என் மலர்
டெல்லி
- மொரீசியஸ் பிரதமர் நவீன் ராம்கூலம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
- துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை மொரீசியஸ் பிரதமர் இன்று சந்தித்தார்.
புதுடெல்லி:
மொரீசியஸ் பிரதமர் நவீன் ராம்கூலம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் மொரீசியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் பிரதமர் மோடியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இந்தியா மற்றும் மொரீசியஸ் இடையே சிறப்பு ஆயுஷ் மையம், ஹெலிகாப்டர்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இதற்கிடையே, துணை ஜனாதிபதியான சி.பி.ராதாகிருஷ்ணனை மொரீசியஸ் பிரதமர் நவீன் ராம்கூலம் இன்று சந்தித்தார்.
இந்நிலையில், ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை மொரீசியஸ் பிரதமர் நவீன் ராம்கூலம் இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அப்போது இரு தரப்பு உறவுகள் மேலும் வலுவடையும் என நம்பிக்கை தெரிவித்தனர்.
- எடப்பாடி பழனிசாமி இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றார்.
- இன்று இரவு உள்துறை மந்திரி அமித் ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளார்.
புதுடெல்லி:
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவருடன் மூத்த தலைவர்களான கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி ஆகியோரும் சென்றனர்.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள துணை ஜனாதிபதி மாளிகையில் சி.பி.ராதாகிருஷ்ணனை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பழனிசாமி சந்தித்தார். அப்போது அவருக்கு வாழ்த்து தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, இந்தியாவின் துணை ஜனாதிபதியாக கொங்கு மண்டலத்தைச் சார்ந்த தமிழர் ராதாகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டது தமிழகம் பெற்றுள்ள பெருமை என தெரிவித்தார்.
அவருடன் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் முனுசாமி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி, பாராளுமன்ற கட்சித் தலைவர் மு. தம்பிதுரை, எம்.பி.க்கள் சி.வி.சண்முகம், இன்பதுரை, தனபால் ஆகியோர் உடனிருந்தனர்.
இன்று இரவு 8 மணிக்கு மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளார்.
- இந்தியா முதல் போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்சையும், 2வது போட்டியில் பாகிஸ்தானையும் வீழ்த்தியது.
- ஆசியக் கோப்பை தொடரில் இந்தியா முதல் அணியாக சூப்பர் 4 சுற்றுக்கு தகுதிபெற்றது.
புதுடெல்லி:
ஆசியக் கோப்பை தொடரில் சூரியகுமார் தலைமையிலான இந்தியா முதல் அணியாக சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
முதல் போட்டியிலேயே ஐக்கிய அரபு எமிரேட்சை வீழ்த்திய இந்தியா, 2வது போட்டியில் பாகிஸ்தனையும் வீழ்த்தியது. குரூப் ஏ பிரிவில் முதலிடம் பிடித்துள்ள இந்தியா ரன்ரேட் அடிப்படையில் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
இதற்கிடையே, போட்டி முடிந்ததும் இந்திய அணி வீரர்கள் கை குலுக்காமல் சென்றது குறித்து பாகிஸ்தான் புகார் அளித்துள்ளது.
இந்நிலையில், இந்தியா, பாகிஸ்தான் போட்டி குறித்து சவுரவ் கங்குலி கூறியதாவது:
இந்திய அணியை அனைத்து நாட்களிலும் வீழ்த்தும் தரம் எந்த ஆசிய அணியிடமும் இல்லை. பாகிஸ்தான் நமக்கு பொருத்தமாக இல்லை என்பதை மரியாதையுடன் சொல்வேன். ஏனெனில் அந்த அணியில் தரம் தடுமாறுவதை என்னால் பார்க்க முடிகிறது.
இந்திய அணி நட்சத்திர வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா இல்லாமல் விளையாடுகிறது. இந்திய அணி கிரிக்கெட்டில் வெகுதூரம் முன்னோக்கி இருக்கிறது. பாகிஸ்தான் உள்ளிட்ட மற்ற ஆசிய அணிகள் ஓரிரு நாட்களில் நம்மை தோற்கடிப்பார்கள். மற்றபடி பெரும்பாலான நாளில் நாம் சிறந்த அணியாக இருக்கிறோம்.
