என் மலர்
மகாராஷ்டிரா
- நிலநடுக்கத்தை அடுத்து பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
- நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதவிவரம் எதுவும் வெளியாகவில்லை.
கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து மும்பை, புனே உள்ளிட்ட பகுதிகளில் கடும் மழை பெய்து சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் ஹிங்கோலி பகுதியில் இன்று காலை 7.14 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.5-ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தை அடுத்து பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதவிவரம் எதுவும் வெளியாகவில்லை.
- டிராகில் இறங்கி உள்ளுர் ரயில் வந்துகொண்டிருக்கும் மற்றொரு டிரக்கிற்கு மாறி கை கோர்த்தபடி இருவர் ரயிலின் முன்னே அப்படியே கீழே அமர்ந்துள்ளனர்.
- கைகோர்த்தபடி ரயில் முன் செல்வதும், அவர்கள்மீது ரயில் ஏறுவதும் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
மகாராஷ்டிராவில் தந்தையும் மகனும் கை கோர்த்தபடி ரெயிலின் முன் படுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் இருந்து 32 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாயாந்தர் ரெயில் நிலையத்தில் நேற்று முன் தினம் திங்கள்கிழமை காலை 10.30 மணியளவில் ஆள்நடமாட்டம் அதிகம் இல்லாத பிளாட்பாமில் நடந்து சென்று ரெயில்வே டிராகில் இறங்கி உள்ளுர் ரெயில் வந்துகொண்டிருக்கும் மற்றொரு டிரக்கிற்கு மாறி கை கோர்த்தபடி இருவர் ரெயிலின்முன்னே அப்படியே கீழே அமர்ந்துள்ளனர்.
மிகவும் அருகில் இருந்ததால் நிறுத்தமுடியாமல் அவர்கள் மீது REYILஎறியுள்ளது. இதனால் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் நலசோபாரா பகுதியைச் சேர்ந்த ஹர்ஷித் மேத்தா[60], ஜே மேத்தா[35] என்பதும் அவர்கள் தந்தை மற்றும் மகன் என்பதும் பின்னர் தெரியவந்துள்ளது. அவர்கள் பிளாட்பாமில் நடந்து சென்று, டிராக்கில் இறங்கி, கைகோர்த்தபடி ரெயில் முன் செல்வதும், அவர்கள்மீது ரெயில் ஏறுவதும் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. மனதை உருக்கும் அந்த காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிந்துள்ள போலீசார் தந்தை மகனின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
தற்கொலை எதற்கும் தீர்வாகாது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டி உள்ளது. தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபட உதவிக்கு 044 2464 0050 என்ற எண்ணை அழைக்கவும்.
- இந்த வழக்கு குறித்த விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் பல வெளிவந்தன.
- மிஹிர் தனது காதலி வீட்டில் இருப்பதாக போலீசுக்கு துப்பு கிடைத்தது.
மும்பையில் பாஜக கூட்டணி ஷிண்டே சிவசேனா தலைவர் ராஜேஷ் ஷாவின் மகன் மிஹிர் ஷா கடந்த ஜூலை 7 ஞாயிற்றுக்கிழமையன்று மதுபோதையில் BMW சொகுசு காரை இயக்கி ஏற்படுத்திய விபத்தில் காவேரி என்ற பெண் உயிரிழந்த நிலையில் அங்கிருந்து மிஹிர் தலைமறைவானான்.

மிஹிரின் தந்தை மற்றும் அவருடன் காரில் வந்த டிரைவரை போலீசார் கைது செய்த நிலையில், மிஹிரை ஆறு தனிப்படைகள்அமைத்து வலைவீசி தேடிவந்தது மும்பை போலீஸ். இந்த வழக்கு குறித்த விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் பல வெளிவந்தன. விபத்தில் கார் பானட்டில் சிக்கி 1.5 கி.மீ தூரத்துக்கு இழுத்துசெல்லப்பட்டு உயிருக்கு போராடிய காவேரியை, வண்டியை நிறுத்தி காரில் இருந்து விடுவித்து கீழே சாலையில் கிடத்தியபின், மிஹிர் காரின் ஓட்டுநர் இருக்கைக்கு அருகே உள்ள இருக்கையில் அமர ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து காரை ஓட்டிய டிரைவர் காவேரி மீது மீண்டும் காரை ஏற்றி இறக்கியுள்ளார்.

