என் மலர்
நீங்கள் தேடியது "RCBvDC"
- பஞ்சாப் அணியை 6 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆர்சிபி அணி கோப்பையை வென்றுள்ளது
- ஐபிஎல் சீசனில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.
ஐபிஎல் 2025 இறுதிப் போட்டியில் பஞ்சாப் அணியை 6 ரன் வித்தியாசத்தில் வென்று ஆர்சிபி அணி கோப்பையை வென்றுள்ளது.
இதனையடுத்து நடப்பு ஐபிஎல் சீசனில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. அதில், மிகவும் மதிப்பு மிகுந்த வீரர் என்ற விருதை மும்பை இந்தியன்ஸ் வீரர் சூர்யகுமார் யாதவ் வென்றார். 320.5 புள்ளிகள் பெற்று இந்த விருதை அவர் வென்றார்.
மிகவும் மதிப்பு மிகுந்த வீரர் என்ற விருது ஐபிஎல் தொடரில் வழங்கப்படும் மிகவும் சிறப்பான விருதாகும். ஒரு ஐபிஎல் தொடரில் ஒட்டுமொத்தமாக ஒரு அணிக்கு ஒரு வீரர் அளித்த பங்களிப்பின் அடிப்படையில் இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த விருது முன்னர் ஐபிஎல் தொடர் நாயகன் என்ற பெயரில் வழங்கப்பட்டு வந்தது. அதிகபட்சமாக இந்த விருதை சுனில் நரைன் 3 முறை வென்றுள்ளார்.
- 46-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
- சமபலம் வாய்ந்த அணிகள் மோதும் இந்த ஆட்டத்தில் யார் கை ஓங்கும் என்பதை கணிப்பது கடினமாகும்.
டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடக்கும் 46-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
டெல்லி அணி 8 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 2 தோல்வியுடன் (மும்பை, குஜராத் அணிகளிடம்) வலுவான நிலையில் உள்ளது.
பெங்களூரு அணி 9 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 3 தோல்வி (குஜராத், டெல்லி, பஞ்சாப் அணிகளிடம்) அடைந்துள்ளது. பெங்களூரு அணியில் பேட்டிங்கில் விராட்கோலி சூப்பர் பார்மில் இருக்கிறார்.
சொந்த மண்ணில் நடந்த டெல்லிக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி தோற்றது. அதற்கு பதிலடி கொடுத்து புள்ளி பட்டியலில் ஏற்றம் காண பெங்களூரு அணி வரிந்து கட்டும். சமபலம் வாய்ந்த அணிகள் மோதும் இந்த ஆட்டத்தில் யார் கை ஓங்கும் என்பதை கணிப்பது கடினமாகும்.
இவ்விரு அணிகளும் இதுவரை 32 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் பெங்களூரு 19 ஆட்டத்திலும், டெல்லி 12 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது.
இந்நிலையில், இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வெ்னற ஆர்சிபி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்குகிறது.
- முதலில் ஆடிய ஆர்சிபி 20 ஓவரில் 163 ரன்கள் எடுத்தது.
- தொடர்ந்து ஆடிய டெல்லி 169 ரன்கள் எடுத்து வென்றது.
பெங்களூரு:
ஐபிஎல் தொடரின் 24வது லீக் ஆட்டம் பெங்களூருவில் இன்று நடைபெற்றது. இதில் ஆர்சிபி, டெல்லி அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது. பில் சால்ட், டிம் டேவிட் தலா 37 ரன்கள் எடுத்தனர். ரஜத் படிதார் 25 ரன்னும், விராட் கோலி 22 ரன்னும் எடுத்தனர்.
டெல்லி அணி சார்பில் விப்ராஜ் நிகம், குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்தனர். 58 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
அடுத்து இறங்கிய கே.எல்.ராகுல்- ஸ்டப்ஸ் ஜோடி பொறுப்புடன் ஆடியது. சிறப்பாக ஆடிய கே.எல்.ராகுல் அரை சதமடித்தார்.
இறுதியில், டெல்லி கேப்பிட்டல்ஸ் 17.5 ஓவரில் 169 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. டெல்லி அணி பெறும் 4வது வெற்றி இதுவாகும். ஆர்.சி.பி. பெறும் 2வது தோல்வி இதுவாகும்.
