என் மலர்
உள்ளூர் செய்திகள்
- மழை பெய்து கொண்டே இருப்பதால், மீண்டும் மண் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டது.
- மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் 200 மீட்டர் தொலைவில் மேலும் ஒரு இடத்தில் மண் சரிவு ஏற்பட்டது.
வங்க்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் நேற்று மாமல்லபுரம்- மரக்காணம் இடையே கரையை கடந்தது.
இதன் எதிரொலியால், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது.
இதனால், பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில், திருவண்ணாமலையில் நேற்று பாறை உருண்டு விழுந்து மண் சரிவு ஏற்பட்டது. இதில், வீட்டின் மீது பாறை விழுந்ததை அடுத்து அதனுள் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மழை பெய்து கொண்டே இருப்பதால், மீண்டும் மண் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டது.
அதபோல், மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் 200 மீட்டர் தொலைவில் மேலும் ஒரு இடத்தில் மண் சரிவு ஏற்பட்டது.
இந்நிலையில், திருவண்ணாமலை தீபமலையில் அமைந்துள்ள குகை நமச்சிவாய ஆலயத்தின் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது.
இதில், நல்வாய்ப்பாக யாருக்கும் உயிர்சேதம் இல்லை. அதிர்ச்சியூட்டும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
- பள்ளி குழந்தைகள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
- குறுகலான சாலையில் வேன் இயக்கப்பட்டதால் விபத்து.
அம்மாப்பேட்டை:
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள குருவரெட்டியூர் பகுதியில் எம்.ஏ.எம். எக்ஸல் என்ற ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு அம்மாபேட்டை மற்றும் சுற்று வட்டாரப் பகுதி களை சேர்ந்த மாணவர்கள் பலர் படித்து வருகிறார்கள். அவர்களில் பலர் பள்ளி வேனில் அழைத்து செல்வது வழக்கம்.
இந்த நிலையில் அம்மாபேட்டை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து பள்ளியில் படிக்கும் மாணவர்களை இன்று காலை வேனில் ஏற்றிக்கொண்டு பள்ளிக்கு சென்று கொண்டு இருந்தது.
இதையடுத்து அந்த பள்ளி வேன் அம்மா பேட்டையில் இருந்து ஊமாரெட்டியூர் செல்லும் சாலையில் அரசு கால்நடை மருத்துவமனை வழியாக பள்ளி வேன் ஓட்டுநர் அம்மாபேட்டையை சேர்ந்த குணசேகரன் (வயது 38) என்பவர் வேனை ஓட்டி சென்று கொண்டு இருந்தார்.
அப்போது சாலையில் சிறிய அளவிலான வளைவில் திருப்பும் போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் வலது புறம் சாலையை ஒட்டி உள்ள கரும்பு தோட்டத்தில் கவிழ்ந்து விபத்துக்கு ள்ளானது.
இந்த விபத்தில் பள்ளி வேனில் பயணம் செய்த பள்ளி குழந்தைகள் 10-க்கும் மேற்பட்டவர்கள் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இதை கண்ட பள்ளி குழந்தைகள் கதறி அலறினர்.
இது பற்றி தகவல் அறிந்து அக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இதையடுத்து 108 ஆம்புலன்சு தகவல் கொடுத்தனர். ஆனால் ஆம்புலன்ஸ் வாகனம் வருவதற்கு கால தாமதம் ஆனதாக கூறப்படுகிறது. அதற்குள் தகவல் கிடைத்ததும் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
இதைத்தொடர்ந்து தங்கள் குழந்தைகள் விபத்தில் சிக்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து பள்ளி வாகனத்தில் இருந்து தங்களது குழந்தைகளை மீட்டு இரு சக்கர வாகனங்களில் ஏற்றிக்கொண்டு அருகே உள்ள அம்மா பேட்டை ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு முதல் உதவி சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.
அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தொடர்ந்து பள்ளி குழந்தைகள் மேல் சிகிச்சைக்காக அந்தியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அம்மாபேட்டை அருகே தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளான சம்பவம் பெற்றோர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் குறுகலான சாலையில் அதிக நீளமுடைய பள்ளி வேன் இயக்கப்பட்டதால் விபத்து நிகழ்ந்திருப்பதாக பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தகவல் அறிந்து வந்த அம்மாபேட்டை போலீசார் விபத்திற்கு உள்ளான பள்ளி வேனை, கிரேன் எந்திரம் கொண்டு வந்து அப்புறப்படுத்தி விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.
- எங்கு பார்த்தாலும் மழை நீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
- மீட்பு பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவு.
விழுப்புரம்:
பெஞ்சல் புயலின் கோரத்தாண்டவம், விழுப்புரம் மாவட்டத்தையே புரட்டிப் போட்டுள்ளது. மாவட்டத்தில் எங்கு பார்த்தாலும் மழை நீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
விழுப்புரம் பஸ் நிலையம், கலெக்டர் அலு வலகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை மழைநீர் சூழ்ந்தது. மேலும் ஆயிரக்கணக்கான குடியிருப்புகளையும் மழை வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர்.
நேற்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விழுப்புரம் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கியதோடு மீட்பு பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அமைச்சர்கள் பொன்முடி, சிவசங்கர், செந்தில் பாலாஜி ஆகியோர் விழுப்புரம் மாவட்டத்தில் முகாமிட்டு வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிடுவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று (திங்கட்கிழமை) காலையில் விழுப்புரம் மாவட்டத்திற்கு சென்றார்.
சென்னையில் இருந்து கார் மூலம் புறப்பட்ட அவர் முதலில் செங்கல்பட்டு மாவட்டம் கடப்பாக்கம் பகுதிக்கு சென்றார். அங்கு சாய்ந்து கிடந்த மின் கம்பங்களை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அவற்றை பார்வையிட்டு அதிகாரிகளிடம் விவரம் கேட்டறிந்தார்.
அப்போது முதல்-அமைச்சரிடம் பெண் அதிகாரி கூறியதாவது:-
இந்த பகுதியில் தோப்புக்கு ஒரு வீடு வீதம் நிறைய உள்ளது. மரங்கள் விழுந்து வீடுகள் சேதம் அடைந்ததுடன் மின் கம்பங்களும் சாய்ந்து விட்டது.
2 நாட்களாக அவற்றை சரி செய்து வருகிறோம். மின் கம்பங்களை சரி செய்ய ஊழியர்கள் குறைவாக இருந்தார்கள். இன்று கூடுதல் ஊழியர்கள் வந்துள்ளார்கள் என்றார்.
அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேத விவரங்களை முழுமையாக கணக்கெடுத்து மாவட்ட கலெக்டரிடம் கொடுங்கள் என்று கேட்டுக் கொண்டார். அமைச்சர் தா.மோ.அன்பரசன், ஐ.ஏ.எஸ். உயர் அதிகாரி அமுதா, கலெக்டர் அருண்ராஜ் ஆகியோரும் பாதிப்பு விவரங்களை எடுத்துக் கூறினார்கள்.
அதன் பிறகு அங்கிருந்து புறப்பட்டு மரக்காணம் ஒன்றியம் மந்தவாய்புதுக்குப்பத்தில் உள்ள புயல் பாதுகாப்பு மையத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு புடவை, பணம் உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்ட அவர் விழுப்புரம் ரெட்டியார் மில்லில் உள்ள வி.பி.எஸ். மெட்ரிக்கு லேஷன் பள்ளியில் (தாமரைக்குளம்) அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மையத்தில் ஆய்வு மேற்கொண்டு அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
அப்போது மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர் ஆறுதல் கூறினார். உங்களுக்கு தேவையான உதவிகளை அரசு செய்யும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
மரக்காணத்தில் இருந்து விழுப்புரம் செல்லும் வழியில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை பார்த்துக்கொண்டே சென்றார். அவருடன் பொன்முடி உள்ளிட்ட அமைச்சர்கள், அதிகாரிகள், மாவட்ட கலெக்டரும் உடன் சென்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தை தொடர்ந்து அவர் கள்ளக்குறிச்சி மாவட்டமும் சென்றார். திருநாவலூர் ஒன்றியம் சேந்தமங்கலத்தில் சேதமடைந்த விவசாய பயிர்களை பார்வையிட்டார்.
