என் மலர்
நீங்கள் தேடியது "துப்பட்டா"
- பைக்கின் முன்புறம் பொருத்தப்பட்ட செல்போனில் இந்த விபத்து பதிவாகியுள்ளது.
- பாதிக்கப்பட்ட பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.
மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் பைக்கில் பயணிக்கும்போது அவருடைய துப்பட்டா சக்கரத்தில் சிக்கியுள்ளது. உடனே அப்பெண் பைக்கை நிறுத்தியுள்ளார்.
பின்னர் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உதவி செய்து அவரை காப்பாற்றியுள்ளனர். இந்த விபத்தால் அப்பெண்ணின் கழுத்தில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது.
பைக்கின் முன்புறம் பொருத்தப்பட்ட செல்போனில் இந்த விபத்து பதிவாகியுள்ளது. அதனை அப்பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், 'பெண்கள் பைக் ஓட்டும்போது துப்பட்டா அணிய வேண்டாம்' என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
- சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டுக் கருத்தரங்கம் இன்று நடைபெற்றது.
- பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்தார்.
சென்னை எழும்பூரில் சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டுக் கருத்தரங்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவிகளின் கருப்பு துப்பட்டாவை போலீசார் அகற்றினர்.
இதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்தார்.
இந்நிலையில், முதலமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் மாணவிகளின் கருப்பு துப்பட்டா அகற்றப்பட்ட விவகாரத்திற்கு காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
அதில், " பணியில் இருந்த காவலர்கள் தேவைக்கு அதிகமான எச்சரிக்கையுடன் செயல்பட்டதே காரணம்.
இனியும் இதுபோன்று நிகழாமல் இருக்க சென்னை காவல் பிரிவிற்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
விழா அரங்கிற்குள், அனுமதிக்கப்பட்ட நபர்களை தணிக்கை செய் போலீசார் கருப்பு துப்பட்டா அணிந்து வந்தோரிடம், துப்பட்டாவை வாங்கி வைத்தனர்" என தெரிவித்துள்ளது.