அதனபின்னர் மற்றொரு காரில் மாயமான மிஹிர் தனது காதலி வீட்டில் இருப்பதாக போலீசுக்கு துப்பு கிடைத்தது. விபத்து ஏற்படுத்தியதும் கோரேகானில் உள்ள தனது காதலி வீட்டுக்கு மிஹிர் சென்று சேர்ந்ததும் மிஹிரின் காதலி அவனது சகோதரிக்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் அங்கு வந்து மிஹிரை வேறொரு காரில் ஏற்றி போரிவாலியில் உள்ள தங்களின் வீட்டுக்கு அவனது சகோதரி அழைத்துச்சென்றுள்ளார்.
அங்கிருந்து மிஹிருடன் அவனது தாய், இரண்டு சகோதரிகள் மற்றும் அவனது நண்பன் என 5 பேரும் மும்பைக்கு 70 கிலோமீட்டர் தொலைவில் ஷாபூர் பகுதியில் உள்ள ரிசார்ட் ஒன்றிற்கு சென்றுள்ளனர். அங்கிருந்து மிஹிர் மட்டும் தந்து நண்பனுடன் மும்பையில் இருந்து 60 கி.மீ தொலைவில் உள்ள தானேவின் விரார் பகுதிக்கு சென்று பதுங்கியுள்ளான்.
ஐவரும் செல் போன்களை சுவிட்ச் ஆப் செய்துள்ளனர். மிஹிரின் நன்பனின் போனை போலீசார் டேப் செய்து கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை மிஹிரின் நண்பன் தனது போனை 15 நிமிடத்துக்கு ஸ்விட்ச் ஆன் செய்ததால் அவர்களின் மறைவிடம் தெரிந்து போலீசார் மிஹிர் உட்பட அனைவரையும் கைது செய்தனர். மிஹிரின் தந்தை ராஜேஷ் ஷா தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மிஹிர் ஷாவுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று விபத்தில் உயிரிழந்த காவேரியின் மகள் கூறியுள்ளார்.
- ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணத்தையொட்டி ஓட்டல் அறை வாடகை உயர்ந்துள்ளது.
- ஜூலை 10 முதல் ஜூலை 14 வரை அறைகள் எதுவும் இல்லை.
இந்தியாவின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானிக்கும், அவரது காதலியும், வைர வியாபாரியின் மகளுமான ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் திருமணம் வருகிற ஜூலை 12-ம் தேதி மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் உள்ள பிரமாண்ட வளாகத்தில் 3 நாட்கள் நடைபெற உள்ளது.
கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாகவே திருமணத்துக்கு முந்தைய சம்பிரதாயங்களும் நிகழ்ச்சிகளும் கோலாகலமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் திருமண நிகழ்ச்சிகள் மற்றும் திருமணத்திற்கு முந்தைய சடங்குகள் அனைத்தும் மும்பையிலேயே நடப்பதால் மும்பையில் ஓட்டல் முன்பதிவுகளிலும் இதன் தாக்கம் காணப்படுகிறது.

ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணத்தையொட்டி, மும்பையின் முக்கிய ரியல் எஸ்டேட் மையமான பாந்த்ரா-குர்லா வளாகத்தில் அமைந்துள்ள பெரிய ஓட்டல்களில் முன்பதிவு தீவிரமாக உள்ளது. திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் மும்பையில் உள்ள ஓட்டல்களின் ஆக்கிரமிப்பு மற்றும் விலை அதிகரிப்பை ஏற்படுத்தியுள்ளன.
ஜூலை 14 அன்று ஒரு ஓட்டல் ஒரு இரவுக்கு ரூ. 91,350-க்கு அறைகளை வழங்குவதாக சுற்றுலா மற்றும் ஓட்டல் இணையதளங்கள் தெரிவிக்கின்றன. வழக்கமாக வாடகை ரூ. 13,000 ஆக இருந்தது. ஆனால் ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணத்தையொட்டி ஓட்டல் அறை வாடகை உயர்ந்துள்ளது.
