என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெல்லி அணி"

    • டெல்லியில் ஒட்டுமொத்த திருமணம் தொடர்பான வணிகம் ரூ.1,000 கோடியைத் தாண்டும் என்று மதிப்பிட்டுள்ளது.
    • தங்கம் மற்றும் வெள்ளி வர்த்தகத்தில் மட்டும் சுமார் ரூ.200 கோடி வருவாய் கிடைக்கும்.

    தேசிய தலைநகரில் இன்று அட்சய திருதியை முன்னிட்டு இன்று ஒரே நாளில் சுமார் 21,000 திருமணங்கள் நடைபெற்றுள்ளது. இதனால், டெல்லியில் திருமணம் தொடர்பான வணிகங்கள் ஒரே நாளில் ரூ.1,000 கோடியைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்து நாட்காட்டி மாதமான வைசாகத்தின் பிரகாசமான பாதியின் மூன்றாம் நாளில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் அட்சய திருதியை, இந்த ஆண்டு புதன்கிழமை (இன்று) கொண்டாடப்பட்டது.

    இதுகுறித்து வர்த்தக மற்றும் தொழில்துறை சபை கூறுகையில்," இது திருமண சீசனின் உச்ச நாட்களில் ஒன்றாகும். இது விருந்து அரங்குகள், ஹோட்டல்கள், கேட்டரிங் நிறுவனங்கள், சலூன்கள், அலங்கார நிறுவனங்கள், நிகழ்வு மேலாளர்கள் மற்றும் இசைக்குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு வணிகங்களுக்கு பயனளிக்கிறது.

    இன்று டெல்லியில் ஒட்டுமொத்த திருமணம் தொடர்பான வணிகம் ரூ.1,000 கோடியைத் தாண்டும் என்று மதிப்பிட்டுள்ளது.

    தேவை அதிகமாக இருப்பதால் விருந்து அரங்குகள் மற்றும் ஹோட்டல்களின் விலைகள் 10-15 சதவீதம் அதிகரித்துள்ளன.

    தங்கம் மற்றும் வெள்ளி வர்த்தகத்தில் மட்டும் சுமார் ரூ.200 கோடி வருவாய் கிடைக்கும்" என்றார்.

    மேலும், "இருப்பினும், தங்கத்தின் விலை சாதனை அளவில் உயர்ந்துள்ளதால், வாங்குபவர்கள் இலகுரக நகைகளில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

    தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு அட்சய திருதியை அன்று ரூ.73,500 ஆக இருந்த பத்து கிராம் தங்கத்தின் விலை தற்போது ரூ.97,000 ஆக உள்ளது.

    இதன் விளைவாக, வாடிக்கையாளர் தேவையை பூர்த்தி செய்ய வர்த்தகர்கள் சிறிய, இலகுவான தங்கம் மற்றும் வைர நகைகளில் கவனம் செலுத்துகின்றனர்.

    குடும்பங்கள் தங்கள் திருமண பட்ஜெட்டில் சுமார் 10 சதவீதத்தை ஆடைகளுக்காகவும், 15 சதவீதத்தை நகைகளுக்காகவும், தலா 5 சதவீதத்தை மின்னணு பொருட்கள், இனிப்புகள் மற்றும் உலர் பழங்களுக்காகவும் செலவிடுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது" என்றார்.

    சிடிஐ-ன் மூத்த துணைத் தலைவர் தீபக் கார்க் கூறுகையில், "பரிசுப் பொருட்கள் செலவினன் சுமார் 4 சதவீதம் ஆகும்.

    சேவைகள் பிரிவில், பட்ஜெட்டில் 5 சதவீதம் பொதுவாக விருந்து அரங்குகள் மற்றும் ஹோட்டல்களுக்கும், 3 சதவீதம் நிர்வாகத்திற்கும், 10 சதவீதம் கூடாரம் மற்றும் அலங்கார சேவைகளுக்கும், மேலும் 10 சதவீதம் கேட்டரிங் போன்ற பிற சேவைகளுக்கும் செல்கிறது என்று அவர் கூறினார்.

