என் மலர்tooltip icon

    டெல்லி

    • நடிகர் மோகன் லால்-க்கு என்று மத்திய அசு அறிவித்துள்ளது.
    • 71வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் விருது வழங்கப்படுகிறது.

    மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் மோகன் லால்-க்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உயரிய விருது வரும் 23ம் தேதி அன்று மோகன் லால்-க்கு விருது வழங்கப்படும் என்று மத்திய அசு அறிவித்துள்ளது.

    அதாவது, 71வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் விருது வழங்கப்படுகிறது.

    இந்நிலையில், நடிகர் மோகன் லால்-க்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் மலையாளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியிரு*

    திறமை மற்றும் நடிப்பு பன்முகத்தன்மையின் சின்னம் மோகன்லால். பல தசாப்தங்களாக நீடித்த தனித்துவமான கலை வாழ்க்கையைக் கொண்ட அவர், மலையாள சினிமா மற்றும் நாடகத்துறையில் ஒரு முக்கிய நபராக இருந்து வருகிறார்,

    மேலும், கேரள கலாச்சாரத்தின் மீது ஆழ்ந்த ஆர்வம் கொண்டவர். தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் இந்தி படங்களிலும் அவர் சிறந்து விளங்கியுள்ளார். திரைப்படம் மற்றும் நாடக ஊடகங்களில் அவரது திறமை உண்மையான உத்வேகம் அளிக்கிறது.

    தாதாசாகேப் பால்கே விருது பெறுவதற்கு அவருக்கு வாழ்த்துக்கள். அவரது சாதனைகள் வருங்கால தலைமுறையினருக்கு ஊக்கமளிக்கட்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அதிக அளவிலான திறமை கொண்ட பணியாளர்களை நாட்டிற்கு கொண்டு வருவதை உறுதி செய்யும்.
    • எங்களுக்கு பணியார்கள் தேவை. எங்களுக்கு சிறந்த பணியாளர்கள் தேவை.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், H-1B விசாவுக்கான கட்டணத்தை அதிரடியாக உயர்த்தியுள்ளார். 1 லட்சம் அமெரிக்க டாலர் (ரூபாயில் சுமார் 88 லட்சம்) உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் இந்தியர்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    அமெரிக்காவின் இந்த நடவடிக்கை குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள கருத்தில் "அமெரிக்க அதிபர் டிரம்பின் இந்த நடவடிக்கையால் குடும்பங்களுக்கு ஏற்படும் இடையூறுகள் வழியாக மனிதாபிமான விளைவுகள் ஏற்படலாம். அமெரிக்க அதிபர்கள் இதை கருத்தில் கொள்வார்கள்" எனத் தெரிவித்துள்ளது.

    இந்த நடவடிக்கை தொடர்பாக டிரம்ப் கூறுகையில் "அதிக அளவிலான திறமை கொண்ட பணியாளர்களை நாட்டிற்கு கொண்டு வருவதையும், அமெரிக்க பணியாளர்கள் மாற்றம் இல்லை (Replace) என்பதை உறுதி செய்யும். எங்களுக்கு பணியார்கள் தேவை. எங்களுக்கு சிறந்த பணியாளர்கள் தேவை. இதுதான் நடக்கப்போகிறது என்பதை இது மிகவும் இறுதி செய்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.

    • ரெயில் நிலையங்களில் விற்கும் தண்ணீர் பாட்டில் விலையை அதிரடியாக குறைத்து இந்தியன் ரெயில்வே அறிவித்துள்ளது.
    • 22.09.2025 முதல் நடைமுறைக்கு வர உள்ளதாகவும் இந்திய ரெயில்வே தெரிவித்துள்ளது.

    ரெயில் பயணங்களின் போது மக்களின் வசதிக்காக ரெயில் நிலையங்களிலும் ரெயில்களிலும் தண்ணீர் பாட்டில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதில், ரெயில் நீர் பாட்டில் விலை ஒரு லிட்டருக்கு ரூ.15-க்கும் அரை லிட்டர் (500 ml) ரூ.10-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் ரெயில் நிலையங்கள் மற்றும் ரெயில்களில் விற்கும் தண்ணீர் பாட்டில் விலையை ரூ.1 குறைத்து இந்திய ரெயில்வே அறிவித்துள்ளது.