நான் 15 ஓவருக்கு பின் போட்டியைப் பார்ப்பதை நிறுத்திவிட்டு மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு எதிராக மான்செஸ்டர் சிட்டி விளையாடிய கால்பந்து போட்டியை பார்த்தேன். ஏனெனில் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கிடையே எந்தப் போட்டியும் இல்லை. கடந்த 5 ஆண்டாக இந்தியா–பாகிஸ்தான் போட்டிக்கு எதிர்பார்ப்பு கொடுக்கிறோம். அது உடனடியாக உடைந்து ஒருதலைபட்சமாக முடிகிறது என தெரிவித்தார்.
- அ.தி.மு.க. மூத்த தலைவர்கள், எம்.பி.க்கள் உடன் இருந்தனர்.
- பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்துவார் என்று தெரிகிறது.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 6 மணிக்கு, சென்னையில் இருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.
துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி ஆகியோரும் உடன் சென்றனர்.
காலை 9 மணி அளவில் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றடைந்தார். அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவரான தம்பி துரை எம்.பி. தலைமையில் எம்.பி.க்கள் சி.வி.சண்முகம், ஐ.எஸ்.இன்பதுரை, தனபால் ஆகியோர் சால்வை அணிவித்து எடப்பாடி பழனிசாமியை வரவேற்றனர்.
சுப்ரீம் கோர்ட் அ.தி.மு.க. வக்கீல்களும் கட்சி நிர்வாகிகளும் திரண்டு அவருக்கு வரவேற்பு அளித்தனர். பின்னர், டெல்லியில் உள்ள தாஜ் மான்சிங் ஓட்டலுக்கு சென்று எடப்பாடி பழனிசாமி தங்கினார்.

துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனை அவரது இல்லத்திற்கு சென்று எடப்பாடி பழனிசாமி பூங்கொத்து கொடுத்தும் சால்வை அணிவித்தும் நேரில் வாழ்த்தினார். அப்போது அ.தி.மு.க. மூத்த தலைவர்கள், எம்.பி.க்கள் உடன் இருந்தனர்.
இதையடுத்து, மத்திய மந்திரி அமித்ஷாவை, இன்று இரவு 8 மணிக்கு எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின்போது தமிழக அரசியல் நிலவரம் பற்றியும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பு குறித்தும் இருவரும் பேசுவதற்கு வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. மேலும் பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு 'பாரத ரத்னா' விருது வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்துவார் என்று தெரிகிறது.
இந்த சந்திப்புகளை முடித்துவிட்டு இன்று இரவு எடப்பாடி பழனிசாமி, டெல்லியில் தங்குகிறார்.
நாளை 17 -ந்தேதி அவர் தமிழகம் திரும்புகிறார். டெல்லியில் இருந்து சென்னைக்கு வராமல், நேரடியாக கோவைக்கு செல்வதற்கு அவர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
டெல்லி செல்வதற்காக இன்று அதிகாலை 5 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்த எடப்பாடி பழனிசாமியை ஏராளமான கட்சித் தொண்டர்கள் விமான நிலையத்திற்கு வந்து உற்சாக வரவேற்பு அளித்து வழி அனுப்பி வைத்தனர்.
- 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இரண்டு முறை நடத்தப்படும் என சிபிஎஸ்இ அறிவித்திருந்தது.
- 2026-27 கல்வியாண்டிலிருந்து 9-ம் வகுப்பில் புத்தகத்தை பார்த்து தேர்வெழுதும் முறைக்கு ஒப்புதல்.
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதித்து மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் அறிவித்துள்ளது.
