என் மலர்
கேரளா
- ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் பந்தளம் அரண்மனையில் இருந்து நேற்று புறப்பட்டது.
- இன்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசன் காலத்தில் மாலையணிந்து விரதமிருக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை கடந்த ஆண்டு நவம்பர் 16-ந்தேதி தொடங்கி டிசம்பர் 26-ந்தேதி வரை நடைபெற்றது.
மகர விளக்கு பூஜை கடந்தமாதம் (டிசம்பர்) 31-ந்தேதி தொடங்கியது. பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி அவதிக்குள்ளாவதை தடுக்கும் விதமாக இந்த ஆண்டு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதன்படி ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி முன்பதிவு அடிப்படையில் அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது.
இந்தநிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரஜோதி நாளை(14-ந்தேதி) நடைபெறுகிறது. இதையொட்டி ஐயப்பனுக்கு திருவாபரணங்கள் அணிவிக்கப்படும். ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் பந்தளம் அரண்மனையில் இருந்து நேற்று புறப்பட்டது.
அது பல இடங்களை கடந்து பெருவழிப்பாதை வழியாக வந்து பம்பை கணபதி கோவிலுக்கு நாளை பிற்பகல் வந்து சேரும். மாலையில் அங்கிருந்து புறப்படும் திருவாபரண ஊர்வலம், 6 மணிக்கு மேல் சன்னிதானத்தை வந்தடைகிறது. பின்பு ஐயப்பனுக்கு திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடத்தப்படும்.

ஐயப்ப சுவாமிக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட காட்சி.
அதன் தொடர்ச்சியாக மாலை 6.30 மணிக்கு மேல் மகரஜோதி தரிசனம் நடைபெறுகிறது. மகரஜோதியை காண கடந்த சில நாட்களாகவே பக்தர்கள் சபரிமலைக்கு வரத் தொடங்கினர். அவர்கள் மகரஜோதி தெரியக்கூடிய பெரியானை வட்டம், சன்னிதானம் உள்ளிட்ட இடங்களில் தங்கியுள்ளனர்.
அது மட்டுமின்றி இன்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர். இதனால் பம்பை, சன்னிதானம் மட்டுமின்றி, மரக்கூட்டம், சரங்குத்தி, சன்னிதான வலிய நடைப்பந்தல் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. திருவாபரணங்கள் ஊர்வலம் பம்பையில் இருந்து பிற்பகல் செல்லும் என்பதால் நாளை காலை 10 மணிக்கு மேல் பம்பையில் இருந்து சன்னிதானத்துக்கு பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள்.
திருவாபரண ஊர்வலம் சரங்குத்தியை அடைந்த பிறகே பம்பையில் இருந்து சன்னிதானத்துக்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்றும், நாளையும் மெய்நிகர் வரிசை மற்றும் நிலக்கல்லில் ஸ்பாட் புக்கிங் செய்த பக்தர்கள் மட்டுமே பம்பைக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
அது மட்டுமின்றி நாளை மாலை பக்தர்கள் மகரஜோதியை தரிசனம் செய்ய வேண்டிய இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நிலக்கல்லில் அட்டத்தோடு, அட்டத்தோடு மேற்கு காலனி, இலவுங்கல், நெல்லிமலை, அய்யன்மலை, பம்பையில் மலை உச்சி, மலைஉச்சியின் நடுப்பகுதி, பெரியானை வட்டம், சன்னிதானம் பாண்டிதாவளம், தரிசன காம்ப்ளக்ஸ், அன்னதான மண்டப முன்பகுதி, திருமுற்றத்தின் தெற்கு பகுதி, ஆழி பகுதி, கொப்பரைகலம், ஜோதி நகர், வனத்துறை அலவலகம் முன்பு, குடிநீர் அலுவலகம் ஆகிய இடங்களில் இருந்து மகரஜோதியை தரிசிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலை, பம்பை, நிலக்கல் உள்ளிட்ட இடங்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மகரவிளக்கு பூஜை முடிந்து வருகிற 20-ந்தேதி காலை ஐயப்பன் கோவில் நடை சாத்தப்படுகிறது.
- நாளை மறுநாள் (14-ந்தேதி) மகரவிளக்கு பூஜை நடைபெறுகிறது.