விருந்தினர்களுக்கான சரியான தங்குமிடங்கள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், பிகேசி மற்றும் அதைச் சுற்றியுள்ள ஓட்டல் கட்டணங்கள் உயர்ந்துள்ளன.
பிகேசி-ல் அறை கட்டணங்கள் ஒரு இரவுக்கு ரூ. 10,250 மற்றும் ஜூலை 9 அன்று ரூ.16,750 மற்றும் ஜூலை 16 அன்று ரூ. 13,750 ஆக இருப்பதாக பயண முன்பதிவு இணையதளங்கள் வாயிலாகத் தெரியவந்துள்ளது.
ஜூலை 10 முதல் ஜூலை 14 வரை அறைகள் எதுவும் இல்லை. அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன. அனைத்து அறைகளும் இந்த தேதிகளுக்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஓட்டல் இணையதளங்கள் காட்டுகின்றன.
- அவர்களிடம் நடத்திய விசாரணையில் அடுத்தடுத்த அதிர்ச்சி உண்மைகள் வெளிவந்துள்ளன.
- காரில் ஏறிய ராஜ்ரிஷி காரை ஸ்டார்ட் செய்து காவேரி மீது மீண்டும் ஏற்றி இறக்கிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.
மும்பையின் உரோலியில் உள்ள கோலிவாடா பகுதியில் கடந்த ஜூலை 7 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை நடந்த கார் விபத்து பரபரப்பை ஏற்படுதத்தி வருகிறது. தனது கணவருடன் இரு சக்கர வாகனத்தில் மீன் வாங்க சென்ற காவேரி நாக்வா என்ற பெண் பின்னால் இருந்து வந்து இடித்து பி.எம்.டபில்யூ காரின் பானட்டில் சிக்கி 100 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார்.

விபத்து ஏற்படுத்திய காரை மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் பாஜக கூட்டணி சிவசேனா குழுவில் உள்ள ராஜேஷ் ஷா என்ற தலைவரின் மகன் மிஹிர் ஷா ஓட்டி வந்ததும், அப்போது அவர் மதுபோதையில் இருந்ததும் தெரியவந்தது. சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடிய மிஹிர் தலைமறைவான நிலையில் இளைஞனின் தந்தை ராஜேஷ் ஷாவை போலீசார் கைது செய்தனர். மேலும் விபத்து நடந்தபோது மிஹிர் ஷாவுடன் காருக்குள் இருந்த அவரின் குடும்ப ஓட்டுநர் ராஜ்ரிஷி பிதாவாத் கைது செய்யப்டயுள்ளார்.
இந்நிலையில்அவர்களிடம் நடத்திய விசாரணையில் மூலமும் போலீஸ் கைப்பற்றிய சிசிடிவி மூலமும் அடுத்தடுத்த அதிர்ச்சி உண்மைகள் வெளிவந்துள்ளன. தற்போது போலீஸ் கைப்பற்றியுள்ள சிசிடிவி வீடியோவில் மிஹிர் விபத்து ஏற்படுத்தியவுடன், காரை நிறுத்தாமல் ஒட்டவே, 1.5 கி.மீட்டருக்கு பானட்டில் சிக்கிய காவேரி இழுத்துச் செல்லப்பட்டார். அதன்பின் காரை நிறுத்திய மிஹிர் மற்றும் அவரது ஓட்டுநர் ராஜ்ரிஷி காரில் இருந்து இறங்கி, படுகாயமடைந்த காவேரியை பான்ட்டில் இருந்து விடுவித்து சாலையில் கிடத்தியுள்ளனர். பின்னர் மிஹிருடன் காரில் ஏறிய ராஜ்ரிஷி காரை ஸ்டார்ட் செய்து காவேரி மீது மீண்டும் ஏற்றி இறக்கிவிட்டு அங்கிருந்து சென்றது பதிவாகியுள்ளது.