    மலர் அலங்காரம் மொத்த செலவுகளில் 4 சதவீதம் ஆகும், அதே நேரத்தில் போக்குவரத்து, புகைப்படம் எடுத்தல் மற்றும் இசை தொடர்பான சேவைகள் ஆகியவை சுமார் 15 சதவீதமாகும்" என்றார்.

    • 46-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
    • சமபலம் வாய்ந்த அணிகள் மோதும் இந்த ஆட்டத்தில் யார் கை ஓங்கும் என்பதை கணிப்பது கடினமாகும்.

    டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடக்கும் 46-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    டெல்லி அணி 8 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 2 தோல்வியுடன் (மும்பை, குஜராத் அணிகளிடம்) வலுவான நிலையில் உள்ளது.

    பெங்களூரு அணி 9 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 3 தோல்வி (குஜராத், டெல்லி, பஞ்சாப் அணிகளிடம்) அடைந்துள்ளது.

    இன்றைய போட்டியில் டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வெ்னற ஆர்சிபி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    இதனால், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில், அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 41 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து, ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 34 ரன்கள், அபிஷேக் போரல் 28, பிளெசிஸ் 22, அசார் படேல் 15 ரன்கள் எடுத்தனர்.

    மேலும், புவனேஷ்வர் குமார் மற்றும் ஜோஷ் ஹாசல்வுட் தலா 2 விக்கெட்டுகளும், யாஷ் தயால் மற்றும் குருணல் பாண்டியா தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

    இந்த ஆட்டத்தின் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 162 ரன்கள் எடுத்தது. இதன்மூலம், 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களம் இறங்குகிறது.

    • 46-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
    • சமபலம் வாய்ந்த அணிகள் மோதும் இந்த ஆட்டத்தில் யார் கை ஓங்கும் என்பதை கணிப்பது கடினமாகும்.

    டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடக்கும் 46-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    டெல்லி அணி 8 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 2 தோல்வியுடன் (மும்பை, குஜராத் அணிகளிடம்) வலுவான நிலையில் உள்ளது.

    பெங்களூரு அணி 9 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 3 தோல்வி (குஜராத், டெல்லி, பஞ்சாப் அணிகளிடம்) அடைந்துள்ளது. பெங்களூரு அணியில் பேட்டிங்கில் விராட்கோலி சூப்பர் பார்மில் இருக்கிறார்.

    சொந்த மண்ணில் நடந்த டெல்லிக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி தோற்றது. அதற்கு பதிலடி கொடுத்து புள்ளி பட்டியலில் ஏற்றம் காண பெங்களூரு அணி வரிந்து கட்டும். சமபலம் வாய்ந்த அணிகள் மோதும் இந்த ஆட்டத்தில் யார் கை ஓங்கும் என்பதை கணிப்பது கடினமாகும்.

    இவ்விரு அணிகளும் இதுவரை 32 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் பெங்களூரு 19 ஆட்டத்திலும், டெல்லி 12 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது.

    இந்நிலையில், இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வெ்னற ஆர்சிபி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்குகிறது.

    • உத்தரபிரதேச அணி பெற்ற 2-வது வெற்றியாகும்.
    • டெல்லி அணி முதல் தோல்வியை தழுவியது.

    சென்னை:

    தமிழ்நாடு ஹாக்கி அமைப்பு சார்பில் 14-வது ஹாக்கி இந்தியா தேசிய சீனியர் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

    இதில் நடப்பு சாம்பியன் பஞ்சாப், தமிழ்நாடு,டெல்லி, கேரளா உள்பட 30 அணிகள் பங்கேற்றுள்ளன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடத்தை பிடிக்கும் அணி கால் இறுதிக்கு தகுதி பெறும்.

    போட்டியின் 4-வது நாளான இன்று காலை நடந்த முதல் ஆட்டத்தில் 'எப்' பிரிவில் உள்ள உத்தர பிரதேசம்-டெல்லி அணிகள் மோதின. இதில் உத்தர பிரதேசம் 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

    உத்தரபிரதேச அணியில் சந்தன் சிங் (4-வது நிமிடம்), அருண் விகாரி (19), மனிஷ் விகாரி (20) பரால் முகமது (26) கோல் அடித்தனர். டெல்லி அணி தரப்பில் கோவிந்த் சிங் 17-வது நிமிடத்தில் கோலை பதிவு செய்தார்.

