என் மலர்tooltip icon

    இந்தியா

    வாக்கு எந்திரத்தில் வேட்பாளரின் கலர் போட்டோ: பீகார் தேர்தலில் அறிமுகம்
    X

    வாக்கு எந்திரத்தில் வேட்பாளரின் கலர் போட்டோ: பீகார் தேர்தலில் அறிமுகம்

    • வேட்பாளரின் சீரியல் நம்பர் தெளிவாக தெரியும்படி பிரிண்ட் செய்யப்படும்.
    • வேட்பாளர்கள் படம் இனிமேல் கலரில் பிரிண்டில் ஒட்டப்படும்.

    இந்தியாவில் நடைபெறும் மக்களவை, மாநில சட்டசபை தேர்தல்களில் வாக்கு எந்திரம் பயன்படுத்தப்படுகிறது. வாக்கு எந்திரத்தில் வேட்பாளர் படம், கட்சி சின்னம் உள்ளிட்ட விவரங்கள் அச்சிடப்பட்டிருந்தது. அவற்றை பார்த்து வாக்காளர்கள் வாக்களிப்பார்கள்.

    அதில் உள்ள புகைப்படும் மற்றும் சின்னங்கள் போன்றவை தெளிவாக தெரியாது. இதனால் வேட்பாளர்கள் குழப்பம் அடையும் நிலை ஏற்படும். இதை கருத்தில் கொண்டு தேர்தல் ஆணையம் வாக்காளர்களுக்கு வேட்பாளர் பெயர், கட்சி சின்னம் தெளிவாக தெரிவதற்கு ஏற்பாடுகள் செய்து வருகின்றன.

    அந்த வகையில் பீகார் தேர்தலில் இருந்து வேட்பாளர்களின் புகைப்படங்கள் கலரில் அச்சிடப்பட்டு ஒட்டப்படும். மேலும், வேட்பாளர்களின் சீரியல் நம்பர் தெளிவாக தெரியும்படி அச்சிடப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    இதனால் வாக்காளர்கள் வேட்பாளர் புகைப்படத்தை தெளிவாக பார்த்து, சீரியல் நம்பர் மற்றும் புகைப்படத்தை ஒப்பிட்டு பார்த்து குழப்பம் இல்லாமல் வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    வேட்பாளர் புகைப்படத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் நான்கில் மூன்று பங்கு இடத்தில் கலர் படம் ஒட்டப்படும்.

    Next Story
    ×