என் மலர்
நீங்கள் தேடியது "அட்சய திருதி"
- டெல்லியில் ஒட்டுமொத்த திருமணம் தொடர்பான வணிகம் ரூ.1,000 கோடியைத் தாண்டும் என்று மதிப்பிட்டுள்ளது.
- தங்கம் மற்றும் வெள்ளி வர்த்தகத்தில் மட்டும் சுமார் ரூ.200 கோடி வருவாய் கிடைக்கும்.
தேசிய தலைநகரில் இன்று அட்சய திருதியை முன்னிட்டு இன்று ஒரே நாளில் சுமார் 21,000 திருமணங்கள் நடைபெற்றுள்ளது. இதனால், டெல்லியில் திருமணம் தொடர்பான வணிகங்கள் ஒரே நாளில் ரூ.1,000 கோடியைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்து நாட்காட்டி மாதமான வைசாகத்தின் பிரகாசமான பாதியின் மூன்றாம் நாளில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் அட்சய திருதியை, இந்த ஆண்டு புதன்கிழமை (இன்று) கொண்டாடப்பட்டது.
இதுகுறித்து வர்த்தக மற்றும் தொழில்துறை சபை கூறுகையில்," இது திருமண சீசனின் உச்ச நாட்களில் ஒன்றாகும். இது விருந்து அரங்குகள், ஹோட்டல்கள், கேட்டரிங் நிறுவனங்கள், சலூன்கள், அலங்கார நிறுவனங்கள், நிகழ்வு மேலாளர்கள் மற்றும் இசைக்குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு வணிகங்களுக்கு பயனளிக்கிறது.
இன்று டெல்லியில் ஒட்டுமொத்த திருமணம் தொடர்பான வணிகம் ரூ.1,000 கோடியைத் தாண்டும் என்று மதிப்பிட்டுள்ளது.
தேவை அதிகமாக இருப்பதால் விருந்து அரங்குகள் மற்றும் ஹோட்டல்களின் விலைகள் 10-15 சதவீதம் அதிகரித்துள்ளன.
தங்கம் மற்றும் வெள்ளி வர்த்தகத்தில் மட்டும் சுமார் ரூ.200 கோடி வருவாய் கிடைக்கும்" என்றார்.
மேலும், "இருப்பினும், தங்கத்தின் விலை சாதனை அளவில் உயர்ந்துள்ளதால், வாங்குபவர்கள் இலகுரக நகைகளில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு அட்சய திருதியை அன்று ரூ.73,500 ஆக இருந்த பத்து கிராம் தங்கத்தின் விலை தற்போது ரூ.97,000 ஆக உள்ளது.
இதன் விளைவாக, வாடிக்கையாளர் தேவையை பூர்த்தி செய்ய வர்த்தகர்கள் சிறிய, இலகுவான தங்கம் மற்றும் வைர நகைகளில் கவனம் செலுத்துகின்றனர்.
குடும்பங்கள் தங்கள் திருமண பட்ஜெட்டில் சுமார் 10 சதவீதத்தை ஆடைகளுக்காகவும், 15 சதவீதத்தை நகைகளுக்காகவும், தலா 5 சதவீதத்தை மின்னணு பொருட்கள், இனிப்புகள் மற்றும் உலர் பழங்களுக்காகவும் செலவிடுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது" என்றார்.
சிடிஐ-ன் மூத்த துணைத் தலைவர் தீபக் கார்க் கூறுகையில், "பரிசுப் பொருட்கள் செலவினன் சுமார் 4 சதவீதம் ஆகும்.
சேவைகள் பிரிவில், பட்ஜெட்டில் 5 சதவீதம் பொதுவாக விருந்து அரங்குகள் மற்றும் ஹோட்டல்களுக்கும், 3 சதவீதம் நிர்வாகத்திற்கும், 10 சதவீதம் கூடாரம் மற்றும் அலங்கார சேவைகளுக்கும், மேலும் 10 சதவீதம் கேட்டரிங் போன்ற பிற சேவைகளுக்கும் செல்கிறது என்று அவர் கூறினார்.
மலர் அலங்காரம் மொத்த செலவுகளில் 4 சதவீதம் ஆகும், அதே நேரத்தில் போக்குவரத்து, புகைப்படம் எடுத்தல் மற்றும் இசை தொடர்பான சேவைகள் ஆகியவை சுமார் 15 சதவீதமாகும்" என்றார்.
- அட்சயா என்ற சொல்லுக்கு ஒருபோதும் குறைவில்லாதது என்று பொருள்.
- அட்சய திருதியை நாளில் விஷ்ணுவின் பாதங்களில் சங்கு சமர்ப்பித்து வழிபடலாம்.
இந்த ஆண்டு அட்சய திருதியை வருகிற 10-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. புதிய வணிகம், தொழில் தொடங்குவதற்கும், தங்கம், வெள்ளி பொருட்களை வாங்குவதற்கும் முக்கியமான நாளாக கருதப்படுகிறது.
அட்சயா என்ற சொல்லுக்கு ஒருபோதும் குறைவில்லாதது என்று பொருள். இந்த நாளில் வாங்கும் பொருட்கள் மென்மேலும் வளரும், இந்த நாளில் தொடங்கப்பட்ட எந்தவொரு முயற்சியும் தொடர்ச்சியாக வளர்ந்து நன்மையைக் கொடுக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. பண நெருக்கடி காரணமாக தங்கம், வெள்ளி போன்ற மதிப்புமிக்க பொருட்களை வாங்க முடியாத நிலையில் அதற்கு மாற்றாக வாங்க வேண்டிய பொருட்கள் குறித்து பார்ப்போம்.