    உத்தரபிரதேச அணி பெற்ற 2-வது வெற்றியாகும். அந்த அணி ஏற்கனவே கேரளாவை 6-0 என்ற கணக்கில் வென்று இருந்தது. டெல்லி அணி முதல் தோல்வியை தழுவியது.

    'சி' பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழக அணி இன்று மாலை 3.45 மணிக்கு அந்தமான் நிகோபாரை சந்திக்கிறது. தமிழக அணி தொடக்க ஆட்டத்தில் ஆந்திராவை 7-0 என்ற கணக்கில் வென்றது. 2-வது ஆட்டத்தில் மத்திய பிரதேசத்தை 2-2 என்ற கோல் கணக்கில் 'டிரா' செய்தது. கால் இறுதிக்கு முன்னேற வேண்டுமானால் தமிழக அணி அந்தமான் நிக்கோபாரை அதிக கோல்கள் வித்தியாசத்தில் வெல்ல வேண்டும்.

    • பிசிசிஐ-ன் விதிமுறையால் ம், பண்ட், ஜடேஜா உள்ளிட்ட வீரர்கள் ரஞ்சியில் களமிறங்கவுள்ளனர்.
    • விராட் கோலி, கடைசியாக 2012-ம் ஆண்டில் தான் ரஞ்சி டிராபி தொடரில் விளையாடி இருந்தார்.

    மும்பை:

    இந்திய அணியின் மூத்த வீரர்கள் உட்பட அனைவரும் உள்ளூர் போட்டிகளில் விளையாடினால் மட்டுமே இனி இந்திய அணியில் இடம் கிடைக்கும் என பிசிசிஐ திட்டவட்டமாக அறிவித்து உள்ளது. பிசிசிஐ-ன் விதிமுறையால், பண்ட், ஜடேஜா உள்ளிட்ட வீரர்கள் ரஞ்சியில் களமிறங்கவுள்ளனர்.

    இந்த நிலையில் மூத்த வீரரான விராட் கோலி தேசிய அளவில் நடைபெற உள்ள டெஸ்ட் தொடரான ரஞ்சி டிராபி தொடரில் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

    விராட் கோலி, கடைசியாக 2012-ம் ஆண்டில் தான் ரஞ்சி டிராபி தொடரில் விளையாடி இருந்தார். அவர் அப்போது டெல்லி மாநில அணிக்காக விளையாடி இருந்தார். இப்போதும் அவரது பெயர் டெல்லி மாநில கிரிக்கெட் அமைப்பின் பரிசீலனையில் உள்ளது. அவரை ரஞ்சி டிராபி அணியில் சேர்ப்பதா? வேண்டாமா? என குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது.

    விராட் கோலிக்கு கழுத்து வலி ஏற்பட்டு இருப்பதாகவும், அதற்காக அவர் ஊசி செலுத்தி கொண்டு இருப்பதாகவும் வெளியாகி இருக்கும் தகவல் தான் இந்த குழப்பத்துக்கு காரணம். இந்த நிலையில். டெல்லி மாநில கிரிக்கெட் அமைப்பின் கூட்டம் நடைபெற உள்ளது. அதில் விராட் கோலியின் பெயரை அணியில் சேர்க்கலாமா? வேண்டாமா? என்ற முடிவு எட்டப்படும் என கூறப்படுகிறது.

    விராட் கோலி விளையாட மறுத்ததால் கழுத்து வலி என்ற காரணம் சொல்லப்படுகிறதா? அல்லது உண்மையாகவே அவருக்கு கழுத்து வலி இருக்கிறதா? என சமூக வலைதளங்களில் காரசார விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

    அதன்படி எந்த வீரர் உள்ளூர் போட்டிகளில் விளையாடவில்லையோ, அந்த வீரரை பிசிசிஐ நடத்தும் எந்த கிரிக்கெட் தொடரில் இருந்தும் நீக்கும் முடிவு எடுக்கப்படும் என்றும், ஐபிஎல் தொடரிலும் கூட அந்த வீரர் விளையாட தடை விதிக்கப்படும் எனவும் கூறப்பட்டு இருக்கிறது. 