கே.எல்.ராகுல் 93 ரன்னும், ஸ்டப்ஸ் 38 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
- முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்தது.
- டெல்லி அணியில், அதிரடியாக ஆடிய அலிஸ் கேப்சி 38 பந்துகளில் ஆட்டமிழந்தார்.
மும்பை:
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை டிஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆட்டத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக எலிஸ் பெர்ரி 67 ரன்கள் (நாட் அவுட்) சேர்த்தார்.
இதையடுத்து 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் துவக்க வீராங்கனை ஷபாலி வர்மா ரன் எதுவும் எடுக்காமல் வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்தார். கேப்டன் மெக் லேனிங் 15 ரன்களில் வெளியேறினார். அதிரடியாக ஆடிய அலிஸ் கேப்சி 38 பந்துகளில் ஆட்டமிழந்தார். ஜெமிமா ரோட்ரிக்ஸ் 32 ரன்கள் எடுத்தார்.
அதன்பின் மரிசான் கேப், ஜெஸ் ஜோனாசன் இருவரும் நிதானமாக ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். கடைசி ஓவரின் 4வது பந்தில் பவுண்டரி அடித்து ஜோனாசன் வெற்றியை உறுதி செய்தார். டெல்லி அணி 2 பந்துகள் மீதமிருந்த நிலையில், 4 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் சேர்த்தது. இதனால் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மரிசான் கேப் 32 ரன்களுடனும், ஜோனாசன் 29 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
- முதலில் ஆடிய பெங்களூரு 174 ரன்கள் எடுத்தது.
- தொடர்ந்து ஆடிய டெல்லி 151 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது.
பெங்களூரு:
16-வது ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பெங்களூரில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு, டெல்லி கேப்பிட்டல் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 174 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரரான விராட் கோலி அரை சதமடித்து அவுட்டானார். மஹிபால் லாம்ரோர் 26 ரன்னிலும், மேக்ஸ்வெல் 24 ரன்னிலும், டுபிளிசிஸ் 22 ரன்னிலும் அவுட்டாகினர்.
டெல்லி அணி சார்பில் மிட்செல் மார்ஷ், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து, 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. தொடக்கம் முதல் டெல்லி விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மணீஷ் பாண்டே மட்டும் தாக்குப்பிடித்து அரை சதமடித்து ஆட்டமிழந்தார். அக்சர் படேல் 21 ரன்னும், டேவிட் வார்னர் 19 ரன்னும் எடுத்தனர்.
கடைசி கட்டத்தில் நோர்க்யா 23 ரன்கள் எடுத்தார்.
இறுதியில், டெல்லி அணி 9 விக்கெட்டுக்கு 151 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 23 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.
பெங்களூரு அணி சார்பில் விஜயகுமார் விஷாக் 3 விக்கெட்டும், சிராஜ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
அதன்படி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் முதலில் களம் இறங்கியது. ரபாடா நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்த ஆர்சிபி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்களே அடித்தது. விராட் கோலி 41 ரன்னும், மொயீன் அலி 32 ரன்களும் சேர்த்தனர்.
பின்னர் 150 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேப்பிட்டல்ஸ் களம் இறங்கியது. தொடக்க வீரர் தவான் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார். அடுத்து பிரித்வி ஷா உடன் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அணியின் ஸ்கோர் 69 ரன்னாக இருக்கும்போது பிரித்வி ஷா 28 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த இங்கிராம் 22 ரன்னிலும், ரிஷப் பந்த் 18 ரன்னிலும், கிறிஸ் மோரிஸ் ரன்ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். ஷ்ரேயாஸ் அய்யர் 67 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ஒரு கட்டத்தில் டெல்லி அணி 6 பந்தில் மூன்று விக்கெட்டுக்களை இழந்ததால் ஆட்டத்தில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
என்றாலும், டெல்லி கேப்பிட்டல்ஸ் 18.4 ஓவரில் 152 ரன்கள் எடுத்து நான்கு விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆர்சிபி தான் விளையாடிய ஆறு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது.