உளுந்தூர்பேட்டை, செங்குறிச்சி டோல்கேட் பகுதியில் பாதிக்கப்பட்ட வீடுகளை பார்வையிட்டார். பின்னர் அங்குள்ள திருமண மண்டபத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
- ஃபெஞ்சல் புயல் பாதிப்பு சேதங்களை அறிக்கையாக மத்திய அரசிடம் அனுப்பி வைப்போம்.
- எந்த ஆட்சியில் மக்களுக்கான பணி சிறப்பாக நடைபெறுகிறது என மக்களுக்கு தெரியும்.
விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். இதையடுத்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். இதன்பின்ர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-
* விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்கள் இதுவரை கண்டிராத அளவு மழையை கண்டுள்ளது.
* பருவமழை தொடங்குவதற்கு முன்னரே ஆட்சியர் உள்ளிட்டோருடன் ஆலோசனை செய்தோம்.
* தமிழகத்தின் பல பகுதிகளில் வழக்கத்தை விட கூடுதல் மழை பெய்துள்ளது.
* மீட்பு பணி குழு, தீயணைப்பு வீரர்கள் என பலரும் இணைந்து மீட்பு பணிகள் நடைபெற்றன.
* 140-க்கும் மேற்பட்ட முகாம்களில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
* நீர் தேங்கிய பகுதிகளில் நீர் வடிந்த பின்னர் முழுமையாக மின்சாரம் வழங்கப்படும்.
* 1.29 ஹெக்டர் பரப்பளவிற்கு வேளாண் பயிர்கள் சேதமடைந்துள்ளதாக உத்தேசிக்கப்பட்டுள்ளது.
* மழை முழுமையாக நிறைவடைந்ததும் பயிர் சேதங்களை கணக்கிட்டு நிச்சயமாக இழப்பீடு வழங்கப்படும்.
* துணை முதலமைச்சர், அமைச்சர்கள், ஆட்சியர்கள் முழு அர்ப்பணிப்புடன் மீட்பு, கள ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
* தருமபுரி, கிருஷ்ணகிரியில் பொறுப்பு அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தேன்.
* ஃபெஞ்சல் புயல் பாதிப்பு சேதங்களை அறிக்கையாக மத்திய அரசிடம் அனுப்பி வைப்போம்.
* நமக்கான நிதியை ஒதுக்கவில்லை என்றாலும் எவ்வாறு சமாளிப்பது என ஆலோசித்து நடவடிக்கை எடுப்போம்.
* எந்த ஆட்சியில் மக்களுக்கான பணி சிறப்பாக நடைபெறுகிறது என மக்களுக்கு தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.