இதற்கிடையில், விபத்து குறித்து மிஹிர் தனது தந்தை ராஜேஷ் ஷாவுக்கு போன் மூலம் தெரிவித்துள்ளார். மகனை தப்பிக்க வைக்க திட்டமிட்ட ராஜேஷ் ஷா, மெர்ஸண்டிஸ் காரில் வந்து காலா நகர் என்ற இடத்தில் மிஹிரை மெர்ஸண்டிசில் ஏற்றி தப்பிக்க வைத்துள்ளார். பிஎம்டபிள்யூ காரை ஓட்டுநர் ராஜ்ரிஷி ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக போலீசை நம்பவைக்க ராஜேஷ் ஷா திட்டமிட்டிருந்த்ததும் தெரியவந்துள்ளது. முன்னதாக விபத்து நடப்பதற்கு முன் மிஹிர் மதுபான பாரில் இருந்து வெளியில் வரும் சிசிடிவி காட்சிகளை போலீஸ் கைப்பற்றியுள்ளது.
புதிய குற்றவியல் சட்டமான பாரதிய நியாய சன்ஹிதாவின் கீழ் விபத்தை ஏற்படுத்திய மிஹிர், தந்தை ராஜேஷ் ஷா, ஓட்டுநர் ராஜ்ரிஷி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் நீதிமன்றத்தில் புதிய குற்றவியல் சட்டங்கள் பற்றி முழுமையான அறிதல் இல்லாததால் போலீஸ் விளக்கம் அளிக்க திணறியதால், அவர்களை நன்கு தயார் செய்துகொண்டு வந்து வழக்கு குறித்து பேசுமாறு நீதிபதி தெரிவித்தது குறிப்பிடதக்கது. மேலும் தற்போது ராஜேஷ் ஷாவுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. மிஹிர் ஷாவை தேடும் பணியை காவல்துறை முடுக்கிவிட்டுள்ளது.
- ராய்காட் மற்றும் நவி மும்பையில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- மும்பையில் பெய்து வரும் கனமழையால் கிங்ஸ் சர்க்கிள் பகுதியில் உள்ள சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நேற்று அதிகாலை 1 மணி முதல் பலத்த மழை பெய்தது. விடிய விடிய மும்பை மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் இடைவிடாமல் மழை கொட்டி தீர்த்தது. பேய் மழை காரணமாக மும்பையில் தாழ்வான பகுதிகள் தண்ணீரில் தத்தளித்தன. குறிப்பாக மும்பை கிழக்கு, மேற்கு புறநகர் பகுதிகள் வெள்ளக்காடாக மாறின.
இந்நிலையில் மும்பைக்கு கனமழைக்கான ரெட் அலர்ட் இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. நகரின் சில பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
கனமழை காரணமாக புனே, மும்பையில் உள்ள பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ராய்காட் மற்றும் நவி மும்பையில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் பெய்து வரும் கனமழையால் கிங்ஸ் சர்க்கிள் பகுதியில் உள்ள சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதாலும், மழை தொடர்ந்து பெய்வதாலும் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் சில இடங்களில் ஜூலை 12 வரை கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- மந்த்ராலயாவில் ஷிண்டே பேரிடர் துறை கட்டுப்பாட்டு அறைக்குச் சென்று நிலவரத்தை ஆய்வு செய்தார்.
- கடலோர பகுதிகளில் ராணுவம், கடற்படை மற்றும் விமானப் படையினர் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்
மகாராஷ்டிராவின் பிற பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், மும்பையில் 6 மணி நேரத்தில் 300 மி.மீ. மழை பெய்துள்ளதால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. பேருந்து, ரயில் சேவைகள் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், மும்பை நகரில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புறநகர் ரயில் சேவைகள், விமான நிலைய சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பல பகுதிகளில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழை எதிரொலியாக, 50 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மும்பையில் கனமழை நிலவரம் குறித்து மந்த்ராலயாவில் கூட்டத்தை நடத்தி பிரஹன்மும்பை மாநகராட்சியின் (பிஎம்சி) கட்டுப்பாட்டு அறைக்கு சென்று பார்வையிட்டார். கூட்டத்தைத் தொடர்ந்து, மந்த்ராலயாவில் ஷிண்டே பேரிடர் துறை கட்டுப்பாட்டு அறைக்குச் சென்று நிலவரத்தை ஆய்வு செய்தார்.
