என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • அண்ணாசாலையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. பிரதான சாலை நுழைவுவாயிலில் வி.வி.ஐ.பி. பாஸ் வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
    • அண்ணாசாலையில் மதியம் 2 மணி முதல் வணிக வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.

    சென்னை:

    பிரபல இசையமைப்பாளர் தேவா இசை நிகழ்ச்சி, சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நாளை (சனிக்கிழமை) மதியம் 3 மணி முதல் நடைபெறுகிறது.

    இந்த நிகழ்ச்சியையொட்டி, போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:-

    இசையமைப்பாளர் தேவா இசை நிகழ்ச்சிக்கு பார்வையாளர்களை ஏற்றிச்செல்லும் ஆட்டோக்கள், வாடகை வாகனங்கள் செனடாப் சாலை, காந்தி மண்டபம் சாலை, சேமியர்ஸ் சாலை, லோட்டஸ் காலனி 2-வது தெரு (நந்தனம் எக்ஸ்டன்ஷன்) வழியாக மட்டுமே நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை அடையலாம்.

    சைதாப்பேட்டையில் இருந்து வரும் வாகனங்கள் நந்தனம் சந்திப்பு வலதுபுறம் வழியாக சென்று சேமியர்ஸ் சாலையில் யு டர்ன் எடுத்து, லோட்டஸ் காலனி வழியாக இலக்கை அடையலாம்.

    அண்ணாசாலையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. பிரதான சாலை நுழைவுவாயிலில் வி.வி.ஐ.பி. பாஸ் வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். மற்ற வாகனங்களுக்கு அனுமதி இல்லை.

    அதேபோல நிகழ்ச்சிக்கு வரும் கலைஞர்களின் வாகனங்கள் காஸ்மோபாலிட்டன் கிளப் சாலை நுழைவுவாயில் வழியாக அனுமதிக்கப்படும்.

    அண்ணாசாலையில் மதியம் 2 மணி முதல் வணிக வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. நிகழ்ச்சிக்கு வருவோர் மெட்ரோ ரெயில், மாநகர பஸ்கள் மற்றும் மின்சார ரெயில் போன்ற பொது போக்குவரத்தை பயன்படுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • துடிப்பான அரசியலமைப்பு ஜனநாயகம் மற்றும் வலுவான கருத்துச் சுதந்திரத்தை வெளிப்படுத்தும் சூழலுக்கு நன்றிகள்.
    • அரசியல் பாதுகாப்பின்மையை மறைக்கவும் பயன்படுத்தியிருப்பது பரிதாபத்துக்குரியது.

    உச்சநீதிமன்றம் முன்பாக உள்ள வழக்கின் விசாரணை தொடர்பாக உண்மைக்கு புறம்பாக முதல்வர் கருத்து தெரிவித்துள்ளதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டி உள்ளார்.

    இதுகுறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள பதிவில் கூறயப்பட்டுள்ளதாவது:-

    உச்சநீதிமன்றம் முன்பாக உள்ள அதன் விசாரணைக்கு புறம்பான ஒரு விஷயத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒரு நாளிதழ் கொண்ட பார்வையின் போர்வையில், இன்று தனது சமூக ஊடக பக்கத்தின் மூலம் ஆளுநருக்கு எதிராக தமிழ்நாட்டு மக்களைத் தவறாக வழிநடத்த முயற்சிப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது.

    நமது நாட்டின் நான்காவது தூண், தனக்குப் பிடிக்காதவர்கள் மீது வண்ணமய விமர்சனங்களைச் சுமத்துவது உள்ளிட்ட சிறப்புரிமைகளைப் பெற்றிருப்பதற்கு காரணமான நமது துடிப்பான அரசியலமைப்பு ஜனநாயகம் மற்றும் வலுவான கருத்துச் சுதந்திரத்தை வெளிப்படுத்தும் சூழலுக்கு நன்றிகள்.

