என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்திய ஏற்றுமதி"

    • கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியாவின் ஏற்றுமதி 32.89 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.
    • கடந்த ஆகஸ்ட் மாதத்தின் ஏற்றுமதி 35.1 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

    இந்தியாவின் ஏற்றுமதி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தை காட்டிலும், கடந்த மாதம் 6.7 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேவேளையில் இறக்குமதி 10 சதவீதம் குறைந்துள்ளது.

    கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியாவின் ஏற்றுமதி 32.89 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த நிலையில், இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் (கடந்த மாதம்) 35.1 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

    கடந்த ஆண்டு 68.53 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த இறக்குமதி, இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 61.59 அமெரிக்க டாலராக குறைந்துள்ளது.

    இருந்தபோதிலும், ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகம் என்பதால், கடந்த ஆண்டு 26.49 பில்லியன் டாலராக இருந்த பற்றாக்குறை, இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 35.64 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

    2025 ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை இந்தியாவின் ஏற்றுமதி 184.13 பில்லியன் டாலராகும். அதேவேளையில் இறக்குமதி 306.52 பில்லியன் டாலராகும்.

    • ராகுல் காந்தியின் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் ஒரு அரசியல் கட்சியை போல் நடந்து கொண்டுள்ளது.
    • தி.மு.க.வை பொறுத்தவரை தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளில் கணிசமானவற்றை நிறைவேற்றியுள்ளனர்.

    மதிமுக தென் மண்டல மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் கோவில்பட்டியில் நடந்தது.

    இக்கூட்டத்திற்கு துணை பொது செயலாளர் தி.மு.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இதில், முதன்மைச் செயலாளர் துரை வைகோ கலந்து கொண்டு பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட செயலாளர் தூத்துக்குடி ஆர்.எஸ்.ரமேஷ் குமரி வெற்றிவேல், நெல்லை மத்திய மாவட்டம் கே.எம்.ஏ. நிஜாம், நெல்லை புறநகர் உவரி எம்.ரைமண்ட், தென்காசி தெற்கு ராம உதயசூரியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்துக்கு பின்னர் துரை வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

    பீகாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் என கூறி சுமார் 65 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதற்கு பல காரணங்களை தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

    இது பலத்த சந்தேகத்தை எழுப்பி உள்ளது. இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். தேர்தல் ஆணையத்தை பொருத்தவரை ராகுல் காந்தியின் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் ஒரு அரசியல் கட்சியை போல் நடந்து கொண்டுள்ளது.

    பாராளுமன்ற கூட்டத்தொடரின்போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விளக்கம் அளிக்க மத்திய அரசிடம் கேட்டோம். அந்த விவாதத்துக்கு அவர்கள் மறுத்துவிட்டனர். தேர்தல் ஆணையம் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று தான் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தலைமையில் அங்கு பேரணி நடந்து வருகிறது.

    தி.மு.க.வை பொறுத்தவரை தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளில் கணிசமானவற்றை நிறைவேற்றியுள்ளனர். சில வாக்குறுதிகளுக்கு முதல்-அமைச்சரும் துறை சார்ந்த அமைச்சரும் பதில் அளித்துள்ளனர். பல வாக்குறுதிகள் நிறைவேறாமல் இருப்பதற்கு நிதி நெருக்கடியும் ஒரு காரணம். இதுபோன்ற நிலை பா.ஜ.க. அல்லாத பிற கட்சிகள் ஆளும் மாநிலங்களில் எல்லாம் நிலவுகிறது.

    இந்திய ஏற்றுமதி பொருள்களுக்கு அமெரிக்க நாடு 50 சதவீதம் வரிவிதிப்பால் மிகப்பெரிய அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு பொறுத்த வரை ஜவுளித்துறை முக்கிய தொழிலாக உள்ளது.

    அமெரிக்காவின் வரி விதிப்பால் ஆயிரக் கணக்கான தொழிற்சாலைகள் மூடப்படும் அபாய நிலை உருவாகியுள்ளது.

    இதனால் லட்சக் கணக்கான தொழிலாளர்கள் தங்களது வேலை இழக்கும் நிலை வரும். மத்திய அரசு இதற்குரிய மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

    ஏற்கனவே மத்திய அரசு மாற்று ஏற்பாடுகளை செய்து வருவதாக தெரிகிறது. 200 நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் உள்ளது. இதில் 40 நாடுகளை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது.

