என் மலர்tooltip icon

    கர்நாடகா

    • மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் 75 சதவீதம் பேர் ஓபிசி பிரிவில் வருகின்றனர்.
    • முஸ்லிம்கள் இடஒதுக்கீட்டை 4 சதவீதத்தில் இருந்து இடஒதுக்கீட்டை 8 சதவீதமாக அதிகரிக்கும்படி ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

    கர்நாடகாவில் கடந்த 2015-ம் ஆண்டு பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவரான ஜெயபிரகாஷ் ஹெக்டே தலைமையில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்து. அந்த அறிக்கையை கடந்த 2024 பிப்ரவரியில் முதலமைச்சர் சித்தராமையாவிடம் ஜெயபிரகாஷ் ஹெக்டே வழங்கினார்.

    இந்த அறிக்கை நேற்று முன்தினம் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதன்மீது வரும் 17-ந்தேதி நடைபெறும் சிறப்பு அமைச்சரவை கூட்டத்தில் விரிவாக ஆலோசனை நடைபெற உள்ளது

    இந்நிலையில் ஜெயபிரகாஷ் ஹெக்டே தலைமையிலான ஆணையம் பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களின் இடஒதுக்கீட்டை அதிகரிக்க அந்த அறிக்கையில் சிபாரிசு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

    கணக்கெடுப்பின்படி,  மாநிலத்தில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் (OBC) மக்கள் தொகை 4.18 கோடியாகவும், பட்டியல் சாதியினரின் (SC) மக்கள் தொகை 1.09 கோடியாகவும், பட்டியல் பழங்குடியினரின் (ST) மக்கள் தொகை 42.81 லட்சமாகவும் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

    இதன்படி மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் 75 சதவீதம் பேர் ஓபிசி பிரிவில் வருகின்றனர். எனவே அவர்களின் சமூக, பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க ஓபிசி-களுக்கான இடஒதுக்கீட்டை தற்போதைய 31 சதவீதத்திலிருந்து 51 சதவீதமாக உயர்த்த ஆணையம் தனது அறிக்கையில் பரிந்துரைத்துள்ளது. இந்த பிற்படுத்தப்பட்ட ஓபிசி சமுதாயங்கள் ஒவ்வொரு வர்க்கமாக பிரிக்கப்பட்டு, அவர்களுக்கு இடஒதுக்கீடு அதிகரிக்க ஆணையம் பரிவித்துள்ளது.

    இதன்மூலம் ஓபிசி பிரிவில் இருக்கும் 2 முக்கிய சமுதாயங்களான லிங்காயத் மற்றும் ஒக்கலிகா சமுதாயங்களின் இடஒதுக்கீடும் தலா 3 சதவீதம் அதிகரிக்கும். இந்த இரண்டு சமூகங்களை சேர்த்தவர்களே கர்நாடக அரசியலில் கோலோச்சி வருவது குறிப்பிடத்தக்கது. லிங்காயத் சமூகம் மாநிலத்தில் மிகப்பெரியதாகக் கருதப்படுகிறது.

    மேலும் மாநிலத்தில் 75 லட்சத்து 27 ஆயிரம் பேர் (18.08 சதவீதம்) உள்ள முஸ்லிம் மக்களை பிறப்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கவும் ஆணையம் சிபாரிசு செய்துள்ளதாக தெரிகிறது. மேலும் தற்போது முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அவர்களின் எண்ணிக்கையை பொறுத்து 4 சதவீதத்தில் இருந்து இடஒதுக்கீட்டை 8 சதவீதமாக அதிகரிக்கும்படி ஆணையம் பரிந்துரைத்துள்ளதாக தெரிகிறது.

    மேற்கூறிய இந்த பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டால் கர்நாடகாவில் ஏற்கனவே உள்ள இடஒதுக்கீடுகளுடன் சேர்த்து மாநிலத்தின் மொத்த இடஒதுக்கீடு 85% ஆக உயரும். 

    • கோலார் மாவட்டம் முல்பாகல் தாலுகா அவனி கிராமத்தை சேர்ந்தவர் எல்லப்பா
    • கன்றுக்குட்டியை பரிசோதனை மருத்துவர் குட்டி நல்ல வளர்ச்சியுடன் ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவித்தார்.

    கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் முல்பாகல் தாலுகா அவனி கிராமத்தை சேர்ந்தவர் எல்லப்பா. விவசாயியான இவருக்கு சொந்தமான பசுமாடு நேற்று கன்றுக்குட்டி ஒன்றை ஈன்றது.

    அந்த கன்றுக்குட்டி இரண்டு தலைகள், நான்கு கண்களுடன் பிறந்துள்ளது. இதனால் ஆச்சர்யம் அடைந்த எல்லப்பா கால்நடை மருத்துவரை அழைத்தார்.

    கன்றுக்குட்டியை பரிசோதனை மருத்துவர் குட்டி நல்ல வளர்ச்சியுடன் ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவித்தார். இந்த கன்றுக்குட்டியைப் பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக எல்லப்பா வீட்டுக்கு படையெயடுத்து வருகிறது.  

    • முதலில் ஆடிய ஆர்சிபி 20 ஓவரில் 163 ரன்கள் எடுத்தது.
    • தொடர்ந்து ஆடிய டெல்லி 169 ரன்கள் எடுத்து வென்றது.

    பெங்களூரு:

    ஐபிஎல் தொடரின் 24வது லீக் ஆட்டம் பெங்களூருவில் இன்று நடைபெற்றது. இதில் ஆர்சிபி, டெல்லி அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது. பில் சால்ட், டிம் டேவிட் தலா 37 ரன்கள் எடுத்தனர். ரஜத் படிதார் 25 ரன்னும், விராட் கோலி 22 ரன்னும் எடுத்தனர்.

    டெல்லி அணி சார்பில் விப்ராஜ் நிகம், குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்தனர். 58 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

    அடுத்து இறங்கிய கே.எல்.ராகுல்- ஸ்டப்ஸ் ஜோடி பொறுப்புடன் ஆடியது. சிறப்பாக ஆடிய கே.எல்.ராகுல் அரை சதமடித்தார்.

    இறுதியில், டெல்லி கேப்பிட்டல்ஸ் 17.5 ஓவரில் 169 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. டெல்லி அணி பெறும் 4வது வெற்றி இதுவாகும். ஆர்.சி.பி. பெறும் 2வது தோல்வி இதுவாகும்.

    கே.எல்.ராகுல் 93 ரன்னும், ஸ்டப்ஸ் 38 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    • தனிமை ஒரு தொற்றுநோயாக மாறி வருகிறதா?
    • நாம் பரபரப்பாக இருப்பதன் மூலம் ஆழமான பிரச்சினைகளை மறைக்கிறோமா?

    கர்நாடக தலைநகர் பெங்களூருவில் பிரபல ஐடி நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தில் பணி புரியும் ஒருவர் தனது ஓய்வு நேரங்களில் பைக் டாக்சி ஓட்டி வருகிறார்.

    இந்த விடயம் கடந்த வாரத்தில் இருந்து பயங்கர வைரலாகி வந்தது. மேலும் சமூக ஊடககங்களிலும் நெட்டிசன்கள் இதுகுறித்து தீவிரமாக விவாவித்து வந்தனர்.

    இந்நிலையில் அந்த ஊழியர் குறித்து பெண் ஒருவர் போட்ட பதவு மேலும் வைரலாகி வருகிறது.

    அதாவது," அதிகமான மக்கள் கிக் வேலையை ஏற்றுக்கொள்வதைப் பார்ப்பது மகிழ்ச்சியாக இருந்தாலும், தனிமை ஒரு தொற்றுநோயாக மாறி வருகிறதா என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது?" என்று அந்த பெண் பதிவிட்டுள்ளார்.

    மேலும் " நாம் பரபரப்பாக இருப்பதன் மூலம் ஆழமான பிரச்சினைகளை மறைக்கிறோமா?" என்றும் அவர் தனது பதிவில் வினவியிருந்தார்.

    உண்மை கசக்கும் என்பதற்கிணங்க இந்த பதிவு குறித்து நெட்டிசன்கள் இணையத்தில் பட்டிமன்றம் நடத்தி வருகின்றனர். 