இது குறித்து மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறும்போது, "குறைந்த நேரத்தில் நிறைய மழை பெய்துள்ளது, இதனால், ரயில் தண்டவாளங்கள் மற்றும் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. மக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியேற வேண்டாம், கடற்கரைக்கு அருகில் யாரையும் அனுமதிக்க வேண்டாம் என்று காவல் துறை ஆணையரிடம் கேட்டுக் கொண்டுள்ளேன்.
முனிசிபல் கார்ப்பரேஷனின் 461 மோட்டார் பம்புகளும், ரயில்வேயின் 200 பம்புகளும் இயங்குகின்றன. காலையில் இருந்து அனைத்து துறைகளுடன் தொடர்பு கொண்டேன். மத்திய மற்றும் துறைமுக ரயில் சேவைகள் தொடங்கியுள்ளன. மாநிலம் முழுவதும் ஆய்வு செய்தேன். கடலோர பகுதிகளில் ராணுவம், கடற்படை மற்றும் விமானப் படையினர் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்" எனத் தெரிவித்துள்ளார்.
- செம்பூரில் உள்ள நகைக்கடைஇன்ஸ்டாகிராமில் பகிர்ந்த வீடியோ தற்போது வைரலாகி உள்ளது.
- வீடியோவில், சல்தான்ஹா தனது நாய் டைகருக்கு சங்கிலியை தேர்ந்தெடுப்பதை காணலாம்.
மும்பையைச் சேர்ந்த சரிதா சல்தான்ஹா என்ற பெண், தனது நாய்க்கு ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள தங்க சங்கிலியை பரிசாக அளித்து சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்த்துள்ளார். அந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி உள்ளது.
மும்பையை சேர்ந்த சரிதா சல்தான்ஹா என்ற பெண், தனது வளர்ப்பு நாயான டைகரின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக ஷாப்பிங் சென்றுள்ளார். அங்கு தனது நாய்க்கு நகையை தேர்ந்தெடுத்து அணிகிறார்.
செம்பூரில் உள்ள நகைக்கடை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த வீடியோ தற்போது வைரலாகி உள்ளது. வீடியோவில், சல்தான்ஹா தனது நாய் டைகருக்கு சங்கிலியை தேர்ந்தெடுப்பதை காணலாம்.
சரிதா சல்தான்ஹா தனது கழுத்தில் சங்கிலியை போடும்போது, உற்சாகமான மகிழ்ச்சியுடன் வாலை ஆட்டுவதுடன் வீடியோ முடிகிறது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது.
- நேற்று காலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது.
- மும்பை நகரமே வெள்ளக்காடாக மாறியது.
மும்பை:
மராட்டிய மாநிலத்தில் வழக்கமாக ஜூன் மாதம் 2-வது வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு ஜூன் மாத தொடக்கத்திலேயே பருவமழை தொடங்கியது. ஆனாலும் மும்பை பெருநகர பகுதிகளை சுற்றியுள்ள மாவட்டங்களில் பெரிய அளவில் மழை பெய்யவில்லை. இதன் காரணமாக மும்பை, தானே பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வந்தது.
இந்த நிலையில் மும்பையில் நேற்று இரவு முதல் கனமழை பெய்ய தொடங்கியது. இன்று காலை வரை விடிய விடிய தொடர்ந்து கனமழை பெய்தது.
மேலும் தானே, பால்கர், நவிமும்பை, ராய்காட், மட்டுங்கா, அந்தேரி, குர்லா, பாந்த்ரூப், கிங்ஸ் சர்கிள் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று காலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது.
இன்று அதிகாலை நேரத்தில் இடைவிடாமல் கொட்டி தீர்த்த கனமழையால் மும்பை நகரமே வெள்ளக்காடாக மாறியது. மும்பையில் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. தாழ்வான அனைத்து பகுதிகளிலும் வெள்ளம் தேங்கி காணப்படுகிறது.
வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் அவதிப்பட்டனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.
சாலைகளில் குளம் போல தண்ணீர் தேங்கி கிடப்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். தண்டவாளங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதால் ரெயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
வெளியூர்களுக்கு செல்லும் விரைவு ரெயில்கள் உள்பட 5 ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் மின்சார ரெயில் சேவைகளும் முடங்கியுள்ளன. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.
