என் மலர்
டெல்லி
- வாக்குத் திருட்டு நடப்பது தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ்வர் குமாருக்கு தெரியும்
- இந்திய தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டில் ஈடுபடுபவர்களை பாதுகாப்பதை நிறுத்த வேண்டும்
கடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்கு திருட்டு நடந்ததாக பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி சமீபத்தில் சில புள்ளிவிவரங்களை வெளியிட்டார். அவரது குற்றச்சாட்டை தேர்தல் கமிஷன் நிராகரித்தது.
இதனையடுத்து பீகாரில், 'வாக்காளர் அதிகார யாத்திரை' என்ற பெயரில், வாக்கு திருட்டு குற்றச்சாட்டை முன்வைத்து ராகுல்காந்தி யாத்திரை நடத்தினார்.
இந்நிலையில், வாக்கு திருட்டு தொடர்பாக இன்று மீண்டும் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, "கர்நாடகாவில் உள்ள ஆலந்து தொகுதியில் 6018 வாக்காளர்களை நீக்க முயன்றனர். 2023 தேர்தலில் ஆலந்தில் நீக்கப்பட்ட மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை எங்களுக்குத் தெரியாது. அவை 6,018 ஐ விட மிக அதிகம். ஆனால் அந்த 6018 வாக்காளர்களை நீக்கியபோது யாரோ ஒருவர் பிடிபட்டார், அது தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டது. அங்குள்ள வாக்குச்சாவடி நிலை அதிகாரி தனது மாமாவின் வாக்கு நீக்கப்பட்டதை கண்டுபிடித்தார். எனவே அவர் தனது மாமாவின் வாக்கு நீக்கப்பட்டதைச் சரிபார்த்தார், மேலும் அந்த வாக்கை நீக்கியது ஒரு பக்கத்து வீட்டுக்காரர் என்பதைக் கண்டுபிடித்தார். அவர் தன் பக்கத்து வீட்டுக்காரரிடம் கேட்டார். ஆனால் நான் எந்த வாக்கையும் நீக்கவில்லை என்று அவர் கூறினார். இந்த விஷயம் வாக்கை நீக்கிய நபருக்கோ அல்லது வாக்கு நீக்கப்பட்ட நபருக்கோ தெரியாது. அப்படியானால் வேறு சில நபர்கள் வாக்காளர்களை நீக்கியுள்ளனர்.
ஆலந்து தொகுதியில் வாக்காளர்களைப் போல ஆள்மாறாட்டம் செய்து 6018 விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த விண்ணப்பங்களை தாக்கல் செய்தவர்கள் உண்மையில் அவற்றை ஒருபோதும் தாக்கல் செய்யவில்லை. கம்ப்யூட்டர் மென்பொருளைப் பயன்படுத்தி அவை தானாகவே தாக்கல் செய்யப்பட்டது. கர்நாடகாவிற்கு வெளியே இருந்து, பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்த மொபைல் எண்கள், ஆலந்தில் உள்ள எண்களை நீக்கப் பயன்படுத்தப்பட்டன.
கால் சென்டர்கள், நவீன கணிப்பொறிகள், செயலிகள் கொண்டு வாக்கு திருட்டு மோசடி செய்யப்பட்டுள்ளது : வாக்காளர் நீக்கம் என்பது அனைத்து சட்டமன்ற தொகுதியிலும் நடைபெறவில்லை. மாறாக காங்கிரஸ் கட்சி எந்த இடத்தில் எல்லாம் வெற்றி பெறப் போகிறதோ? என கண்டறிந்து அந்த சட்டமன்ற தொகுதிகளில் மட்டும் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
எந்த கணிப்பொறியில் இருந்து வாக்காளர் நீக்க ஆவணங்கள் சமர்ப்பிக்கபட்டது என்ற IP முகவரி கேட்டோம். ஏனென்றால் அது கிடைத்தால் இந்த மோசடியில் ஈடுபட்டது யார் என்று நாங்கள் கண்டுபிடித்துவிடுவோம். ஆனால், இதில் சம்பந்தப்பட்டவர்களை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ்வர் காப்பாற்றியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து பிப்ரவரி 23 அன்று FIR தாக்கல் செய்யப்படுகிறது. மார்ச் மாதத்தில் இந்த எண்கள் மற்றும் இந்த பரிவர்த்தனைகள் பற்றிய அனைத்து விவரங்களையும் உடனடியாகக் கோரி கர்நாடக சிஐடி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதுகிறது. ஆகஸ்ட் மாதம், தேர்தல் ஆணையம் இதற்கு ஒரு பதிலைக் தருகிறது. ஆனால் சிஐடி கேட்ட எந்த ஆதாரங்களையும் அவர்கள் தரவில்லை.
