என் மலர்tooltip icon

    கேரளா

    • ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதால் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு டிரம்ப் 50 சதவீதம் வரி விதித்துள்ளார்.
    • இது உலகளாவிய வர்த்தகக் கொள்கைகளை அப்பட்டமாக மீறும் நடவடிக்கையாகும்.

    ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதால் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு டிரம்ப் 50 சதவீதம் வரி விதித்துள்ளார்.

    இந்நிலையில் இது குறித்து கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில், இந்தியப் பொருட்களுக்கு 50% வரி விதிப்பதன் மூலம் அமெரிக்கா மீண்டும் ஒருமுறை அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது.

    இது உலகளாவிய வர்த்தகக் கொள்கைகளை அப்பட்டமாக மீறும் நடவடிக்கையாகும்.

    இந்த நடவடிக்கை நமது பொருளாதாரத்தை வலுப்படுத்தும் இந்திய தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை ஆபத்தில் ஆழ்த்துகிறது.

    இது கேரளத்தின் ஏற்றுமதியாளர்களை, குறிப்பாக கடல் உணவு, மசாலாப் பொருட்கள், தேயிலை மற்றும் தேங்காய் நார் ஏற்றுமதியாளர்களை கடுமையாகப் பாதிக்கும்.

    இதனால் மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான வாழ்வாதாரங்கள் ஆபத்தில் இருக்கிறது. இது பன்முகத்தன்மை என்ற கருத்து மீதான தாக்குதலும் கூட.

    நாம் வலிமையுடன் பதிலளிக்க வேண்டும், நமது இறையாண்மையை நிலைநிறுத்த வேண்டும், அழுத்தத்திற்கு அடிபணிய மறுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.   

    • தனது குழந்தைகளுடன் அந்த இளம்பெண், அனீசுடன் விடுதி அறையில் தங்கினார்.
    • இந்த விஷயம் வெளியே தெரிந்தால் அவமானம் என்று நினைத்த அந்த இளம்பெண், அதனை வெளியே கூறாமல் அப்படியே மூடி மறைத்துவிட்டார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் மாதமங்கலம் பகுதியை சேர்ந்தவர் அனீஷ்(வயது40). ஆட்டோ டிரைவரான இவருக்கு சமூக வலைதளத்தின் மூலமாக இளம்பெண் ஒருவர் அறிமுகமானார். அந்த பெண்ணுக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர்.

    இருந்தபோதிலும் அந்த இளம்பெண்ணுடன் அனீஷ் பழகி வந்தார். நாளடைவில் அது கள்ளத்தொடர்பாக மாறியது. இந்தநிலையில் கடந்த ஜூன் மாதம் அனீஷ், அந்த இளம்பெண்ணை அந்தூர் நகராட்சிக்குட்பட்ட பரசினிக்கடவு பகுதிக்கு அழைத்திருக்கிறார்.

    அதன்படி அந்த இளம்பெண், 2 மகள்கள் உள்பட 3 குழந்தைகளுடன் அங்கு சென்றார். இளம்பெண்ணின் மூத்த மகள் பிளஸ்-2 வும், இரண்டாவது மகள் 9-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். தனது குழந்தைகளுடன் அந்த இளம்பெண், அனீசுடன் விடுதி அறையில் தங்கினார்.

    இரவில் அனைவரும் ஒரே அறையில் படுத்து தூங்கினர். அப்போது அதிகாலை 2 மணியளவில், 9-ம் வகுப்பு படிக்கும் இளம்பெண்ணின் 14 வயது மகளை அனீஷ் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். இதனை மூத்த மகளான 12-ம் வகுப்பு மாணவி பார்த்து விட்டார்.

    அதுபற்றி அவர் தனது தாயிடம் கூறினார். ஆனால் இந்த விஷயம் வெளியே தெரிந்தால் அவமானம் என்று நினைத்த அந்த இளம்பெண், அதனை வெளியே கூறாமல் அப்படியே மூடி மறைத்துவிட்டார். இருந்தபோதிலும் தனக்கு நடந்த கொடுமையை மறக்க முடியாத சிறுமி, அதுபற்றி தன்னுடைய வகுப்பு ஆசிரியையிடம் தெரிவித்தார்.

    அதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர், மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது குறித்து "சைல்டுலைன்" அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் அதுபற்றி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், 9-ம் வகுப்பு படிக்கும் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய ஆட்டோ டிரைவர் அனீசை கைது செய்தனர்.

    அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. கள்ளக்காதலியுடன் விடுதியில் தங்கியிருந்த போது, அவரது மகளையே கள்ளக்காதலன் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • 2 கன்னியாஸ்திரிகளை சத்தீஷ்கர் மாநில போலீசார் கைது செய்தனர்.
    • இந்த சம்பவத்துக்கு கேரள முதலமைச்சர் பிரணாயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்தார்.

    கேரள மாநிலம் அங்கமாலி எழுவூர் கிறிஸ்தவ திருச்சபையை சேர்ந்தவர் மேரி. கண்ணூர் தலச்சேரி உதயகிரி திருச்சபையை சேர்ந்தவர் வந்தனா பிரான்சிஸ். இவர்கள் இருவரும் கத்தோலிக்க கன்னியாஸ்திரிகள்.

    சத்தீஷ்கர் மாநிலம் துர்க் ரெயில் நிலையத்தில் வைத்து இந்த 2 கன்னியாஸ்திரிகளையும், சத்தீஷ்கர் மாநில நாராயண்பூர் பகுதியை சேர்ந்த சுக்மான் மண்டாவியையும் போலீசார் கைது செய்தனர்.

    சுக்மான் மண்டாவி சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள பழங்குடியினத்தை சேர்ந்தவர் ஆவார். இவர் 18 மற்றும் 19 வயதுள்ள 3 இளம் பெண்களை கட்டாய மதம் மாற்றம் செய்யும் வகையில் கடத்தி 2 கேரள கன்னியாஸ்திரிகளிடம் கொடுத்ததாக வந்த புகாரின் அடிப்படையில் போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    இதற்கு கேரளாவில் உள்ள கிறிஸ்தவ பேராயர்கள் கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. வேலைக்கு அழைத்து வருவதற்காகவே அந்த 3 இளம் பெண்களை கன்னியாஸ்திரிகள் ரெயிலில் அழைத்து வந்ததாக கிறிஸ்தவ கூட்டமைப்பு விளக்கம் அளித்துள்ளது.

    நாடு முழுவதும் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் எழுந்தது. கேரள கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டது நியாயமானது அல்ல. அவர்களை விடுவிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்-மந்திரி பிரணாயி விஜயன் உள்பட பலர் வலியுறுத்தினர்.

    இந்நிலையில், கேரளாவைச் சேர்ந்த இரண்டு கன்னியாஸ்திரிகளுக்கு சத்தீஸ்கரில் உள்ள சிறப்பு NIA நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியது.

    இதனையடுத்து சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட கன்னியாஸ்திரிகளை கேரள பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர் நேரில் சென்று வரவேற்றுள்ளார்.

    சத்தீஸ்கர் பாஜக அரசு கன்னியாஸ்திரிகளை கைது செய்த நிலையில், கேரளா பாஜக தலைவர் அவர்களை நேரில் சென்று வரவேற்ற இரட்டை நிலைப்பாட்டை சி.பி.எம்., காங்கிரஸ் கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.

    • தி கேரளா ஸ்டோரி படத்துக்கு சிறந்த இயக்குனர் விருது அறிவிக்கப்பட்டது.
    • இதற்கு கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    திருவனந்தபுரம்:

    71-வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் சிறந்த திரைப்படமாக '12த் ஃபெயில்' மற்றும் சிறந்த தமிழ் திரைப்படமாக 'பார்க்கிங்' தேர்வு செய்யப்பட்டது. இந்தப் படத்தில் நடித்த எம்.எஸ்.பாஸ்கருக்கு சிறந்த துணை நடிகர் விருது, சிறந்த திரைக்கதைக்கான விருதும் இப்படத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

    சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது, 'தி கேரளா ஸ்டோரி' படத்தை இயக்கிய சுதீப்தோ சென்னுக்கு அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், கேரளாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கத்துடன் தவறான தகவல்களைப் பரப்பி, வகுப்புவாத வெறுப்பை விதைக்கும் ஒரு திரைப்படத்தை கவுரவிப்பதன் மூலம், தேசிய விருதுகள் நடுவர் குழு, சங்பரிவாரின் பிளவுபடுத்தும் சித்தாந்தத்தில் வேரூன்றிய ஒரு கதைக்கு சட்டபூர்வ அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.

    வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக எப்போதும் நல்லிணக்கம் மற்றும் எதிர்ப்பின் கலங்கரை விளக்கமாக நிற்கும் நிலமான கேரளாவுக்கு, இந்த முடிவு மிகப்பெரிய அவமானத்தைத் தந்துள்ளது. மலையாளிகள் மட்டுமல்ல, ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட அனைவரும், அரசியலமைப்பு மதிப்புகளைப் பாதுகாக்க தங்கள் குரலை எழுப்ப வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

    • கொலை செய்துவிடுவதாக மிரட்டி கணவர் தனது தனது கையை உடைத்தார்
    • அவர்கள் தன்னைக் கொன்றுவிடுவார்கள் என்று பயப்படுவதாக தெரிவித்தார்.

    கேரள மாநிலம் திருச்சூரில் கணவர் - மாமியார் சித்ரவதை காரணமாக கர்ப்பிணிப் பெண் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

    ஃபசீலா (23) என்ற அந்தப் பெண் தனது கணவர் நௌஃபல் மற்றும் மகனுடன் வசித்து வந்தார். இந்நிலையில் ஜூலை 29 அன்று கணவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் அவர் கண்டெடுக்கப்பட்டார்.

    கடைசியாக தனது தாய்க்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பிய செய்தியில், அவர் இந்த துயர முடிவை எடுத்ததற்கான காரணங்களை விவரித்துள்ளார்.

    தாய்க்கு அனுப்பிய செய்தியில், தான் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாகவும், தனது கணவர் தனது வயிற்றில் பலமுறை எட்டி உதைத்ததாகவும் ஃபசீலா கூறியுள்ளார்.

    மேலும், கொலை செய்துவிடுவதாக மிரட்டி கணவர் தனது தனது கையை உடைத்தார் என்றும் மாமியாரும் அவரை தொடர்ந்து துன்புறுத்தியாக தெரிவித்துள்ளார்.  அவர்கள் தன்னைக் கொன்றுவிடுவார்கள் என்று பயப்படுவதாகவும், எனவே தானே உயிரிழப்பதாகவும் தாய்க்கு அனுப்பிய செய்தியில் ஃபசீலா தெரிவித்துள்ளார்

    ஃபசீலாவின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் கணவர் நௌஃபல் மற்றும் அவரது தாய் ரம்லா கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர்.

    தற்கொலைக்கு தூண்டுதல் மற்றும் பிற குடும்ப வன்முறை குற்றச்சாட்டுகளின் கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.  

    • கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து கொண்டு இருந்தபோது, ஒரு நாள் கல்லூரிக்கு தாமதமாக வந்தேன்.
    • திருடிய விஷயத்தை பின்னாளில் மற்ற நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டேன்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் இடுக்கி தொடுபுழாவில் அரசு என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் 1996-ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நடந்தது.

    விழாவில் பங்கேற்ற முன்னாள் மாணவர்கள் படிக்கும்போது நடந்த சம்பவம் பற்றி தங்களுடைய அனுபவங்களை ஒவ்வொருவராக பகிர்ந்து கொண்டனர். அதில் ஒருவர் முன்னாள் மாணவரான கண்ணூரை சேர்ந்த என்ஜினீயர் பிரதீப் ஜோய். அவர் பார்சலுடன் மேடைக்கு வந்தார். அதனை பார்த்த சக மாணவர்கள், ஏதோ ஒரு வித்தியாசமான அனுபவத்தை நமக்கு பிரதீப் கொடுக்க போகிறார், என நினைத்தனர். அந்த மாணவரும், பார்சலை மேடையில் வைத்து பிரித்தார். இதனை பார்த்தவர்களுக்கு ஆச்சரியத்தை தந்தது.

    அதாவது பள்ளி கல்லூரிகளில் வகுப்பு தொடங்கும் போதும், வகுப்புகள் முடிந்த பின்னரும் அடிக்கும் உலோகத்திலான ஒலி எழுப்பும் மணி அது. இந்த மணியை படிக்கும்போது திருடியதாகவும், அதனை பத்திரமாக வைத்திருந்ததாகவும் பிரதீப் தெரிவித்த தகவலை கேட்டு அனைவரும் சிரித்துவிட்டனர். மேலும் எதற்காக திருடினேன் என்று அவர் அளித்த விளக்கமும் அரங்கம் முழுவதும் சிரிப்பை ஏற்படுத்தியது.