    • விராட் கோலிக்கு கேப்டன் பதவியை வழங்க டெல்லி மாநில கிரிக்கெட் சங்கம் முடிவெடுத்து அவரிடம் கூறியது.
    • விராட் கோலி அந்த பதவி வேண்டாம் என்றும் சாதாரண ஒரு வீரராக விளையாட விருப்பப்படுகிறேன் என கூறியுள்ளார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி கடந்த சில தொடர்களாகவே மோசமான பேட்டிங் பார்மை வெளிப்படுத்தி வருவதால் அவர் மீது பெரிய அளவில் விமர்சனம் எழுந்தது. அதிலும் குறிப்பாக ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் ஒரே மாதிரியாக தொடர்ச்சியாக ஆட்டம் இழந்தது பலரது மத்தியிலும் கேள்வியை எழுப்பியது.

    இதன் காரணமாக தற்போது 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் டெல்லி அணிக்காக ரஞ்சி தொடரில் விளையாட விராட் கோலி முடிவு செய்துள்ளார். மேலும் தனது பேட்டிங்கில் சிறிய சிறிய மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்பதற்காக முன்னாள் பேட்டிங் பயிற்சியாளரான சஞ்சய் பாங்கருடன் இணைந்து அவர் பயிற்சி எடுத்து வருகிறார்.

    இந்நிலையில் மீண்டும் 12 ஆண்டுகள் கழித்து ரஞ்சி போட்டியில் விளையாட இருக்கும் முன்னாள் இந்திய கேப்டனான விராட் கோலியை வேறொருவரின் தலைமைக்கு கீழ் விளையாட வைக்காமல் அவருக்கு கேப்டன் பதவியை வழங்க டெல்லி மாநில கிரிக்கெட் சங்கம் முடிவெடுத்து அவரிடம் கூறியது.

    ஆனால் அதனை மறுத்த விராட் கோலி அந்த பதவி வேண்டாம் என்றும் சாதாரண ஒரு வீரராக விளையாட விருப்பப்படுகிறேன் என்று தெரிவித்துள்ளார். தற்போது உள்ள சூழலில் டெல்லி அணியில் எந்தெந்த வீரர்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்று தனக்கு தெரியாது என்றும் அதன் காரணமாக தானும் அணியில் ஒரு அங்கமாக இணைந்து சாதாரண வீரராக விளையாட விரும்புவதாகவும் விராட் கோலி கூறியுள்ளாராம்.

    • 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் டெல்லி அணிக்காக விராட் கோலி விளையாட உள்ளார்.
    • ஆயோஷ் பதோனி தலைமையில் டெல்லி அணி களமிறங்குகிறது.

    இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி. கடந்த சில தொடர்களில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் இவர் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தனர். அதிலும் குறிப்பாக ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் ஒரே மாதிரியாக தொடர்ச்சியாக ஆட்டம் இழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்திய அணியின் பேட்டிங் சொதப்பிய நிலையில், அனைத்து இந்திய வீரர்களும் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என கட்டுப்பாடு விதித்தது. அதன்படி அனைத்து வீரர்களும் ரஞ்சி டிராபியில் விளையாடி வருகின்றனர்.

    அந்த வகையில் கழுத்து வலி காரணமாக ஓய்வு இருந்து வந்த விராட் கோலி, தற்போது ரஞ்சி டிராபியில் டெல்லி அணிக்காக களமிறங்க உள்ளார். 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் டெல்லி அணிக்காக விராட் கோலி விளையாட உள்ளார். சீனியர் வீரரான விராட் கோலிக்கு கேப்டன் பதவு கொடுக்க டெல்லி அணி நிர்வாகம் முன்வந்த நிலையில் அதனை கோலி நிகாரித்தார்.

    இதனால் ஆயோஷ் பதோனி தலைமையில் டெல்லி அணி களமிறங்குகிறது. வருகிற 30-ந் தேதி ரெயில்வே அணியுடன் டெல்லி அணி மோதுகிறது.