இன்று காலையில் தண்டவாளத்தில் தேங்கிய வெள்ளம் ஓரளவு வடிந்துள்ளதால் மின்சார ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன. பாண்டுப், சியோன் பகுதிகளில் வெள்ளம் வடிந்துள்ளதால் அங்கு மீண்டும் ரெயில் சேவை மீண்டும் தொடங்கியுள்ளது.
மேலும் பஸ் போக்குவரத்து சேவையும் முடங்கியுள்ளது. பல பஸ்கள் வாற்று வழிகளில் திருப்பிவிடப்பட்டன. சாலைகளில் வெள்ளம் தேங்கி கிடப்பதால் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.
பல சாலைகளில் முழங்கால் அளவுக்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் தத்தளிக்கிறார்கள்.
மும்பை விமான நிலையத்துக்கு செல்லும் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் விமான நிலையங்களுக்கு செல்லும் பயணிகள், குறித்த நேரத்துக்கு செல்ல முடியாமல் கடும் சிரமத்தை சந்தித்தனர்.
கனமழை காரணமாக மும்பையில் அத்தியாவசிய தேவைகள் இருந்தால் மட்டுமே பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டும் மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். தேவையில்லாமல் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
பலத்த மழை காரணமாக மும்பையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சதாரா, சாங்லி, கோலாபூா் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை நீடித்து வருகிறது. தானே மாவட்டத்தில் வெள்ளம் சூழ்ந்த ரிசாா்ட்டில் சிக்கியிருந்த 49 பேரை தேசிய பேரிடா் மீட்புப் படையினா் மீட்டனா்.
தாதர் பகுதியில் சாலைகளில் வெள்ளம் தேங்கியுள்ளதால் வாகன போக்குவரத்து முடங்கியது. மும்பை தானே பகுதியில் நேற்று முன்தினம் முதலே கனமழை பெய்வதால் அங்கு பாதிப்புகள் அதிகமாக உள்ளது.
இடைவிடாத மழையால் மழைநீர் கால்வாய்கள் நிரம்பி வழிவதால் நகரில் ஆங்காங்கே தண்ணீர் சூழ்ந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று காலை முதல் மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் மீண்டும் பலத்த மழை பெய்து வருகிறது. இன்று அதிகாலை 1 மணி முதல் காலை 7 மணி வரை 6 மணி நேரத்தில் மும்பையில் 30 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
இதற்கிடையில் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில், மும்பையில் தென்மேற்கு பருவமழை தீவிரம் பெற்றுள்ளதால் வரும் 10-ந்தேதி வரை மழை தொடரும். குறிப்பாக மராத்வடா பகுதியில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது.
இதேபோல் வட மாநிலங்களிலும் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் சிராவஸ்தி, குஷிநகா், பல்ராம்பூா் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை நீடித்து வருகிறது. இதன் காரணமாக, கண்டக், சிராவஸ்தி, ரப்தி ஆகிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பல கிராமங்களை வெள்ளநீா் சூழ்ந்துள்ள நிலையில், கிராம மக்களை மீட்கும் பணிகளில் தேசிய பேரிடா் மீட்பு படையினா், மாநில பேரிடா் மீட்பு படையினா் ஈடுபட்டுள்ளனா்.
பீகாரில் கனமழை நீடித்து வரும் நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் மின்னல் தாக்கி 10 போ் உயிரிழந்தனா். இதன் மூலம் கடந்த 2 நாள்களில் மின்னல் தாக்கி உயிரிழந்தோா் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 2 வாரங்களில் 40 போ் உயிரிழந்து விட்டனா்.
பீகார் மாநிலத்தில் பாயும் கோசி, மகாநந்தா, பாகமதி, கண்டக், கமலா உள்ளிட்ட ஆறுகளில் அபாய அளவை தாண்டி வெள்ளம் பாய்கிறது.
தாழ்வான பகுதிகளில் வெள்ளநீா் சூழ்ந்துள்ள நிலையில், அங்கு சிக்கியுள்ளவா்களை மீட்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அசாம் மாநிலத்தில் கனமழை நீடித்து வரும் நிலையில், 29 மாவட்டங்களில் 24 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளனா். துப்ரி மாவட்டத்தில் அதிகபட்சமாக சுமாா் 8 லட்சம் போ் பாதிக்கப்பட்டுள்ளனா். மழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 78 ஆக அதிகரித்துள்ளது.