    அதன்படி ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, ரெயில் நிலையங்களில் விற்கும் ரெயில் நீர் பாட்டில் மற்றும் மற்ற தண்ணீர் பாட்டில்கள் ஒரு ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

    அதன்படி ஒரு லிட்டர் பாட்டில் விலை ரூ.15-ல் இருந்து ஒரு ரூபாய் குறைந்து ரூ. 14 -க்கும் அரை லிட்டர் (500 ml) பாட்டில் விலை ரூ.10-ல் இருந்து ரூ.9-க்கும் விற்கப்பட உள்ளது.

    மேலும் தண்ணீர் பாட்டில் விலையும் ஒரு ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. அதுவும் ஒரு லிட்டர் பாட்டில் விலை ரூ.15-ல் இருந்து ஒரு ரூபாய் குறைந்து ரூ. 14 -க்கும் அரை லிட்டர் பாட்டில் விலை ரூ.10-ல் இருந்து ரூ.9-க்கும் விற்கப்பட உள்ளது.

    இது வரும் 22.09.2025 முதல் நடைமுறைக்கு வர உள்ளதாகவும் இந்திய ரெயில்வே தெரிவித்துள்ளது.

    • யதார்த்த நிலையை முற்றிலுமாக அழிக்கப்போகும் ஹைட்ரஜன் குண்டை நாங்கள் வெளிப்படுத்த இருக்கிறோம்.
    • வாக்கு திருட்டு என நாங்கள் சொல்வதற்கான துல்லியமான, தெளிவான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன.

    வாக்கு திருட்டு தொடர்பாக ஹைட்ரஜன் குண்டை வெளிப்படுத்த இருக்கிறோம் என ராகுல் காந்தி ஏற்கனவே தெரிவித்திருந்தார். கடந்த வாரம் கர்நாடக மாநிலம் ஆலந்து தொகுதியில் சுமார் 6 ஆயிரம் வாக்குகளை நீக்க முயற்சி செய்யப்பட்டது என்பதை வீடியோ மூலம் வெளியிட்டிருந்தார். முறையாக (systematic) வாக்கு திருட்டில் பாஜக மற்றும் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.

    இந்த நிலையில், வாக்கு திருட்டு புகாரில் ஆதாரங்கள் உள்ளது. யதார்த்த நிலையை முற்றிலும் அழிக்கப்போகும் ஹைட்ரஜன் குண்டை வெளிப்படுத்த போகிறோம் என்று இன்றும் உறுதியாக வெளிப்படுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக ராகுல் காந்தி இன்று கூறியதாவது:-

    யதார்த்த நிலையை முற்றிலுமாக அழிக்கப்போகும் ஹைட்ரஜன் குண்டை நாங்கள் வெளிப்படுத்த இருக்கிறோம். வாக்கு திருட்டு என நாங்கள் சொல்வதற்கான துல்லியமான, தெளிவான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. ஆதாரங்கள் இல்லாமல் நான் எதையும் சொல்லிக் கொண்டிருக்கவில்லை. நடந்த விசயங்களில் 100 சதவீதம் வெளிவரப் போகின்றன.

    ஹைட்ரஜன் குண்டு குறிப்பாக பிரதமர் மோடிக்கான வாரணாசிக்கு பொருந்துமா? என ராகுல் காந்தியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் இந்த கேள்வியை ராகுல் காந்தி புறந்தள்ளினார். அது உங்களுடைய யூகம். நான் என்னுடைய வேலையை செய்வேன்.

    மகாதேவ்புரா மற்றும் அலந்து தொகுதியில் நடைபெற்றதை நாங்கள் காண்பித்தோம். நரேந்திர மோடி வாக்கு திருட்டு செய்து தேர்தலில் வெற்றி பெற்றார் என்பதை இந்தியாவில் யாரும் சந்தேகிக்காத வகையில் நாங்கள் வெளிக்காட்டப் போகிறோம்.

    இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    இந்த மாதம் முதல்வாரத்தில் "அரசியலமைப்பை அவர்கள் (பாஜக) கொலை செய்ய நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அதனால்தான் நாங்கள் பேரணி மேற்கொண்டோம். எங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. மக்கள் மிகப்பெரிய அளவில் திரண்டு வாக்கு திருட்டு, நாற்காலியில் இருந்து விலகு (ote chor, gaddi chhor) என்ற முழக்கத்தை வெளிப்படுத்தினர்.