- திருவாபரணத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர்.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜை கடந்த மாதம் 31-ந்தேதி தொடங்கியது. அதிலி ருந்து தினமும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு வந்தனர்.
மகரவிளக்கு பூஜை தொடங்கியதில் இருந்தே பக்தர்களின் வருகை அதிக மாக காணப்பட்டது. இந்த நிலையில் நாளை மறுநாள் (14-ந்தேதி) மகரவிளக்கு பூஜை நடைபெறுகிறது. அதற்கான அனைத்து முன்னேற்பாடு நடவடிக்கைகளையும் தேவசம்போர்டு செய்து வருகிறது.
மகரவிளக்கு பூஜையன்று பக்தர்களின் வருகையை கட்டுப்படுத்தும் வகையில் பம்பை, சபரிமலையில் கூடுதல் போலீசார் பணி யமர்த்தப்பட்டு உள்ளனர். அவர்கள் இன்று முதல் சபரிமலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
மகரவிளக்கு பூஜை தினத்தில் மாலையில் ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. அதற்கு முன்னதாக ஐயப்பனுக்கு திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும். ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் ஊர்வலம் பந்தளம் அரண்மனையில் இருந்து இன்று மதியம் புறப்படுகிறது.
வரும் இடங்களில் எல்லாம் திருவாபரணத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்வார்கள். திருவாபரண ஊர்வலம் நாளை மறுநாள் (14-ந்தேதி) பம்பைக்கு வந்து சேரும். அன்று மாலையில் பம்பையில் இருந்து சன்னி தானத்துக்கு கொண்டு வரப்படுகிறது.
அதன்பிறகு திருவாபரணங்கள் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும். அதன் தொடர்ச்சியாக மகரஜோதி தரிசனம் நடைபெறுகிறது. மகரவிளக்கு பூஜை முடிந்து பந்தள அரண்மனை பிரதிநிதி தரிசனம் செய்ததும் வருகிற 20-ந்தேதி காலை ஐயப்பன் கோவில் நடை சாத்தப்படுகிறது.
- மாணவியை குழந்தைகள் நல காப்பக அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
- 40 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தை சேர்ந்த 18 வயது மாணவி அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இவர் ஒரு தலித் தடகள வீராங்கனையாவார். மாணவி கடந்த சில நாட்களாக மிகவும் சோர்வாக காணப்பட்டார். மேலும் விளையாட்டிலும், படிப்பிலும் அவரது ஆர்வம் குறைந்தது.
இதை தொடர்ந்து பள்ளி ஆசிரியர்கள் அவரை தனியாக அழைத்து கவுன்சிலிங் நடத்தினர். அப்போது, தனக்கு கடந்த 5 ஆண்டுகளாக நேர்ந்த பாலியல் கொடுமை குறித்து கூறி கதறி அழுதார். இதனை கேட்டு ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அந்த மாணவியை குழந்தைகள் நல காப்பக அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
விசாரணை அதிகாரிகளிடம் பாதிக்கப்பட்ட மாணவி கூறிய திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஆரம்பத்தில் ஆண் நண்பர் என்னிடம் தொடர்பில் இருந்தார். பின்னர் ஆபாச காட்சிகளை ரகசியமாக படம்பிடித்து மிரட்டி தொடர்ச்சியாக பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டார்.
இதை அறிந்த அவரது நண்பர்களும் என்னை மிரட்டி என்னை பணிய வைத்தனர். இந்த விவரம் உடற்கல்வி ஆசிரியருக்கு தெரியவர அவரும் என்னிடம் தகாத முறையில் நடந்தார்.
மேலும் 2, 3 பேர் கூட்டு சேர்ந்தும் பலாத்காரம் செய்துள்ளனர். அதேபோல் விளையாட்டு தொடர்பாக, வெளியிடங்களுக்கு செல்லும் போதும், அங்குள்ள முகாம்களில் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டேன் என தனக்கு நேர்ந்த கொடுமையை மாணவி தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து மாணவியிடம் முழுமையாக விசாரணை நடத்திய அதிகாரிகள் இந்த விவகாரம் குறித்து இலவும் திட்டா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகார் குறித்து விசாரித்த போலீசார் முதல் கட்டமாக 40 பேர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களாக கருதப்படும் பாதிக்கப்பட்ட மாணவி தந்தையின் நண்பர்கள் உள்பட 13 பேரை உடனடியாக கைது செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மேற்பார்வையில் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த சம்பவம் குறித்து விசாரணை அதிகாரி ஒருவர் கூறுகையில், முதலில் மாணவி 13 வயதாக இருந்த போது ஆண் நண்பர் பலாத்காரம் செய்துள்ளார். பிறகு நண்பர்களுக்கும் விருந்தாக்கியுள்ளார். இவ்வாறு தொடர்ந்து அந்த மாணவியின் வாழ்க்கையை ஒவ்வொருவராக சீரழித்துள்ளனர்.