    இருப்பினும், அரசியலமைப்பில் உயரிய பதவியை வகிக்கும் ஒரு முதலமைச்சர், நீதிமன்ற விசாரணைக்கு புறம்பாக அமையக்கூடிய விஷயத்தில் தனது அரசியலமைப்புப் பொறுப்பை அப்பட்டமாக மதிக்காமல், மிகவும் தரம் தாழ்ந்து முற்றிலும் பாதி உண்மைகள் மற்றும் பாரபட்சம் நிறைந்த ஒரு நாளிதழின் கருத்துக்களை தனது விரக்தியை வெளிப்படுத்துவதற்கான ஒரு ஊன்றுகோலாக, தனது முழுமையான நிர்வாகத் தோல்வியை மறைக்கவும், தனது அரசியல் பாதுகாப்பின்மையை மறைக்கவும் பயன்படுத்தியிருப்பது பரிதாபத்துக்குரியது.

    தமிழ்நாட்டு மக்கள் அவர் நினைப்பதை விட மிகவும் புத்திசாலிகள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • எடப்பாடியாருக்கு மக்கள் மீண்டும் அவருக்கு மகுடம் சூட்ட காத்து இருக்கிறார்கள்.
    • ஜெயலலிதாவின் மறுவடிவமாக மீண்டும் அவரது ஆட்சியை மலரச் செய்ய ஒரு தியாக வேள்வியை எடப்பாடியார் நடத்திக் கொண்டு வருகிறார்.

    அதிமுக முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி. உதயகுமார் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

    அந்த வீடியோவில், "ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இந்த இயக்கத்தை மீட்டெடுத்து, இந்த இயக்கத்தை காப்பாற்றி, இன்றைக்கு தமிழ்நாட்டு மக்களுடைய அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ள எடப்பாடியார் சந்தித்த சோதனைகளை எல்லாம் தவிடு, பொடியாக்கி அனைவரும் தாயை போல அரவணைத்து இன்றைக்கு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் மறுவடிவமாக உள்ளார். அதனால் தான் மக்கள் மீண்டும் அவருக்கு மகுடம் சூட்ட காத்து இருக்கிறார்கள்.

    இன்றைக்கு தி.மு.க.விற்கு சிம்ம சொப்பனமாய் மக்கள் மன்றத்திலும், சட்டமன்றத்திலும் எடப்பாடியார் திகழ்ந்து உரிமை குரல் எழுப்பி, எட்டு கோடி மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளார். இன்றைக்கு இந்த இயக்கதிற்கு கிடைத்த இறையருள் தான் எடப்பாடியார்.

    ஜெயலலிதாவின் மறுவடிவமாக மீண்டும் அவரது ஆட்சியை மலரச் செய்ய ஒரு தியாக வேள்வியை எடப்பாடியார் நடத்திக் கொண்டு வருகிறார்" என்று குறிப்பிட்டிருந்தார்.

    ஆர்.பி.உதயகுமாரின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஓ.பி.எஸ் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் பதிலடி கொடுத்துள்ளார்.

    இதுகுறித்து ஓ.பி.ரவீந்திரநாத் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு.ஆர்.பி.உதயக்குமார் அவர்களே...

    நேற்று - மாண்புமிகு அம்மா அவர்களின் மறுஉருவம் தியாகத்தலைவி சின்னம்மா அவர்கள்...

    இன்று - மாண்புமிகு எம்.ஜி.ஆர் மற்றும் மாண்புமிகு அம்மா அவர்களின் மறுஉருவம் புரட்சித்தமிழர் திரு.எடப்பாடி பழனிச்சாமி...

    நாளை யாரோ...? என்ன விளையாட்டு இது...?

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • திருப்பத்தூர் மாவட்டத்தில் திமுக கவுன்சிலர் மகேந்திரன் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.
    • ஐ.பி.எஸ். அதிகாரியால் பெண் காவலர்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாகியிருப்பதும் வெட்கக்கேடானது.

    திமுக ஆட்சியில் பாலியல் அத்துமீறல்கள் எல்லா நிலைகளிலும் அதிகரித்து வருவது கடும் கண்டனத்திற்கு உரியது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து இபிஎஸ் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    சென்னையில் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவர் பெண் போலீசாருக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டின் அடிப்படையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும்,

    திருப்பத்தூர் மாவட்டத்தில் திமுக கவுன்சிலர் மகேந்திரன் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும்,

    தூத்துக்குடியில் பள்ளி மாணவி சமையல் பணியாளரால் பாலியல் தொலைக்கு ஆளானதாகவும்,

    தர்மபுரி அருகே அரசுப்பள்ளியில் மாணவிகளுக்கு கணித ஆசிரியர் பாலியல் தொல்லை அளித்ததாகவும் வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

    ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில், பாலியல் அத்துமீறல்கள் எல்லா நிலைகளிலும் அதிகரித்து வருவது மிகுந்த வருத்தத்திற்கும் கடும் கண்டத்திற்கும் உரியது.