இதனையடுத்து ஜனவரி 24 ஆம் தேதி, கர்நாடக சிஐடி மீண்டும் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதி, எங்களுக்கு முழுத் தகவலையும் அனுப்புங்கள் என்று கூறுகிறது. அதன்பின்னும் பதில் இல்லை.
செப்டம்பர் 25 ஆம் தேதிக்குள் கர்நாடக சிஐடி 18 கடிதங்களை தேர்தல் ஆணையத்திற்கு எழுதியுள்ளது. இது நடந்து கொண்டிருக்கும்போது, கர்நாடக தலைமை தேர்தல் ஆணையம் டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதி, இந்தத் தகவலை வழங்குமாறு கேட்கிறது. இப்போது ஞானேஷ் குமார் வாக்கு திருட்டில் ஈடுபடுபவர்களை பாதுகாக்கிறார் என்பதற்கு இது முழுமையான உறுதியான சான்றாகும்" என்று தெரிவித்தார்.
இதனையடுத்து இந்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள ராகுல் காந்தி, "இந்திய தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டில் ஈடுபடுபவர்களை பாதுகாப்பதை நிறுத்த வேண்டும். தேர்தல் ஆணையம் அனைத்து குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களையும் கர்நாடக சிஐடியிடம் 1 வாரத்திற்குள் வெளியிட வேண்டும்" என்று கெடு விதித்தார்.
- கொதாபாய் என்ற 63 வயது பெண்ணின் பெயரில் 15 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்
- இது எப்படி நடந்தது என்று தனக்கு தெரியாது என அந்த கொதாபாய் பேசும் வீடியோவை வெளியிட்டார்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்கு திருட்டு நடந்ததாக பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி சமீபத்தில் சில புள்ளிவிவரங்களை வெளியிட்டார். அவரது குற்றச்சாட்டை தேர்தல் கமிஷன் நிராகரித்தது.
இதனையடுத்து பீகாரில், 'வாக்காளர் அதிகார யாத்திரை' என்ற பெயரில், வாக்கு திருட்டு குற்றச்சாட்டை முன்வைத்து ராகுல்காந்தி யாத்திரை நடத்தினார்.
இந்நிலையில், வாக்கு திருட்டு தொடர்பாக இன்று மீண்டும் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது வாக்கு திருட்டால் பாதிக்கப்பட்டவர்களை மேடையில் ஏற்றி ராகுல் காந்தி ஆதாரங்களை கொடுத்தார். யாருடைய பெயரில் இருந்து வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டதோ அவரை நேரில் வரவைத்து ஊடகங்களிடம் காட்டினார்.
மேலும், கொதாபாய் என்ற 63 வயது பெண்ணின் பெயரில் 15 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என்று கூறிய ராகுல் காந்தி, இது எப்படி நடந்தது என்று தனக்கு தெரியாது என அந்த பெண் பேசும் வீடியோவையும் வெளியிட்டார்.
இதனை தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, " தேர்தல் ஆணைய இணையதளத்தில் இரண்டு விண்ணப்பங்கள் 36 வினாடிகளில் தாக்கல் செய்யப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டன. தயவுசெய்து இந்தப் படிவங்களை நிரப்ப முயற்சி செய்து பாருங்கள், உங்களுக்கு எவ்வளவு நேரம் ஆகும் என்று பாருங்கள். இந்திய இளைஞர்களே, முயற்சி செய்து பாருங்கள் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். இரண்டு படிவங்களை 36 வினாடிகளில் நிரப்ப முயற்சிக்கவும். இந்தக் கேள்விக்கான பதிலை நீங்கள் கண்டுபிடிப்பீர்கள்.
நான் குறிப்பிட்டுள்ள இந்த நபர் படிவத்தை நிரப்பிய நேரத்தை கவனியுங்கள். அவர் அதிகாலை 4:07 மணிக்கு எழுந்து திடீரென 38 வினாடிகளில் இரண்டு படிவங்களையும் நிரப்பியுள்ளார்.