ஆண் நண்பர், அவருடைய நண்பர்கள், மாணவர்கள், தந்தையின் நண்பர்கள், உடற்கல்வி ஆசிரியர் என பட்டியல் நீள்கிறது.
தற்போது கைதானவர்களில் 18 வயதை எட்டாத 2 மாணவர்களும் உள்ளனர். வீட்டிற்கு அழைத்து சென்றும், சுற்றுலாவுக்கு அழைத்து சென்றும், காரிலும், விடுதிகளிலும் வைத்து 60-க்கும் மேற்பட்டோர் மாணவியை பலாத்காரம் செய்துள்ளனர்.
பத்தனம் திட்டா மாவட்டத்தில் மட்டும் 6 போலீஸ் நிலையங்களிலும் பாலியல் பலாத்காரம் தொடர்பான வழக்குகள் பதியப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில், மாணவியின் தந்தைக்கு நெருக்கமான நண்பர்கள் 32 பேர் தொடர்பில் இருந்தது தெரிய வந்துள்ளது.
இதுவரை மாணவியின் வாழ்க்கையை சீரழித்த 40 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்.
இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட மாணவி ஆதி திராவிடர் என்பதால் எஸ்.சி எஸ்.டி பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
- இது தொடர்பாக 4 எஃப்.ஐ.ஆர் பதிவு செய்த போலீசார், 6 பேரை கைது செய்துள்ளனர்.
- 13 வயதில் இருந்து பலமுறை சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.
கேரளாவின் பத்தனம்திட்டாவில் கடந்த 5 ஆண்டுகளாக குறைந்தது 60 பேரால் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இது தொடர்பாக 4 எஃப்.ஐ.ஆர் பதிவு செய்த போலீசார், 6 பேரை கைது செய்துள்ளனர். உடற்கல்வி பயிற்சியாளர், பள்ளி வகுப்புத் தோழர்கள் என 60க்கும் மேற்பட்டோர் சிறுமியை வன்கொடுமை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 2 மாதங்களுக்கு முன்புதான் 18 வயதாகி உள்ளதாக கூறப்பட்டது. 13 வயதில் இருந்து பலமுறை சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.
சமீபத்தில் பள்ளியில் நடந்த குழந்தைகள் நலக் குழுவின் ஆலோசனை நிகழ்வின்போது சிறுமிக்கு நேர்ந்த கொடுமைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவியின் குணாதிசயங்களில் மாற்றம் இருப்பதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
பத்தனம்திட்டா குழந்தைகள் நலக் குழுவின் தலைவர் ராஜீவ் கூறுகையில், பள்ளியில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை குறித்து கூறினார்.
இதையடுத்து, குழந்தைகள் நலக் குழு சார்பில் போலீசில் புகார் வழங்கப்பட்டது. விளையாட்டு வீராங்கனையான சிறுமி, பத்தனம்திட்டாவில் விளையாட்டு முகாம்கள் உட்பட பல இடங்களில் பயிற்சியாளர்கள், வகுப்பு தோழர்கள் மற்றும் உள்ளூர்வாசிகளால் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.
தன்னை துஷ்பிரயோகம் செய்த சுமார் 40 பேரின் எண்களை தனது தந்தையின் மொபைல் போனில் சிறுமி பதிந்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே சிறுமி உளவியல் நிபுணரிடம் அழைத்துச்செல்லப்பட்டார். மற்ற குற்றாவளிகளை கண்டுபிடிக்கும் பணியில் போலீஸ் தீவிரமாகியுள்ளது
- ஜனவரி 19-ந் தேதி வரை பக்தர்கள் அரச கோல ஐயப்பனை தரிசிக்க அனுமதி.