    இதே கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து கொண்டு இருந்தபோது, ஒரு நாள் கல்லூரிக்கு தாமதமாக வந்தேன். இதனால் அப்போது கல்லூரியில் முதல்வராக இருந்த பி.வி.ஆன்றனி, என்னை முட்டி போட சொல்லி தண்டனை தந்தார். அதை நான் அப்போது அவமானமாக கருதினேன். அதனால் எனக்கு அப்போது ஒரு பிற்போக்கு தனமான புத்தி தோன்றியது. அதாவது, கல்லூரியில் ஒலி எழுப்பும் மணியை அடித்ததால் தானே, நான் தாமதமாக வந்தது தெரிந்தது. எனவே அந்த மணியையே திருடிவிட்டேன்.

    திருடிய விஷயத்தை பின்னாளில் மற்ற நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டேன். ஆனால் அந்த மணியை இதுவரை வீட்டில் பத்திரமாக வைத்து இருந்தேன். தற்போது அது தவறு என்பதை உணர்ந்தேன். அதற்கு பரிகாரம் தேடும் வகையில், 28 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் மாணவர் சந்திப்பில், தவறை ஒப்புக் கொண்டு இந்த மணியை கல்லூரியில் ஒப்படைக்கிறேன் என்றார்.

    அதன்படி மணியை, தற்போதைய கல்லூரி முதல்வர் வி.ஜி.கீதம்மாவிடம் ஒப்படைத்தார். அப்போது அங்கிருந்த ஆசிரியர்களும், முன்னாள் மாணவர்களும் கைதட்டி வரவேற்றனர்.

    • மாணவி மற்றும் அவரது தாயிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
    • சிறுமிக்கு பிறந்த குழந்தை தற்போது குழந்தைகள் நலக்குழு பராமரிப்பில் உள்ளது.

    கேரள மாநிலம் காசர்கோடு பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி ஒருவர், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வீடடில் வைத்து குழந்தை பெற்றார். அவருக்கு ரத்தப்போக்கு அதிகமானதை தொடர்ந்து கண்ணங்காட்டில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    இதையடுத்து 10-ம் வகுப்பு மாணவி குழந்தை பெற்ற விவகாரம் வெளியே தெரிந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மாணவி கர்ப்பமாக இருப்பது தனக்கு தெரியாது என்று தாய் கூறினார். மாணவியிடம் விசாரித்தபோது கர்ப்பத்துக்கு காரணமானவர் யார்? என்பதை கூறவில்லை.

    இருந்தபோதிலும் மாணவி மற்றும் அவரது தாயிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அப்போது மாணவியின் கர்ப்பத்துக்கு அவரது தந்தையே காரணம் என்பது தெரியவந்தது. 48 வயதான அவர் வளைகுடா நாட்டில் வேலை பார்த்து வந்தார்.

    அவரை உடனடியாக சொந்த ஊருக்கு திரும்பி வருமாறு போலீசார் கூறினர். இதையடுத்து அவர் வளைகுடா நாட்டில் இருந்து விமானம் மூலம் மங்களூருக்கு வந்தார். அங்கிருந்து தனது ஊருக்கு ரெயிலில் வந்த மாணவியின் தந்தையை போலீசார் கைது செய்தனர்.

    மாணவி பெற்றெடுத்த குழந்தைக்கு அவர்தான் காரணம் என்பதை உறுதி செய்ய மாணவியின் தந்தைக்கு டி.என்.ஏ. பரிசோதனை செய்யப்பட்டது. அதன்பிறகு அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    சிறுமிக்கு பிறந்த குழந்தை தற்போது குழந்தைகள் நலக்குழு பராமரிப்பில் உள்ளது. குழந்தை பெற்றெடுத்த 10-ம் வகுப்பு மாணவி கர்ப்பத்துக்கு காரணமான தந்தை கைது செய்யப்பட்ட சம்பவம் காசர்கோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மற்றவர்களை துஷ்பிரயோகம் செய்வதுதான் தீவிர இந்து என அடிக்கடி தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது.
    • உண்மையான இந்து என்றால் யாரையும் எதிர்ப்பது என்ற அர்த்தம் அல்ல.

    ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது மோகன் பகவத் பேசியதாவது:-

    மற்றவர்களை துஷ்பிரயோகம் செய்வதுதான் தீவிர இந்து என அடிக்கடி தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது. இதுபோன்ற தவறான கருத்து வரலாம். உண்மையான இந்து என்றால் யாரையும் எதிர்ப்பது என்ற அர்த்தம் அல்ல. அப்படி எதிர்க்கவில்லை என்பதற்காக இந்துக்கள் இல்லை அர்த்தம் கிடையாது. நாம் இந்துக்கள். ஆனால், அனைவரையும் அரவணைத்து செல்வதுதான் இந்து மதத்தின் சாரம்சம்.

    இவ்வாறு மோகன் பகவத் கூறினார்.

    • கேரளாவில் பெய்துவரும் கனமழையால் இடுக்கியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
    • நிலைசரிவு ஏற்பட்டுள்ள சாலையை சீர் செய்யும் பணிகள் தற்போது மும்முரமாக நடந்து வருகின்றன.

    கேரளாவின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழையால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

    கேரளாவில் பெய்துவரும் கனமழையால் இடுக்கியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மூணாரில் இருந்து தேனிக்கு செல்லும் சாலையில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

    நிலைசரிவு ஏற்பட்டுள்ள சாலையை சீர் செய்யும் பணிகள் தற்போது மும்முரமாக நடந்து வருகின்றன. விரைவில் இப்பகுதியில் போக்குவரத்து சீராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • நிறைபுத்தரிசி பூஜை வருகிற 30-ந் தேதி சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெற உள்ளது.
    • சபரிமலையில் பயிரிடப்பட்டுள்ள நெற்கதிர்களும் அறுவடை செய்யப்பட்டு கோவிலில் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நிறைபுத்தரிசி பூஜை நடத்தப்பட்டு வருகிறது. இந்த பூஜையில் வைத்து பிரசாதமாக வழங்கப்படும் நெற்கதிர்களை வீட்டில் வைத்து பாதுகாத்து வந்தால் சகல ஐஸ்வர்யங்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    இந்த ஆண்டுக்கான நிறைபுத்தரிசி பூஜை வருகிற 30-ந் தேதி சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெற உள்ளது. இதற்காக கோவில் நடை நாளை மறுநாள் (29-ந் தேதி) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார்.

    மறுநாள் (30-ந் தேதி) நிறைபுத்தரிசி பூஜை வழிபாடுகள் நடைபெறும். இதற்காக பாரம்பரிய முறைப்படி பாலக்காடு , கொல்லம் பகுதிகளில் இருந்து ஐயப்ப சேவா சங்கத்தினர் நெற்கதிர் கட்டுகளை சபரிமலைக்கு தலைச்சுமையாக எடுத்து வருவார்கள்.

    இதேபோல் சபரிமலையில் பயிரிடப்பட்டுள்ள நெற்கதிர்களும் அறுவடை செய்யப்பட்டு கோவிலில் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெறும். பின்னர் அவை பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படும். நிறைபுத்தரிசி பூஜை வழிபாட்டுக்கு பிறகு அன்றைய தினம் இரவு 10 மணிக்கு கோவில் நடை சாத்தப்படுகிறது.

    • பாழடைந்த வீட்டின் கிணற்றுக்குள் கோவிந்தசாமி பதுங்கியிருப்பது தெரியவந்தது.
    • தப்பி ஓடி பிடிபட்ட கைதி கோவிந்தசாமி, மருத்துவ பரிசோதனைக்கு பிறகு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பாலக்காடு அருகே கடந்த 2011-ம் ஆண்டு சவுமியா என்ற இளம்பெண் ஓடும் ரெயிலில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, ரெயிலில் இருந்து தள்ளி விடப்பட்டு கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தமிழகத்தின் விருத்தாசலத்தை சேர்ந்த கோவிந்தசாமி என்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    அவருக்கு கோர்ட்டு மரண தண்டனை விதித்த நிலையில், உச்சநீதிமன்றம் அதனை ஆயுள் தண்டனையாக குறைத்தது. இதனை தொடர்ந்து கோவிந்தசாமி கண்ணூர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். ஒரு கை ஊனமான அவர், பாதுகாப்பான பிளாக்கில் இருந்து நேற்று காலை திடீரென மாயமானார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சிறை அதிகாரிகள் தேடுதல் வேட்டையில் இறங்கினர். சுமார் 3½ மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு சிறையில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு பாழடைந்த வீட்டின் கிணற்றுக்குள் கோவிந்தசாமி பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்தனர்.

    கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் தப்பியோடிய கைதி பிடிபட்ட நிலையில் அவர் தப்பிச் சென்றது எப்படி? என உயர் அதிகாரிகள் விசாரணையில் இறங்கினர். இதில் சிறை அறையின் 3 இரும்பு கம்பிகளை அறுத்து விட்டு கிழிந்த போர்வைகளை ஒன்றாக கயிறு போல் கட்டி 7.5 மீட்டர் உயரம் உள்ள சிறைச் சுவரை ஏறி தப்பிச் சென்றது தெரிய வந்தது.

    சிறையில் கண்காணிப்பு கேமரா இருந்தும் கோவிந்தசாமி தப்பிச் சென்றதை அதிகாரிகள் கவனிக்காமல் விட்டது எப்படி? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இதில் பல நாட்களுக்கு முன்பிருந்தே சிறையில் இருந்து தப்பிக்க கோவிந்தசாமி திட்டமிட்டிருப்பது தெரிய வந்தது.

    இதனால் அவருக்கு சிறைக்குள் இருந்து உதவி கிடைத்ததா? என கண்ணூர் நகர போலீஸ் கமிஷனர் நிதின்ராஜ் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் 3 சிறை அதிகாரிகள் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர். கைதிகளை மேற்பார்வையிட தவறியதாக கோபுர அதிகாரியான துணை சிறை அதிகாரி ராஜீஸ், அறை பாதுகாப்பு பணி மற்றும் சி.சி.டி.வி. கட்டுப்பாட்டு அறை பணியில் இருந்த உதவி சிறை அதிகாரிகள் சஞ்சய், அகில் ஆகிய 3 பேரையும் சஸ்பெண்டு செய்து டி.ஐ.ஜி. ஜெயக்குமார் உத்தரவிட்டு உள்ளார்.

    இதற்கிடையில் தப்பி ஓடி பிடிபட்ட கைதி கோவிந்தசாமி, மருத்துவ பரிசோதனைக்கு பிறகு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் அவர் பாதுகாப்பு காரணமாக கண்ணூர் மத்திய சிறையில் இருந்து திருச்சூர் விய்யூர் உயர் பாதுகாப்பு சிறைக்கு இன்று மாற்றப்பட்டார்.

    • பயணிகள் ரெயிலில் கோவிந்தசாமியால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
    • அறையின் இரும்புக் கம்பிகளை வெட்டி, துணிகளைச் சேர்த்து கயிறாக்கி சிறை சுவரில் ஏறி தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

    கேரளாவில் கடந்த 2011ஆம் ஆண்டு பரபரப்பை ஏற்படுத்திய சௌமியா கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த குற்றவாளி கோவிந்தசாமி, கண்ணூர் மத்திய சிறையில் இருந்து தப்பி ஓடிவிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

    வெள்ளிக்கிழமை அதிகாலை அவரது அறையை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, அவர் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது. 

    கோவிந்தசாமி தனது உயர் பாதுகாப்பு அறையின் இரும்புக் கம்பிகளை வெட்டி, துணிகளைச் சேர்த்து கயிறாக்கி சிறை சுவரில் ஏறி தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. CCTV காட்சிகளின்படி, அவருக்கு வெளியிலிருந்து உதவி கிடைத்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

    காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது. இநநிலையில் அவர் பதுங்கியிருக்கும் இடம் தொடர்பான ரகசிய தகவலின் பேரில் தப்பியோடிய கோவிந்தசாமியை கண்ணூர் போலீசார் கைது செய்தனர். 

     சௌமியா (23), பிப்ரவரி 1, 2011 அன்று எர்ணாகுளத்தில் இருந்து ஷோர்னூர் நோக்கிச் செல்லும் ஒரு பயணிகள் ரெயிலில் தனியாகப் பயணம் செய்தபோது, தமிழகத்தின் விருதாச்சலத்தை சேர்ந்த கோவிந்தசாமியால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். கோவிந்தசாமிக்கு இந்த கொடூரக் கொலைக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர்  ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.

    ×