தொடர் மழை: தீபமலை குகை கோவில் தடுப்புச் சுவர் இடிந்து விபத்து- உயிர் தப்பிய பக்தர்கள்

மழை பெய்து கொண்டே இருப்பதால், மீண்டும் மண் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டது.மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் 200 மீட்டர் தொலைவில் மேலும் ஒரு இடத்தில் மண் சரிவு ஏற்பட்டது.
தொடர் மழை: தீபமலை குகை கோவில் தடுப்புச் சுவர் இடிந்து விபத்து- உயிர் தப்பிய பக்தர்கள்
Published on

வங்க்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் நேற்று மாமல்லபுரம்- மரக்காணம் இடையே கரையை கடந்தது.

இதன் எதிரொலியால், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது.

இதனால், பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில், திருவண்ணாமலையில் நேற்று பாறை உருண்டு விழுந்து மண் சரிவு ஏற்பட்டது. இதில், வீட்டின் மீது பாறை விழுந்ததை அடுத்து அதனுள் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மழை பெய்து கொண்டே இருப்பதால், மீண்டும் மண் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டது.

அதபோல், மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் 200 மீட்டர் தொலைவில் மேலும் ஒரு இடத்தில் மண் சரிவு ஏற்பட்டது.

இந்நிலையில், திருவண்ணாமலை தீபமலையில் அமைந்துள்ள குகை நமச்சிவாய ஆலயத்தின் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது.

இதில், நல்வாய்ப்பாக யாருக்கும் உயிர்சேதம் இல்லை. அதிர்ச்சியூட்டும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com