- ஜனவரி 20-ந் தேதி கோவில் நடை அடைக்கப்படும்.
சபரிமலையில் இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காலம் கடந்த 2024-ம் ஆண்டு நவம்பர் 16-ந்தேதி தொடங்கியது. இதனையடுத்து, மண்டல பூஜை காலத்தின் முக்கிய நிகழ்வாக, ஐயப்பனுக்கு கடந்த டிசம்பர் 25-ந் தேதி மகா தீபாராதனை நடைபெற்றது.
டிசம்பர் 26-ந் தேதி மண்டல பூஜை நடந்தது. இரவு 11 மணிக்கு ஹரிவராசனம் பாடல் பாடி நடை அடைக்கப்பட்டது.
அதன்பிறகு மூன்று நாள் இடைவெளிக்குப் பின் டிசம்பர் 30-ந் தேதி மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மகரஜோதி தரிசனத்திற்காக சபரிமலைக்கு வந்தவண்ணம் உள்ளனர்.
2025-ம் ஆண்டு ஜனவரி 14-ந் தேதி மாலை, ஐயப்பனுக்கு மகரவிளக்கு பூஜை நடக்கிறது. மகரஜோதி தரிசனத்திற்குப்பின், ஜனவரி 19-ந் தேதி வரை பக்தர்கள் அரச கோல ஐயப்பனை தரிசிக்க அனுமதிக்கப்படுவர்.
ஜனவரி 20-ந் தேதி பந்தள மகாராஜா குடும்பத்தினருக்கு மட்டுமான சிறப்பு பூஜையும், தரிசனமும் நடத்தப்பட்டு, அன்றிரவு கோயில் நடை அடைக்கப்படும்.
பின்னர் கோயிலின் சாவி, பந்தள மகாராஜா குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும். அதோடு, மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்கால உற்சவம் நிறைவு பெறும்.
- 14-ந்தேதி 40 ஆயிரமாகவும், 15-ந்தேதி உடனடி முன்பதிவு எண்ணிக்கை 5 ஆயிரமாகவும் குறைக்கப்பட்டு உள்ளது.
- மண்டல சீசனில் மட்டும் 41 நாட்களில் 32.49 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்திருந்தனர்.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு சீசனையொட்டி கடந்த நவம்பர் 16-ந்தேதி (கார்த்திகை 1) முதல் சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. டிசம்பர் 26-ந்தேதி மண்டல சீசன் நிறைவு பெற்றது. மண்டல சீசனில் மட்டும் 41 நாட்களில் 32.49 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்திருந்தனர்.
இந்த நிலையில் மகரவிளக்கு சீசனையொட்டி சபரிமலையில் தினசரி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். கடந்த 11 நாட்களில் 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
இதற்கிடையில், மகரவிளக்கு பூஜைக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், கூட்ட நெரிசலை தவிர்க்க, ஜனவரி 13-ந்தேதி வரை ஆன்-லைன் முன்பதிவு எண்ணிக்கை 50 ஆயிரமாகவும், 14-ந்தேதி 40 ஆயிரமாகவும், 15-ந்தேதி உடனடி முன்பதிவு எண்ணிக்கை 5 ஆயிரமாகவும் குறைக்கப்பட்டு உள்ளது.
மேலும், பம்பையில் கூட்ட நெரிசலை தவிர்க்க பிப்ரவரி 9-ந்தேதி முதல் உடனடி முன்பதிவு கவுண்டர்கள் நிலக்கல்லுக்கு மாற்றப்பட்டுள்ளன. மகரவிளக்கு பூஜைக்கு மறுநாளான 15ம் தேதி நெரிசலை தவிர்க்க, அன்று மாலை 3 மணியில் இருந்து, 5 மணிக்குள் தரிசிக்க ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்கள், மாலை 6 மணிக்கு பிறகு வரவேண்டும் என திருவிதாங்கூர் தேவசம் போர்டு கேட்டுக் கொண்டுள்ளது.
- அரசுத் துறைகளில் ஊழல் மற்றும் லஞ்சம் என்பது அதிகளவில் நடக்கிறது.
- சட்டத்திற்கு புறம்பாக பணம் சம்பாதிக்கிறார்கள்.