    வாக்கு திருட்டு முழக்கம் எல்லா இடத்திலும் எதிரொலிக்கிறது. நான் பாஜக மக்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நீங்கள் அணுகுண்டை விட பெரியதை பற்றி கேள்வி பட்டுள்ளீர்களா?. அது ஹைட்ரஜன் குண்டு. பாஜகவினரே, ஹைட்ரஜன் குண்டு வந்து கொண்டிருக்கிறது. தயாராக இருங்கள். நான் உத்தரவாதம் அளிக்கிறேன். ஹைட்ரஜன் குண்டுக்குப் பிறகு நரேந்திர மோடி தனது முகத்தைக் காட்ட முடியாது" எனக் கூறியிருந்தார்.

    • கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி பிரதமர் மோடி தனது 75வது பிறந்தநாளை கொண்டாடினார்.
    • Ek Ped Maa Ke Naam' என்ற முன்முயற்சியின் கீழ் மன்னர் சார்லஸுக்கு "சோனோமா" மரக்கன்றை பரிசளித்திருந்தார்.

    கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி பிரதமர் மோடி தனது 75வது பிறந்தநாளை கொண்டாடினார்.

    பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ், கடம்ப மரக்கன்றை பரிசாக அனுப்பி வைத்தார்.

    கடந்த ஜூலை மாதம் பிரதமர் மோடி பிரிட்டனுக்குச் சென்றபோது, 'Ek Ped Maa Ke Naam' என்ற முன்முயற்சியின் கீழ் மன்னர் சார்லஸுக்கு "சோனோமா" மரக்கன்றை பரிசளித்திருந்தார். இதற்கு பதிலாக கடம்ப மரக்கன்றை மன்னர் சார்லஸ் அனுப்பி வைத்ததாக பிரிட்டன் தூதரகம் தெரிவித்தது.

    காலநிலை மற்றும் தூய்மையான எரிசக்தி ஒத்துழைப்பு என்பது காமன்வெல்த் மற்றும் பிரிட்டன்-இந்தியா கூட்டாண்மையின் முக்கிய தூண்களில் ஒன்றாகும் என்றும் பிரிட்டன் தூதரகம் கூறியது.

    இந்நிலையில் நேற்று, அந்த மரக்கன்றை பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான, ' 7 லோக் கல்யாண் மார்க்கில்' மோடி நட்டு வைத்தார்.

    இது தொடர்பாக வெளியாகி உள்ள 40 வினாடிகள் கொண்ட வீடியோவில் பிரதமர் மோடி மரக்கன்றை நட்டு, தண்ணீர் பாய்ச்சும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    Ek Ped Maa Ke Naam "ஒரே மரம் தாயின் பெயரால்" என்ற முன்முயற்சியின் நோக்கம், ஒரு மரத்தை ஒருவரின் தாயின் பெயரால், அடையாளபூர்வமாக நடுவது ஆகும். 

    • தலைவர், செயலாளர், இணைச் செயலாளர் பதவிகளை ஏபிவிபி பிடித்தது.
    • துணைத் தலைவர் பதவிக்கான பேட்டியில் காங்கிரஸ் ஆதரவு NSUI வேட்பாளர் வெற்றி பெற்றார்.

    டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் சங்க (DUSU) தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் 50 கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 2.75 மாணவர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். 52 மையங்களில் 195 வாக்கு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 711 EVMs ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 39.45 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.

    இன்று வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் ஆர்.எஸ்.எஸ்.-யின் மாணவர்கள் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷாத் (ஏபிவிபி- ABVP) முக்கிய பதவிகளை பிடித்தது.

    தலைவர், செயலாளர் மற்றும் இணை செயலாளர் பதவியை பிடித்த நிலையில், காங்கிரஸ் ஆதரவு NSUI துணைத் தலைவர் பதவியை பிடித்தது.

    ABVP-யின் ஆர்யன் மான் தலைவர் பதவியில் 28841 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். NSUI சார்பில் போட்டியிட்ட ஜோஸ்லின் சவுத்ரி 12654 வாக்குகள் பெற்றார்.

    துணைத் தலைவருக்கான போட்டியில் NSUI சார்பில் போட்டியிட்ட ராகுல் ஷன்ஸ்லா 29339 வாக்குகளும், ஏபிவிபி-யின் கோவிந்த் தன்வர் 20547 வாக்குகள் பெற்றனர்.

    தலைவர்- ஆர்யன் மான் (ஏபிவிபி)

    துணைத் தலைவர்- ராகுல் ஜன்ஸ்லா (NSUI)

    செயலாளர்: குணால் சவுத்ரி (ஏபிவிபி)

    இணைச் செயலாளர்: தீபிகா ஜா (ஏபிவிபி)

    ஆர்யன் மான் ஹரியானா மாநிலம் பஹதுர்காவைச் சேர்ந்தவர். ஹன்ஸ்ராஜ் கல்லூரில் பட்டப்படிப்பு முடித்த இவர், டெல்லி பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. நுலக அறிவியல் முதுகல பட்டம் படித்து வருகிறார்.