- ஒகேனக்கல், சிறுவாணி அணை பகுதிகளுக்கு சுற்றுலா செல்வோர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:-
மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. இதனால் ஒகேனக்கல், சிறுவாணி அணை பகுதிகளுக்கு சுற்றுலா செல்வோர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் எச்சரிக்கையுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- மேட்டுப்பாளையம் பஸ் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- ஐயப்ப பக்தர்கள் 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
மேட்டுப்பாளையம்:
ஐயப்ப சுவாமி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பாடல் பாடியதாக பாடகி இசைவாணி மற்றும் அந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த இயக்குனர் ரஞ்சித் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஐயப்ப பக்தர்கள் போலீஸ் நிலையங்களில் புகார் மனு கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் பாடகி இசைவாணி, இயக்குனர் ரஞ்சித் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, அனைத்து ஐயப்ப பக்தர்கள் சங்கத்தின் சார்பில் மேட்டுப்பாளையம் பஸ் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் உமா சங்கர், தலைவர் செல்வகுமார் ஆகியோர் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் சங்க செயலாளர் சந்திரசேகர் வரவேற்புரையாற்றினார். வாராகி மந்திராலயத்தின் சாக்த ஸ்ரீ வாராகி மணிகண்ட சுவாமிகள், கல்லாறு அகத்தியர் பீடத்தின் சுவாமிகள் சரோஜினி மாதாஜி உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தின் போது ஐயப்ப சுவாமி குறித்தும், ஐயப்ப பக்தர்கள் குறித்தும் கொச்சைப்படுத்தும் விதமாக பாடல் பாடிய கானா பாடகி இசைவாணி, அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நீலம் கல்ச்சுரல் கிளப் இயக்குனர் பா.ரஞ்சித் உள்ளிட்டோரை கைது செய்ய கோரி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
- போச்சம்பள்ளி, ஊத்தங்கரையில் வெள்ளம் பாதிப்பு அதிக அளவு ஏற்பட்டது.
- சேதமடைந்த வாகனங்களை சரிசெய்ய அதிக செலவு ஆகும்.
சிங்காரபேட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் இன்று வெள்ளம் பாதித்த பகுதிகளை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
போச்சம்பள்ளி, ஊத்தங்கரையில் வெள்ளம் பாதிப்பு அதிக அளவு ஏற்பட்டது. ஊத்தங்கரை அண்ணாநகர் பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன.
இதனால் சேதமடைந்த வாகனங்களை சரிசெய்ய அதிக செலவு ஆகும். அதற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் வெள்ளம் பாதித்த பகுதி மக்களுக்கு அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.
- காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடின.
- கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்தது.
சிங்காரபேட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் தமிழகத்தில் எங்கும் இல்லாத வகையில் 24 மணி நேரத்தில் 50 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.
இதனால் ஊத்தங்கரை அருகே உள்ள பரசன் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்த நிலையில் ஏரி உடைந்தது. இதனால் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடின.
இந்த ஏரியின் அருகே உள்ள பார்க்கிங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 டிப்பர் லாரி, கார்கள் என 20-க்கும் மேற்பட்ட வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இதனால் ஏரியின் அருகில் உள்ள அண்ணாநகர் மற்றும் அதன் அருகில் உள்ள கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்தது.
இதனால் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்தனர். சாலையில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் பல வீடுகளில் வைத்திருந்த பொருட்கள் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டது.
இந்த வெள்ளம் பாதிப்பு குறித்து தகவல் அறிந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று ஊத்தங்கரை பகுதியில் ஆய்வு செய்தார். பின்னர் முகாமில் தங்க வைத்து இருந்தவர்களை ஆறுதல் கூறி நிவாரண உதவி வழங்கினார்.
அப்போது அ.தி.மு.க. துணை பொதுசெயலாளர் கே.பி.முனுசாமி, முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான கே.பி.அன்பழகன், கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- 15 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது.
- சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று அதி கனமழை பெய்வதற்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஈரோடு, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்டும், தென்காசி, விருதுநகர், மதுரை, கரூர், திருச்சி, நாமக்கல், பெரம்பலூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, திருச்சி, பெரம்பலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். சென்னையில் அதிகபட்சமாக 32 டிகிரி செல்சியஸ் குறைந்த பட்சமாக 25 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகும்.
- காதல் விவகாரத்தில் விஜய் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
- இருவரையும் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை பாளையங்கோட்டை சாந்திநகர் 18-வது தெருவில் அண்ணாநகர் கீழத்தெருவில் உள்ள ஒரு வீட்டின் மாடியில் இருந்து இன்று காலை பயங்கர அலறல் சத்தம் கேட்டது.