பிரம்மபுத்திரா உள்பட முக்கிய ஆறுகளில் அபாய அளவை தாண்டி வெள்ளம் பாய்கிறது. மழை வெள்ளத்தால் சாலைகள், பாலங்கள் ஆகியவை கடுமையாக சேதமடைந்துள்ளன.
காசிரங்கா தேசிய பூங்காவில் வெள்ளத்தில் சிக்கி காண்டாமிருகங்கள் உள்பட 130 வனவிலங்குகள் உயிரிழந்துவிட்டன.
- மும்பையில் 6 மணிநேரத்தில் 30 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது.
- மும்பையில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பல வழித்தடங்களில் உள்ளூர் ரெயில் சேவைகள் நிறுத்தப்பட்டன.
மும்பையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அடுத்த 2-3 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிராவின் புனே, ரத்னகிரி, ராய்காட், சிந்துதுர்க், அமராவதி மற்றும் நாக்பூர் மாவட்டங்களுக்கும் இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் மும்பையில் நகரின் பல்வேறு இடங்களில் அதிகாலை 1 மணி முதல் காலை 7 மணி வரையிலான ஆறு மணி நேரத்தில் 300 மிமீ மழை பதிவாகியுள்ளது. வடாலா மற்றும் ஜிடிபி நிலையங்களுக்கு இடையே உள்ள ரெயில் தண்டவாளங்கள் நீரில் மூழ்கியுள்ளன. அந்தேரி, குர்லா, பாண்டுப், கிங்ஸ் சர்க்கிள், தாதர் உள்ளிட்ட பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.
கனமழை காரணமாக மும்பையில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பல வழித்தடங்களில் உள்ளூர் ரெயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. கனமழையால் நகரின் பல பகுதிகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.
- அவர் மதுபோதையில் இருந்ததும் தெரியவந்தது.
- பார் ஒன்றில் இருந்து வெளியே வரும் வீடியோ வெளியாகி உள்ளது.
மும்பையின் உரோலி பகுதியில் உள்ள கோலிவாடா பகுதியில் தனது கணவருடன் இரு சக்கர வாகனத்தில் காவேரி நாக்வா என்ற பெண் மீன் வாங்க சென்றுள்ளார். அப்போது பின்னால் வேகமாக வந்த பி.எம்.டபிள்யூ. சொகுசு கார் இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் அந்த பெண் மருத்துவமனை செல்லும் வழியிலே உயிரிழந்தார்.
விபத்தை ஏற்படுத்தியவர் சம்பவ இடத்தில் இருந்து மாயமானார். இந்த காரை மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் பாஜக கூட்டணி சிவசேனா குழுவில் உள்ள ராஜேஷ் ஷா என்ற தலைவரின் மகன் மிஹிர் ஷா ஓட்டி வந்ததும், அவர் மதுபோதையில் இருந்ததும் தெரியவந்தது.

மதுபோதையில் கார் ஓட்டி விபத்தில் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, மிஹிர் ஷா தலைமறைவாகி இருக்கிறார். மிஹிர் ஷாவை அவரது காதலி மறைத்து வைத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், விபத்து நடைபெறும் முன் மிஹிர் ஷா பார் ஒன்றில் இருந்து வெளியே வரும் காட்சிகள் கொண்ட வீடியோ வெளியாகி உள்ளது.