தேர்தல் ஆணையத்தின் வாக்குத் திருட்டு மோசடியை 100% ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளேன். இந்தியாவை காப்பாற்றுவது இனிமேல் முழுவதும் இந்தியர்கள் கையில் தான் இருக்கிறது. ராகுல் காந்தி இன்று வருவேன், உண்மையை சொல்வேன்., ஆனால் மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார்.
- கர்நாடகாவில் உள்ள ஆலந்து தொகுதியில் 6018 வாக்காளர்களை நீக்க முயன்றனர்.
- 6018 வாக்காளர்களை நீக்கியபோது யாரோ ஒருவர் பிடிபட்டார்
கடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்கு திருட்டு நடந்ததாக பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி சமீபத்தில் சில புள்ளிவிவரங்களை வெளியிட்டார். அவரது குற்றச்சாட்டை தேர்தல் கமிஷன் நிராகரித்தது.
இதனையடுத்து பீகாரில், 'வாக்காளர் அதிகார யாத்திரை' என்ற பெயரில், வாக்கு திருட்டு குற்றச்சாட்டை முன்வைத்து ராகுல்காந்தி யாத்திரை நடத்தினார்.
இந்நிலையில், வாக்கு திருட்டு தொடர்பாக இன்று மீண்டும் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, "நான் இந்த மேடையில் 100 சதவீத உண்மையைத்தான் கூறுகிறேன். நான் என் நாட்டை நேசிக்கும் ஒருவன். என் அரசியலமைப்பை நேசிக்கிறேன், ஜனநாயக செயல்முறையை நேசிக்கிறேன், அந்த செயல்முறையை நான் பாதுகாக்கிறேன். நீங்கள் தீர்மானிக்கக்கூடிய 100% ஆதாரத்தின் அடிப்படையில் இல்லாத எதையும் நான் இங்கே சொல்லப் போவதில்லை
கர்நாடகாவில் உள்ள ஆலந்து தொகுதியில் 6018 வாக்காளர்களை நீக்க முயன்றனர். 2023 தேர்தலில் ஆலந்தில் நீக்கப்பட்ட மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை எங்களுக்குத் தெரியாது. அவை 6,018 ஐ விட மிக அதிகம். ஆனால் அந்த 6018 வாக்காளர்களை நீக்கியபோது யாரோ ஒருவர் பிடிபட்டார், அது தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டது. அங்குள்ள வாக்குச்சாவடி நிலை அதிகாரி தனது மாமாவின் வாக்கு நீக்கப்பட்டதை கண்டுபிடித்தார். எனவே அவர் தனது மாமாவின் வாக்கு நீக்கப்பட்டதைச் சரிபார்த்தார், மேலும் அந்த வாக்கை நீக்கியது ஒரு பக்கத்து வீட்டுக்காரர் என்பதைக் கண்டுபிடித்தார். அவர் தன் பக்கத்து வீட்டுக்காரரிடம் கேட்டார். ஆனால் நான் எந்த வாக்கையும் நீக்கவில்லை என்று அவர் கூறினார். இந்த விஷயம் வாக்கை நீக்கிய நபருக்கோ அல்லது வாக்கு நீக்கப்பட்ட நபருக்கோ தெரியாது. அப்படியானால் வேறு சில நபர்கள் வாக்காளர்களை நீக்கியுள்ளனர்.
ஆலந்து தொகுதியில் வாக்காளர்களைப் போல ஆள்மாறாட்டம் செய்து 6018 விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த விண்ணப்பங்களை தாக்கல் செய்தவர்கள் உண்மையில் அவற்றை ஒருபோதும் தாக்கல் செய்யவில்லை. கம்ப்யூட்டர் மென்பொருளைப் பயன்படுத்தி அவை தானாகவே தாக்கல் செய்யப்பட்டது. கர்நாடகாவிற்கு வெளியே இருந்து, பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்த மொபைல் எண்கள், ஆலந்தில் உள்ள எண்களை நீக்கப் பயன்படுத்தப்பட்டன. குறிப்பாக இது காங்கிரஸ் வாக்காளர்களை குறிவைத்து செய்யப்பட்டது.
தேர்தல் ஆணையம் systematic ஆக வாக்கு திருட்டில் ஈடுபட்டுள்ளது . இதை ஆதாரப்பூர்வமாக நிரூபித்து உள்ளேன். இனி இந்நாட்டு மக்கள், குறிப்பாக இளைஞர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். அவர்கள் தான் தேர்தல் ஆணையத்தை கேள்வி கேட்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
- சோட்டா ராஜனை குற்றவாளி என தீர்ப்பளித்து ஆயுள் தண்டை விதித்தார் நீதிபதி ஏ.எம். பாட்டீல்.