    • ஆதார் அட்டையின் டிஜிட்டல் வடிவத்தை இந்த ஆப் மூலம் பதிவிறக்கம் செய்து, அதை எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
    • உங்கள் ஆதார் எண் மற்றும் தேவைப்படும் பிற தகவல்களைப் பயன்படுத்தி ஆப்-ல் பதிவு செய்யுங்கள்.

    எம் ஆதார் (mAadhaar) என்பது இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் (UIDAI) வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ மொபைல் பயன்பாடு ஆகும். இது ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு ஆதார் சேவைகளை அணுகுவதற்கும், டிஜிட்டல் ஆதார் அட்டையை மென்மையான நகலாக (soft copy) எடுத்துச் செல்வதற்கும், பல ஆதார் சேவைகளை ஒரே இடத்தில் பெறுவதற்கும் உதவுகிறது.

    எம் ஆதார் பயன்பாட்டின் முக்கிய அம்சங்கள்:

    டிஜிட்டல் ஆதார்: உங்கள் ஆதார் அட்டையின் டிஜிட்டல் வடிவத்தை இந்த ஆப் மூலம் பதிவிறக்கம் செய்து, அதை எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

    ஆதார் தகவல் மேலாண்மை: உங்கள் ஆதார் தகவல்களைப் பார்க்கலாம் மற்றும் நிர்வகிக்கலாம்.

    ஆன்லைன் சேவைகள்: ஆதாரைப் புதுப்பித்தல், முகவரியை மாற்றுதல் போன்ற பல ஆன்லைன் சேவைகளுக்கான அணுகலை இது வழங்குகிறது.

    QR குறியீடு: உங்கள் ஆதார் அட்டையில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்ய இது உதவுகிறது.

    பன்மொழி ஆதரவு: இந்த பயன்பாடு பல மொழிகளில் கிடைக்கிறது.

    ஆப்-ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்:

    Google Play Store அல்லது Apple App Store-ல் இருந்து mAadhaar ஆப்-ஐ உங்கள் ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    உங்கள் ஆதார் எண் மற்றும் தேவைப்படும் பிற தகவல்களைப் பயன்படுத்தி ஆப்-ல் பதிவு செய்யுங்கள்.

    பதிவு செய்தபிறகு, டிஜிட்டல் ஆதார் அட்டையைப் பதிவிறக்கம் செய்யலாம், உங்கள் தகவல்களைப் பார்க்கலாம் மற்றும் ஆன்லைன் சேவைகளை அணுகலாம்.

    ஆதார் கார்டில் மாற்றம் செய்ய வேண்டுமா இனி கவலையில்லை!

    பல்வேறு சேவைகளை உள்ளடக்கிய ஆதார் (mAadhar) சேவைக்கான மொபைல் செயலியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இனி ஆதார் கார்டு சேவைக்கு ஆதார் தொடர்பான அலுவலகங்களுக்கு செல்லாமல் Mobile app மூலமாக செய்துகொள்ளலாம்.

    இ-ஆதார் செயலி (mAadhaar App) என்பது UIDAI (Unique Identification Authority of India) வெளியிட்ட அதிகாரப்பூர்வ மொபைல் பயன்பாடு. இதன் மூலம் ஆதார் தொடர்பான பல சேவைகளை எளிதாக தங்கள் மொபைல் போன்களில் பெறலாம்.

    எம் ஆதார் (mAadhaar App)டவுன்லோட் செய்து எப்படி பயன்படுத்துவது & அதன் பல்வேறு அம்சங்கள்:

    செயலி பதிவிறக்கம் (App Download)

    * Android: Google Play Store-ல் "mAadhaar" என தேடவும் → Install செய்யவும்.

    * iPhone: App Store-ல் "mAadhaar" என தேடவும் → Get செய்யவும்.

    மொழி தேர்வு

    * செயலியை திறந்தவுடன், உங்களுக்கு வசதியான மொழியை (தமிழ் உள்பட) தேர்வு செய்யவும்.

    * பிறகு "Continue" அழுத்தவும்.

    OTP மூலம் பதிவு

    * உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் கேட்கப்படும்.

    * அந்த எண்ணை கொடுக்கவும் → SMS-ல் OTP வரும் → அதை உள்ளிடவும்.

