search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "salman"

    • இத்திரைப்படத்தில் வில்லனோ, சண்டை காட்சிகளோ கிடையாது
    • பெரும்பாலான பாடல்களை எஸ்பிபி மற்றும் லதா மங்கேஷ்கர் பாடியிருந்தனர்

    கடந்த வருடம் வெளியான திரைப்படங்களில் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் மிகப்பெரும் வெற்றி பெற்றவைகளில் பெரும்பாலானவை "ஆக்ஷன் திரில்லர்" ரகத்தை சேர்ந்தவை.

    பெரிய ஹீரோ, மிரட்டும் வில்லன் கதாபாத்திரம் மற்றும் அதிர வைக்கும் பிரமாண்ட சண்டை காட்சிகள் இடம் பெற்றால்தான் திரைப்படங்களை காண இளைஞர்கள் திரையரங்குகளுக்கு வருவதாகவும், வினியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் பல ஊடகங்களில் கருத்து தெரிவிக்கின்றனர்.

    இவை இல்லாத திரைப்படங்கள் ஓரளவு வசூலை செய்தாலும் பெரும் வெற்றியை பெற முடிவதில்லை.

    முதல்முதலாக ரூ.200 கோடி வசூல் செய்த இந்திய திரைப்படத்தில் சண்டை, வன்முறை, இரட்டை அர்த்த நகைச்சுவை, ஆணாதிக்க காட்சிகள் எதுவும் இன்றி மென்மையான குடும்ப கதையை களமாக கொண்டது.


    1994ல் வெளிவந்த, ராஜ்ஸ்ரீ புரொடக்ஷன்ஸ் (Rajshri Productions) தயாரிப்பில் சூரஜ் பர்ஜாத்யா எழுதி, இயக்கிய இந்தி திரைப்படமான, "ஹம் ஆப்கே ஹை கோன்" (Hum Aapke Hain Koun), இந்தியாவில் ரூ.200 கோடிக்கும் மேல் (ரூ.210 கோடி) வசூல் செய்த முதல் திரைப்படமாகும்.

    1994 ஆகஸ்ட 4 அன்று தெற்கு மும்பை பகுதியின் லிபர்டி திரையரங்கில் வெளியாகி அங்கு மட்டுமே 100 வாரங்களுக்கும் மேலாக ஓடியது.

    குறைந்த அளவு திரையரங்குகளில் வெளியானாலும், வாய்மொழி விளம்பரத்திலும், குடும்பம் குடும்பமாகவே பார்க்க சென்ற மக்களின் அமோக வரவேற்பிலும், பிற திரையரங்குகளிலும் வெளியிடப்பட்டது.


    தமிழில் "நான் உங்களுக்கு யாராம்?" எனும் பொருள்படும் தலைப்பில் வெளியான இத்திரைப்படத்தின் தயாரிப்பு செலவு ரூ.6 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

    "ஹம் ஆப்கே ஹை கோன்" திரைப்படத்தில் சல்மான் கான் கதாநாயகனாகவும், மாதுரி தீட்சித் கதாநாயகியாகவும் நடித்திருந்தனர்.

    பிரேம் எனும் இளைஞரும் அவரது அண்ணியின் தங்கையான நிஷாவும் ஒருவரையொருவர் விரும்புகின்றனர். அவர்கள் எண்ணம் நிறைவேறியதா என்பதை குடும்ப கொண்டாட்டங்களின் பின்னணியில் கூறும் ஒரு நேர்த்தியான கதையமைப்பே இப்பட வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

    ராம்லட்சுமண் இசையில் 14 பாடல்கள் இடம் பெற்றிருந்தன. பெரும்பாலான பாடல்களை எஸ்.பி. பாலசுப்ரமணியம் மற்றும் லதா மங்கேஷ்கர் பாடியிருந்தனர்.


    இனிமையான பாடல்கள் இப்படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம்.

    தற்போது இந்தியாவின் முன்னணி பாலிவுட் ஆக்ஷன் ஹீரோவாக வலம் வரும் சல்மான் கான் கதாநாயகனாக நடித்த இப்படத்தில் ஒரு சண்டை காட்சி கூட கிடையாது என்பது மற்றுமொரு ஆச்சரியம் அளிக்கும் தகவல்.

    இதில் பிரேம் வேடத்தில் நடிக்க முதலில் தயாரிப்பாளர்கள் தேர்வு செய்த நடிகர், அமீர் கான். ஆனால், இக்கதை தன்னை பெரிதாக ஈர்க்கவில்லை என அவர் கூறியதால், வாய்ப்பு சல்மான் கானுக்கு சென்றது.

    "ஹம் ஆப்கே ஹை கோன்" பட வசூல் சாதனையை, சுமார் 15 வருடங்கள் கடந்து அமீர் கான் கதாநாயகனாக நடித்து வெளியான "த்ரீ இடியட்ஸ்" ரூ.300 கோடி வசூல் செய்து முறியடித்தது.