மாணவர்கள் 75 சதவீதம் வருகைப்பதிவு வைத்திருந்தால் மட்டுமே பொதுத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர் என்று புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், சிபிஎஸ்இ 10ம் வகுப்பில் மாணவர்கள் 5 பாடப்பிரிவுடன் கூடுதலாக 2 பிரிவுகளில் பாடங்களை கற்று தேர்வில் பங்கேற்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இதேபோல், 12ம் வகுப்பில் கூடுதலாக ஒரு பாடப்பிரிவை இணைத்து படிக்க வேண்டும் எனபுதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இரண்டு முறை நடத்தப்படும் என சிபிஎஸ்இ அறிவித்திருந்தது. அதற்கான தகுதி அளவுகோல் மற்றும் விதிமுறைகள் வெளியிடப்பட்டது.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 2026-27 கல்வியாண்டிலிருந்து 9-ம் வகுப்பில் புத்தகத்தை பார்த்து தேர்வெழுதும் முறைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்த கல்வியாண்டு முதல் இது நடைமுறைக்கு வரும் என அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
- பீடிக்கான ஜிஎஸ்டி வரியை குறைக்க பரிந்துரை எனத் தகவல்.
- பீடி- பீகார் ஆகியவை பி-யில்தான் தொடங்குகிறது என காங்கிரஸ் பதிவு.
பீகார் மாநிலம் மெல்ல மெல்ல வளர்ச்சியை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கும்போது காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் மாநிலத்தை அவமதிப்பதில் பிசியாக இருப்பதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் கட்சி சமீபத்தில் bidi-Bihar எனக் கருத்து தெரிவித்திருந்தது. இதற்கு பிரதமர் மோடி பதில் அளிக்கும் வகையில் கூறியிருப்பதாவது:-
பீகாரில் ரெயில் என்ஜின்கள் தயாரிக்கப்பட்டு, ஆப்பிரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆனால், இது காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர்களுக்கு பிடிக்கவில்லை. பீகார் மாநிலம் வளர்ச்சி அடையும் போதெல்லாம், இந்த கட்சிகள் மாநிலத்தை அவமதிப்பதில் பிசியாகிவிடுகின்றன. காங்கிரஸ், ஆர்ஜேடி-யுடன் கூட்டு சேர்ந்து, சமூக ஊடகங்களில் பீகாரை கேலி செய்வதிலும், மாநிலத்தை பீடியுடன் ஒப்பிடுவதிலும் மும்முரமாக உள்ளன. இவர்கள் பீகாரை வெறுக்கிறார்கள்.
இவ்வாறு பிரதமர் மோடி தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
பாஜக தலைமையிலான மத்திய அரசு சமீபத்தில் ஜிஎஸ்டி வரியில் மாற்றம் கொண்டு வர முடிவு செய்தது. இந்த நிலையில், கேரள மாநில காங்கிரஸ் பீடியும், பீகாரும் பி-யில் (Bidi-Bihar) தொடங்குகிறது. இதை ஒரு பாவகமாக கருத முடியாது" எனக் கூறியிருந்தது. பீடி மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க முடிவு செய்துள்ளதை இவ்வாறு காங்கிரஸ் தெரிவித்திருந்தது. இது கடும் விமர்சனத்தை எழுப்பிய நிலையில், போஸ்ட் நீக்கப்பட்டது.
- கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியாவின் ஏற்றுமதி 32.89 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.
- கடந்த ஆகஸ்ட் மாதத்தின் ஏற்றுமதி 35.1 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
இந்தியாவின் ஏற்றுமதி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தை காட்டிலும், கடந்த மாதம் 6.7 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேவேளையில் இறக்குமதி 10 சதவீதம் குறைந்துள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியாவின் ஏற்றுமதி 32.89 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த நிலையில், இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் (கடந்த மாதம்) 35.1 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு 68.53 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த இறக்குமதி, இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 61.59 அமெரிக்க டாலராக குறைந்துள்ளது.