    அந்த நாடுகளுடன் பேசி அமெரிக்க மூலமாக ஏற்படும் வர்த்தக இழப்பை ஈடு செய்யும் அளவுக்கு ஏற்றுமதியை கொண்டு சென்றால் இப்பிரச்சினையை சரி செய்யலாம் என்ற முயற்சி இருக்கிறது. இதனை விரைந்து செய்ய வேண்டும்.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறித்து த.வெ.க. தலைவர் விஜய் பேசியதை தவிர்க்க வேண்டும். பேரறிஞர் அண்ணாவின் 117-வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சியில் மதிமுக சார்பில் மாநாடு நடைபெற உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்திய தொழில்துறைக்கு, உலகம் முழுவதும் பிரகாசமான எதிர்காலம் உருவாகும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.
    • இந்தியா-கனடா இடையே வரியில்லாத ஒப்பந்தம் உருவாக சிறப்பு முயற்சி எடுத்துள்ளோம்.

    திருப்பூர்:

    வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்தும் நோக்குடன் மத்திய ஜவுளித் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் அரசு பிரதிநிதிகள் அடங்கிய குழு கடந்த 10 நாட்களாக பல்வேறு நாடுகளுக்கு பயணமானது. இதில் திருப்பூரை சேர்ந்த இந்திய ஏற்றுமதியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (பியோ) தலைவர் சக்திவேலும் பங்கேற்றார்.

    பிரான்ஸ் உச்சி மாநாடு, இந்தியா- இத்தாலி வர்த்தக கலந்துரையாடல், ஐரோப்பா மற்றும் இந்தோ - பசிபிக் அமர்வு, இந்தியா -இத்தாலி தலைமை நிர்வாகிகள் கலந்துரையாடல், கனடாவில் நடந்த வரியில்லா வர்த்தக ஒப்பந்த ஆலோசனை, நியூயார்க்கில் நடந்த வட்டமேஜை மாநாடு, தென்கிழக்கு அமெரிக்காவில் நடந்த 'பாஸ்ட்னர்ஸ்' கண்காட்சி ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்ற இக்குழுவினர் பல்வேறு வர்த்தக கூட்டமைப்பினர் மற்றும் அரசு பிரதிநிதிகளை சந்தித்து பேசினர்.

    இது குறித்து 'பியோ' தலைவர் சக்திவேல் கூறியதாவது:-

    இந்திய தொழில்துறைக்கு, உலகம் முழுவதும் பிரகாசமான எதிர்காலம் உருவாகும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. கொரோனாவுக்கு பிறகு உலகளாவிய புவிசார் அரசியல் மற்றும் வளர்ந்து வரும் நிலையில், சவால்களை எதிர்கொள்ள பல்வேறு நாடுகளும் இந்தியாவுடன் கரம்கோர்க்க முன்வந்துள்ளன.பொருட்கள் மற்றும் சேவை ஏற்றுமதியில் 50 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சி கிடைத்துள்ளது.

    வரும் 2030ம் ஆண்டுக்குள் இந்தியாவின் ஏற்றுமதி 3 மடங்கு உயருமென நம்பிக்கை பிறந்துள்ளது. அதிக மக்கள்தொகை கொண்ட இந்தியா எண்ணற்ற உற்பத்தி ஆற்றலை கொண்டுள்ளதாக வளர்ந்த நாடுகள் பாராட்டியுள்ளன.

    இந்தியா-கனடா இடையே வரியில்லாத ஒப்பந்தம் உருவாக சிறப்பு முயற்சி எடுத்துள்ளோம். இந்தியாவின் தரம் மற்றும் சேவை மதிப்பை பாராட்டும் வகையில், சீனாவுக்கான கனடா ஏற்றுமதி ஆர்டர்கள் இந்தியாவை நோக்கி திரும்பும். தொழில் முறை வர்த்தக மேம்பாட்டு பயணம் இந்திய தொழில் துறைக்கு நேர்மறை வளர்ச்சி வாய்ப்புகளை அதிகம் உருவாக்கியுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×