பாக 5 தலைவர்களை வழிகாட்டி யாக ஏற்றுக்கொண்டு பிரிவினை வாதம், ஊழல் ஆகிய இரண்டையும் எதிரிகளாக அவர் குறிப்பிட்டதை அனைத்து தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.
பல்வேறு விசயங்கள் குறித்து மாநாட்டில் விஜய் பேசினாலும், "தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி சேருபவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு தரப்படும்" என்று அதிரடியாக வெளியிட்ட அறிவிப்பு தமிழக அரசியலை குலுங்க செய்துள்ளது. 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் கூட்டணி மாற்றங்களுக்கும், புதிய கூட்டணி உருவாவ தற்கும் விஜய்யின் பேச்சு அடித்தளம் அமைத்து இருப்பதாக அரசியல் வல்லுனர்கள் கருதுகிறார்கள்.
விஜய் பேச்சை உன்னிப்பாக கவனித்தவர்களுக்கு அவர் 2026-ம் ஆண்டு தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெறும் அளவுக்கு வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையை வெளியிட்டாலும் வலுவான ஒரு கூட்டணியை உருவாக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருப்பதை புரிந்துக் கொண்டனர். வலுவான கூட்டணிக்கான அச்சாரத்தையும் அவர் தனது பேச்சின் போதே சுட்டிக்காட்டி இருப்பதாகவும் அரசியல் கட்சி தலைவர்கள் கருதுகிறார்கள்.
விஜய் தனது பேச்சில் தி.மு.க., பா.ஜ.க. இரண்டு கட்சிகளையும் நேரடியாக தாக்கி பேசியுள்ளார். இதன் மூலம் இந்த 2 கட்சிகளுடனும் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி அமைக்காது என்பது உறுதியாகி இருக்கிறது. அது மட்டுமின்றி இந்த 2 கட்சிகள் மீது அடுத்து வரும் நாட்களில் மேலும் அதிரடி தாக்கு தலை விஜய் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே சமயத்தில் எம்.ஜி.ஆரை விஜய் புகழ்ந்து இருப்பது அரசியல் வட்டாரத்தில் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் அவர் அ.தி.மு.க.வுடன் சற்று சமரசமான மனநிலையுடன் செல்வதாக உணருகிறார்கள். தேவை ஏற்படும் பட்சத்தில் அ.தி.மு.க.வுடன் கைகோர்க்கவும் வாய்ப்பு இருப்பதாக தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
அ.தி.மு.க. மூத்த தலைவர்களிடம் இதுகுறித்து பேசும்போது அவர்கள் இதை மறுக்கவும் இல்லை, ஏற்கவும் இல்லை. விஜய்யின் அடுத்த நடவடிக்கைகளை பொறுத்து அ.தி.மு.க.வின் செயல்பாடுகள் அமையும் என்று தெரிவித்தனர்.
அ.தி.மு.க.வை போலவே காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர்கள், மாவட்ட தலைவர்கள் விஜய்க்கு ஆதரவான மனநிலையுடன் இருப்பதாக தெரிய வந்துள்ளது. ஆனால் தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் இருப்பதால் இப்போது இது பற்றி பேசாமல் பொறுமையாக காத்திருக்க முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது.
இதற்கிடையே விஜய் பேச்சு காரணமாக தமிழகத்தில் உள்ள பல கட்சிகள் யோசனை செய்ய தொடங்கி இருப்பதாக தெரிய வந்து உள்ளது. இதுவரை ஆட்சி அதிகாரத்தில் இருந்து வரும் தி.மு.க.வோ அல்லது அ.தி.மு.க.வோ கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு தருவதாக கூறியது கிடையாது.
இதற்கு முன்பு தி.மு.க. விடமும், அ.தி.மு.க.விடமும் பல கட்சிகள் ஆட்சியில் பங்கு கேட்டு கோரிக்கை விடுத்தன. ஆனால் அவை அனைத்தையும் தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் நிராகரித்தன. இந்த நிலையில் தற்போது முதல் முறையாக ஆட்சியில் பங்கு தருகிறேன் என்று மிகப்பெரிய வெடி குண்டை வீசியபடி விஜய் அரசியல் களத்துக்கு வந்துள்ளார்.
