என் மலர்
உள்ளூர் செய்திகள்
- மகளிருக்கான குறைந்தபட்ச உயரம் 160 செ.மீட்டரில் இருந்து 150 செ.மீ ஆக குறைத்து அரசாணை.
- பணிக்காலத்தில் உயிரிழந்தோரின் பெண் வாரிசுதாரர்களுக்கு நடத்துநர் பணி.
அரசுப் பேருந்துகளில் அதிக மகளிருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மேலும், அரசுப் பேருந்துகளில் நடத்துநர் பணிக்கு தேர்வாகும் மகளிருக்கான குறைந்தபட்ச உயரம் 160 செ.மீட்டரில் இருந்து 150 செ.மீ ஆக குறைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் புதிய அறிவிப்பால் அரசுப்பேருந்துகளில் நடத்துநர் பணிக்கு அதிக அளவில் மகளிருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பணிக்காலத்தில் உயிரிழந்தோரின் பெண் வாரிசுதாரர்களுக்கு நடத்துநர் பணி எனவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
- மனுக்களுக்கு உடடினயாக தீர்வு காணப்பட்டது.
- தாம்பரம் மாநகராட்சி மேயர், துணை மேயர், ஜோசப் அண்ணாதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தாம்பரம்:
குரோம்பேட்டை பகுதியில் உள்ள மண்டல அலுவலகத்தில் பொதுமக்களின் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுக்களாக வழங்கினர். இதில் அமைச்சர் தா.மோ. அன்பரசன் கலந்து கொண்டார். மனுக்களுக்கு உடடினயாக தீர்வு காணப்பட்டது.
நிகழ்ச்சியில் மாற்று திறனாளி 2 பேருக்கு மூன்று சக்கர மோட்டார் சைக்கிள், கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், தொழில் கடன் உதவி, குடியிருப்பு வீட்டிற்கான கிரையபத்திரம் பெயர் மாற்றம், பெயர் திருத்துதல், சொத்து வரி உட்பட 100 பயனாளிகளுக்கு சான்றிதழ்களை அமைச்சர் தா.மோ. அன்பரசன் வழங்கினார்.
நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர்அருண்ராஜ், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர், பல்லாவரம் எம்.எல்.ஏ. இ. கருணாநிதி தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் காமராஜ், மண்டல தலைவர் ஜோசப் அண்ணாதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பூ விற்பனை கடைகளில் வழக்கத்தைவிட விற்பனை அதிகமாக இருக்கும்.
- காதலர் தினத்தை முன்னிட்டு ஏராளமான வகைகளில் பூக்கள் வந்து குவிந்து உள்ளன.
போரூர்:
காதலர் தினம் நாளை (14-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி காதலர்கள் பூங்கொத்து, ரோஜாப்பூ, வாழ்த்து அட்டை, சாக்லேட் உள்ளிட்ட விதவிதமான பரிசு பொருட்களை கொடுத்து ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக்கொள்வது வழக்கம். இதனால் பூ விற்பனை கடைகளில் வழக்கத்தைவிட விற்பனை அதிகமாக இருக்கும்.
காதலர் தினத்தையொட்டி கோயம்பேடு பூ மார்க்கெட்டுக்கு ஓசூர், பெங்களூரு, ஊட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிகப்பு, மஞ்சள், இளஞ்சிவப்பு, வெள்ளை உள்ளிட்ட பல்வேறு வண்ணங்களில் ரோஜா பூக்கள் விதவிதமாக அதிக அளவில் விற்பனைக்கு குவிந்து உள்ளது. இதில் 20 எண்ணிக்கை கொண்ட (ஒரு பஞ்ச்) சிவப்பு ரோஜா- ரூ.450-க்கும், பேபி பிங்க், ஜூமாலியா, வெள்ளை, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிற ரோஜாக்கள் வகைகள் ஒரு பஞ்ச்-ரூ.350-க்கும் விற்பனை ஆகிறது. வெளி மார்க்கெட் மற்றும் வணிக வளாகங்களில் உள்ள கடைகளில் இதன் விலை 2 மடங்கு வரை அதிகரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பூ வியாபாரிகள் கூறும்போது, காதலர் தினத்தை முன்னிட்டு ஏராளமான வகைகளில் பூக்கள் வந்து குவிந்து உள்ளன. கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு புதிய பஸ்நிலையம் இடமாற்றம் செய்யப்பட்டதால் புறநகர் மற்றும் பல்வேறு வெளி மாவட்டங்களில் இருந்து வரும் சில்லரை வியாபாரிகளின் வருகை வெகுவாக குறைந்து விட்டது. இதனால் பூக்கள் விற்பனை மந்தமாகவே நடந்து வருகிறது.