     

    • என் பாஜக நண்பர்களுக்கு நமஸ்காரம், உங்கள் அனைவரையும் நான் வாழ்த்துகிறேன்
    • யாத்திரையில் இறங்கியவர்களுக்கு இப்போது இரண்டு வழிகள் மட்டுமே உள்ளன.

    வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தி பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்தார்.

    ஒரு கேஸ் சிலிண்டரின் விலை ரூ.803 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.50 உயர்த்தப்பட்டு ரூ.853க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கேஸ் சிலிண்டர் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. மேலும் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தியுள்ளது.

    இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவின் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

    முன்னதாக கர்நாடக பாஜக நேற்று 16 நாள் 'ஜனக்ரோஷ யாத்ரே' என்ற மாநில அளவிலான ஜனக்ரோஷ யாத்திரை பிரச்சாரம் ஒன்றை தொடங்கியது. கர்நாடகாவில் விலைவாசி உயர்வு, அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை முன்னிறுத்தி இந்த பிரசார யாத்திரையை கர்நாடக பாஜக தொடங்கியது.

    இதையும், மத்திய அரசு கேஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலை உயர்வையும் தொடர்புபடுத்தி டி.கே.சிவகுமார் விமர்சனம் வைத்துள்ளார்.

    இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட காணொளியில் கூறியதாவது, "என் பாஜக தோழர்களுக்கு நமஸ்காரம், நீங்கள் அனைவரும் ஜனக்ரோஷ யாத்திரை செய்கிறீர்கள், உங்கள் அனைவரையும் நான் வாழ்த்துகிறேன். ஆனால் அதே நேரத்தில் இந்திய அரசு, உங்கள் பாஜக அரசு, பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலைகளை உயர்த்தியுள்ளது.

    இப்போது மாநிலத்தில் உள்ள பாஜக தலைவர்களின் எதிர்வினையை நான் அறிய விரும்புகிறேன். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வரும் போதிலும், மத்திய அரசு ஏன் பெட்ரோலியப் பொருட்களின் விலையை தொடர்ந்து உயர்த்தி வருகிறது என்பதை பாஜக தலைவர்கள் மாநில மக்களுக்கு விளக்க வேண்டும்.

     ஜனக்ரோஷ யாத்திரையில் இறங்கியவர்களுக்கு இப்போது இரண்டு வழிகள் மட்டுமே உள்ளன. ஒன்று மத்திய பாஜக அரசு உயர்த்தியுள்ள விலைகளைக் குறைக்க பிரதமருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும், அல்லது அவர்கள் யாத்திரையை முடித்துவிட்டு, பொருட்களை எடுத்துக்கொண்டு தங்கள் வீடுகளுக்குத் திரும்ப வேண்டும்.

    இதை விட்டுவிட்டு, இந்த யாத்திரையின் கேலிக்கூத்தை அவர்கள் தொடர்ந்தால், அவர்கள் நிச்சயமாக பொதுமக்களின் கோபத்தை எதிர்கொள்ள நேரிடும்" என்று தெரிவித்துள்ளார். 

    • ஆளில்லா தெருவில் நடந்த சென்றபோது வாலிபர் அத்துமீறல்.
    • பெங்களூரு போன்ற ஒரு பெரிய நகரத்தில், இது போன்ற சம்பவங்கள் இங்கே, அங்கே என நடக்கத்தான் செய்கின்றன.

    கர்நாடகாவின் பெங்களூருவில் ஒரு தெருவில் பெண் ஒருவர் தனது தோழியுடன் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவர் திடீரென அத்துமீறி அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக கட்டிப்பிடித்தார். அத்துடன் தொடக்கக்கூடாத இடங்களில் தொட்டு பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். பின்னர் சுதாரித்துக் கொண்ட அந்த பெண் வாலிபரை தள்ளிவிட்டு தப்பி சென்றார்.

    சிசிடிவி மூலம் இந்த விவகாரம் தெரியவந்தது. அந்த வாலிபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடகா மாநில உள்துறை மந்திர ஜி. பரமேஷ்வரா தெரிவித்த கருத்து கடும் விமர்சனத்தை எழுப்பியுள்ளது.