இதுதான் பல கட்சிகளை யோசிக்க வைத்துள்ளது. விஜய்யுடன் கைகோர்த்து ஆட்சி அமைக்கும் பட்சத்தில் நிர்வாகத்தில் பங்கு பெற்று அமர முடியும் என்று அந்த கட்சிகளுக்கு விருப்பம் ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
விஜய்யின் ஆட்சியில் பங்கு என்ற அறிவிப்பை விடுதலை சிறுத்தைகள் கட்சி முதல் கட்சியாக வரவேற்று பாராட்டு தெரிவித்து உள்ளது. அதுபோல புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியும் வரவேற்றுள்ளார். இதே மனநிலையில் மேலும் 3 முக்கிய கட்சிகள் உள்ளன.
வரும் மாதங்களில் மேலும் சில முக்கிய கட்சிகள் விஜய்யின் அறிவிப்பை பரிசீலனை செய்ய வாய்ப்பு இருப்பதாக அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள். அத்தகைய சூழ்நிலைகள் உருவானால் விஜய் தெரிவித்துள்ளபடி தமிழகத்தில் வலுவான ஒரு கூட்டணி உருவாக வாய்ப்பு இருக்கிறது.
இதன் மூலம் விஜய் வகுத்துள்ள வியூகம் வெற்றி பெறும் என்று தமிழக வெற்றிக் கழக மூத்த தலைவர்கள் நம்பிக்கையுடன் தெரிவித்தனர். விஜய் அழைப்பை எந்தெந்த கட்சிகள் எப்போது ஏற்று தங்களது நிலைப்பாட்டை அறிவிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே ஏற்பட்டுள்ளது.
- முத்துராமலிங்க தேவர் அரங்கத்தின் மொத்த பரப்பளவு 9848.98 சதுர அடி.
- அரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்தள வசதி, சுப நிகழ்ச்சிகள் நடத்திட மேடை வசதி, மின்விளக்கு மற்றும் மின்விசிறி வசதிகள் போன்றவையும் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னை:
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாள் தேவர் ஜெயந்தி விழாவாக தமிழ்நாடு அரசால் ஆண்டுதோறும் அக்டோபர் 30-ந் தேதி அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
இவ்விழாவில், தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
பசும்பொன் முத்துராம லிங்கத் தேவர் நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள "தெய்வீகத் திருமகனார் உ. முத்துராமலிங்கத் தேவர் அரங்கம்" திறந்து வைக்குமாறும் தேவர் ஜெயந்தி விழாவின்போது, கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டும், வெயில் மற்றும் மழையில் இருந்து பாதுகாத்திட, ஒரு நிரந்தர மண்டபம் அமைத்து தர வலியுறுத்தியும் பொதுமக்கள் நீண்ட நாட்களாக அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர். இதை ஏற்று, பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள முத்து ராமலிங்கதேவர் நினைவிடத்தின் இரு நுழைவாயில்களிலும் ஆண்டுதோறும் தற்காலிகமாக அமைக்கப்படும் பந்தலுக்கு பதிலாக பொதுமக்கள் நலன்கருதி 1 கோடியே 55 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு மண்டபங்கள் தமிழ்நாடு அரசால் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் 28.10.2023 அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டு அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.

அதன்படி, ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் 1 கோடியே 55 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள தெய்வீகத் திருமகனார் உ. முத்துராமலிங்கத் தேவர் அரங்கத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக இன்றைய தினம் திறந்து வைத்தார்.
இந்த அரங்கத்தின் மொத்த பரப்பளவு 9848.98 சதுர அடி ஆகும். இவ்வரங்கத்தில் பொதுமக்களுக்கான காத்திருப்பு கூடம் மற்றும் மிக முக்கிய பிரமுகர்களுக்கான நிரந்தர நிழற்கூரை ஆகியவையும், பொதுமக்களுக்கான காத்திருப்பு கூடத்தில் 500 ஆண்கள் மற்றும் 500 பெண்கள் தனித்தனியாக வரிசையில் செல்லும் வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்தள வசதி, சுப நிகழ்ச்சிகள் நடத்திட மேடை வசதி, மின்விளக்கு மற்றும் மின்விசிறி வசதிகள் போன்றவையும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக நவாஸ் கனி எம்.பி., சட்டமன்ற உறுப்பினர்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம், முருகேசன், ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வில் சுமார் 20 லட்சம் பேர் எழுதினர்.
- தேர்வாணையத்தின் கூட்டம் முடிந்த நிலையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு கடந்த ஜூன் மாதம் 7ம் தேதி நடைபெற்றது.