உடனே அப்பகுதி மக்கள் அங்கு ஓடிச் சென்றனர். அப்போது வீட்டில் இருந்து 2 பேர் கீழே இறங்கி தப்பி ஓடினர். உள்ளே சென்று பார்த்த போது அங்கு வாலிபர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் பாளையங்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
அப்போது வீட்டின் மாடியில் உள்ள கூரை செட்டுக்குள் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். உடனடியாக கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து நடந்த விசாரணையில் கொலை செய்யப்பட்ட வாலிபர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த விஜய் (வயது 25) என்பதும், அவரை சாந்திநகர், அண்ணாநகரை சேர்ந்த சிம்சோன் என்ற புஷ்பராஜ், அவரது நண்பரான சிவா ஆகியோர் சேர்ந்து வெட்டிக் கொலை செய்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் காதல் விவகாரத்தில் விஜய் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
புஷ்பராஜின் சகோதரி ஒருவர் என்ஜினீயரிங் படித்து முடித்துள்ளார். நாகர்கோவிலில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் அவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் விஜயுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
விஜய் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். விஜயுடனான பழக்கம் நாளடைவில் காதலாக மாறி உள்ளது.
இந்த காதல் விவகாரம் பெண்ணின் குடும்பத்தினருக்கு தெரிய வந்ததும் அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அந்த பெண் கடந்த சில நாட்களுக்கு முன்பு காதலன் விஜயை பார்ப்பதற்காக கள்ளக்குறிச்சிக்கு சென்றார். அங்கு விஜயின் குடும்பத்தினரிடம் திருமணம் செய்வதற்காக சம்மதம் கேட்டுள்ளார்.
அப்போது விஜயின் குடும்பத்தினர் இருவீட்டார் சம்மதத்துடன் தான் திருமணம் நடைபெற வேண்டும் கூறி அந்த பெண்ணை மீண்டும் நெல்லைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனால் மனம் உடைந்த அந்த பெண் கடந்த 4 நாட்களுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். குடும்பத்தினர் அவரை காப்பாற்றி அறிவுரை கூறினர்.
இந்நிலையில் தனது சகோதரியின் இந்த முடிவுக்கு விஜய் தான் காரணம் என கருதிய அவரது அண்ணன் புஷ்பராஜ் விஜயை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார்.
அதன்படி விஜயிடம் சமாதானம் பேசலாம் எனக்கூறி நெல்லைக்கு வருமாறு அழைத்துள்ளார். அதனை நம்பிய விஜய் இன்று காலை ரெயில் மூலம் நெல்லை வந்துள்ளார்.
நெல்லை ரெயில் நிலையத்தில் இருந்து விஜயை புஷ்பராஜ் தனது நண்பரான சிவா வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு வீட்டின் மாடியில் சமாதானம் பேசிய போது விஜய்க்கும், புஷ்பராஜூக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆவேசம் அடைந்த புஷ்பராஜ், சிவா ஆகிய இருவரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் விஜயை வெட்டினர்.
மேலும் அங்கு கிடந்த கட்டிட கழிவுகள் மூலமும் விஜயை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து புஷ்பராஜ், சிவா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதல் விவகாரத்தில் வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தாழ்வான பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியது.
- போக்குவரத்து பாதிப்பு காரணமாக மாற்றுவழியில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் அதி கனமழை பெய்தது. இதனால் விழுப்புரம், முண்டியம்பாக்கம், விக்கிரவாண்டி, அரசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. மேலும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தாழ்வான பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியது.
இதுமட்டுமின்றி தேசிய நெடுஞ்சாலைகளில் ஒட்டி உள்ள ஏரிகள் நிரம்பியதால் வெளியேறிய தண்ணீரால் அப்பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அரசூர் பகுதியில் விழுப்புரம்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையும் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த போக்குவரத்து பாதிப்பு காரணமாக மாற்றுவழியில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. விழுப்புரத்தில் இருந்து திருச்சி நோக்கி வரக்கூடிய தென்மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய வாகனங்கள் மாற்று வழியில் இயக்கப்பட்டு வருகிறது.