- 2 கொலை வழக்குகள் உள்பட 4 வழக்குகளில் ராஜன் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது
பிரபல நிழலுலக தாதா சோட்டா ராஜன் கடந்த 2001 ஆம் ஆண்டு நடந்த மும்பை கோல்டன் கிரவுன் ஹோட்டல் உரிமையாளர் கொலையை அரங்கேற்றியவர் ஆவார்.
இந்த வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக இருந்த அவர் கடந்த 2015 ஆம் ஆண்டு அக்டோபரில் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு பின்னர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.
டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்ட அவர் மீதான வழக்கு கடந்த மே மாதம் மும்பையில் உள்ள நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதில் சோட்டா ராஜனை குற்றவாளி என தீர்ப்பளித்து ஆயுள் தண்டை விதித்தார் நீதிபதி ஏ.எம். பாட்டீல்.
இந்த தண்டனையை எதிர்த்து சோட்டா ராஜன் தரப்பில் மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. தனக்கு வழங்கிய தண்டனையை நிறுத்தி வைத்தும், இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் சோட்டா ராஜன் தனது மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனுவை கடந்த வருடம் அக்டோபரில் விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம், சோட்டா ராஜனின் ஆயுள் தண்டனையை இடைநீக்கம் செய்து, அவருக்கு ரூ.1 லட்சம் பிணை தொகையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். இருப்பினும் மற்ற குற்ற வழக்குகள் தொடர்பாக ராஜன் தொடர்ந்து சிறையில் இருக்கும் சூழல் உருவானது.
இதனை எதிர்த்து சி.பி.ஐ. தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனு நேற்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜு, 2 கொலை வழக்குகள் உள்பட 4 வழக்குகளில் ராஜன் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது என அதற்கான ஆவணங்களை சமர்ப்பித்தார்.
சோட்டா ராஜன் 4 வழக்குகளில் குற்றவாளி என தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது. அவருக்கு ஏன் தண்டனை ரத்து செய்யப்பட்டு உள்ளது? என உச்சநீதிமன்றம் மும்பை உயர்நீதிமன்றத்தை எழுப்பியது.
சாட்சிகள் அவருக்கு எதிராக சாட்சி சொல்ல முன்வரவில்லை. அதனால், பல வழக்குகளில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டு உள்ளார் என்றும் கூறிய உச்சநீதிமன்றம், இந்த வழக்கில், வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது.
- பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 75-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
- இதனை முன்னிட்டு மோடிக்கு பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 75-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு மோடிக்கு பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே, ரஷிய அதிபர் புதின், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக், ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனீஸ் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில், பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ரஷிய அதிபர் புதினுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், எனது பிறந்தநாளுக்கு தொலைபேசியில் அழைத்து அன்பான வாழ்த்து கூறிய எனது நண்பர் அதிபர் புதினுக்கு நன்றி. நமது சிறப்பு வாய்ந்த மூலோபாய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். உக்ரைன் மோதலுக்கு அமைதியான தீர்வு காண இந்தியா அனைத்து சாத்தியமான பங்களிப்பையும் செய்ய தயாராக உள்ளது என பதிவிட்டுள்ளார்.
- உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியின் பைனல் தோஹாவில் நடைபெறுகிறது.
- இந்தப் போட்டி டிசம்பர் 4-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை நடைபெறும்.
புதுடெல்லி:
உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியின் பைனல் டிசம்பர் மாதம் தோஹாவில் நடைபெறுகிறது. இந்தப் போட்டி நான்காம் தேதி முதல் ஒன்பதாம் தேதி வரை நடைபெறும்.
இந்நிலையில், உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் பைனல் போட்டிக்கு மானு பாக்கர் உள்ளிட்ட 8 இந்தியர்கள் தேர்வாகி உள்ளனர்.
இவர்கள் மொத்தம் 12 பிரிவுகளில் பங்கேற்கின்றனர்.
10 மீ ஏர் பிஸ்டல் மற்றும் 25 மீட்டர் பிஸ்டல் என இரு பிரிவுகளில் மானு பாக்கர் கலந்து கொள்கிறார்.