வீடியோவின் படி மிஹிர் ஷா பாரில் இருந்து வெளியே வந்து நண்பர்களுடன் மெர்சிடிஸ் காரில் கிளம்பி செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த சம்பவத்திற்கு பிறகு மிஹிர் ஷா காரை மாற்றிக் கொண்டு பிஎம்டபிள்யூ காரை மதுபோதையில் ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தினார் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
மிஹிர் ஷா தலைமறைவாக இருக்கும் நிலையில், அவரது தந்தையும் அரசியல் தலைவருமான ராஜேஷ் ஷா மற்றும் வழக்கில் தொடர்புடைய பிஎம்டபிள்யூ காரின் ஓட்டுநர் ராஜ்ரிஷி பிடாவத் ஆகியோர் விசாரணைக்கு ஒத்துழைக்காத காரணத்தால் போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கில் மிஹிர் ஷா தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் நிலையில், அவர் பார் ஒன்றில் இருந்து வெளியே வரும் காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
- குடிபோதையில் ஓட்டி வந்த பி.எம்.டபில்யூ சொகுசு கார் இடித்து பெண் ஒருவர் 100 மீட்டருக்கு தரதரவென இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது
- அவர்களை யாரும் எதுவும் செய்யப்போவதில்லை. நாங்கள் தான் கஷ்டத்தை அனுபவிக்க போகிறோம்' என்று பெண்ணின் கணவர் தெரிவித்துள்ளார்.
பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகம் உள்ள நாடுகளில் ஒன்றான இந்தியாவில் வெளிப்படையாகவே இந்த வித்தியாசத்தை அன்றாடம் நம்மால பார்க்கவும் உணரவும் முடிகிறது. அந்த வகையில் சாலைகளில் பணக்காரர்கள் மற்றும் பெரும் புள்ளிகளின் சொகுசு கார்கள் இடித்து சாமானிய மக்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரிக்க தொடங்கியுள்ளன.
தற்போது மும்பையில் முக்கிய புள்ளி ஒருவரின் மகன் குடிபோதையில் ஓட்டி வந்த பி.எம்.டபில்யூ சொகுசு கார் இடித்து பெண் ஒருவர் 100 மீட்டருக்கு தரதரவென இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்ட விசாரணையில் 24 வயதுடைய அந்த இளைஞர் மிஹிர் ஷாம் என்பதும் மகாராஷ்டிர முதலவர் ஏக்நாத் ஷிண்டேவின் பாஜக கூட்டணி சிவசேனா குழுவில் உள்ள ராஜேஷ் ஷா என்ற தலைவரின் மகன் என்பதும் தெரியவந்துள்ளது.
தற்போது மிஹிர் தப்பித்த நிலையில் அவரின் தந்தை ராஜேஷ் ஷாவைவும் குடும்ப டிரைவரையும் போலீசார் கஸ்டடியில் எடுத்துள்ளனர். இந்த சம்பவத்தில் புதிய குற்றவியல் சட்டத்தின்கீழ் மிஹிர் ஷாமை முக்கிய குற்றவாளியாக குறிப்பிட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை மும்பையின் உரோலி பகுதியில் உள்ள கோலிவாடா பகுதியில் தனது தம்பதி சென்ற இருசக்கரவாகனத்தின்மீது மிஹிர் ஷாம் ஓட்டிவந்த பிஎம்டபில்யூ சொகுசு கார் பின்னால் இருந்து மோதியதில் தூக்கிவீசப்பட்டு கார் பானட்டில் சிக்கி பெண் 100 மீட்டருக்கு இழுத்துச்செல்லப்பட்டு உயிரிழந்தார்.
பெண்ணின் கணவர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது விபத்து குறித்து பேசியுள்ளார். அவர் பேசுகையில், 'கார் மோதியதில் நான் ஸ்கூட்டரில் இருந்து இடது புறமாக விழுந்துவிட்டேன். எனது மனைவி காரின் முன்புறம் சிக்கி இழுத்துச்செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார். எங்களுக்கு 2 குழந்தைகள் உள்ளது. நான் இப்போது என்ன செய்வேன். இவர்களெல்லாம் [விபத்து ஏற்படுத்திய இளைஞர் மற்றும் அவரது தந்தை] பெரிய ஆட்கள். அவர்களை யாரும் எதுவும் செய்யப்போவதில்லை. நாங்கள் தான் கஷ்டத்தை அனுபவிக்க போகிறோம்' என்று தெரிவித்துள்ளார்.
இந்த விபத்து துரதிஷ்டவசமானது, சட்டம் தன் கடமையைச் செய்யும். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். இதற்கிடையில் தப்பியோடிய மிஹிரை தேடும் பணியில் போலீஸ் இறங்கியுள்ளது.







