என் மலர்tooltip icon

    மகாராஷ்டிரா

    • மருத்துவமனை நிர்வாகத்தின் மோசமான அலட்சியம் என்று குற்றம் சாட்டினார்.
    • பழைய சிடி ஸ்கேன் கோப்புறைகளில் இருந்து ஸ்கிராப் டீலர்களுக்கு வழங்கப்பட்டவை.

    மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள குடிமை அமைப்பால் நடத்தப்படும் கிங் எட்வர்ட் மெமோரியல் (கேஇஎம்) மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பேப்பர் பிளேட்டில் மருந்துகள் எழுதிக்கொடுக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

    இதையடுத்து, மருத்துவ ஊழியர்கள் 6 பேருக்கு ஷோ-காஸ் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    இதுகுறித்து எக்ஸ் தளத்தில் வீடியோவைப் பகிர்ந்த மும்பை முன்னாள் மேயர் கிஷோரி பெட்னேகர், மருத்துவமனை நிர்வாகத்தின் மோசமான அலட்சியம் என்று குற்றம் சாட்டினார்.

    இதற்கிடையில், பிரஹன் மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் (பிஎம்சி) தலையிட்டு, சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஒரு குழுவை அமைத்து, மருத்துவமனை டீனிடம் விளக்கம் கேட்டுள்ளது.

    கேஇஎம் மருத்துவமனையின் டீன் டாக்டர் சங்கீதா ராவத், பிளேட்டுகள் நோயாளிகளுக்கு எழுதிக் கொடுக்கும் அறிக்கைகளிலிருந்து தயாரிக்கப்பட்டவை அல்ல. அது, பழைய சிடி ஸ்கேன் கோப்புறைகளில் இருந்து ஸ்கிராப் டீலர்களுக்கு வழங்கப்பட்டவை என்றார்.

    BMC அறிக்கையின்படி, நோயாளிகள் பொதுவாக தங்கள் சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ மற்றும் எக்ஸ் ரே அறிக்கைகளை காகித கோப்புறைகளில் பெறுவார்கள்.

    இந்த பழைய கோப்புறைகள் பின்னர் ஸ்கிராப் விற்பனையாளர்களுக்கு வழங்கப்படும்.

    ஸ்கிராப் விற்பனையாளருக்கு ஒதுக்கப்பட்ட பணி சரியாக முடிக்கப்படவில்லை என்று குடிமை அமைப்பு சுட்டிக்காட்டியது.

    • படுகாயமடைந்த பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
    • இளைஞர் மிஹிர் ஷாம் மகாராஷ்டிர முதலவர் ஏக்நாத் ஷிண்டேவின் பாஜக கூட்டணி சிவசேனா குழுவில் உள்ள ராஜேஷ் ஷா என்ற தலைவரின் மகன்

    பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகம் உள்ள நாடுகளில் ஒன்றான இந்தியாவில் வெளிப்படையாகவே இந்த வித்தியாசத்தை அன்றாடம் நம்மால பார்க்கவும் உணரவும் முடிகிறது. அந்த வகையில் சாலைகளில் பணக்காரர்கள் மற்றும் பெரும் புள்ளிகளின் சொகுசு கார்கள் இடித்து சாமானிய மக்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரிக்க தொடங்கியுள்ளன. சமீபத்தில் மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 17 வயது சிறுவன் மது அருந்திவிட்டு  ஓட்டிய சொகுசு கார் இடித்து 2 இளம் ஐ.டி ஊழியர்கள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.

