என் மலர்
ஆந்திர பிரதேசம்
- தேஜா மற்றும் ஹாரிகா ஆந்திராவில் நடந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் கலந்து கொண்டனர்.
- தேஜா, ஹாரிகா ஆகியோர் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு தேர்வானார்கள்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், எர்ரவாரி பாலம், பாக்ரா பேட்டையை சேர்ந்தவர் சுதா கீதா. பாக்ரா பேட்டையில் உள்ள தொடக்கப் பள்ளியில் தெலுங்கு ஆசிரியராக வேலை செய்து வருகிறார்.
இவரது மகன் தேஜா, மகள் ஹாரிகா. தேஜா விசாகப்பட்டினத்தில் உள்ள ஜிஎஸ்டி தணிக்கை துறையில் ஆய்வாளராக வேலை செய்தார். தற்போது சித்தூர் கங்காதர நல்லூர் பஞ்சாயத்து செயலாளராக உள்ளார்.
இந்த நிலையில் தேஜா மற்றும் ஹாரிகா ஆந்திராவில் நடந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் கலந்து கொண்டனர்.
தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் தேஜா, ஹாரிகா ஆகியோர் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு தேர்வானார்கள்.
அண்ணன், தங்கை இருவரும் ஒரே நேரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு தேர்வானது குறித்து சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
- திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நேற்று நேரடியாக சர்வ தரிசனம் செல்லும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
- வைகுண்ட ஏகாதசியையொட்டி, திருமலைக்கு தற்போது அதிக அளவில் வி.ஐ.பி. பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.
திருப்பதி:
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று அதிகாலை 1.40 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.
முதலில் வி.ஐ.பி. பக்தர்கள் சுவாமியை தரிசித்த பின்னர் சொர்க்க வாசலை தரிசித்து விட்டு வெளியே வந்தனர். அதன் பின்னர், சாமானிய பக்தர்கள் சொர்க்க வாசல் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.
வரும் ஜனவரி 1-ம் தேதி வரை பக்தர்களுக்கு சொர்க்க வாசல் தரிசன ஏற்பாடுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் செய்துள்ளது.
அத்துடன் திருப்பதியில் ஏற்பாடு செய்துள்ள 9 இடங்களிலும் வியாழக்கிழமை நள்ளிரவு 11.30 மணி முதலே சொர்க்க வாசல் தரிசனத்துக்கான இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டன.
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நேற்று நேரடியாக சர்வ தரிசனம் செல்லும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இது ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தாலும், ஏராளமான பக்தர்கள் நேற்று திருமலையில் குவிந்ததால், எவ்வித டோக்கன்களும் இன்றி சர்வ தரிசன வரிசையில் செல்ல முயன்ற பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
ஆதலால், போலீசாருக்கும், பக்தர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. 22-ம் தேதிக்கான சர்வ தரிசன டோக்கன்களை ஏன் ரத்து செய்தீர்கள்? என பக்தர்கள் கேள்வி எழுப்பினர்.
அதன் பின்னர், சிறிது நேரத்தில் பக்தர்கள் சர்வ தரிசன வரிசையில் அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் சிறிது நேரம் பக்தர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
வைகுண்ட ஏகாதசியையொட்டி, திருமலைக்கு தற்போது அதிக அளவில் வி.ஐ.பி. பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.
இதனால் சாமானிய பக்தர்கள் பாதிக்கப்படுகின்றனர். தேவஸ்தானம் விஐபி சிபாரிசு கடிதங்களை ரத்து செய்திருந்தாலும், நேரடியாக வரும் வி.வி.ஐ.பி.க்களுக்கு தரிசன ஏற்பாடுகளை செய்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
- சினிமா முடிந்து தியேட்டரில் இருந்து பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து சிவராம கிருஷ்ணனை கைது செய்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், பெனுகொண்டா மாவட்டம், மோர்தாவை சேர்ந்தவர் சிவராமகிருஷ்ணன். இவரது மனைவி சத்தியவாணி. தம்பதிக்கு கடந்த வாரம் திருமணம் நடந்தது.
திருமணம் நடந்த 3-வது நாளிலேயே கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் புதுமண தம்பதி இருவரும் இரவு காட்சி சினிமா பார்க்க சென்றனர். சினிமா முடிந்து தியேட்டரில் இருந்து பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் விரக்திஅடைந்த இருவரும் தற்கொலை செய்வதற்காக கோதாவரி ஆற்றில் குதித்தனர்.
இதனை கண்டு ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் திடுக்கிட்டனர். அவர்கள் சிவராம கிருஷ்ணனை காப்பாற்றினர். ஆனால் அவரது மனைவி சத்தியவாணியை காப்பாற்ற முடியவில்லை. அவர் தண்ணீரில் மூழ்கி இறந்தார்.
இதுகுறித்து பெனுகொண்டா போலீசார் வழக்கு பதிவு செய்து சிவராம கிருஷ்ணனை கைது செய்தனர்.
- 9 இடங்களில் வழங்கப்படும் வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் மட்டுமே மலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
- நடைபாதை பக்தர்கள் அலிப்பிரி நடைபாதை அடிவாரத்தில் தரிசனம் டோக்கன் பெறலாம்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை முதல் வருகிற 1-ந் தேதி வரை 10 நாட்கள் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் தரிசனம் நடக்கிறது. இதற்காக ஏற்கனவே ரூ.300 கட்டண தரிசன டிக்கெட் வெளியிடப்பட்டது.