தானியங்கள்:
வெண் கடுகு, அதாவது மஞ்சள் நிற கடுகு, பார்லி போன்ற தானியங்கள் அட்சய திருதியை அன்று லட்சுமி தேவியை வழிபட பயன்படுத்தப்படுகிறது. எனவே இந்த பொருட்களை அன்றைய தினம் வாங்குவது நல்லது. அரிசி போன்ற தானியங்கள், வளத்தின் அடையாளமாக விளங்கும் பருப்பு வகைகள், பசுமை மற்றும் ஆரோக்கியத்தின் அடையாளமான காய்கறிகள், புனிதப்பொருளான நெய் போன்றவற்றையும் வாங்கலாம்.
சோழி:
அட்சய திருதியை அன்று சோழி வாங்கலாம். லட்சுமி தேவியின் பாதங்களில் சோழிகளை காணிக்கை செலுத்தி வழிபடலாம். மறுநாள் அந்த சோழிகளை சிவப்பு துணியில் பொதிந்து பாதுகாப்பாக வைக்கவும். இது பொருளாதார வளர்ச்சி அடைய உறுதி செய்யும் என நம்பப்படுகிறது.

மண்பானை:
அட்சய திருதியை நாளில் வீட்டில் மண்பானை இருப்பது லட்சுமி தேவியை மகிழ்விக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. அன்றைய தினம் மண்பானை வாங்கி வைப்பது வீட்டில் மகிழ்ச்சியையும், செழிப்பையும் அதிகரிக்கும் என்ற கருத்தும் நிலவுகிறது.
சங்கு:
அட்சய திருதியை நாளில் விஷ்ணுவின் பாதங்களில் சங்கு சமர்ப்பித்து வழிபடலாம். அவ்வாறு செய்வதன் மூலம் விஷ்ணுவும், லட்சுமி தேவியும் மகிழ்ச்சி அடைவார்கள், வீட்டில் மகிழ்ச்சி தங்குவதும் உறுதி செய்யப்படும் என்ற கருத்தும் நிலவுகிறது.

ஸ்ரீசக்கரம்:
அட்சய திருதியை அன்று ஸ்ரீசக்கரம் வரைபடமும் வாங்கலாம். அதனை வீட்டின் பூஜை அறையில் வைக்க வேண்டும். இதன் மூலம் விஷ்ணு மற்றும் லட்சுமி தேவியின் தெய்வீக இருப்பிடம் உங்கள் வீட்டில் தங்கும் என்பது ஐதீகம்.