    இந்த சம்பவத்தில் சிறுவனை காப்பாற்ற அவனது குடும்பம் பணம் மற்றும் அதிகார பலத்தை பயன்படுத்தியது. இந்த வழக்கு பரபரப்பாக நடந்து வரும் நிலையில் தற்போது மும்பையில் முக்கிய புள்ளி ஒருவரின் மகன் குடிபோதையில் ஓட்டி வந்த பி.எம்.டபில்யூ சொகுசு கார் இடித்து பெண் ஒருவர் 100 மீட்டருக்கு தரதரவென இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இன்று அதிகாலை மும்பையின் உரோலி பகுதியில் உள்ள கோலிவாடா பகுதியில் தனது கணவருடன் இரு சக்கர வாகனத்தில் காவேரி நாக்வா என்ற பெண் மீன் வாங்க சென்றுள்ளார். அப்போது பின்னால் வேகமாக வந்த பி.எம்.டபில்யூ சொகுசு கார் இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதனால் தூக்கி வீசப்பட்ட கணவனும் மனைவியும் காரின் முன்புற பானட் பகுதியில் சிக்கினனர். அவர்கள் மீது மோதியதும் இளைஞர் அங்கிருந்து தப்பிக்க காரை வேகமாக இயக்கியுள்ளார். அப்போது சமாளித்துக்கொண்டு கணவர் தப்பிக்கவே, மனைவி காவேரி பானட்டில் சிக்கியபடி 100 மீட்டர் தொலைவுக்கு தரதரவென இழுத்துச் செல்லப்பட்டார்.

    இதனால் படுகாயமடைந்த பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த கணவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து ஏற்படுத்திய அந்த இளைஞர் காருடன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த இளைஞரை தேடி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் 24 வயதுடைய அந்த இளைஞர் மிஹிர் ஷாம் என்பதும் மகாராஷ்டிர முதலவர் ஏக்நாத் ஷிண்டேவின் பாஜக கூட்டணி சிவசேனா குழுவில் உள்ள ராஜேஷ் ஷா என்ற தலைவரின் மகன் என்பதும் தெரியவந்துள்ளது. தற்போது மிஹிர் தப்பித்த நிலையில் அவரின் தந்தை ராஜேஷ் ஷாவை போலீசார் கஸ்டடியில் எடுத்துள்ளனர். 

    • சிலர் மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டதால் போலீசார் அவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • அலைகடலென ரசிகர்கள் குவிந்ததால் மும்பை மெரின் டிரைவ் பகுதியில் ஆங்காங்கே காலணிகள் சிதறிக்கிடந்தன.

    மும்பை:

    9-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நடந்தது. போட்டியில் தோல்வியையே சந்திக்காமல் வீறுநடை போட்ட இந்திய அணி, கடந்த மாதம் 29-ந்தேதி நடந்த பரபரப்பான இறுதி ஆட்டத்தில் 7 ரன் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை தோற்கடித்து சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.

    20 ஓவர் உலகக் கோப்பையை 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி சொந்தமாக்கியதால் ஒட்டுமொத்த தேசமும் வெற்றியை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தது.

    ஆனால் மகுடம் சூடிய இந்திய அணி வீரர்களால் உடனடியாக தாயகம் திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது. இறுதிப்போட்டி நடந்த பார்படோசை புயல் தாக்கியதால் அங்குள்ள விமான நிலையம் மூடப்பட்டது. இதனால் இந்திய வீரர்கள் 2 நாட்கள் அங்குள்ள ஓட்டலில் முடங்கினர்.

    நிலைமை சீரானதும் விமான சேவை தொடங்கியதையடுத்து ரோகித் சர்மா தலைமையிலான இந்திய வீரர்கள், அவர்களது குடும்பத்தினர், பயிற்சியாளர்கள், கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள், இந்திய ஊடகத்தினர் கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்த தனி விமானத்தில் தாயகம் புறப்பட்டனர்.

    ஏறக்குறைய 16 மணி நேர பயணத்துக்கு பிறகு வீரர்களின் விமானம் வியாழக்கிழமை காலை 6 மணி அளவில் டெல்லி வந்தடைந்தது. விமான நிலையத்தில் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    அதன்பின்னர், இந்திய அணியினர் டெல்லியில் இருந்து விமானத்தில் மும்பைக்கு வந்தனர். அங்கு இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் திறந்த பஸ்சில் பிரமாண்டமான வெற்றி ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்திய வீரர்களின் பேரணி மாலை 5 மணிக்கு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு முன்பாக மும்பை மெரின் டிரைவ் பகுதியில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர். ஆனால் ஊர்வலம் தொடங்க தாமதம் ஆனதால், தெற்கு மும்பை போக்குவரத்து நெரிசலால் திக்கு முக்காடி போனது. கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர்.