ஈஷா சிங், சிப்ட் கவுர் சம்ரா, சிம்ரன்பிரீத் கவுர் பிரார் உள்ளிட்ட 8 இந்தியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டு இதுவரை நடந்த உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் இந்தியா 9 தங்கம், 6 வெள்ளி, 7 வெண்கலம் உள்பட 22 பதக்கங்கள் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- ஊடுருவல்காரர்கள் தொடர்ந்து நம்முடைய வாக்காளர் பட்டியலில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
- ஏனென்றால், அவர்கள் இந்திய மக்களை நம்பவில்லை.
பிரதமர் மோடியின் பிறந்த நாளான இன்று, டெல்லி அரசின் 17 பொது நலத்திட்டங்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார்.
அப்போது அமித் ஷா கூறியதாவது:-
காங்கிரஸ் கட்சி வாக்காளர் அதிகாரம் பேரணியை நடத்துகிறது. இந்த பேரணி ஊடுருவல்காரர்களை பாதுகாப்பதற்காக. அதன்மூலம் அவர்களுடைய உதவியோடு தேர்தலில் வெற்றிபெற விரும்புகிறது. ராகுல் பாபாவும், காங்கிரஸ் கட்சியியும் ஊடுருவல்காரர்களை பாதுகாக்கும் பேரணியை தொடங்கியுள்ளனர்.
ஊடுருவல்காரர்கள் தொடர்ந்து நம்முடைய வாக்காளர் பட்டியலில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஏனென்றால், அவர்கள் இந்திய மக்களை நம்பவில்லை. ஊடுருவல்காரர்கள் உதவியோடு தேர்தல்களில் வெற்றி பெற விரும்புகிறார்கள். வாக்காளர் பட்டியலை சுத்தம் செய்வதற்கான SIR செயல்பாட்டை பாஜக ஆதரிக்கிறது.
இவ்வாறு அமித் ஷா தெரிவித்துள்ளார்.
- வேட்பாளரின் சீரியல் நம்பர் தெளிவாக தெரியும்படி பிரிண்ட் செய்யப்படும்.
- வேட்பாளர்கள் படம் இனிமேல் கலரில் பிரிண்டில் ஒட்டப்படும்.
இந்தியாவில் நடைபெறும் மக்களவை, மாநில சட்டசபை தேர்தல்களில் வாக்கு எந்திரம் பயன்படுத்தப்படுகிறது. வாக்கு எந்திரத்தில் வேட்பாளர் படம், கட்சி சின்னம் உள்ளிட்ட விவரங்கள் அச்சிடப்பட்டிருந்தது. அவற்றை பார்த்து வாக்காளர்கள் வாக்களிப்பார்கள்.
அதில் உள்ள புகைப்படும் மற்றும் சின்னங்கள் போன்றவை தெளிவாக தெரியாது. இதனால் வேட்பாளர்கள் குழப்பம் அடையும் நிலை ஏற்படும். இதை கருத்தில் கொண்டு தேர்தல் ஆணையம் வாக்காளர்களுக்கு வேட்பாளர் பெயர், கட்சி சின்னம் தெளிவாக தெரிவதற்கு ஏற்பாடுகள் செய்து வருகின்றன.
அந்த வகையில் பீகார் தேர்தலில் இருந்து வேட்பாளர்களின் புகைப்படங்கள் கலரில் அச்சிடப்பட்டு ஒட்டப்படும். மேலும், வேட்பாளர்களின் சீரியல் நம்பர் தெளிவாக தெரியும்படி அச்சிடப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதனால் வாக்காளர்கள் வேட்பாளர் புகைப்படத்தை தெளிவாக பார்த்து, சீரியல் நம்பர் மற்றும் புகைப்படத்தை ஒப்பிட்டு பார்த்து குழப்பம் இல்லாமல் வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வேட்பாளர் புகைப்படத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் நான்கில் மூன்று பங்கு இடத்தில் கலர் படம் ஒட்டப்படும்.
- ராகுல்காந்தி சமீபத்தில் பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக யாத்திரை மேற்கொண்டார்.
- பீகார் சட்டசபை தேர்தலையொட்டி தேர்தல் பிரசாரக்குழுவை காங்கிரஸ் அமைத்துள்ளது.
புதுடெல்லி:
பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க. கூட்டணி கட்சி நடைபெற்று வருகிறது. அங்கு நவம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடக்கிறது.
