விதிகளுக்கு புறம்பாக வந்தாரா மையத்திற்கு வெளிநாட்டு விலங்குகள் கொண்டு வரப்பட்டதா?- SIT அறிக்கை தாக்கல்

வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக விலங்குகள் கொண்டு வரப்பட்டதாக என விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் குழு அமைத்தது.சிறப்பு விசாரணைக் குழு உச்சநீதிமன்றத்தில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.
விதிகளுக்கு புறம்பாக வந்தாரா மையத்திற்கு வெளிநாட்டு விலங்குகள் கொண்டு வரப்பட்டதா?- SIT அறிக்கை தாக்கல்
Published on

குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள ரிலையன்ஸ் அறக்கட்டளையின் வந்தாரா விலங்கு மீட்பு, பராமரிப்பு மற்றும் மறுவாழ்வு முயற்சி மையத்திற்கு முறைகேடாக இந்தியா மற்றும் வெளிநாட்டு விலங்குகள் கொண்டு வரப்பட்டதாக புகார் எழுந்தது. குறிப்பாக யானைகள் கொண்டு வரப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் உச்சநீதிமன்றம் சிறப்பு விசாரணைக் குழுவை (SIT) அமைத்தது.

இந்த குழு விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்த அறிக்கையில் விதிகளை பின்பற்றியே வெளிநாடுகளில் இருந்து விலங்குகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கின் விசாரணையில், "வந்தாரா சட்டங்களை கண்டிப்பாக கடைபிடிக்கிறது. அதைக் கெடுக்காதீர்கள், முழு அறிக்கையை விரிவாகப் பார்க்கலாம்" என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com