    கர்நாடகா மாநில உள்துறை அமைச்சர் ஜி. பரமேஷ்வரா இது தொடர்பாக கூறியதாவது:-

    மழை மற்றும் குளிரைப் பொருட்படுத்தாமல் போலீசார் தொடர்ந்து 24 மணி நேரமும் பணியாற்றி வருகின்றனர். அதனால்தான் பெங்களூருவில் அமைதி நிலவுகிறது. பெங்களூரு போன்ற ஒரு பெரிய நகரத்தில், அங்கே ஒன்று, இங்கே ஒன்று என இதுபோன்ற சம்பவங்கள் நடக்கத்தான் செய்கின்றன.

    ஒவ்வொரு பகுதியிலும் ரோந்துப் பணி ஒழுக்கமான மற்றும் பயனுள்ள முறையில் நடக்க வேண்டும் என்று நான் போலீஸ் கமிஷனரிடம் வலியுறுத்தியுள்ளேன். நாங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுக்கிறோம். பீட் (Beat) முறையை மிகவும் பயனுள்ளதாக மாற்ற வேண்டும். அதனால்தான் நான் இது குறித்து போலீஸ் கமிஷனரிடம் உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு பரமேஷ்வா தெரிவித்தார்.

    பெரிய நகரில் அங்கொன்றும், இங்கொன்றுமாக இதுபோன்ற சம்பவம் நடக்கத்தான் செய்கிறது என்ற பரமேஷ்வா கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு இதேபோன்று பெண்களுக்கு எதிராக பாலியல் தாக்குதல் தொடர்பாக இதுபோன்று அலட்சியமாக பதில் அளித்தார். பரமேஷ்வரா தொடர் குற்றவாளி. அவரை ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மந்திரி பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளார்.

    • திடீரென்று அப்பெண்ணின் அந்தரங்க உறுப்புகளை பிடித்து அத்துமீறலில் ஈடுபட்ட அந்த நபர் அவன் அங்கிருந்து தப்பி ஓடுகிறான்.
    • பெண்ணும் அவருடைய தோழியும் என்ன நடந்தது என்பதை ஜீரணிக்க முடியால் சில நொடிகள் அசையாமல் நின்றுவிட்டனர்.

    பெங்களூருவில் ஒரு பெண் இரவில் வெறிச்சோடிய தெருவில் நடந்து சென்றபோது மர்ம நபரால் பாலியல் அத்துமீறலுக்கு ஆளான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் சிசிடிவி காட்சியில், அந்தப் பெண் தனது பெண் தோழியுடன் மங்கலான வெளிச்சம் உள்ள குடியிருப்புப் பகுதியில் நடந்து செல்லும் போது, மர்ம நபர் அவர்களை பின் தொடர்ந்து செல்கிறான்.

    திடீரென்று அப்பெண்ணின் அந்தரங்க உறுப்புகளை பிடித்து அத்துமீறலில் ஈடுபட்ட அவன் அங்கிருந்து தப்பி ஓடுகிறான். இதனால் அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்ட பெண்ணும் அவருடைய தோழியும் என்ன நடந்தது என்பதை ஜீரணிக்க முடியால் சில நொடிகள் அசையாமல் நின்றுவிட்டனர். பின் பயத்தில் இருவரும் வேகமாக நடக்கத் தொடங்கினர்.

    இந்த சம்பவம் கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதி நடந்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் எந்த புகாரும் அளிக்கப்படவில்லை. ஆனால் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதால் நேற்று இதுதொடர்பாக பெங்களூரு காவல்துறை வழக்குப் பதவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    • இவர் தனது 35 வயது மனைவி சாரதா தனக்கு துரோகம் செய்வதாக சந்தேகத்தில் இருந்துள்ளார்.
    • சாரதா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

    கர்நாடக தலைநகர் பெங்களூருவில் மனைவியை மக்கள் முன்னிலையில் கணவன் கழுத்தறுத்து கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

    சிக்கபல்லாபூர் மாவட்டத்தில் உள்ள பாகேபள்ளியைச் சேர்ந்த தினசரி கூலித் தொழிலாளி கிருஷ்ணப்பா (43 வயது). இவர் தனது 35 வயது மனைவி சாரதா தனக்கு துரோகம் செய்வதாக சந்தேகத்தில் இருந்துள்ளார்.

    இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில் பெங்களூருவில் எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் சாரதா வேலை முடித்து வீட்டுக்கு வரும் வழியில் கிருஷ்ணப்பா காத்திருந்தார். அவர் வந்ததும், சாலையில் வைத்தே தனது மனைவியின் கழுத்தை கிருஷ்ணப்பா அறுத்து கொலை செய்தார்.

    சாரதா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். அதன்பின் அங்கிருந்து ஓட முயன்ற அவரை பிடித்த மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸ் சாரதாவின் உடலை மீட்டு, கிருஷ்ணப்பாவை கைது செய்தனர்.

    • பிரசாந்த் ஹரிதாஸ் என்பவர் LinkedIn செயலில் 3 ஆண்டுகளாக வேலை தேடியுள்ளார்.
    • அவரை எந்த நிறுவனமும் பணிக்கு எடுக்காததால் அவர் விரக்தி அடைந்துள்ளார்.

    கர்நாடகாவில் வேலை கிடக்காத விரக்தியில் இளைஞர் ஒருவர் தனக்கு தானே இரங்கல் போஸ்டர் அடித்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பெங்களூருவை சேர்ந்த பிரசாந்த் ஹரிதாஸ் என்பவர் LinkedIn செயலில் 3 ஆண்டுகளாக வேலை தேடியுள்ளார்.

    அவரை எந்த நிறுவனமும் பணிக்கு எடுக்காததால், அதே செயலியில் தனக்கு தானே இரங்கல் போஸ்டரை பதிவு செய்து அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

    • 2021 ஆம் ஆண்டு மனைவியை கொலை செய்ததாக குற்றத்திற்காக சுரேஷ் கைது செய்யப்பட்டார்.
    • தனது மனைவி ஒரு உணவகத்தில் சாப்பிட்டு கொண்டிருப்பதை சுரேஷ் பார்த்துள்ளார்

    மனைவியைக் கொலை செய்த குற்றத்திற்காக 2 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த நபர், சில நாட்களுக்கு முன்பு அவரது மனைவி உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டார்.

    கர்நாடகாவின் குடகு மாவட்டம் குஷால்நகர் தாலுகாவை சேர்ந்த சுரேஷ், 20 ஆண்டுகளுக்கு முன்பு மல்லிகே என்ற பெண்ணை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு 18 வயதில் ஒரு மகனும் 15 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

    இந்நிலையில், 2021 ஆம் ஆண்டு தனது மனைவியை காணவில்லை என்று சுரேஷ் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    பின்னர் ஒரு வருடம் கழித்து, மைசூர் மாவட்டத்தில் உள்ள பெட்டடபுரா காவல் நிலைய எல்லையில் ஒரு பெண்ணின் எலும்புக்கூடு கிடைத்துள்ளது.

    இது மல்லிகேவின் உடலாக இருக்குமோ என்று போலீசார் சந்தேகித்தனர். பின்னர் இது மல்லிகேயின் உடல்தான் என்று அடையாளம் காட்டுமாறு சுரேஷ் மற்றும் அவரது மாமியாரை போலீசார் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

    இதனையடுத்து 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மனைவியை கொலை செய்ததாக குற்றத்திற்காக சுரேஷ் கைது செய்யப்பட்டார்.

    2 ஆண்டுகள் சிறையில் இருந்த சுரேஷ் இருந்தார். பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் டிஎன்ஏ பரிசோதனையில் கண்டெடுக்கப்பட்ட உடல் பாகங்கள் மல்லிகேவின் உடையது அல்ல என்று நிரூபிக்கப்பட்டது. இதனையடுத்து சுரேஷ் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

    இந்நிலையில், இந்த வழக்கில் திடீர் திருப்பமாக தனது மனைவி ஒரு உணவகத்தில் அவரது ஆண் நண்பருடன் சாப்பிட்டு கொண்டிருப்பதை சுரேஷ் பார்த்துள்ளார். இதனையடுத்து சுரேஷின் மனைவியை போலீசார் கைது செய்தனர். காணாமலே போன சுரேஷின் மனைவி தனது காதலனுடன் வாழ்ந்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர். 