    அதிலும், வேலியே பயிரை மேய்ந்தாற்போல், மாணவிகள் ஆசிரியரால் பாலியல் தொல்லைக்கு ஆளாவதும், பாலியல் குற்றங்களை ஒடுக்க வேண்டிய காவல்துறையிலேயே ஒரு ஐ.பி.எஸ். அதிகாரியால் பெண் காவலர்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாகியிருப்பதும் வெட்கக்கேடானது.

    தான் நடத்தும் அலங்கோலத்தை புகழ்வது மட்டுமல்ல; இதை "ஆட்சி" என்று சொல்வதற்கே மு.க. ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும்.

    நான் எதற்கு "SayYesToWomenSafety&AIADMK" என்ற பிரச்சாரத்தை துவக்கியுள்ளேன் என்பதை இன்றைய செய்திகளே தெளிவாக்கிவிட்டன.

    இந்த ஆட்சி முடிவுக்கு வந்து, மீண்டும் அதிமுக ஆட்சி அமைவதே, தமிழ்நாடு மீண்டும் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக மாறுவதற்கு ஒரே வழி..!

    மேற்குறிப்பிட்டுள்ள பாலியல் வன்கொடுமை குறித்த செய்திகளில் தொடர்புள்ளோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தஞ்சாவூர் தெற்கு மாவட்ட கழகச் செயலாளராக பணியாற்றி வரும் க.அண்ணாதுரை எம்.எல்.ஏ., அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார்.
    • நீலகிரி மாவட்ட கழகக் செயலாளராக பணியாற்றி வரும் பா.மு. முபாரக் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார்.

    ஈரோடு, திருப்பூர், விழுப்புரம், மதுரை மாவட்டங்களில் அடங்கியுள்ள சட்டமன்ற தொகுதிகள்- மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் தஞ்சை தெற்கு, நீலகிரி, திருநெல்வேலி மத்திய, திருவள்ளூர் கிழக்கு ஆகிய மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் நியமனத்து திமுக அறிவித்துள்ளது.

    இது தொடர்பாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சாவூர் தெற்கு மாவட்ட கழகச் செயலாளராக பணியாற்றி வரும் க. அண்ணாதுரை எம்.எல்.ஏ., அப்பொறுப்பிலிருந்து விடுவித்து, அவருக்குப் பதிலாக பழனிவேல் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளரான நியமிக்கப்படுகிறார். ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்றிட வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    நீலகிரி மாவட்ட கழகக் செயலாளராக பணியாற்றி வரும் பா.மு. முபாரக் அப்பொறுப்பிலிருந்து விடுவித்து, அவருக்குப் பதிலாக கே.எம். ராஜு நீலகிரி மாவட்ட கழக பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார். ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்றிட வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    திருநெல்வேலி மத்திய மாவட்ட கழக பொறுப்பாளராக பணியாற்றி வரும் டி.பி.எம். மைதீன்கான் அப்பொறுப்பிலிருந்து விடுவித்து, அவருக்குப் பதிலாக மு. அப்துல்வகாப் எம்.எல்.ஏ, திருநெல்வேலி மத்திய மாவட்ட கழக பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.

    திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளராக பணியாற்றி வரும் டி.ஜெ.எஸ். கோவிந்தராஜன் எம்.எல்.ஏ., அப்பொறுப்பிலிருந்து விடுவித்து அவருக்குப் பதிலாக எம்.எஸ்.கே. ரமேஷ்ராஜ் திருவள்ளூர் கழக்கு மாவட்ட கழக பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.

    ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்றிட வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

    • அனைவரும் ஓர் அணியில் திரள வேண்டும் என்பதை தான் தொடர்ந்து சொல்லிக் கொண்டு வருகிறேன்.
    • 2026 தேர்தலுக்கு முன்பாகவே அதிமுக ஒன்றிணைய வாய்ப்புள்ளது.