இருந்தபோதிலும், ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகம் என்பதால், கடந்த ஆண்டு 26.49 பில்லியன் டாலராக இருந்த பற்றாக்குறை, இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 35.64 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
2025 ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை இந்தியாவின் ஏற்றுமதி 184.13 பில்லியன் டாலராகும். அதேவேளையில் இறக்குமதி 306.52 பில்லியன் டாலராகும்.
- பீகார் SIR செயல்முறையின்போது 65 வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டதாக புகார்.
- ஆதார் கார்டை 12ஆவது ஆவணமாக எடுத்துக் கொள்ள உச்சநீதிமன்றம் உத்தரவு.
பீகார் மாநிலத்தில் தேர்தல் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதில் முறைகேடு நடந்ததாகவும், 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
இன்றைய விசாரணையின்போது உச்சநீதிமன்றம், பீகார் SIR நடைமுறையில் ஏதாவது முறைகேடு கண்டறியப்பட்டால், உடனடியாக பீகார் SIR நடைமுறை முழுமையாக ரத்து செய்யப்படும். அக்டோபர் 7ஆம் தேதி இறுதி விவாதம் நடைபெறும் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அத்துடன் தற்காலிகமாக இடைக்கால நிவாரணம் ஏதும் அளிக்காமல், இறுதி தீர்ப்பு ஒட்டுமொத்த இந்தியாவுக்குமானதாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 8ஆம் தேதி ஆதார்டு கார்டையும் செல்லுபடியாகும் 12ஆவது ஆவணமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
- வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக விலங்குகள் கொண்டு வரப்பட்டதாக என விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் குழு அமைத்தது.
- சிறப்பு விசாரணைக் குழு உச்சநீதிமன்றத்தில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள ரிலையன்ஸ் அறக்கட்டளையின் வந்தாரா விலங்கு மீட்பு, பராமரிப்பு மற்றும் மறுவாழ்வு முயற்சி மையத்திற்கு முறைகேடாக இந்தியா மற்றும் வெளிநாட்டு விலங்குகள் கொண்டு வரப்பட்டதாக புகார் எழுந்தது. குறிப்பாக யானைகள் கொண்டு வரப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் உச்சநீதிமன்றம் சிறப்பு விசாரணைக் குழுவை (SIT) அமைத்தது.
இந்த குழு விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்த அறிக்கையில் விதிகளை பின்பற்றியே வெளிநாடுகளில் இருந்து விலங்குகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கின் விசாரணையில், "வந்தாரா சட்டங்களை கண்டிப்பாக கடைபிடிக்கிறது. அதைக் கெடுக்காதீர்கள், முழு அறிக்கையை விரிவாகப் பார்க்கலாம்" என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
- இந்தியாவின் பொறியியல் நிலப்பரப்பில் ஒரு அழியாத முத்திரையைப் பதித்த சர்.எம்.விஸ்வேஸ்வரய்யாவுக்கு மரியாதை செலுத்துகிறேன்.
- வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிகளில் எங்கள் என்ஜினீயர்கள் தொடர்ந்து முக்கிய பங்கு வகிப்பார்கள்.
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ்தள பதிவில் கூறியிருப்பதாவது:-
இன்று என்ஜினீயர்கள் தினம். இதையொட்டி இந்தியாவின் பொறியியல் நிலப்பரப்பில் ஒரு அழியாத முத்திரையைப் பதித்த சர்.எம்.விஸ்வேஸ்வரய்யாவுக்கு நான் மரியாதை செலுத்துகிறேன். தங்கள் படைப்பாற்றல் மற்றும் உறுதிப்பாட்டின் மூலம், புதுமைகளை முன்னெடுத்து, துறைகளில் கடுமையான சவால்களைச் சமாளிக்கும் அனைத்து என்ஜினீயர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிகளில் எங்கள் என்ஜினீயர்கள் தொடர்ந்து முக்கிய பங்கு வகிப்பார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வக்ஃபு வாரிய திருத்த சட்டத்தின் கீழ் எந்த நியமனங்களையும் மேற்கொள்ளக் கூடாது
- வக்ஃபு வாரிய திருத்த சட்டம் தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
வக்பு திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க, அகில இந்திய மஜ்லிஸ் , ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் இடது சாரிகள், முஸ்லிம் அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் என 70-க்கு மேற்பட்ட மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன.