திருவனந்தபுரம்:
மக்கள் தங்களுக்கு தேவையான பல திட்டங்களை அரசுத்துறைகளின் மூலமாகவே பெறவேண்டி இருக்கிறது. இதனால் அரசுத் துறைகளில் ஊழல் மற்றும் லஞ்சம் என்பது அதிகளவில் நடக்கிறது. அதனைத்தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தபோதிலும் லஞ்சம் பெறுவது நடந்தபடியே இருக்கிறது.
அரசுத்துறைகளில் பணிபுரியக்கூடியவர்களில் இதுபோன்று லஞ்சம் வாங்கு பவர்கள் தங்களின் பதவி மற்றும் பணிக்கு தகுந்தாற்போல் சட்டத்திற்கு புறம்பாக பணம் சம்பாதிக்கிறார்கள். இந்தநிலையில் கேரள மாநிலத்தில் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஊழலில் ஈடுபடுவதையும், லஞ்சம் வாங்குவதையும் தடுக்க லஞ்ச ஒழிப்பு துறை புதிய திட்டத்தை வகுத்துள்ளது.
தேசிய பாதுகாப்பு தொடர்பான வழக்குகளில், அதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை சிக்க வைப்பதற்காக, அவர்களது செல்போன் உரையாடல்களை காவல்துறை, உளவுத்துறை மற்றும் குற்றப்பிரிவினர் ஒட்டு கேட்கின்றனர்.
அந்த கோரிக்கையை தான் கேரள லஞ்ச ஒழிப்புத்துறை மாநில அரசிடம் கேட்டுள்ளது. கேரள மாநில லஞ்ச ஒழிப்பு துறையின் தலைமை டி.ஜி.பி. யோகேஷ் குப்தா தான் அந்த கோரிக்கையை மாநில அரசிடம் வைத்துள்ளார்.
அதாவது கேரள மாநி லத்தில் உள்ள அனைத்து அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் செல்போன்களை லஞ்ச ஒழிப்பு துறை "ஹேக்" செய்ய அனுமதிக்க வேண்டும் என்பது தான் அவரது கோரிக்கையாக இருக்கிறது.
இதன் மூலமாக ஊழலில் ஈடுபடும் மற்றும் லஞ்சம் வாங்கக்கூடிய அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை வழக்கில் சிக்க வைக்க முடியும் என்று லஞ்ச ஒழிப்புத் துறை கேரள மாநில அரசிடம் தெரிவித்திருக்கிறது.
லஞ்ச ஒழிப்பு துறை டி.ஜி.பி.யின் இந்த கோரிக்கையை ஏற்று அரசு அனுமதி வழங்கினால், அரசின் முன் அனுமதியின்றி யாருடைய போனையும் லஞ்ச ஒழிப்பு துறையினர் 7 நாட்களுக்கு "ஹேக்" செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
- 14-ந்தேதி ஐயப்ப சுவாமிக்கு திருவாபரணங்கள் அணிவிக்கப்படும்.
- திருவாபரணங்கள் நாளை மறுநாள் பந்தளம் அரண்மனையில் இருந்து புறப்படுகிறது.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜை கடந்தமாதம் 31-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. அன்றைய தினத்தில் இருந்து தினமும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்தவண்ணம் உள்ளனர்.
மகரவிளக்கு பூஜைக்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே இருப்பதால் பக்தர்களின் வருகை கடந்த சில நாட்களாகவே அதிகமாக உள்ளது. இதனால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வெகுநேரம் காத்திருக்க வேண்டிய நிலை நிவவுகிறது. மகரவிளக்கு பூஜைக்கான முன்னேற்பாடு நடவடிக்கைகளை தேவ சம்போர்டு மேற்கொண்டு வருகிறது.
மகரவிளக்கு பூஜை நடக்கும் 14-ந்தேதி ஐயப்ப சுவாமிக்கு திருவாபரணங்கள் அணிவிக்கப்படும். அந்த திருவாபரணங்கள் நாளை மறுநாள்(12-ந்தேதி) பந்தளம் அரண்மனையில் இருந்து புறப்படுகிறது. இதனையொட்டி பக்தர் களுக்கு பல்வேறு கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அய்யப்பனுக்கு அணிவிக் கப்படும் திருவாபரணங்கள் பாரம்பரிய பாதையான பெருவழிப்பாதை வழியாகத் தான் சபரிமலைக்கு கொண்டு வரப்படும். இதனால் நாளை (11-ந்தேதி) முதல் வருகிற 14-ந்தேதி வரை பக்தர்கள் பெருவழிப் பாதையில் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை வரையே பக்தர்கள் பெருவழிப்பாதை வழியாக செல்ல அனுமதிக் கப்படுவார்கள். அதன்பிறகு 14ந்தேதிக்கு பிறகே பெரு வழிப்பாதை வழியாக சபரிமலைக்கு பக்தர்கள் செல்ல முடியும். நாளை முதல் 14-ந்தேதி வரை பக்தர்கள் பம்பையில் இருந்து சன்னி தானத்துக்கு செல்லலாம்.