    2026 தேர்தலுக்கு முன்பாகவே அதிமுக ஒன்றிணைய வாய்ப்புள்ளது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து டிடிவி தினகரன் அறித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    அனைவரும் ஓர் அணியில் திரள வேண்டும் என்பதை தான் தொடர்ந்து சொல்லிக் கொண்டு வருகிறேன்.

    உறுதியாகவே 2026 தேர்தலுக்கு முன்பாகவே அதிமுக ஒன்றிணைய வாய்ப்புள்ளது. இது நடக்கும் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது.

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அம்மாவின் கொள்கைகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் இயக்கமாக இருக்கிறது.

    அதனால், அம்மாவின் தொண்டர்கள் ஓர் அணியில் திரள்வதன் மூலம் மீண்டும் அம்மாவின் ஆட்சியை தமிழகத்தில் மீண்டும் அமைப்பதற்கு தேசிய ஜனநாயக கூட்டணி அவசியம்.

    திமுகவை ஜெயிக்க வேண்டும் என்றால் அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றினைய வேண்டும்.

    அது With or without எடப்பாடி பழனிசாமி என்பதை அதிமுக தொண்டர்கள் முடிவு செய்வார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வேலூர் கோட்டையில் ஒவ்வொரு ஆண்டும் காதலர் தினத்தை முன்னிட்டு காதல் ஜோடிகள் அதிகளவில் வருவார்கள்.
    • கோட்டைக்கு வரும் காதல் ஜோடிகள் நுழைவு வாயிலில் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்படுவார்கள்.

    வேலூர்:

    உலகம் முழுவதும் நாளை காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் காதலர்கள் ஒருவருக்கொருவர் ரோஜா மலர்களை பரிமாறிக் கொண்டும், பரிசு பொருட்களை பரிமாறிக் கொண்டும் காதலர் தினத்தை கொண்டாடுகின்றனர்.

    வேலூர் கோட்டையில் ஒவ்வொரு ஆண்டும் காதலர் தினத்தை முன்னிட்டு காதல் ஜோடிகள் அதிகளவில் வருவார்கள்.

    தனிமையில் இருந்து காதல் ஜோடிகள் அத்துமீறவும், மேலும் சமூக விரோத கும்பல் காதல் ஜோடிகளிடம் தவறாக நடந்து கொள்ளவும் வாய்ப்பு உள்ளது.

    இதனையடுத்து வேலூர் கோட்டைக்குள் நாளை காதல் ஜோடிகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    வேலூர் கோட்டை வளாகம், கொத்தளம், பூங்கா பகுதிகளில் காதல் ஜோடிகளுக்கு நாளை அனுமதி இல்லை.

    இதுகுறித்து போலீசார் கூறுகையில்:-

    வேலூர் கோட்டையில் நாளை காதலர் தினத்தையொட்டி காதல் ஜோடிகள் நுழைய தடை விதிக்கப்படுகிறது. கோட்டைக்கு வரும் காதல் ஜோடிகள் நுழைவு வாயிலில் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்படுவார்கள்.

    கோட்டை கோவில் மற்றும் அருங்காட்சியகத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் வழக்கம் போல் செல்லலாம் அவர்களுக்கு எந்தவித இடையூறும் இருக்காது.

    இது தவிர வேலூரில் மற்ற இடங்களில் தனிமையில் அமர்ந்து பேசும் காதல் ஜோடிகளிடம் யாராவது தகராறு செய்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    • அமைச்சர் ராஜ கண்ணப்பனிடம் இருந்த காதி மற்றும் கிராம தொழில் துறை பொன் முடி கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • அமைச்சர் ராஜ கண்ணப்படன் பால்வளத் துறையை மட்டும் கவனிப்பார் என ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.

    தமிழக அமைச்சரவையில் சிறிய அளவில் மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, அமைச்சர்கள் ராஜ கண்ணப்பன், பொன்முடிக்கான துறைகள் மாற்றம் செய்து ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.

    அமைச்சர் ராஜ கண்ணப்பனிடம் இருந்த காதி மற்றும் கிராம தொழில் துறை பொன் முடி கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    வனத்துறை அமைச்சராக உள்ள பொன்முடி காதி மற்றும் கிராம தொழில்கள் துறையை கூடுதலாக கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    அமைச்சர் ராஜ கண்ணப்படன் பால்வளத் துறையை மட்டும் கவனிப்பார் என ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.