இந்த நிலையில் பீகார் தேர்தல் குறித்து ஆலோசிப்பதற்காக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் வருகிற 24-ந் தேதி (புதன்கிழமை) நடக்கிறது. பீகார் தலைநகர் பாட்னாவில் தான் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே முன்னாள் தலைவரும், பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல்காந்தி உள்பட கட்சியின் அனைத்து உயர்மட்ட தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள்.
நிரந்தர உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள், கட்சியின் மாநில முதல்-மந்திரிகள், மாநில காங்கிரஸ் தலைவர்கள், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர்கள் ஆகியோரும் பங்கேற்கிறார்கள்.
பீகார் தேர்தல் குறித்து இந்த கூட்டத்தில் கவனம் செலுத்தப்படும். கூட்டணியில் நிலவும் தொகுதி பங்கீடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை தீர்ப்பது குறித்து ஆலோசிக்கப்படும். தேர்தலில் கட்சியினர் தீவிர பணியாற்றுமாறு வலியுறுத்தப்படும்.
வாக்குகள் திருடப்படுவதாக தேர்தல் ஆணையம், பா.ஜ.க. புகாருக்கு எதிராக ராகுல்காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். வாக்கு திருட்டு பிரச்சனையை தீவிரப்படுத்துவது குறித்தும் இந்த கூட்டத்தில் முக்கியமாக ஆலோசிக்கப்படும்.
ராகுல்காந்தி சமீபத்தில் பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக யாத்திரை மேற்கொண்டார். இது கட்சியினர் இடையே உற்சாகத்தை அளித்தது.
பீகார் சட்டசபை தேர்தலையொட்டி தேர்தல் பிரசாரக்குழுவை காங்கிரஸ் அமைத்துள்ளது. மாநில காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்ராம், ஷகீல் அகமது கான் உள்ளிட்ட 38 உறுப்பினர்கள் அந்த குழுவில் இடம்பெறுகிறார்கள். மேலும் பீகாரை சேர்ந்த எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோரும் இந்த குழுவில் நிரந்தர அழைப்பாளராக இருப்பார்கள்.
- விதிகளை, கடந்த 2-ந்தேதி, ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர்கள் நலத்துறை அரசிதழில் வெளியிட்டது.
- பணியாற்றிய ஆண்டுகளை விகிதாச்சார அடிப்படையில் கணக்கிட்டு, உறுதியளிக்கப்பட்ட ஊதியம் சந்தாதாரருக்கு வழங்கப்படும்.
புதுடெல்லி:
25 ஆண்டுகள் பணி முடித்த மத்திய அரசு ஊழியர்களுக்கு மட்டுமே ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தின்கீழ் (யு.பி.எஸ்.), முழுமையான உறுதியளிக்கப்பட்ட ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, தேசிய ஓய்வூதிய முறையின்கீழ் (என்.பி.எஸ்.), ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை தேர்வு செய்யும் மத்திய அரசு ஊழியர்களுக்கான சலுகைகள் தொடர்பான விஷயங்களை ஒழுங்குபடுத்துவதற்காக சமீபத்தில் 'மத்திய சிவில் சர்வீசஸ் (தேசிய ஓய்வூதிய முறையின்கீழ் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துதல்) விதிகளை மத்திய அரசு கொண்டு வந்தது. அந்த விதிகளை, கடந்த 2-ந்தேதி, ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர்கள் நலத்துறை அரசிதழில் வெளியிட்டது.
அந்த விதியின்படி, 20 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் பணியாற்றி விருப்ப ஓய்வு பெறும் மத்திய அரசு ஊழியர்கள், விகிதாச்சார அடிப்படையில் உறுதியளிக்கப்பட்ட ஊதியம் பெற தகுதி உடையவர்கள் என்று மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த விதிகள், 20 ஆண்டுகள் பணிக்கு பிறகு விருப்ப ஓய்வுபெற ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்ட சந்தாதாரர்களுக்கு வாய்ப்பு அளிக்கிறது.
பணியாற்றிய ஆண்டுகளை விகிதாச்சார அடிப்படையில் கணக்கிட்டு, உறுதியளிக்கப்பட்ட ஊதியம் சந்தாதாரருக்கு வழங்கப்படும். அவர் ஓய்வு பெறும் நாளில் இருந்து இத்தொகை வழங்கப்படும்.