பம்பையில் இருந்து சன்னிதானத்துக்கு திருவாபரணம் கொண்டு செல்லப்படும் நாளான 14-ந்தேதி பம்பையில் இருந்து சன்னி தானத்துக்கு செல்லவும் பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படும்.
மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு பம்பையில் பக்தர்களின் வாகனங்களை நிறுத்தவும் தடை விதிக்கப் படுகிறது. நாளைமறுநாள் (12-ந்தேதி) காலை 8 மணி முதல் வருகிற 15-ந்தேதி மதியம் 2 மணி வரை பம்பை மலை உச்சியில் பக்தர்களின் வாகனங்களை நிறுத்த அனுமதியில்லை.
மகரவிளக்கு பூஜைக்காக அதிகளவில் பக்தர்கள் வந்தபடி இருப்பதால் ஸ்பாட் புக்கிங் நேற்று முதல் 5 ஆயிரமாக குறைக்கப்பட்டு இருக்கிறது. மகரவிளக்கு நாளான 14-ந்தேதி ஸ்பாட் புக்கிங் 1,000-ஆக குறைக்கப்படுகிறது. அது மட்டுமின்றி ஸ்பாட் புக்கிங் கவுண்டர்கள் பம்பையில் இருந்து நிலக்கல்லுக்கு மாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- கேரள தொழிலதிபர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை ஹனி ரோஸ் குற்றம்சாட்டினார்.
- இந்தக் குற்றச்சாட்டு மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தை சேர்ந்தவர் பிரபல நடிகை ஹனிரோஸ். இவர் மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு மொழிப் படங்களிலும் நடித்துள்ளார்.
தமிழில் 'முதல் கனவே', 'சிங்கம்புலி', 'காந்தர்வன்', 'பட்டாம்பூச்சி', 'மல்லுக்கட்டு' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இதற்கிடையே, கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை ஹனி ரோஸ் குற்றம் சாட்டினார்.
இதுதொடர்பாக ஹனி ரோஸ் தனது சமூக வலைதளத்தில் இந்த குற்றச்சாட்டை வெளியிட்டார். அதில், கேரள தொழிலதிபர் தான் செல்லும் இடங்களுக்கெல்லாம் பின்தொடர்ந்து வந்து பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், தனது உடல் அமைப்பை குறிப்பிட்டு ஆபாசமான வார்த்தைகளைப் பயன்படுத்தி சமூக வலைதளங்களில் பதிவிடுகிறார். தனக்கு தொல்லை கொடுக்கும் தொழிலதிபர் உள்ளிட்டோர் மீது சட்டப்படி நடிவடிக்கை எடுப்பேன் என பதிட்டிருந்தார்.
சமூக வலைதளங்களில் நடிகை ஹனிரோஸ் தெரிவித்த இந்தக் குற்றச்சாட்டு மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மலையாள நடிகை ஹனி ரோஸ் கொடுத்த பாலியல் துன்புறுத்தல் புகாரின் பேரில் கேரளாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் பாபி செம்மனூரை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் கைதுசெய்தனர்.
பாபி செம்மனூர் நகை வியாபாரம் செய்து வரும் செம்மனூர் குழுமத்தின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- அந்த ஆண் ஊழியர் தொடர்ந்து ஆட்சேபனைக்குரிய மெசேஜ்களை அனுப்பி வந்துள்ளார்
- மனு மீதான விசாரணையில் கேரள உயர்நீதிமன்ற நீதிபதி ஏ பத்ருதீன் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.