- காதலர் தினம் நாளை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.
- சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் நாளை காதலர்கள் பொது இடங்களில் கூடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.
சென்னை:
காதலர் தினம் நாளை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் நாளை காதலர்கள் பொது இடங்களில் கூடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். மெரினா கடற்கரையில் கூடும் காதல் ஜோடிகளுக்கு காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் திருமணம் செய்து வைக்கும் சம்பவங்களும் நடைபெற வாய்ப்பு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து நாளை மெரினா கடற்கரையில் போலீசார் ரோந்து சென்று கண்காணிக்க உள்ளனர்.
இதே போன்று பொழுது போக்கு பூங்காக்களிலும் காதல் ஜோடிகள் மீதான அத்து மீறல் சம்பவங்களை தடுப்பதற்காக அந்தந்த பகுதி போலீசார் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுபோன்ற பாதுகாப்பு ஏற்பாடுகளை தமிழகம் முழுவதும் மேற்கொள்வதற்கு உயர் போலீஸ் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
- சட்டசபை தேர்தலுக்காக தேர்தல் வியூகம் வகுப்பாளர் பிரசாந்த் கிஷோருடன் ஒப்பந்தம் செய்துள்ளார்.
- 25 மாவட்டங்களுக்கான பொதுக்குழு உறுப்பினர்கள் இதே கூட்டத்தில் தேர்வு செய்யப்படுகின்றனர்.
நடிகர் விஜய், தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கி 2 ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகிகளை நியமித்த விஜய், 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்காக தேர்தல் வியூகம் வகுப்பாளர் பிரசாந்த் கிஷோருடன் ஒப்பந்தம் செய்துள்ளார். அதனை தொடர்ந்து 2 நாட்களாக பல்வேறு ஆலோசனை நடைபெற்றது.
இந்த நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் செயற்குழு மற்றும் கட்சியின் 2-ம் ஆண்டு துவக்க விழாவையும் சேர்த்து நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுக்குழு கூட்டத்தை வருகிற 26-ந்தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 25 மாவட்டங்களுக்கான பொதுக்குழு உறுப்பினர்கள் இதே கூட்டத்தில் தேர்வு செய்யப்படுகின்றனர்.
- ஏழை முதியோர்களுக்கு அறுசுவையுடன் கூடிய காலை உணவு வழங்கப்பட்டது.
- யோகா மற்றும் ஒன்றிய கழக, ஊராட்சி கழக நிர்வாகிகள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.
ஆவடி:
ஆவடி அருகே நடுக்குத்தகையில் தி.மு.க. தலைமை செயற்குழ உறுப்பினர் கே.ஜே.ரமேஷ் ஏற்பாட்டில் வள்ளலார் தைப்பூச ஜோதி தரிசன விழாவை முன்னிட்டு முதியோர்கள் பராமரிப்பு இல்லத்தில் உள்ள 600 ஏழை முதியோர்களுக்கு அறுசுவையுடன் கூடிய காலை உணவு வழங்கப்பட்டது.
இதற்கான நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் கலந்து கொண்டு முதியோர்களுக்கு அறுசுவை காலை உணவை வழங்கினார்.
நிகழ்ச்சியில் திருநின்றவூர் நகர செயலாளர் தி.வை.ரவி, மாவட்ட பொருளாளர் பா.நரேஷ் குமார், ஆவடி மாநகர பொருப்பாளர் சன் பிரகாஷ் மற்றும் மகா தேவன், யமுனா, ரமேஷ், லட்சுமி, செந்தாமரை, கந்தன், மோகன், கேட்டரிங் சுரேஷ், பிரவீன் குமார், சந்திரன், யோகா மற்றும் ஒன்றிய கழக, ஊராட்சி கழக நிர்வாகிகள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.