    • கூடுதல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • 9 மெட்ரோ ரெயில் நிலையங்கள் வருகிறது.

    சென்னை:

    சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டப்பணி 116.1 கி.மீட்டர் தூரத்திற்கு ரூ. 63 ஆயிரத்து 246 கோடி செலவில் 3 வழித் தடங்களில் அமைக்கப்பட உள்ளது. இதில் மாதவரம் பால்பண்ணை-சிறுசேரி வரை 45.4 கி.மீட்டர், கலங்கரை விளக்கம்- பூந்தமல்லி பணிமனை வரை 26.1 கி.மீட்டர், மாதவரம்-சோழிங்க நல்லூர் வரை 44.6 கி.மீட்டர் தூரத்திற்கு பணிகள் தொடங்கி வேகமாக நடந்து வருகின்றன. இந்த 2-ம் கட்ட திட்டத்தில் முதல் பாதை பூந்தமல்லி -போரூர் வழித்தடம் 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வர உள்ளது.

    9 கி.மீட்டர் நீளத்தில் உள்ள இந்த வழித்தடத்தில் போரூர் புறவழிச்சாலை, தெள்ளியகரம், அய்யப்பன்தாங்கல், காட்டுப்பாக்கம், குமணன் சாவடி, கரையான் சாவடி, முல்லைத்தோட்டம், பூந்தமல்லி, பூந்தமல்லி புறவழிச்சாலை என மொத்தம் 9 மெட்ரோ ரெயில் நிலையங்கள் வருகிறது.

    இதில் உள்ள முக்கிய ரெயில் நிலையங்களான கரையான்சாவடி மற்றும் குமண்னசாவடியில் மெட்ரோ பணிகளில் பல்வேறு தாமதம் ஏற்பட்டு உள்ளது. இதனால் இந்த வழித்தடத்தில் பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவது சவாலாக மாறி உள்ளது.

    குறிப்பாக காட்டுப்பாக்கம் பகுதியில் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட திட்டம் மாற்றி அமைக்கப்பட்டு பணிகள் நடைபெறுகின்றன. இதே போல் கரையா்னசாவடி, குமணன்சாவடியில் தரைமட்டத்தில் இருந்து சுமார் 25 மீட்டர் உயரத்தில் நிலையங்கள் கட்டப்படுகின்றன. இந்த பணி சவாலாக மாறி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    இதுகுறித்து மெட்ரோ ரெயில் அதிகாரிகள் கூறும்போது, கரையான்சாவடி, குமணன்சாவடியில் மெட்ரோ ரெயில் பணிகள் சவாலாக இருந்தாலும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கப்படும். கடந்த ஆண்டுமுதல் கூடுதல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

    • பெண்கள் ஆர்வமுடன் பங்கேற்று காவல் உதவி செயலியை தங்களது செல்போனில் பயன்படுத்த பதிவிறக்கம் செய்து கொண்டனர்.
    • பெண்கள் பாதுகாப்பு குறித்து கமிஷனர் சங்கர் துண்டு பிரசுரம் வழங்கினார்.

    ஆவடி:

    தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்கள் அதிகம் கூடும் பஸ்நிலையம் உள்ளிட்ட இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    பூந்தமல்லி பஸ்நிலையத்தில் காவல் உதவி செயலியின் பயன்பாடு குறித்து மாணவிகள் பெண்களிடையே விழிப்புணர்வு செய்யப்பட்டது. இதில் ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் கலந்து கொண்டு பெண்களிடையே காவல் உதவி செயலி குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கி வைத்தார். அப்போது பெண்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் விதமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள காவல் உதவி செயலியை பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்து அதன் பயன்பாடு குறித்து பள்ளி-கல்லூரி மாணவிகள் மற்றும் பணிக்கு செல்லும் பெண்களிடையே செயல்முறை விளக்கம் அளித்தார்.

    அப்போது ஏராளமான பெண்கள், மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று காவல் உதவி செயலியை தங்களது செல்போனில் பயன்படுத்த பதிவிறக்கம் செய்து கொண்டனர். இதைத் தொடர்ந்து பெண்கள் பாதுகாப்பு குறித்து கமிஷனர் சங்கர் துண்டு பிரசுரம் வழங்கினார்.