    இரவு 7.30 மணிக்கு வீரர்கள் திறந்த பஸ்சில் உலகக் கோப்பையுடன் பேரணியாக சென்றனர். இருபுறமும் கூடியிருந்த ரசிகர்கள் வெள்ளத்தில் பஸ் மிதந்து வந்தது. ரசிகர்களின் ஆர்ப்பரிப்பும், கரகோஷமும் காதை பிளந்தது. இதனால் சுமார் ஒரு மணி நேரம் மும்பையே ஸ்தம்பித்து போனது. ரசிகர்கள் கூட்டத்தில் ஆங்காங்கே தள்ளுமுள்ளு முற்பட்டது. சிலர் மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டதால் போலீசார் அவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அலைகடலென ரசிகர்கள் குவிந்ததால் மும்பை மெரின் டிரைவ் பகுதியில் ஆங்காங்கே காலணிகள் சிதறிக்கிடந்தன. மேலும் பெரும் அளவிலான குப்பைகள் கிடந்தது. இதனையடுத்து உடனே களத்தில் இறங்கிய மும்பை மாநகராட்சி ஊழியர்கள் சுமார் 9000 கிலோ குப்பைகளை அகற்றி அப்பகுதியை சுத்தம் செய்தனர். உணவு பொட்டலங்கள், பாட்டில்கள் உள்ளிட்ட குப்பைகள் அகற்றப்பட்டதால் மறுநாள் காலை அப்பகுதியை சுத்தமாக காட்சியளித்தது. இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

    இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், இணையவாசிகள் துரித நடவடிக்கை மேற்கொண்ட ஊழியர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

    மும்பை மெரின் டிரைவ் என்பது வி.ஐ.பி. பகுதி. இங்கு எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அதிகாரிகள் அதிகம் பயணம் செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • உயிரிழந்த 21 குழந்தைகளில் 19 குழந்தைகள் குறை பிரசவத்தில் பிறந்துள்ளது.
    • இதே மருத்துவமனையில் கடந்தாண்டு ஒரு நாளில் 18 பேர் உயிரிழந்தனர்.

    மகராஷ்டிரா மாநிலம் தானேவில் உள்ள சத்திரபதி சிவாஜி மகாராஜ் மருத்துவமனையில் கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் பிறந்த 21 குழந்தைகள் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கல்வா மருத்துவமனை என அறியப்படும் இந்த மருத்துவமனையில் பிறந்த 15 குழந்தைகளும், இந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மாற்றப்பட்ட 6 குழந்தைகளும் கடந்த மாதம் உயிரிழந்தது.

    உயிரிழந்த 21 குழந்தைகளில் 19 குழந்தைகள் குறை பிரசவத்தில் பிறந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

    இந்தாண்டு மட்டும் இந்த மருத்துவமனையில் பிறந்த 110 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஜனவரி - 17, பிப்ரவரி - 10, மார்ச் - 22, ஏப்ரல் - 24, மே - 16 ஜூன் - 21, குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். ஜூலை மாதத்தில் எத்தனை குழந்தைகள் உயிரிழந்துள்ளனர் என்ற தகவல்கள் கிடைக்கவிலை. ஆனால் நேற்று 2 குழந்தைகள் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.

    இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. அமின் படேல் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், குழந்தைகளின் மரணத்திற்கு யார் பொறுப்பேற்பது, மகாராஷ்டிரா அரசா? மருத்துவமனை நிர்வாகமா? அத்தியாவசிய மருந்துகள் கிடைக்காததால் தான் குழந்தைகள் உயிரிழந்தது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். சுகாதார அமைச்சர் உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

    இதே மருத்துவமனையில் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு நாளில் 18 பேர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    • திருமணம் வரும் ஜூலை 12-ம் தேதி மும்பையில் நடைபெறுகிறது.
    • திரைப் பிரபலங்கள், கிரிக்கெட் பிரபலங்கள் என பலரும் கலந்துக் கொண்டனர்.

    இந்தியாவின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானிக்கும், அவரது காதலியும், வைர வியாபாரியின் மகளுமான ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் திருமணம் முடிவானது.

    இவர்களது திருமணம் வரும் ஜூலை 12-ம் தேதி மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் உள்ள பிரமாண்ட வளாகத்தில் 3 நாள் நடைபெறவுள்ளது.

    திருமணத்திற்கு முன்னதாக ஐரோப்பாவில் சொகுசு கப்பலில் பிரமாண்ட விழா ஒன்று நடந்தது.

    ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சன்டின் திருமணம் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், இன்று சங்கீத் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

    இந்த நிகழ்ச்சியில் திரைப் பிரபலங்கள், கிரிக்கெட் பிரபலங்கள் என பலரும் கலந்துக் கொண்டனர்.

    ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டருக்கு ஆனந்த் அம்பானியும், ராதிகா மெர்ச்சன்டும் வருகை தந்த வீடியோ வைரலாகி வருகிறது.

    அதன்படி இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி தனது மனைவி சாக்ஷியுடன் சங்கீத் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார்.

    இதேபோல், கிரிக்கெட் வீரர் ஷ்ரேயாஸ் ஐயர், நடிரை நேஹா சர்மா, மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மனைவி ராஷ்மி தாக்கரே அவரது மகன் தேஜன் தாக்கரேவுடன் கலந்துக் கொண்டார்.

    • 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
    • உலகக் கோப்பை வென்றதற்காக இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத்தொகை அறிவித்தார் ஜெய்ஷா.

    மும்பை:

    சமீபத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    இதற்கிடையே, டி20 உலகக் கோப்பை வென்றதற்காக இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத் தொகையை அறிவித்தார் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா.

    உலகக் கோப்பை வெற்றிக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நேற்று இந்திய அணி வீரர்கள் மும்பையில் திறந்த பஸ்சில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். கிரிக்கெட் வீரர்களைக் காண ரசிகர்கள் படையெடுத்ததால் மும்பை நகரமே ஸ்தம்பித்தது.

    இந்திய வீரர்கள் திறந்த பஸ்சில் உலகக் கோப்பையுடன் பேரணியாக சென்றனர். அதன்பின் வான்கடே மைதானத்தில் நடந்த பாராட்டு விழாவில் 125 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

    இந்நிலையில், உலகக் கோப்பை வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட மும்பை வீரர்களுக்கு மகாராஷ்டிரா சட்டசபையில் இன்று பாராட்டு விழா நடந்தது. அப்போது பேசிய முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே உலகக்கோப்பை வென்ற இந்திய அணிக்கு 11 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என அறிவித்தார்.

    • உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்கள் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
    • மும்பையில் அலைகடலென குவிந்திருந்த ரசிகர்கள் மத்தியில் இந்திய வீரர்கள் பயணித்த பேருந்து ஊர்ந்து வந்தது.

    மும்பை:

    டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி நேற்று தாயகம் திரும்பியது. அவர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து, இந்திய அணி வீரர்கள் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

    உலகக் கோப்பையுடன் நாடு திரும்பிய இந்திய அணிக்கு நேற்று வான்கடே மைதானத்தில் பாராட்டு விழா நடந்தது. முன்னதாக அலைகடலென குவிந்திருந்த ரசிகர்கள் மத்தியில் இந்திய அணி வீரர்கள் பயணித்த பேருந்து ஊர்ந்து வந்தது.