VAO பில் கலெக்டர் உள்ளிட்ட 6,224 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு ஜூன் 9ம் தேதி நடைபெற்றது. 20 லட்சம் பேர் இத்தேர்வுக்கு விண்ணப்பித்த நிலையில், 7:247 மையங்களில் 15.8 லட்சம் தோவர்கள் தேர்வு எழுதி இருந்தனர்
இந்நிலையில், குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.
இன்று காலை தேர்வாணையத்தின் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிந்த சில மணி நேரத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வு முடிவுகளை tnpscresults.tn.gov.in, tnpscexams.in ஆகிய இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
- உளுந்தம் பருப்பு மற்றும் பாசிப்பயறு ஆகியவற்றின் விலை சற்று குறைந்துள்ளது.
- வெள்ளை பட்டாணி பருப்பு கடந்த வாரம் ரூ.4 ஆயிரம் முதல் ரூ.4,200 வரை விற்பனையானது
விருதுநகர்:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் பருப்பு விலைகளில் பெரிய அளவில் மாற்றம் வருவது வாடிக்கையான ஒன்றாகும். அந்த வகையில் விருதுநகர் வணிக சந்தையில் துவரம் பருப்பு மற்றும் பாசிப்பருப்பு, பட்டாணி ஆகியவற்றின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. அதேவேளையில் உளுந்தம் பருப்பு மற்றும் பாசிப்பயறு ஆகியவற்றின் விலை சற்று குறைந்துள்ளது.
விருதுநகர் வணிகச் சந்தையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைப்பட்டியல் விபரம் வருமாறு:-
பாமாயில் 15 கிலோ டின் கடந்த வாரம் ரூ.2040-க்கு விற்கப்பட்டது. இந்த வாரம் டின் ஒன்றுக்கு ரூ.10 மட்டும் குறைக்கப்பட்டு தற்போது ரூ.2030-க்கு விற்கப்படுகிறது. மல்லி நாடு வகை கடந்த வாரம் 40 கிலோ ரூ.4 ஆயிரம் முதல் ரூ.4,200 வரை விற்கப்பட்டது. இந்த வாரம் சந்தைக்கு வரத்து அதிகரித்ததால் ரூ.500 குறைவு ஏற்பட்டு தற்போது ரூ.3,500 முதல் 4 ஆயிரம் வரை விற்பனையாகிறது.
துவரம் பருப்பு புதுசு நாடு வகை 100 கிலோ ரூ.10,500-க்கு விற்கப்பட்டது. இந்த வாரம் ரூ.300 வரை உயர்ந்து தற்போது ரூ.10,800-க்கு விற்கப்படுகிறது. துவரம் பருப்பு புதுசு லயன் வகை 100 கிலோ கடந்த வாரம் ரூ.14 ஆயிரம் முதல் ரூ.14,700 வரை விற்கப்பட்டது. இந்த வாரம் ரூ.500 வரை உயர்ந்து தற்போது ரூ.14,500 முதல் ரூ.15,500 வரை விற்பனை செய்யப்படுகிறது.
உருட்டு உளுந்தம் பருப்பு 100 கிலோ நாடு வகை கடந்த வாரம் ரூ.12,350-க்கு விற்கப்பட்டது. இந்த வாரம் ரூ.150 குறைந்து தற்போது, ரூ.12,200-க்கு விற்பனையாகிறது. உளுந்து லயன் வகை 100 கிலோ கடந்த வாரம் ரூ.9,300 முதல் ரூ.9500 வரை விற்பனையானது. இந்த வாரம் குவிண்டாலுக்கு ரூ.800 வரை குறைந்துள்ளது. எனவே, ரூ.8500 முதல் ரூ.9 ஆயிரம் வரை விற்கப்படுகிறது.
வெள்ளை பட்டாணி பருப்பு கடந்த வாரம் ரூ.4 ஆயிரம் முதல் ரூ.4,200 வரை விற்பனையானது. இந்த வாரம் ரூ.200 உயர்ந்து ரூ.4,200 முதல் ரூ.4,300 வரை விற்பனை செய்யப்படுகிறது. பாசிப்பயறு நாடு வகை 100 கிலோ கடந்த வாரம் ரூ.8,400 முதல் ரூ.8,700 வரை விற்கப்பட்டது. இந்த வாரம் ரூ.550 வரை குறைந்து ரூ.7,850 முதல் ரூ.8,150 வரை விற்பனையாகிறது.