- வீட்டிற்கு பாதுகாப்பு அளிக்குமாறு செங்கோட்டையன் கேட்டாரா?
- த.வெ.க. தலைவர் விஜய் தான் சாட்டையை சுழற்றுவது போல தெரிகிறது.
மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* அ.தி.மு.க. சின்னத்தை யாராலும் முடக்க முடியாது.
* எடப்பாடியார் நல்லதை செய்வார். புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி ஆட்சியை 2026-ல் கொண்டு வரப்போகிறார்.
* எடப்பாடியார் செல்வாக்கு கூடிக்கொண்டு இருக்கிறது. அந்த செல்வாக்கை மறைப்பதற்காக ஆளுங்கட்சியினர் முயற்சிக்கின்றனர்.
* வீட்டிற்கு பாதுகாப்பு அளிக்குமாறு செங்கோட்டையன் கேட்டாரா?
* இந்த ஆட்சியில் எங்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டுமோ அங்கு கொடுக்கவில்லை. கேட்காத ஒருத்தருக்கு பாதுகாப்பு கொடுத்துள்ளார்கள்.
* தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டால் சர்வாதிகாரியாக மாறி சாட்டையை சுழற்றி நடவடிக்கை எடுப்பேன் என கூறிய முதலமைச்சர் தற்போது எங்கே இருக்கிறார் என தெரியவில்லை.
* முதலமைச்சர் சாட்டையை சுழற்றி நடவடிக்கை எடுக்கவில்லை. த.வெ.க. தலைவர் விஜய் தான் சாட்டையை சுழற்றுவது போல தெரிகிறது.
* உறுதியாக, இறுதியாக எடப்பாடியார் தலைமையில் ஆட்சி மலரும். அவர் தலைமையில் அ.தி.மு.க. மலரும் என்று கூறினார்.
- இந்தியாவில் மருத்துவர்களின் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது.
- கிராமப்புற மருத்துவமனைகளில் காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது.
நாகர்கோவில்:
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் விஜய் வசந்த் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-
மத்திய பட்ஜெட்டில் சுகாதாரத்தை மேம்படுத்த நிதி ஒதுக்கிய போதிலும் அது நமது தேசத்தின் சுகாதார மேம்பாட்டிற்கு போதுமானதாக இல்லை. நமது நாட்டின் வளர்ச்சி விகிதத்தின் 10 சதவிகிதம் சுகாதார மேம்பாட்டிற்கு ஒதுக்க வேண்டிய நிலையில் இன்று அரசு வெறும் 2 சதவிகிதம் மட்டுமே ஒதுக்கியுள்ளது. உட்கட்டமைப்பு வசதிகளுக்கும் போதிய நிதியினை அரசு ஒதுக்கவில்லை.
இந்தியாவில் மருத்துவர்களின் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது. 1000 நபர்களுக்கு ஒரு மருத்துவர் தேவை என்ற வழிகாட்டு தலை விட குறைவாக 1500 இந்தியர்களுக்கு ஒரு மருத்துவர் என்ற நிலை உள்ளது.
குறிப்பாக கிராமங்களில் இந்த குறைபாடு மிக அதிக அளவில் காணப்படுகிறது. கிராமப்புறங்களில் உள்ள மருத்துவமனைகளில் காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது.
இந்தியாவின் 50 சதவிகித மருத்துவமனைகளில் குடி நீர், மின்சாரம், கழிப்பறை போன்ற அடிப்படை வசதி கள் இல்லாமல் உள்ளது. கோவிட் காலகட்டத்தில் நமது மருத்துவமனைகளில் உள்ள குறைபாடுகள் குறித்து நாம் கண்டறிந்தோம். அது போன்ற ஒரு இடரை எதிர்கொள்ள நமது நாட்டில் மருத்துவ வசதி களை மேம்படுத்தி நாம் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
இந்தியர்களின் மருத்துவ செலவில் 62 சதவிகிதம் தங்கள் சொந்த காசில் செய்ய வேண்டிய கட்டா யத்தில் நமது மக்கள் உள்ள னர். ஆரோக்கியமான ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டியது அரசின் கடமை. இவை குறித்து மக்களவையில் விவாதிக்க வேண்டும் என கோரி ஒத்தி வைப்பு தீர்மானம் ஒன்றினை முன்மொழிந்து உள்ளேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அ.தி.மு.க. ஒன்றிணையாவிட்டால் நான் உள்பட அனைவருக்கும் தாழ்வுதான்.