    இதற்கிடையே, இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா மற்றும் கிரிக்கெட் வீரர்கள் சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் மும்பையில் மகாராஷ்டிர முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டேவை அவரது இல்லத்தில் சந்தித்தனர். அங்கு முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே அவர்களுக்கு சால்வை அணிவித்து பரிசு வழங்கினார்.

    இந்நிலையில், மகாராஷ்டிரா மாநில சட்டசபையான விதான் பவனில் முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட மும்பை வீரர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    • வெற்றிக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வீரர்கள் திறந்த பஸ்சில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.
    • கிரிக்கெட் வீரர்களைக் காண ரசிகர்கள் படையெடுத்ததால் மும்பை நகரமே ஸ்தம்பித்தது.

    மும்பை:

    டி20 உலகக் கோப்பை தொடரில் தோல்வியையே சந்திக்காமல் வீறுநடை போட்ட இந்திய அணி, கடந்த மாதம் 29-ம் தேதி நடந்த பரபரப்பான இறுதி ஆட்டத்தில் 7 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை தோற்கடித்து சாம்பியன் கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

    டி20 உலகக் கோப்பையை 17 ஆண்டுக்கு பிறகு இந்திய அணி சொந்தமாக்கியதால் ஒட்டுமொத்த தேசமும் வெற்றியை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தது.

    இதற்கிடையே, வெற்றிக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நேற்று வீரர்கள் மும்பையில் திறந்த பஸ்சில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். கிரிக்கெட் வீரர்களைக் காண ரசிகர்கள் படையெடுத்ததால் மும்பை நகரமே ஸ்தம்பித்தது. வெற்றி பேரணி மரைன் டிரைவ் பகுதியில் இருந்து வான்கடே மைதானம் வரை செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால் மும்பை கடற்கரையில் 7 முக்கிய சாலைகள் மூடப்பட்டன. 10 இடங்களில் வாகன நிறுத்தத்துக்கு தடை விதிக்கப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

    இரவு 7. 30 மணிக்கு வீரர்கள் திறந்த பஸ்சில் உலகக் கோப்பையுடன் பேரணியாக சென்றனர். பின் வான்கடே மைதானத்தில் பாராட்டு விழா நடந்தது.

    இந்நிலையில், இந்த அணிவகுப்பு பேரணியை வெற்றிகரமாக நடத்த உதவி புரிந்த மும்பை போலீசுக்கு விராட் கோலி நன்றி தெரிவித்தார்.

    இதுதொடர்பாக, கோலி தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், மும்பை போலீசின் அனைத்து அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு ஆழ்ந்த மரியாதை மற்றும் மனமார்ந்த நன்றி. இந்தியாவின் வெற்றி அணிவகுப்பின் போது ஒரு அற்புதமான வேலை செய்ததற்காக மும்பை கமிஷனருக்கும் நன்றிகள். உங்கள் அர்ப்பணிப்பு மற்றும் சேவை மிகவும் பாராட்டப்படுகிறது. ஜெய் ஹிந்த் என பதிவிட்டுள்ளார்.

    • பிசிசிஐ சார்பில் இந்திய அணிக்கு 125 கோடி ரூபாய் பரிசு வழங்கப்பட்டது.
    • சூர்யகுமார் யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில், நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

    நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்கா அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அணி வெற்றி பெற்றது. 17 ஆண்டுக்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    இதையடுத்து, டி20 உலகக் கோப்பையுடன் நாடு திரும்பிய இந்திய அணிக்கு நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.

    இவ்விழாவில், பிசிசிஐ சார்பில் இந்திய அணிக்கு 125 கோடி ரூபாய் பரிசு வழங்கப்பட்டது.

    அதற்கு முன்னதாக இந்திய அணிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. லட்சக் கணக்கான ரசிகர்கள் சாலையில் திரண்டு இந்திய அணி வீரர்களை வரவேற்றனர்.