பெண்ணின் "உடல் அமைப்பு" குறித்து கமெண்ட் அடிப்பது தண்டனைக்குரிய பாலியல் துன்புறுத்தல் குற்றம் என்று கேரள உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தன் மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்கை ரத்து செய்யக் கோரி கேரள மாநில மின்சார வாரிய (கேஎஸ்இபி) ஊழியர் இருவர் அளித்த மனு மீதான விசாரணையில் கேரள உயர்நீதிமன்ற நீதிபதி ஏ பத்ருதீன் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.
குற்றம்சாட்டப்பட்ட அந்த ஊழியர் மீது சக பெண் ஊழியர் புகார் அளித்திருக்கிறார். அந்த ஊழியர் தனக்கு எதிராக மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக அந்தப் பெண் குற்றம் சாட்டினார்.
உங்கள் உடல் அழகாக உள்ளது போன்ற ஆட்சேபனைக்குரிய செய்திகள் மற்றும் வாய்ஸ் மெசேஜ்களை அந்த ஊழியர் அனுப்பியுள்ளார். இதுகுறித்து போலீசில் புகார் அளித்த பிறகும், அந்த ஆண் ஊழியர் தொடர்ந்து ஆட்சேபனைக்குரிய மெசேஜ்களை அனுப்பி வந்துள்ளார்
குற்றம் சாட்டப்பட்டவர் மீது IPC பிரிவுகள் 354A (பாலியல் துன்புறுத்தல்) மற்றும் 509 (ஒரு பெண்ணை அவமதித்தல்) மற்றும் பிரிவு 120(o) (விரும்பத்தகாத அழைப்பு, கடிதம், கடிதம், செய்தி மூலம் தொடர்பு கொள்ளுதல்) உள்ளிட்ட கேரள போலீஸ் சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் ஒரு நபருக்கு அழகான உடல் அமைப்பு உள்ளது என்ற குறிப்பிடுவது பாலியல் துன்புறுத்தல் என்ற வரம்பிற்குள் வராது என்று குற்றம்சாட்டப்பட்டவர் உயர்நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார்.
ஆனால் அழைப்புகள் மற்றும் மெசேஜ்கள் தன்னைத் துன்புறுத்தும் வகையிலும் மற்றும் பாலியல் ரீதியாக தூண்டும் நோக்கத்துடனும் இருந்ததாக அரசுத் தரப்பும் பெண்ணும் வாதிட்டனர்.
அரசு தரப்பு வாதங்களை ஏற்றுக்கொண்ட கேரள உயர்நீதிமன்ற நீதிபதி, ஐபிசியின் பிரிவுகள் 354A[ பாலியல் துன்புறுத்தல்] கீழ் உடல் அமைப்பு குறித்து ஆட்சேபனைக்குரிய வகையில் கூறுவது அடங்கும் என்று கூறி வழக்கை ரத்து செய்யகோரிய குற்றம்சாட்டப்பட்டவரின் மனுவை தள்ளுபடி செய்தார்.
- எருவேலி அரண்மனை சதுக்கத்திற்கு அருகில் 12 ஏக்கர் நிலப்பரப்பில் ஆளில்லாத வீடு அமைந்துள்ளது.
- முதுகெலும்பு உள்ளிட்ட எலும்புகள் அப்படியே காணப்பட்டன.
கேரளாவில் 20 ஆண்டுகளாக பூட்டியிருந்த வீட்டில் குளிர்சாதனப் பெட்டிக்குள் கவரில் சுற்றப்பட்ட நிலையில் மண்டை ஓடு உள்ளிட்ட மனித எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது. கொலை நடந்திருக்கலாம் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொச்சியின் சோட்டானிக்கரையில் எருவேலி அரண்மனை சதுக்கத்திற்கு அருகில் 12 ஏக்கர் நிலப்பரப்பில் ஆளில்லாத வீடு அமைந்துள்ளது. கொச்சியில் வசிக்கும் மருத்துவரான மங்களசேரி பிலிப் ஜானுக்குச் சொந்தமான சொத்து இது.

பூட்டிய வீட்டில் சமூக விரோதிகளால் இடையூறு ஏற்படுவதாக அப்பகுதியினர் புகார் அளித்ததையடுத்து, பஞ்சாயத்து உறுப்பினர் கோரிக்கையின் பேரில் போலீசார் சோதனை நடத்தினர்.