- அ.தி.மு.க. ஒன்றாக இருக்குமாறு அமித்ஷா எவ்வளவோ கூறினார்.
தேனியில் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
அ.தி.மு.க. ஒன்றிணையாவிட்டால் நான் உள்பட அனைவருக்கும் தாழ்வுதான்.
அ.தி.மு.க. யாரால் உருவாக்கி நிறுவி காப்பாற்றப்பட்டது என்பதை மனசாட்சியுடன் எடப்பாடி பழனிசாமி நினைக்க வேண்டும்.
கழக சட்ட விதிப்படி ஜெயலலிதா கட்சியை நடத்தினார். அ.தி.மு.க.வின் அடிப்படை தொண்டர்கள் ஏற்பின் மூலமே பொதுச் செயலாளர் தேர்வு இருக்க வேண்டும் என்ற விதியை யாரும் மாற்ற முடியாது. ஜெயலலிதா அப்படித்தான் தேர்வு செய்யப்பட்டார். எந்த சட்டத்தை திருத்தக் கூடாது என்று இருந்ததோ அந்த விதியை மீறி எடப்பாடி பழனிசாமி செயல்பட்டார்.
அ.தி.மு.க. ஒன்றாக இருக்குமாறு அமித்ஷா எவ்வளவோ கூறினார். அதை எடப்பாடி பழனிசாமி ஏற்காததன் விளைவுதான் இன்று எதிர்க்கட்சியாக இருக்கிறோம். இல்லையென்றால் ஆட்சிக்கு வந்திருப்போம்.
அ.தி.மு.க. ஒன்றிணைந்துவிட்டால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருப்பதுதான் நல்லது என்ற மனப்பான்மையோடு தான் நான் இருக்கிறேன்.
எந்த நிபந்தனையும் இல்லாமல் நான், டி.டி.வி. தினகரன், சசிகலா ஆகியோர் அ.தி.மு.க.வில் மீண்டும் இணைய தயாராக இருக்கிறோம்.
டெல்லியில் நிலைமை என்ன ஆனது. 27 ஆண்டுகளுக்கு பிறகு பா.ஜ.க. ஆட்சிக்கு வந்துள்ளது. பாரத பிரதமர் மோடி சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். இதை நாம் பாராட்டியே ஆக வேண்டும்.
தமிழ்நாடும் தமிழ்நாட்டு மக்களும் எதை விரும்புகிறார்களோ அதை அடிப்படை அ.தி.மு.க.வினர் செய்து காட்டுவார்கள்.
திராவிட கொள்கைகளை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று கூறினார்.
- பிரதிநிதிகள் கண்களில் கருப்பு துணி கட்டி பங்கேற்பு.
- 13 தொழிற்சங்கத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள், அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.
தாம்பரம்:
தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் 11 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்தம் முடிந்து ஓராண்டுக்கு மேலாகியும் போடப்படவில்லை. வேலைநிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளன.
இந்தநிலையில் போக்குவரத்து ஊழியர்களின் புதிய ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்த 15-வது ஊதிய ஒப்பந்த இரண்டாம்கட்ட பேச்சுவார்த்தை இன்று குரோம்பேட்டையில் உள்ள தொழிற்சங்க பயிற்சி மையத்தில் அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடைபெற்றது.
இந்த பேச்சுவார்த்தையில் 13 தொழிற்சங்கத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் நடராஜன், சவுந்தரராஜன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.
இன்றும் நாளையும் இரண்டு கட்டமாக பேச்சுவார்த்தை நடைபெறுவதால் நாளை 73 தொழிற்சங்கங்கள் நடைபெற உள்ள நிலையில் வெளிப்படைத்தன்மை இல்லை எனக் கூறி அ.தி.மு.க. தொழிற்சங்கத்தை சேர்ந்த கமலக்கண்ணன் மற்றும் தே.மு.தி.க. தொழிற்சங்க நிர்வாகிகள் கண்ணில் கருப்பு துணி கட்டியவாறு கூட்டத்தில் பங்கேற்றனர்.