    • துபாயில் இருந்து ரன்யா ராவ் கடத்தி வரும் தங்கத்தை நகைக்கடை அதிபரான சாகில் ஜெயின் தான் விற்பனை செய்து வந்துள்ளார்.
    • தங்கம் கடத்தல் விவகாரத்தில் நடிகை ரன்யா ராவுக்கு மேலும் சிக்கல் அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    நடிகை ரன்யா ராவ் மீதான தங்கம் கடத்தல் வழக்கு குறித்து டெல்லி வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள், அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் ரன்யா ராவ், அவரது நண்பரும், தெலுங்கு நடிகருமான தருண் ராஜு, பல்லாரியை சேர்ந்த நகைக்கடை அதிபர் சாகில் ஜெயின் ஆகிய 3 பேரும் வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

    குறிப்பாக சாகில் ஜெயினிடம் விசாரணை நடத்திவிட்டு நேற்று முன்தினம் தான் அதிகாரிகள் சிறையில் அடைத்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தங்கம் கடத்தல் வழக்கில் அதிகாரிகளுக்கு முக்கிய தகவல்கள் கிடைத்திருந்தது. மேலும் இந்த வழக்கில் வருவாய் நுண்ணறிவு அதிகாரிகள் கோர்ட்டுக்கு அளித்துள்ள ஆதாரங்களில் இடம் பெற்றுள்ள தகவல்களும் தற்போது வெளியே வந்துள்ளது.

    அதன்படி, துபாயில் இருந்து ரன்யா ராவ் கடத்தி வரும் தங்கத்தை நகைக்கடை அதிபரான சாகில் ஜெயின் தான் விற்பனை செய்து வந்துள்ளார். இவ்வாறு தங்கத்தை விற்று கிடைக்கும் பணத்தை ஹவாலாவாக துபாய்க்கு அவர் அனுப்பி மாற்றியது தெரியவந்துள்ளது. மேலும் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து மார்ச் மாதம் வரை துபாயில் இருந்து 49 கிலோ 600 கிராம் தங்கத்தை ரன்யா ராவ் கடத்தி வந்துள்ளார். அதனை விற்பனை செய்ய சாகில் ஜெயினிடம் அவர் கொடுத்துள்ளார்.

    மேலும் இந்த 5 மாதத்தில் துபாயில் தங்கம் வாங்குவதற்காக ரூ.30 கோடி ஹவாலா பணம் மாற்றப்பட்டு இருப்பதாகவும் சாகில் ஜெயினிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதற்கான ஆதாரங்களும் அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளது. இதனால் தங்கம் கடத்தல் விவகாரத்தில் நடிகை ரன்யா ராவுக்கு மேலும் சிக்கல் அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    • கட்சி தொண்டர்களுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
    • போலீசார் எடியூரப்பாவிடம் போராட்டத்தை கைவிடுமாறு பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

    பெங்களூரு:

    பால் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநில காங்கிரஸ் அரசை கண்டித்து கர்நாடக பா.ஜ.க. சார்பில் பகல்-இரவு தர்ணா போராட்டம் பெங்களூரு சுதந்திர பூங்காவில் நேற்று காலை தொடங்கியது. கட்சியின் மாநில தலைவர் விஜயேந்திரா தலைமையில் தொடங்கிய இந்த போராட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் ஆர்.அசோக் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள், கட்சியின் முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து இன்று 2-வது நாளாக நீடித்த இந்த போராட்டத்தில் கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியும், பா.ஜ.க. மூத்த தலைவருமான பி.எஸ்.எடியூரப்பா கலந்து கொண்டார். பின்னர் கட்சி தொண்டர்களுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

    இதையொட்டி அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். போலீசார் எடியூரப்பாவிடம் போராட்டத்தை கைவிடுமாறு பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து எடியூரப்பா உள்பட கட்சி நிர்வாகிகளை வலுக்கட்டாயமாக போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி அழைத்து சென்றனர்.



    ×