பாசிப்பயறு மீடியம் வகை கடந்த வாரம் ரூ.9,300-க்கு விற்கப்பட்டது. இந்த வாரம் ரூ.100 குறைக்கப்பட்டு ரூ.9,200-க்கு விற்கப்படுகிறது. கடலை புண்ணாக்கு 100 கிலோ கடந்த வாரம் ரூ.4,600-க்கு விற்கப்பட்டது. இந்த வாரம் ரூ.200 குறைந்து ரூ.4,400-க்கு விற்பனையாகிறது. எள்ளு புண்ணாக்கு 50 கிலோ ரூ.1,800-க்கு விற்பனையா னது. இந்த வாரம் ரூ.400 வரை உயர்ந்து தற்போது ரூ.2,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பிற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.
- அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் இன்று ஒருங்கிணைந்த கூட்டம் நடத்தப்பட்டது.
- திமுக கூட்டணி வலுவாக உள்ளது.
சென்னை:
2026 சட்டமன்ற பொதுத்தேர்தலை எதிர்கொள்ள தி.மு.க. இப்போதே தயாராகி வருகிறது. அதற்காக தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் வகையில் 234 தொகுதிகளுக்கும் சட்டமன்ற தொகுதி பார்வையாளர்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நியமித்துள்ளார்.
இவர்கள் தங்களது தொகுதிகளுக்கு சென்று மாவட்ட கழக செயலாளர்களுடன் கலந்து பேசி, மாவட்ட கழக கூட்டங்களில் பங்கேற்று தங்களது கருத்துக்களை எடுத்துரைத்தனர்.
மேலும் எம்.எல்.ஏ.க்கள் நடத்தும் கூட்டங்களிலும் பங்கேற்று தொகுதி சம்பந்தமான பணிகள் குறித்தும் விவரித்தனர். வாக்காளர் பட்டியல், முகவர்களின் பெயர் பட்டியலை சரி பார்த்தல், கழக நிர்வாகிகளின் செயல்பாடுகள் சட்டமன்ற உறுப்பினர்களின் செயல்திறன் ஆகியவற்றை கவனித்து தலைமைக்கு அவ்வப்போது தகவல்கள் கொடுப்பதுதான் இவர்களது பணியாகும்.
பாராளுமன்ற தேர்தலின்போதும் இதே போல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். அந்த பார்வையாளர்களில் 60 சதவீதம் பேர்களை எடுத்து விட்டு இப்போது இளைஞரணி, மாணவரணி, மகளி ரணி, வழக்கறிஞர் அணி உள்ளிட்ட பல அணிகளில் உள்ளவர்கள் தொகுதி பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்குவதற்காக அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் இன்று ஒருங்கிணைந்த கூட்டம் நடத்தப்பட்டது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி. பொன்முடி, டி.கே.எஸ்.இளங்கோவன், தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகன் மற்றும் தொகுதிப் பார்வையாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
ஆலோசனைக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
* திமுக கூட்டணி வலுவாக உள்ளது.
* 200 தொகுதிகளில் வெற்றி பெறும் அளவுக்கு கடுமையாக பணி செய்ய வேண்டும்.
* கடுமையாக உழைத்து 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.
* 2026 சட்டமன்ற தேர்தலில் 200 இடங்களில் வெல்வது நமது இலக்கு அதற்காக தீவிரமாக களப்பணியாற்ற வேண்டும் என்று பேசினார்.
- வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.
- நீலகிரி வழியாக வயநாடு சென்ற அவர், கல்லூரி மாணவர்களை சந்தித்தார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி. இவரது மகளும், ராகுல் காந்தியின் சகோதரியுமான பிரியங்கா காந்தி முதன்முறையாக தேர்தலில் நேரடியாக களம் இறங்கியுள்ளார்.
வயநாடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக களம் நிறுத்தப்பட்டுள்ளார். இன்று அவர் வயநாடு தொகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
இதற்காக டெல்லியில் இருந்து தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம் வந்தடைந்தார். நீலகிரி வந்த அவர் கல்லூரி மாணவர்களை சந்தித்தார். அவரை பார்ப்பதற்காக கல்லூரி மாணவர்கள் நீண்ட வரிசையில் நின்றிருந்தனர்.
அவர்களுடன் புன்னகைத்தவாறு கைக்கொடுத்து சென்றார். நீலகிரியில் இருந்து வயநாடு தொகுதி செல்லும் பிரியங்கா காந்தி அங்கு தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
ராகுல் காந்தி ரேபரேலி, வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால் வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இதன் காரணமாக வருகிற 13-ந்தேதி வயநாட்டிற்கு இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது.