விசாரணையின்போது 5 மனுக்களை மட்டும் விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதாக சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது. வக்பு திருத்த சட்டத்திற்கு இடைக்கால தடை விதித்தது. மேலும், புதிய வக்பு சட்டத்தின் கீழ் எந்தவொரு நடவடிக்கை அல்லது நியமனங்களையும் மேற்கொள்ளக்கூடாது என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வக்பு வாரிய சட்ட திருத்தத்தின் முழு விதிகளையும் தடை செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதே சமயம் வக்பு வாரிய சட்ட திருத்தத்தின் சில விதிகளுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
வக்பு திருத்தச் சட்டம் 2025 இல், ஒருவர் வக்பு வாரியம் அமைக்க 5 ஆண்டுகள் இஸ்லாம் மதத்தை பின்பற்றி இருக்க வேண்டும் என்ற விதியை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. ஒருவர் இஸ்லாத்தைப் பின்பற்றுபவரா என்பதைத் தீர்மானிப்பதற்கான விதிகள் வகுக்கப்படும் வரை இந்த விதி நிறுத்தி வைக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
வக்பு என அறிவிக்கப்பட்ட சொத்து அரசாங்கச் சொத்தா என்பதைத் தீர்மானித்து உத்தரவுகளைப் பிறப்பிக்கும் அதிகாரத்தை மாவட்ட ஆட்சியருக்கு வழங்கிய வக்பு சட்டத்தின் ஒரு பிரிவை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
மேலும், வக்பு வாரியத்தில் 3 முஸ்லிம் அல்லாத உறுப்பினர்களுக்கு மேல் இருக்கக்கூடாது என்றும், வக்பு கவுன்சிலில் 4 முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மேல் இருக்கக்கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
- தெரு நாய்களையும் காப்பகத்தில் அடைத்து பராமரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
- விலங்குகள் நல ஆர்வலர்கள் ஆட்சேபனை தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
டெல்லியில் உள்ள தேசிய தலைநகர் பகுதியில் (NCR) உள்ள அனைத்து தெரு நாய்களையும் காப்பகத்தில் அடைத்து பராமரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் இரு நீதிபகள் கொண்ட பெஞ்ச் உத்தரவிட்டது.
இதற்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் ஆட்சேபனை தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதனையடுத்து, தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், இந்த விவகாரத்தை மூன்று நீதிபகள் கொண்ட பெஞ்சிற்கு மாற்றினார்.
இதனையடுத்து டெல்லி தெருநாய்களை காப்பங்களில் அடைக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தில் 2 நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்து புதிய உத்தரவை 3 நீதிபதிகள் அமர்வு பிறப்பித்துள்ளது.
பதிலாக தெருநாய்களை பிடித்து கருத்தடை, தடுப்பூசி செலுத்தி மீண்டும் அதே பகுதிகளில் விடலாம் என ஆலோசனை வழங்கியது.
இந்நிலையில், விலங்குகள் நல ஆர்வலர்கள் பசுவை ஒரு விலங்காக கருதுவதில்லை என்று பிரதமர் மோடி வேதனை தெரிவித்தார்.
விஞ்ஞான் பவனில் நடந்த ஒரு நிகழ்வில் பேசுய மோடி, "சமீபத்தில், நான் சில விலங்கு பிரியர்களைச் சந்தித்தேன்" என்று கூற அரங்கத்தில் சிரிப்பலை எழுந்தது. இதையடுத்து பிரதமர் மோடி சிறிது நேரம் நின்று கூட்டத்தினரிடம், "நீங்கள் ஏன் சிரிக்கிறீர்கள்? நம் நாட்டில் பல விலங்கு பிரியர்கள் உள்ளனர், அவர்களில் பெரும்பாலோர் பசுவை ஒரு விலங்காகக் கருதுவதில்லை" என்று கூறினார்.