    இந்நிலையில் டெல்லி அணியுடன் விராட் கோலி பேட்டிங் பயிற்சி செய்யும் வீடியோ மற்றும் பீல்டிங் செய்யும் வீடியோ என கோலி குறித்து பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்த பயிற்சியின் போது அவரது ரசிகருக்கு தனது கையுறையை பரிசாக வழங்கினார். இது தொடர்பான வீடியோவும் வைரலாகி வருகிறது.

    • டெல்லி மற்றும் ரெயில்வேஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நாளை தொடங்குகிறது.
    • டெல்லி அணிக்காக விராட் கோலி விளையாடுகிறார்.

    டெல்லி:

    12 ஆண்டுகளுக்குப் பிறகு விராட் கோலி ரஞ்சி டிராபி தொடரில் விளையாட இருக்கிறார். டெல்லி மற்றும் ரெயில்வேஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் டெல்லி அணிக்காக விராட் கோலி விளையாடுகிறார்.

    இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் வீரர் விராட் கோலி பங்கேற்கும் போட்டி என்பதால் டெல்லி - ரெயில்வேஸ் அணிகள் மோதும் போட்டி நேரலையில் ஒளிபரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டி நாளை அருண் ஜெட்லி மைதானத்தில் தொடங்குகிறது.

    கடந்த வாரம் வரை டெல்லி மற்றும் ரெயில்வேஸ் அணிகள் மோதும் போட்டியை நேரலையில் ஒளிபரப்பு செய்வதற்கான எந்த திட்டமும் இல்லை. ஆனால், தற்போது விராட் கோலிக்கு கூடும் ரசிகர்களின் எண்ணிக்கையால் பிசிசிஐ இந்த முடிவை எடுத்து இருக்கிறது. ஜியோ சினிமா விராட் கோலி ஆடும் போட்டியை ஒளிபரப்பும் எனவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஸ்போர்ட்ஸ் 18 தொலைக்காட்சியிலும் இந்த போட்டியை நேரலையில் பார்க்கலாம்.

    டெல்லி - ரெயில்வேஸ் அணிகள் ஆடும் போட்டி நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படாமல் போனால் விராட் கோலியை பார்க்க வேண்டும் என அவரது தீவிர ரசிகர்கள் மைதானத்திற்கு வர முயல்வார்கள். எனவே, மைதானத்திற்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கையை குறைக்க இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    விராட் கோலி பயிற்சி செய்யும் போதே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அருண் ஜெட்லி மைதானத்தில் கூடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • டெல்லி மற்றும் ரெயில்வேஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று தொடங்கியது.
    • டெல்லி அணிக்காக விராட் கோலி விளையாடி வருகிறார்.

    புதுடெல்லி:

    விராட் கோலி 12 ஆண்டுக்குப் பிறகு ரஞ்சி டிராபி தொடரில் விளையாடுகிறார். டெல்லி மற்றும் ரெயில்வேஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் டெல்லி அணிக்காக விராட் கோலி விளையாடி வருகிறார்.

    இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் வீரர் விராட் கோலி பங்கேற்கும் போட்டி என்பதால் டெல்லி-ரெயில்வேஸ் அணிகள் மோதும் போட்டி நேரலையில் ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டி அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று தொடங்கியது.

    இந்நிலையில், டெல்லி அணிக்காக விளையாடும் விராட் கோலியைக் காண காலையில் இருந்தே ரசிகர்கள் திரண்டனர்.

    ரசிகர் ஒருவர் பாதுகாப்பையும் மீறி மைதானத்தினுள் சென்று விராட் கோலியின் காலில் விழுந்தார். உடனே பதறிய கோலி அவரை தூக்கி விட்டார். அங்கு வந்த பாதுகாவலர்கள் அவரை மைதானத்தில் இருந்து அப்புறப்படுத்தினர்.

    விராட் கோலி ஆடும் இந்தப் போட்டியை ஜியோ சினிமா ஒளிபரப்புகிறது. விராட் கோலிக்கு கூடும் ரசிகர்களின் எண்ணிக்கையால் பிசிசிஐ இந்த முடிவை எடுத்து இருக்கிறது.

    விராட் கோலி பயிற்சி செய்யும்போதே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அருண் ஜெட்லி மைதானத்தில் கூடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×