    சவுதி அரேபியாவில் உள்ள மக்கா மற்றும் மதீனா நகரங்களுக்கு 'ஹஜ்' புனித யாத்திரை செய்ய செல்லும் இந்தியர்களுக்கான எண்ணிக்கையை 2 லட்சமாக அதிகரித்து சவுதி இளவரசர் இன்று ஒப்புதல் அளித்தார். #SaudiArabia #IndiaHajquota
    புதுடெல்லி:

    10 லட்சம்  மக்கள் தொகையின் அடிப்படையில் ஆயிரம் பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ள சவுதி அரசாங்கம் முன்னர் அனுமதி அளித்து வந்தது. ஒரு கோடி மக்கள் தொகை உள்ள நாட்டில் இருந்து 10 ஆயிரம் பேர் ஆண்டிற்கு ஒரு முறை ஹஜ் பயணம் செய்ய முடியும். இதன் அடிப்படையில், கடந்த 2012 ஆண்டு நிலவரப்படி இந்தியாவில் இருந்து மட்டும் ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேர் ஹஜ் யாத்திரை செய்தனர்.

    பின்னர், வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கையில் 20 சதவீதமும் குறைக்கப்படுவதாக கடந்த 2013 ஆண்டில் சவுதி அரசு அறிவித்தது.

    இதன் அடிப்படையில் கடந்த 2014-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து ஒரு லட்சத்து 36 ஆயிரம் பேர் ஹஜ் யாத்திரை செய்ய அனுமதியளிக்கப்பட்டது. 2017-ம் ஆண்டு இந்த எண்ணிக்கை கூடுதலாக 35 ஆயிரம் பேருக்கு அனுமதி வழங்கப்பட்டு, கடந்த (2018) ஆண்டு மேலும் 5 ஆயிரம் பேர் ஹஜ் செய்ய சவுதி அரசு அனுமதி அளித்தது.

    இதனால், கடந்த ஆண்டு 1 லட்சத்து 75 ஆயிரத்து 25 பேர் இந்தியாவில் இருந்து ஹஜ் பயணம் சென்று வந்தனர்.

    இந்திய அரசு மாநிலங்களுக்கு அளிக்கும் ஹஜ் ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என பல மாநில அரசுகளின் சார்பில் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் தமிழக அரசும் இந்த கோரிக்கையை முன்வைத்து பிரதமருக்கு கடிதம் எழுதி இருந்தது.

    இந்நிலையில், அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள சவுதி அரேபியா நாட்டின் பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மான் இன்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தியபோது இவ்விவகாரம் தொடர்பாக முன்வைக்கப்பட்ட கோரிக்கையை அவர் ஏற்றார்.

    இந்த ஆண்டு முதல் இந்தியாவில் இருந்து மேலும் 25 ஆயிரம் பேர் ஹஜ் செய்ய இளவரசர் ஒப்புதல் அளித்தார். இதனையடுத்து, இங்கிருந்து 2 லட்சம் முஸ்லிம்கள் இனி ஹஜ் யாத்திரை செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. #SaudiArabia #IndiaHajquota 
    பா.ஜ.க.வின் ஆதரவு திரட்டும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக மத்திய மந்திரி நிதின் கட்காரி பாலிவுட் நடிகர் சல்மான் கான் மற்றும் அவரின் தந்தை சலிம் கானை நேரில் சந்தித்து பேசினார். #SalmanKhan #contactforsupport #NitinGadkari
    மும்பை:

    இந்தியாவில் உள்ள முன்னணி கட்சிகளில் ஒன்று பாரதீய ஜனதா கட்சி. நாட்டின் ஆளும் கட்சியாக உள்ள பா.ஜ.க. தனது 4 ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்தது. இந்நிலையில், பா.ஜ.க. ஆதரவு திரட்டும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. பல தலைவர்கள் முக்கிய பிரமுகங்களை சந்தித்து பா.ஜ.க.வின் நான்கு ஆண்டுகள் சாதனை குறித்து விளக்கம் அளித்து வருகின்றனர்.


    இந்நிலையில், மத்திய மந்திரி நிதின் கட்காரி இன்று பாலிவுட் நடிகர் சல்மான் கான் மற்றும் அவரது தந்தையும், கதை ஆசிரியருமான சலிம் கான் ஆகியோரை அவர்கள் வீட்டிற்கு சென்று சந்தித்தார். பின்னர் தங்கள் நான்கு ஆண்டுகள் சாதனைகள் மற்றும் மோடி அரசின் திட்டங்கள் குறித்து ஆலோசனை செய்தனர்.

    இந்த பிரச்சாரம் ஆனது கடந்த மாதம் தொடங்கப்பட்டது. அதன் படி கட்சி அமைப்புகள் சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான பேரை சந்தித்து மோடி அரசின் நான்கு ஆண்டுகள் சாதனை குறித்து பிரச்சாரம் செய்ய வேண்டும். இதன் ஒரு பகுதியாக அமித் ஷா இரண்டு நாள்களுக்கு முன்னர் நடிகை மாதுரி தீட்சித் மற்றும் ரத்தன் டாடாவை நேரில் சந்தித்து பேசினார். #SalmanKhan #contactforsupport #NitinGadkari

    ×