    இதேபோல் கூடுதல் போலீஸ் கமிஷனர் பவர்னீஸ்வரி, போக்கு வரத்து துணை போலீஸ் கமிஷனர் அன்பு ஆகியோர் ஆவடி, திருவேற்காடு பஸ்நிலையத்தில் பஸ்சில் பயணம் செய்து பெண்களிடையே துண்டு பிரசுரம் வழங்கி காவல் உதவி செயலி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். செங்குன்றம் பஸ்நிலையத்தில் துணை கமிஷனர்கள். மகேஷ்வரன், பால கிருஷ்ணன் ஆகியோர் பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    • இந்தியாவிலேயே நகரப் பொதுப் போக்குவரத்து இணைப்பினில் சென்னை புதிய தர அளவுகோல்களை நிர்ணயிக்கும்.
    • கோவை, மதுரை நகரங்களுக்கான மெட்ரோ ஒப்புதலையும் விரைந்து மத்திய அரசு வழங்க வேண்டும்.

    சென்னை அடையாற்று மேம்பாலம் அருகே மெட்ரோ பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    தலைவர் கலைஞர் முதலமைச்சராகவும் - நான் துணை முதலமைச்சராகவும் இருந்தபோது தொடங்கப்பட்ட சென்னை மெட்ரோ ரெயில் பணிகள், தற்போதைய நமது திராவிட மாடல் அரசில் விரைந்து முன்னேற்றம் கண்டு வருகின்றன.

    முந்தைய ஆட்சியின் தாமதங்களுக்குப் பிறகு, இரண்டாம் கட்டப் பணிகளை, இந்தியாவிலேயே முதன்மையாக மாநில அரசின் நிதியைக் கொண்டே தொடர்ந்து வந்தோம். அண்மையில், நமது கோரிக்கையை ஏற்று, ஒப்புதல் வழங்கப்பட்ட ஒன்றிய அரசின் பங்களிப்போடு இன்னும் விரைவாகச் செயல்படுத்தி வருகிறோம்.

    2025-ஆம் ஆண்டின் இறுதிக்குள் பூந்தமல்லி– போரூர் இடையேயான மெட்ரோ ரெயில் சேவை தொடங்கி வைக்கப்படும்.

    மீதமுள்ள பணிகளையும் குறித்த காலத்துக்குள் நிறைவேற்ற, சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகத்துக்கு நான் அறிவுறுத்தியுள்ளேன். இப்பணிகள் முழுமையாக நிறைவுறும்போது, இந்தியாவிலேயே நகரப் பொதுப் போக்குவரத்து இணைப்பினில் சென்னை புதிய தர அளவுகோல்களை நிர்ணயிக்கும்!

    நடைபெற்று வரும் பணிகளை இன்று ஆய்வு செய்தபோது, நாம் தொடங்கிய திட்டம் இன்று செயலாக்கம் பெற்று, மேலும் விரிவடைந்து வருவதைக் கண்டு பெருமகிழ்ச்சி அடைந்தேன். இந்த நேரத்தில் கோவை, மதுரை நகரங்களுக்கான மெட்ரோ ஒப்புதலையும் விரைந்து ஒன்றிய அரசு வழங்க வேண்டும் என மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • மகளிருக்கான குறைந்தபட்ச உயரம் 160 செ.மீட்டரில் இருந்து 150 செ.மீ ஆக குறைத்து அரசாணை.
    • பணிக்காலத்தில் உயிரிழந்தோரின் பெண் வாரிசுதாரர்களுக்கு நடத்துநர் பணி.

    அரசுப் பேருந்துகளில் அதிக மகளிருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

    மேலும், அரசுப் பேருந்துகளில் நடத்துநர் பணிக்கு தேர்வாகும் மகளிருக்கான குறைந்தபட்ச உயரம் 160 செ.மீட்டரில் இருந்து 150 செ.மீ ஆக குறைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு அரசின் புதிய அறிவிப்பால் அரசுப்பேருந்துகளில் நடத்துநர் பணிக்கு அதிக அளவில் மகளிருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பணிக்காலத்தில் உயிரிழந்தோரின் பெண் வாரிசுதாரர்களுக்கு நடத்துநர் பணி எனவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    ×