    உங்கள் ஆதார் இணைப்பு

    * "Add Aadhaar" என்பதைத் தேர்வு செய்யவும்.

    * 12 இலக்க ஆதார் எண் அல்லது 16 இலக்க VID (Virtual ID) கொடுக்கவும்.

    * மீண்டும் OTP வரும் → OTP கொடுத்து உறுதிப்படுத்தவும்.

    * இப்போது உங்கள் டிஜிட்டல் ஆதார் கார்டு செயலியில் சேமிக்கப்படும்.

    முக்கிய சேவைகள் (App-ல் கிடைக்கும்)

    1. ஆதார் Download – PDF/digital copy எப்போதும் பயன்படுத்தலாம்.

    2. QR Code – வேகமாக ஆதார் தகவல் பகிரலாம்.

    3. Update Address – முகவரி மாற்ற விண்ணப்பிக்கலாம்.

    4. Lock/Unlock Aadhaar – தேவையானபோது ஆதாரை பூட்டலாம், மீண்டும் திறக்கலாம்.

    5. Offline e-KYC – வங்கி / SIM / பிற சேவைகளுக்கு KYC பகிரலாம்.

    6. Generate TOTP – OTP க்கு மாற்றாக செயலியில் தற்காலிக password கிடைக்கும்.

    பாதுகாப்பு அம்சங்கள்

    * ஆதார் லாக்/அன்லாக் → யாரும் உங்கள் ஆதார் விவரங்களை தவறாக பயன்படுத்த முடியாது.

    * Biometric Lock → உங்கள் கைரேகை/கண்கள் மூலம் மட்டுமே Authentication செய்யலாம்.

    • அதானி குழுமப் பங்குகளின் சந்தை மதிப்பில் ரூ.12.5 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.
    • அப்போதைய செபி தலைவர் மாதபி பூரி புச் மற்றும் அவரது கணவர் தவால் புச் ஈடுபட்டதாகவும் ஹிண்டன்பர்க் குற்றம் சாட்டியிருந்தது.

    அதானி குழுமம் பங்குச் சந்தையில் மோசடி செய்ததாக அமெரிக்கவின் ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையை "கட்டுக்கதை" என இந்தியப் பங்குச் சந்தை வாரியம் (செபி) நிராகரித்துள்ளது .

    அதானி குழுமத்திற்கு எதிராக எந்த முறைகேடுகளையும் கண்டறியவில்லை என்றும், எந்த அபராதமும் விதிக்கப்படவில்லை என்றும் செபி தெரிவித்துள்ளது.

    கடந்த ஆண்டு ஜனவரியில் அதானி குழுமத்திற்கு எதிராக வெளியான இந்த ஹிண்டன்பர்க் அறிக்கை பங்குச் சந்தையில் அதன் பங்குகளில் 50 சதவீதம் சரிவை ஏற்படுத்தியது. இதனால் அதானி குழுமப் பங்குகளின் சந்தை மதிப்பில் ரூ.12.5 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.

    அதானி மீதான முக்கிய குற்றச்சாட்டு, அவர் வெளிநாடுகளில் ஷெல் நிறுவனங்களை அமைத்தார், தனது சொந்த நிறுவனத்தின் பங்குதாரர்களிடம் முதலீடு செய்தார், பங்குகளின் விலையை உயர்த்தினார், மேலும் இந்த பங்குதாரர்கள் கடன்களைப் பெறுவதற்கு பிணையம் வழங்கினர் என்பதுதான்.

    அதானி குழுமத்துடன் தொடர்புடைய ரகசிய வெளிநாட்டு முதலீடுகளில் அப்போதைய செபி தலைவர் மாதபி பூரி புச் மற்றும் அவரது கணவர் தவால் புச் ஈடுபட்டதாகவும் ஹிண்டன்பர்க் குற்றம் சாட்டியிருந்தது.

    முன்னதாக, இந்த ஆண்டு துவக்கத்தில் ஹிண்டன்பர்க் நிறுவனம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    • 28 சதவீதம், 18 சதவீதத்திற்குப் பதிலாக 0 முதல் 5 சதவீதம் வரை கிடைக்கும்.
    • சுதந்திரமாக ஷாப்பிங் செய்யுங்கள். ஆனால் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் வாங்குங்கள்.

