என் மலர்
விளையாட்டு

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: பைனலுக்கு முன்னேறிய மானு பாக்கர் உள்ளிட்ட 8 இந்தியர்கள்
- உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியின் பைனல் தோஹாவில் நடைபெறுகிறது.
- இந்தப் போட்டி டிசம்பர் 4-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை நடைபெறும்.
புதுடெல்லி:
உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியின் பைனல் டிசம்பர் மாதம் தோஹாவில் நடைபெறுகிறது. இந்தப் போட்டி நான்காம் தேதி முதல் ஒன்பதாம் தேதி வரை நடைபெறும்.
இந்நிலையில், உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் பைனல் போட்டிக்கு மானு பாக்கர் உள்ளிட்ட 8 இந்தியர்கள் தேர்வாகி உள்ளனர்.
இவர்கள் மொத்தம் 12 பிரிவுகளில் பங்கேற்கின்றனர்.
10 மீ ஏர் பிஸ்டல் மற்றும் 25 மீட்டர் பிஸ்டல் என இரு பிரிவுகளில் மானு பாக்கர் கலந்து கொள்கிறார்.
ஈஷா சிங், சிப்ட் கவுர் சம்ரா, சிம்ரன்பிரீத் கவுர் பிரார் உள்ளிட்ட 8 இந்தியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டு இதுவரை நடந்த உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் இந்தியா 9 தங்கம், 6 வெள்ளி, 7 வெண்கலம் உள்பட 22 பதக்கங்கள் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story