அதேப்போன்று, சென்னைக்கு செல்லக்கூடிய நெடுஞ்சாலையிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
- தடுப்பணைகளில் இருபுறமும் வெள்ளம் கரைபுறண்டு ஓடுகிறது.
- ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.causeway
தருமபுரி:
தருமபுரி மாவட்டத்தில் கடந்த 3 தினங்களாக இடைவிடாமல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
நேற்றிரவு இடை விடாது தொடர்ந்து பெய்யும் கனமழையால் தருமபுரி நகராட்சிக்குட்பட்ட அன்னை சத்யா நகர், ஆவின் நகர், நந்திநகர் பகுதிகளில் உள்ள வீடுகளிலும் மழைநீர் புகுந்துள்ளது.
சாலைகளிலும் செல்ல முடியாத அளவுக்கு முழங்கால் அளவு மழைநீர் பாய்தோடுகிறது. மக்கள் வெளியே செல்ல முடியாமல் வீட்டில் முடங்கியுள்ளனர். அத்தியவாசிய பொருட்கள் வாங்க முடியாமல் தவிக்கின்றனர்.
வீட்டிற்குள் உள்ள மழை நீரை மோட்டார் மூலம் சிலர் வெளியேற்றி வருகின்றனர். இதேபோல் அரூர், பொம்மிடி, பாப்பி ரெட்டிப்பட்டி, பாப்பாரப்பட்டி, பென்னாகரம், பாலக்கோடு, காரிமங்கலம் மற்றும் மாவட்டம் முழுவதும் கனமழை பெய்துள்ளது.

தொடர்ந்து மாவட்டம் முழுவதும் இன்று காலையும் மழைபெய்து வருகிறது.
கனமழை காரணமாக அரூர் சுற்றுவட்டார கிராமங்களான ஏ.கே.தண்டா, சிட்லிங், கல்லாறு, சூரநத்தம், கோட்டப்பட்டி, செலம்பை, தேக்கனா ம்பட்டி, நரிப்பள்ளி, வாச்சாத்தி ஏரி, கோபிநாதம்பட்டி கூட்ரோடு அருகில் வாணியாறு உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உள்ள ஆறுகள் மற்றும் தடுப்பணைகளில் இருபுறமும் வெள்ளம் கரைபுறண்டு ஓடுகிறது.
இதில் கோட்டப்பட்டி அருகே உள்ள செலம்பை - ஆவாலூரை இணைக்கும் வகையில் பல ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்ட தரை ப்பாலத்தை வெள்ளம் மூழ்கி சென்றது.
இதனால் அக்கிராமம் தனித்தீவாக காட்சியளி க்கிறது. மழை பாதிப்பு காரணமாக அப்பகுதி மக்கள், கால்நடை விவசாயிகள் பால் உள்ளிட்ட பொருட்களை சொசைட்டியில் ஊற்றவும், மருத்துவமனை, பள்ளி செல்வதற்கும் ஆற்றைக் கடக்க மிகவும் சிரமபட்டு வருகின்றனர்.
அதுமட்டுமின்றி ஆடு, மாடுகளை மேய்ச்சல் நிலங்களில் விட முடியாமல் விவசாயிகள் தவிப்புக்கு உள்ளாகினர்.
மங்களப்பட்டியில் உள்ள அன்புஅரசு என்பவரது தோட்டத்தில் தேக்கு மரம் சாய்ந்து மின் கம்பம் மீது விழுந்தது. இதனால் மின் கம்பி அறுந்து அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டுள்ளது.
கனமழை காரணமாக வருவாய் துறையினர் ஆற்றோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
கனமழையால் கிராம புறங்களில் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது. கனமழை காரணமாக அதிகாரிகள் ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.