    மத்திய அரசு ஜிஎஸ்டி வரி விதிப்பில் மிகப்பெரிய சீர்திருத்தம் செய்துள்ளது. இதை ஜிஎஸ்டி 2.0 எனக் கூறுகிறார்கள். முன்னதாக 5, 12, 18, 28 சதவீதம் என நான்கு அடுக்குகளில் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்பட்டது. இனிமேல் 5 மற்றும 18 ஆகிய இரண்டு அடுக்குகள் மட்டுமே இருக்கும். ஆடம்பர கார்கள், பைக்குகள், சிகரெட் போன்றவற்றிற்கு 40 சதவீத வரியை அறிமுகம் செய்துள்ளது.

    இதனால் பெரும்பாலான பொருட்களின் விலை கணிசமாக குறைய வாய்ப்புள்ளது. இந்த சீர்திருத்தம் வருகிற 22ஆம் தேதி முதல் அமல்படுத்த இருக்கிறது.

    இந்த நிலையில் இந்தியாவில் உள்ள பெண்கள் அனைவரும் வருகிற 22ஆம் தேதி முதல் ஷாப்பிங் செய்ய தொடங்குங்கள் என அமித் ஷா தெரிவித்துள்ளார்.

    நேற்று டெல்லி மாநில அரசின் 1723 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை அமித் ஷா தொடங்கி வைத்தார்.

    அப்போது அமித் ஷா கூறியதாவது:-

    தீபாவளி மற்றும் நவராத்திரி விரைவில் வரவிருக்கிறது. நீங்கள் பயன்படுத்தும் பொருட்கள் இனிமேல் 28 சதவீதம், 18 சதவீதத்திற்குப் பதிலாக 0 முதல் 5 சதவீதம் வரை கிடைக்கும். டெல்லியின் தாய்மார்கள், சகோதரிகள் வீட்டில் முதலாளியாக இருந்து, செப்டம்பர் 22ஆம் தேதி முதல் இன்னும் மேலும் மேலும் ஷாப்பிங் செய்ய வேண்டும் எனச் சொல்ல விரும்புகிறேன்.

    சுதந்திரமாக ஷாப்பிங் செய்யுங்கள். ஆனால் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் வாங்குங்கள். வெளிநாட்டில் இருந்து இறக்குமதியான பொருட்களை வாங்காதீர்கள். இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் நம் நாட்டில் தயாரிக்கப்படுவதை மட்டுமே வாங்குவதாக உறுதிமொழி எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது

    இவ்வாறு அமித் ஷா தெரிவித்துள்ளார்.

    • சேதமைடைந்த விஷ்ணு சிலையை சீரமைத்து மீண்டும் நிறுவக்கோரி மனு
    • கடவுளிடம் சென்று ஏதாவது செய்யக் சொல்லுங்கள் என கவாய் கருத்து தெரிவித்திருந்தார்.

    மத்திய பிரதேசத்தில் உள்ள கஜுராகோ கோவில் வளாகத்தில் உள்ள ஜவாரி கோவிலில் சேதம் அடைந்த கடவுள் விஷ்ணுவின் சிலையை சரி செய்து மீண்டும் நிறுவன வேண்டும் என ராகேஷ் தலால் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனு கடந்த செவ்வாய்க்கிழமை தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான பெஞ்ச் முன் விசாணைக்கு வந்தது. இப்போது மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்தது.

    அத்துடன் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், "இந்த மனு முற்றிலும் சுய லாபம் நோக்கம் கொண்டது. கடவுளிடம் சென்று ஏதாவது செய்யக் சொல்லுங்கள். நீங்கள் கடவுள் விஷ்ணுவின் கடுமையான பக்தர் என்று சொல்லிக் கொள்ளீர்கள் என்றால், பிரார்த்தனை செய்து, தியானம் செய்யுங்கள்" என்று தெரிவித்திருந்தார்.

    இது சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு சர்ச்சையானது. இந்த நிலையில் நான் அனைத்து மதங்களையும் மதிக்கிறேன். எனது கருத்து தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது என கவாய் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக கவால் கூறுகையில் "இந்த விவகாரம் தொடர்பாக நான் கூறியதாக சமூக வலைத்தளங்களில் சித்தரித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாக என்னிடம் ஒருவர் தெரிவித்தார். நான் அனைத்து மதங்களையும் மதிக்கிறேன்" என்றார்.