    ரசிகர்கள் கூட்டத்திற்கிடையே, மும்பை கடற்கரை பகுதிகளில் ஒன்றான நரிமன் பாயிண்டில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரம் வீரர்கள் ஊர்வலமாக சென்று வான்கடே ஸ்டேடியத்தை அடைந்தனர்.

    இந்நிலையில், இந்திய அணியின் இந்த அணிவகுப்பைக் காண திரண்டிருந்த ரசிகர்களை கண்டு திகைத்துப்போன மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா மரைன் டிரைவிற்கு புதிய செயரை வைத்துள்ளார். அதற்கு இந்திய கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ் ரியாக்ட் செய்துள்ளார்.

    இதுகுறித்து ஆனந்த் மஹிந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிடுகையில், " இனி இது மும்பையில் உள்ள குயின்ஸ் நெக்லஸ் அல்ல. அது இப்போது மும்பையின் மேஜிக்கல் ஹக்" என்று பதிவிட்டிருந்தார்.

    தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் ஆட்டத்தை மாற்றும் கேட்சை பிடித்த இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ், ஆனந்த் மஹிந்திராவின் இந்த பதிவிற்கு ரியாக்ட் செய்துள்ளார்.

    இதுதொடர்பாக சூர்யகுமார் யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில், நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பெண்ணுடன் டேட்டிங் உற்சாகத்தில் இருந்த வாலிபர் அந்த பெண் கேட்டதை எல்லாம் ஆர்டர் செய்திருக்கிறார்.
    • பயனர்கள் பலரும் கேலியான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    டெல்லி, மும்பை போன்ற நகரப்பகுதிகளில் டேட்டிங் கலாச்சாரம் வேகமாக பரவி வரும் நிலையில் இளம் ஜோடிகள் தங்கள் துணையை தேடுவதற்காகவே பிரத்யேக செயலிகளும் உள்ளது.

    இந்நிலையில் இந்த செயலிகளை பயன்படுத்தி சில மோசடி சம்பவங்களும் நடக்கிறது. சமீபத்தில் மகாராஷ்டிரா மாநிலம் தானே நகரை சேர்ந்த இளைஞர் ஒருவர் பிரபல டேட்டிங் செயலிகளில் ஒன்றான டிண்டர் செயலி மூலம் அறிமுகமான ஒரு பெண்ணுடன் அப்பகுதியில் உள்ள ஓட்டலுக்கு சென்றுள்ளார். அந்த பெண்ணுடன் டேட்டிங் உற்சாகத்தில் இருந்த வாலிபர் அந்த பெண் கேட்டதை எல்லாம் ஆர்டர் செய்திருக்கிறார்.

    18 ஜாகர்பாம்ப்ஸ், 2 ரெட்புல்ஸ், பிரெஞ்ச்பிரைஸ், சாலட் உள்பட உணவு வகைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போனது. இவற்றையெல்லாம் ருசித்த வாலிபர் பில் வந்த போது அதிர்ச்சியடைந்தார். காரணம் அந்த பெண் ஆர்டர் செய்த உணவுக்கு ரூ.44.829 பில் வந்தது. பின்னர் நண்பரிடம் உதவி கேட்டு பில் தொகையை செலுத்தி உள்ளார். பாதிக்கப்பட்ட அந்த வாலிபரின் நண்பர் உணவக பில்லை ரெடிட் தளத்தில் பதிவிட அது பயனர்களின் கவனத்தை ஈர்த்தது.

    பயனர்கள் பலரும் கேலியான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். சில பயனர்கள் உண்மையிலேயே இவ்வளவு நீண்ட பட்டியல் கொண்ட உணவு வகைகள் ஆர்டர் செய்யப்பட்டதா? என உறுதி செய்ய சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்யுங்கள். மோசடி நடந்திருக்கலாம் என பதிவிட்டுள்ளனர்.