வெளிப்படைத்தன்மை இல்லாமல் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக குற்றச்சாட்டை முன்வைத்து கண்கட்டி வித்தை காட்டுவதாக, தெரிவித்து எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டதால் சலசலப்பு ஏற்பட்டது.
- போலீசார் வருவதற்குள் ரேசில் ஈடுபட்ட நபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
- கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
ஆவடியில் இருந்து திருநின்றவூர் நோக்கி சென்னை-திருப்பதி நெடுஞ்சாலையில் வாலிபர்கள் சிலர் மோட்டார் சைக்கிள்களில் சீறிப்பாய்ந்தனர். அவர்கள் ரேசில் ஈடுபட்டு ஒருவரை ஒருவர் முந்தி சென்றனர். இதனால் அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.
பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக பயங்கர சத்தத்துடன் மோட்டார் சைக்கிள் ரேசில் ஈடுபட்டவர்கள் குறித்து ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வருவதற்குள் ரேசில் ஈடுபட்ட நபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதையடுத்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
இதில் திருநின்றவூர் முருகன் கோவில்தெருவை சேர்ந்த கதிரேசன் (24) என்பவர் நண்பர்களுடன் சேர்ந்து மோட்டார் சைக்கிள் ரேசில் ஈடுபட்டது தெரிந்தது.
கதிரேசனை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
- அண்ணா அறிவாலயத்தில் உள்ள செங்கல்லில் கை வைப்பதற்கு கூட அண்ணாமலையால் முடியாது.
- பாலியல் புகாரில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் காவல்துறை அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
சென்னை:
அண்ணா அறிவாலயத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* அ.தி.மு.க கலகலத்து போயுள்ளது.
* தமிழகத்தில் திமுக அரசு மீது மக்களுக்கு அதிருப்தியே கிடையாது.
* தமிழகம் முழுவதும் திமுக அரசுக்கு ஆதரவு அலை வீசுகிறது.
* 2026 தேர்தல் வெற்றிக்கு முன்னோட்டம் தான் ஈரோடு கிழக்கு வெற்றி
* கருத்துக்கணிப்புகளில் திமுக அரசுக்கு ஆதரவு அலை வீசுவது கண்கூடாக தெரிகிறது.
* இப்போது தேர்தல் வைத்தாலும் திமுக கூட்டணி வெல்லும் என கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளனர்.
* எதிரிகள் ஒன்று சேர்ந்தாலும் எங்களுடைய வாக்கு வங்கியை வீழ்த்த முடியாது.
* எதிரிகளே இல்லை என்று திமுக அரசு என்றுமே சொல்லவில்லை. எதிரிகளுக்கும் வாக்கு வங்கியுள்ளது என்றே சொல்கிறோம்.
* அதிமுக கூட்டணியின் வாக்கு சதவீதம் 23 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக குறைந்து நம்பிக்கை இழந்து வருகிறது.
* சில சம்பவங்களை மிகைப்படுத்தி கூறினாலும் மக்கள் தமிழகத்தில் மகிழ்ச்சியாக உள்ளது தெளிவாகிறது.
* ஆட்சியில் தவறுகள் தெரியவந்தால் உடனுக்குடன் முதலமைச்சர் சரிசெய்து வருகிறார்.
* ஆட்சியில் உள்ளோர் மீது குற்றம்சாட்டுவது இயல்புதான். ஆனால் முதலமைச்சர் மக்களின் விருப்பத்திற்கேற்ப செயல்படுகிறார்.
* செங்கோட்டையன் அதிமுகவின் சீனியர்தானே அதனால்தான் அவ்வாறு பேசியுள்ளார்.
* அண்ணா அறிவாலயத்தில் உள்ள செங்கல்லில் கை வைப்பதற்கு கூட அண்ணாமலையால் முடியாது.
* பாலியல் புகாரில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் காவல்துறை அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இவ்வாறு அமைச்சர் ரகுபதி கூறினார்.