சோதனையின் போது, குளிர்சாதன பெட்டியில் எலும்புக்கூடு மற்றும் மண்டை ஓடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. எச்சங்களின் வயது இன்னும் காவல்துறையால் தீர்மானிக்கப்படவில்லை.
முதுகெலும்பு உள்ளிட்ட எலும்புகள் அப்படியே காணப்பட்டன. அந்த மண்டை ஓடு மனிதனுடையது என்பது பொலிஸாரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மண்டை ஓடு பல ஆண்டுகள் பழமையானது என்று நம்பப்படுகிறது.

சம்பவ இடத்தில் சோட்டாணிக்கரை எஸ்.எச்.ஓ., தலைமையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மண்டை ஓட்டை கொண்டு வந்து வீட்டுக்குள் குளிர்சாதன பெட்டியில் வைத்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த வளாகத்திற்கு போலீசார் சீல் வைத்துள்ளனர். தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்த உள்ளனர். மேலும் வீட்டின் உரிமையாளரான மருத்துவரையும் போலீசார் தொடர்பு கொண்டுள்ளனர்.
- விழாவில் பங்கேற்றிருந்த பக்தர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள்.
- பக்தர்கள் அதிகளவில் திரண்டிருந்ததால் விழா நடந்த மைதானத்தை விட்டு உடனடியாக வெளியேற முடியாமல் ஒருவர் மீது ஒருவர் மோதி கீழே விழுந்தனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் கோவில் திருவிழாக்கள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் யானைகள் பயன்படுத்தப்படுகின்றன. அவ்வாறு யானைகளை பயன்படுத்தும் போது, அவை துன்புறுத்தலுக்கு உள்ளாவதாக குற்றச்சாட்டுகள் அடிப்படையில், கோவில் திருவிழாக்களில் யானைகளை பயன்படுத்துவதில் பல்வேறு கட்டுப்பாடுகளை கேரள ஐகோர்ட்டு சமீபத்தில் பிறப்பித்தது.
இந்தநிலையில் கோவில் திருவிழாவில் பயன்படுத்தப்பட்ட யானை மிரண்டு பக்தர்களை தூக்கி வீசிய சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. கேரள மாநிலம் மலப்புரம் புதியங்கடி பகுதியில் உள்ள ஒரு கோவிலில் நடந்த விழாவில் 5-க்கும் மேற்பட்ட யானைகள் பயன்படுத்தப்பட்டன.
அவற்றில் ஸ்ரீகுட்டன் என்ற யானையும் அடங்கும். அலங்கரிக்கப்பட்டிருந்த யானைகள் பக்தர்கள் கூட்டத்தில் உலா வந்தன. அப்போது யானை ஸ்ரீகுட்டன் நள்ளிரவு 12.30 மணியளவில் திடீரென மிரண்டது. அப்போது அந்த யானை சில பக்தர்களை துப்பிக்கையால் பிடித்து தூக்கி சுழற்றி எறிந்தது.
இதனால் கோவில் விழாவில் பரபரப்பு ஏற்பட்டது. விழாவில் பங்கேற்றிருந்த பக்தர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். பக்தர்கள் அதிகளவில் திரண்டிருந்ததால் விழா நடந்த மைதானத்தை விட்டு உடனடியாக வெளியேற முடியாமல் ஒருவர் மீது ஒருவர் மோதி கீழே விழுந்தனர்.
மேலும் யானை மீது அமர்ந்திருந்தவர்களும் கீழே விழுந்தார்கள். இந்த சம்பவத்தில் 17 பக்தர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் கோட்டக்கல் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். யானை தூக்கி வீசிய பக்தர்களில் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
கோவில் விழாவில் பக்தர்களை தூக்கி வீசிய யானை ஆக்ரோஷமாக ஒரே இடத்தில் நின்றபடி இருந்தது. நள்ளிரவு 12.30 மணி முதல் ஆக்ரோஷமாக இருந்த யானையால் பக்தர்கள் பீதியடைந்தனர். பின்பு இன்று அதிகாலை 2.30 மணிக்கு அந்த யானையை பாகன் அமைதிப்படுத்தினார்.
அதன்பிறகே அங்கு இயல்புநிலை திரும்பியது. கோவில் விழாவில் பக்தர்களை யானை தூக்கி வீசிய சம்பவத்தால் மலப்புரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.