    • எங்களுடைய ஆலந்து வேட்பாளர் மோசடியை வெளிக்கொண்டு வந்த பின்னர் FIR பதிவு.
    • தலைமை தேர்தல் ஆணையரால் சிஐடி விசாரணை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

    கர்நாடக மாநில ஆலந்து தொகுதியில் சுமார் 6 ஆயிரம் வாக்குகளை நீக்க முயற்சி நடந்ததாகவும், வாக்காளர்களின் உறவினர்கள் கண்டுபிடித்ததால் அவை தடுத்து நிறுத்தப்பட்டதாவும் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். மேலும், systematic ஆக தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஆனால், ராகுல் காந்தியின் இந்த குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் விளக்கம் அளித்திருந்தார்.

    இந்த நிலையில் சாக்கு போக்கு தேவையில்லை. கர்நாடக மாநில சிஐடி-யிடம் ஆதாரங்களை வெளியிடுங்கள் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ராகுல் காந்தி எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    எங்களுடைய ஆலந்து வேட்பாளர் மோசடியை வெளிக்கொண்டு வந்த பின்னர், உள்ளூர் தேர்தல் அதிகாரி வழக்குப்பதிவு செய்துள்ளார். ஆனால் தலைமை தேர்தல் ஆணையரால் சிஐடி விசாரணை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

    கர்நாடக சிஐடி 18 மாதங்களில் ஆதாரங்களை கேட்டு 18 கடிதங்கள் எழுதியுள்ளது. அனைத்தும் தலைமை தேர்தல் ஆணையரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

    விசாரணைக்கு இணங்க இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கர்நாடக தேர்தல் ஆணையம் பலமுறை வேண்டுகோள் விடுத்தது. தலைமை தேர்தல் ஆணையர் அதை தடுத்துள்ளார்.

    ஐ.பி., டிவைஸ் போர்ட்ஸ், ஓடிபி டிரையல்ஸ் போன்றவை மறைக்கப்பட்டன.

    வாக்கு திருட்டு பிடிபடவில்லை என்றால், 6018 வாக்குகள் நீக்கப்படிருக்கும். எங்களுடைய வேட்பாளர் தேர்தலில் தோல்வியடைந்திருப்பார்.

    தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், சாக்கு போக்கு விளக்கத்தை நிறுத்தவும். இப்போதே கர்நாடகா சிஐடி-க்கு ஆதாரங்களை கொடுக்கவும்.

    இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    • வாக்குத் திருட்டு நடப்பது தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ்வர் குமாருக்கு தெரியும்.
    • தகவல்கள் வெளிவந்த பிறகும் தேர்தல் ஆணையர் ஞானேஸ்வர் அதை மறைக்கிறார்.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்கு திருட்டு நடந்ததாக பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி சமீபத்தில் சில புள்ளிவிவரங்களை வெளியிட்டார். அவரது குற்றச்சாட்டை தேர்தல் கமிஷன் நிராகரித்தது.

    இதனையடுத்து பீகாரில், 'வாக்காளர் அதிகார யாத்திரை' என்ற பெயரில், வாக்கு திருட்டு குற்றச்சாட்டை முன்வைத்து ராகுல்காந்தி யாத்திரை நடத்தினார்.

    இந்நிலையில், வாக்கு திருட்டு தொடர்பாக இன்று மீண்டும் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது, "கர்நாடகாவில் உள்ள ஆலந்து தொகுதியில் 6018 வாக்காளர்களை நீக்க முயன்றனர். 2023 தேர்தலில் ஆலந்தில் நீக்கப்பட்ட மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை எங்களுக்குத் தெரியாது. அவை 6,018 ஐ விட மிக அதிகம். ஆனால் அந்த 6018 வாக்காளர்களை நீக்கியபோது யாரோ ஒருவர் பிடிபட்டார், அது தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டது. அங்குள்ள வாக்குச்சாவடி நிலை அதிகாரி தனது மாமாவின் வாக்கு நீக்கப்பட்டதை கண்டுபிடித்தார். எனவே அவர் தனது மாமாவின் வாக்கு நீக்கப்பட்டதைச் சரிபார்த்தார், மேலும் அந்த வாக்கை நீக்கியது ஒரு பக்கத்து வீட்டுக்காரர் என்பதைக் கண்டுபிடித்தார். அவர் தன் பக்கத்து வீட்டுக்காரரிடம் கேட்டார். ஆனால் நான் எந்த வாக்கையும் நீக்கவில்லை என்று அவர் கூறினார். இந்த விஷயம் வாக்கை நீக்கிய நபருக்கோ அல்லது வாக்கு நீக்கப்பட்ட நபருக்கோ தெரியாது. அப்படியானால் வேறு சில நபர்கள் வாக்காளர்களை நீக்கியுள்ளனர்.