தனிப்பட்ட தொகுப்பில் 60 சதவீதத்தை இறுதியாக திரும்பப்பெறுதல், ஒவ்வொரு 6 மாத பணிக்கும் அகவிலைப்படி, ஓய்வு பணிக்கொடை, விடுப்பை பணமாக்குதல், மத்திய அரசு ஊழியர்கள் குழு காப்பீட்டு திட்டம் போன்ற இதர சலுகைகளையும் ஓய்வு பெறும்போது பெறலாம்.
ஒருவேளை, விருப்ப ஓய்வு பெற்றுவிட்டு, உறுதியளிக்கப்பட்ட ஊதியம் பெறுவதற்கு முன்பே சந்தாதாரர் இறந்து விட்டால், சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொண்ட அவரது கணவர்/மனைவிக்கு குடும்ப ஊதியம் வழங்கப்படும். இத்தகவல்களை மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- உக்ரைன் போரை ஆதரிக்கும் இந்தியாவுக்கு இந்த வரிவிதிப்பு அபராதம் என டிரம்ப் கூறினார்.
- இந்தியா மீது 50 சதவீத வரி விதித்த பிறகு இரு நாடுகளும் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்து விவாதிப்பது இதுவே முதல் முறை.
இந்திய பொருட்களுக்கு கடந்த மாதம் 50 சதவீத வரிவிதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தது இரு நாட்டு உறவுகளில் விரிசலை ஏற்படுத்தியது.
ரஷியாவிடம் இருந்து குறைந்த விலையில் எண்ணெய் வாங்கி உக்ரைன் போரை ஆதரிக்கும் இந்தியாவுக்கு இந்த வரிவிதிப்பு அபராதம் என டிரம்ப் கூறினார்.
இந்நிலையில் பிரச்சனைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு கண்டு வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்த நேற்று (செவ்வாய்க்கிழமை) பிராடன் லிஞ்ச் தலைமையிலான அமெரிக்க குழு டெல்லி விரைந்து இந்திய குழுவுடன் பேச்சுவராத்தை நடத்தியது.
இந்தியா மீது 50 சதவீத வரி விதித்த பிறகு இரு நாடுகளும் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்து விவாதிப்பது இதுவே முதல் முறை.
"இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்து அமெரிக்க வர்த்தக பிரதிநிதி பிராடன் லிஞ்ச் மற்றும் வர்த்தக செயலாளர் ராஜேஷ் அகர்வால் இடையே நடந்த விவாதங்கள் ஒரு நல்ல அறிகுறியாகும்" என்று அமெரிக்க தூதரக செய்தித் தொடர்பாளர் கலந்துரையாடலுக்குப் பிறகு ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
இருப்பினும், இருதரப்பு ஒப்பந்தம் குறித்த ஆறாவது சுற்று பேச்சுவார்த்தை தற்போது நடைபெறவில்லை, மாறாக ஆரம்பகட்ட விவாதங்கள் மட்டுமே நடந்தன என்று மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
- புதிய உயரத்திற்கு எடுத்துச் செல்வதில் நானும் முழுமையாக உறுதிபூண்டுள்ளேன்.
- உக்ரைன் போருக்கு அமைதியான தீர்வு காண்பதற்கான உங்கள் முயற்சிகளை நாங்கள் ஆதரிக்கிறோம்
பிரதமர் மோடி இன்று (செப்டம்பர் 17) தனது 75வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இந்நிலையில் அவருக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொலைபேசி மூலம் அழைத்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில்,"எனது நண்பர் அதிபர் டிரம்ப், எனது 75வது பிறந்தநாளில் உங்கள் தொலைபேசி அழைப்புக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி.
உங்களைப் போலவே, இந்தியா-அமெரிக்க விரிவான மற்றும் உலகளாவிய கூட்டாண்மையை புதிய உயரத்திற்கு எடுத்துச் செல்வதில் நானும் முழுமையாக உறுதிபூண்டுள்ளேன்.
உக்ரைன் போருக்கு அமைதியான தீர்வு காண்பதற்கான உங்கள் முயற்சிகளை நாங்கள் ஆதரிக்கிறோம்." என்று பதிவிட்டுள்ளார்.
இந்திய பொருட்கள் மீது டிரம்ப் கடந்த மாதம் 50 சதவீதம் வரிவிதித்த பின் இரு நாட்டு உறவுகளிலும் விரிசல் நிலவி வந்த நிலையில் இதன்பின் முதல் முறையாக பிரதமர் மோடி - டிரம்ப் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.