    • இந்த ஊர்வலத்தில் இந்தியர்களின் நற்பண்பை எடுத்துக்காட்டும் நெகிழ்ச்சி சம்பவம் ஒன்றும் நடந்துள்ளது.
    • லட்சக்கணக்கானோர் ஒரே சமயத்தில் விலகி வழி ஏற்படுத்தும் வீடியோ இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது

    டி20 உலகக்கோப்பையை வென்று நாடு திரும்பியுள்ள இந்திய வீரர்களுக்கு நேற்று மும்பையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வான்கடே மைதானத்தில் நடக்கும் பாராட்டு விழாவுக்கு செல்லும் வழியில் கடற்கரை ஓரமாக மரைன் டிரைவில் நடந்த வெற்றி ஊர்வலத்தில் லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டு இந்திய அணி வீரர்களை உற்சாகப் படுத்தினர்.

    இந்த ஊர்வலத்தில் இந்தியர்களின் நற்பண்பை எடுத்துக்காட்டும் நெகிழ்ச்சி சம்பவம் ஒன்றும் நடந்துள்ளது. அதாவது ஊர்வலத்தின்போது மரைன் டிரைவ் சாலை வழியாக நோயாளியை ஏற்றிக்கொண்டு ஆம்புலன்ஸ் ஒன்று வந்துள்ளது. உடனே அங்கு திரண்டிருந்த ரசிகர்கள், அனைவரும் ஒன்றுதிரண்டு விலகி ஆம்புலன்ஸ் செல்ல வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.

    லட்சக்கணக்கானோர் ஒரே சமயத்தில் விலகி வழி ஏற்படுத்தும் வீடியோ இணையதளத்தில் தீயாக பரவி அனைவரின் பாராட்டுகளையும் குவித்து வருகிறது. இதுதொடர்பாக மும்பை போலீஸ் கமிஷனரும் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களின் இந்த செயலுக்கு நன்றி தெரிவித்துள்ளார். 

    • லட்சக்கணக்காக ரசிகர்கள் குவிந்ததால் கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். ஆங்காங்கே தள்ளுமுள்ளு முற்பட்டது.
    • சிலர் மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டதால் போலீசார் அவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    17 வருடங்களுக்கு பிறகு டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றது. இதனையடுத்து புயல் காரணமாக தாயகம் திரும்ப தாமதமான நிலையில் நேற்று காலை இந்திய அணி டெல்லி வந்தடைந்தது. பிரதமர் மோடியை சந்தித்து இந்திய அணி வீரர்கள் வாழ்த்து பெற்றனர். அதன் பிறகு இந்திய அணியினர் மும்பைக்கு புறப்பட்டனர்.

    மும்பை கடற்கரை பகுதிகளில் ஒன்றான நரிமன் பாயிண்டில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரம் வீரர்கள் ஊர்வலமாக சென்று வான்கடே ஸ்டேடியத்தை அடையணும். ஆனால் மழையால் ஊர்வலத்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. ரசிகர்கள் மழையிலும் இந்திய வீரர்களுக்காக வழி நெடுகிழும் காத்துக்கிடந்தனர்.

    இதனையடுத்து திறந்தவெளி பேருந்தில் இந்திய வீரர்கள் ஊர்வலத்தை தொடங்கினர். ரசிகர்கள் சூழ பஸ் ஸ்டேடியத்தை நோக்கி நகர தொடங்கியது. சுற்றி இருந்த ரசிகர்கள் முழக்கத்திற்கு மத்தியில் இந்திய அணி வீரர்கள் மகிழ்ச்சியுடன் ஊர்வலத்தில் பயணம் செய்தனர்.

    இந்திய அணி வீரர்களை காண லட்சக்கணக்காக ரசிகர்கள் குவிந்ததால் கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். ஆங்காங்கே தள்ளுமுள்ளு முற்பட்டது. அப்போது சிலர் காயம் அடைந்தனர். மேலும் சிலர் மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டதால் போலீசார் அவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அலைகடலென ரசிகர்கள் குவிந்ததால் நரிமன் பாயிண்டில் ஆங்காங்கே காலணிகள் சிதறிக்கிடந்தன.

    ×