    ஆலந்து தொகுதியில் வாக்காளர்களைப் போல ஆள்மாறாட்டம் செய்து 6018 விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த விண்ணப்பங்களை தாக்கல் செய்தவர்கள் உண்மையில் அவற்றை ஒருபோதும் தாக்கல் செய்யவில்லை. கம்ப்யூட்டர் மென்பொருளைப் பயன்படுத்தி அவை தானாகவே தாக்கல் செய்யப்பட்டது. கர்நாடகாவிற்கு வெளியே இருந்து, பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்த மொபைல் எண்கள், ஆலந்தில் உள்ள எண்களை நீக்கப் பயன்படுத்தப்பட்டன.

    கால் சென்டர்கள், நவீன கணிப்பொறிகள், செயலிகள் கொண்டு வாக்கு திருட்டு மோசடி செய்யப்பட்டுள்ளது : வாக்காளர் நீக்கம் என்பது அனைத்து சட்டமன்ற தொகுதியிலும் நடைபெறவில்லை. மாறாக காங்கிரஸ் கட்சி எந்த இடத்தில் எல்லாம் வெற்றி பெறப் போகிறதோ? என கண்டறிந்து அந்த சட்டமன்ற தொகுதிகளில் மட்டும் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    எந்த கணிப்பொறியில் இருந்து வாக்காளர் நீக்க ஆவணங்கள் சமர்ப்பிக்கபட்டது என்ற IP முகவரி கேட்டோம். ஏனென்றால் அது கிடைத்தால் இந்த மோசடியில் ஈடுபட்டது யார் என்று நாங்கள் கண்டுபிடித்துவிடுவோம். ஆனால், இதில் சம்பந்தப்பட்டவர்களை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ்வர் காப்பாற்றியுள்ளார்.

    இந்த விவகாரம் குறித்து பிப்ரவரி 23 அன்று FIR தாக்கல் செய்யப்படுகிறது. மார்ச் மாதத்தில் இந்த எண்கள் மற்றும் இந்த பரிவர்த்தனைகள் பற்றிய அனைத்து விவரங்களையும் உடனடியாகக் கோரி கர்நாடக சிஐடி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதுகிறது. ஆகஸ்ட் மாதம், தேர்தல் ஆணையம் இதற்கு ஒரு பதிலைக் தருகிறது. ஆனால் சிஐடி கேட்ட எந்த ஆதாரங்களையும் அவர்கள் தரவில்லை.

    இதனையடுத்து ஜனவரி 24 ஆம் தேதி, கர்நாடக சிஐடி மீண்டும் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதி, எங்களுக்கு முழுத் தகவலையும் அனுப்புங்கள் என்று கூறுகிறது. அதன்பின்னும் பதில் இல்லை.

    செப்டம்பர் 25 ஆம் தேதிக்குள் கர்நாடக சிஐடி 18 கடிதங்களை தேர்தல் ஆணையத்திற்கு எழுதியுள்ளது. இது நடந்து கொண்டிருக்கும்போது, கர்நாடக தலைமை தேர்தல் ஆணையம் டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதி, இந்தத் தகவலை வழங்குமாறு கேட்கிறது. இப்போது ஞானேஷ் குமார் வாக்கு திருட்டில் ஈடுபடுபவர்களை பாதுகாக்கிறார் என்பதற்கு இது முழுமையான உறுதியான சான்றாகும்" என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், ராகுல் காந்தி தெரிவித்த குற்றச்சாட்டுகள் தவறானவை மற்றும் ஆதாரமற்றவை என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

    இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள பதிவில், "ராகுல் காந்தி தவறாகக் கூறியது போல, எந்தவொரு வாக்காளரையும் எந்தவொரு பொதுமக்களும் ஆன்லைனில் இருந்து நீக்க முடியாது. பாதிக்கப்பட்ட நபரின் கருத்தை கேட்காமல் எந்த வாக்காளர் நீக்கமும் நடக்காது.

    2023 ஆம் ஆண்டில், ஆலந்து சட்டமன்றத் தொகுதியில் வாக்காளர்களை நீக்குவதற்கு சில தோல்வியுற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் இந்த விஷயத்தை விசாரிக்க தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்தால் ஒரு FIR பதிவு செய்யப்பட்டது.

    ஆலந்து சட்டமன்றத் தொகுதியில் 2018 இல் பாஜகவை சேர்ந்த சுபாத் குட்டேதரும் 2023 ஆம் ஆண்டு காங்கிரசை சேர்ந்த பி.ஆர். பாட்டீலும் வெற்றி பெற்றனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×