மேலும் பக்தர்களுக்கு 4 லட்சம் இலவச தரிசன டோக்கன் வழங்க விரிவான ஏற்பாடுகளை தேவஸ்தானம் செய்துள்ளது.
திருப்பதியில் 9 மையங்களில் 90 கவுண்டர்களில் இன்று மதியம் 2 மணி முதல் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் தரிசன டோக்கன்கள் வழங்கப்படுகிறது.
இதன் காரணமாக நாளை முதல் திருப்பதியில் நேரடி இலவச தரிசனம் மற்றும் நேர ஒதுக்கீடு தரிசன டிக்கெட் ரத்து செய்யப்பட்டுள்ளது.
9 இடங்களில் வழங்கப்படும் வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் மட்டுமே மலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
இதற்காக மலை அடிவாரத்தில் கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பக்தர்களின் ஆதார் அட்டை மற்றும் தரிசன டோக்கன்களை சரி பார்த்து மலைக்கு அனுப்பி வைப்பார்கள்.
9 மையங்களிலும் தரிசன டோக்கன் தீரும் வரை பக்கர்களுக்கு வழங்கிக் கொண்டே இருப்பார்கள்.
அந்த டோக்கனில் பக்தர்கள் தரிசனம் செய்ய வேண்டிய நாள், நேரம் போன்றவை இடம்பெற்றிருக்கும். அதன் அடிப்படையில் பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்து கொள்ளலாம்.
தமிழகத்தில் நாளை முதல் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்படுகிறது. இதனால் பக்தர்கள் வழக்கத்தை விட கூடுதலாக திருப்பதிக்கு வருவார்கள் .
டோக்கன் உள்ள பக்தர்கள் மட்டுமே மலையேற அனுமதி உள்ளதால் கீழ் திருப்பதியில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை தேவஸ்தானம் செய்து வருகிறது.
டோக்கன் வழங்கப்படும் மையங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்ப டுகின்றனர்.
இன்று வழக்கம் போல நேரடி இலவச தரிசனத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
நாளை முதல் டோக்கன் இல்லாத பக்தர்கள் அனுமதிக்க படமாட்டார்கள். நேரடி இலவச தரிசனத்திற்கு பக்தர்கள் வர வேண்டாம் என திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.
திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட்டுகள் 9 மையங்களில் வழங்கப்படுகிறது. சென்னை மற்றும் வேலூர் வழியாக திருப்பதி செல்லும் பக்தர்கள் பஸ் நிலையம் எதிரே உள்ள சீனிவாசம் காம்ப்ளக்ஸ் மற்றும் ரெயில் நிலையம் அருகே உள்ள விஷ்ணு நிவாசம் ஆகிய இடங்களுக்கு எளிதில் செல்ல முடியும். அந்த இடங்களில் கூடுதல் கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளதால் டிக்கெட்டுகளை பெறலாம்.
பஸ் நிலையம் அருகே உள்ள சீனிவாசம் காம்ப்ளக்சில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் உள்ளன.
நடைபாதை பக்தர்கள் அலிப்பிரி நடைபாதை அடிவாரத்தில் தரிசனம் டோக்கன் பெறலாம்.
- பயணிகள் பஸ்சிலிருந்து கீழே இறங்கியதும் பஸ் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்தனர்.
- ஆந்திரா சத்தீஸ்கர் மாநில எல்லையில் வாகனங்களுக்கு தீ வைத்து எரித்த சம்பவம் கடும் பீதியை ஏற்படுத்தி்யது.
திருப்பதி:
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள நக்சலைட்டுகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை பந்த் நடைபெறும் என அழைப்பு விடுத்துள்ளனர்.
ஆனால் மாநில அரசு வழக்கம்போல் அரசு அலுவலகங்கள் வாகனங்கள் இயங்கும் என அறிவித்தது. இதனால் நக்சலைட்டுகள் தங்களது பலத்தைக் காட்ட முடிவு செய்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு ஆந்திர மாநிலம், கன்னவரம் பகுதியில் ஆந்திர மாநில அரசு பஸ் ஒன்று 20-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சத்தீஸ்கர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்தது. அப்போது 20-க்கும் மேற்பட்ட நக்சலைட்டுகள் பஸ்சை தடுத்து நிறுத்தினா்.
பஸ்சில் இருந்த பயணிகளை கீழே இறக்கிவிட்டனர். பயணிகள் பஸ்சிலிருந்து கீழே இறங்கியதும் பஸ் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்தனர்.
இதேபோல் சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டம், ஆசிரி கூடேம், குந்தா என்ற இடத்தில் ஜக்தல்பூரில் இருந்து விஜயவாடா நோக்கி சென்ற அரசு பஸ்சை மடக்கினர். பயணிகளை இறக்கி விட்டு தீ வைத்து எரித்தனர்.
அந்த வழியாக வந்த மேலும் 2 லாரிகள், 1 காரையும் தீ வைத்து எரித்து விட்டு தப்பிச் சென்றனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திரா சத்தீஸ்கர் மாநில எல்லையில் வாகனங்களுக்கு தீ வைத்து எரித்த சம்பவம் கடும் பீதியை ஏற்படுத்தி்யது.
- கடந்த 3 மாதங்களாக சிறுத்தை நடமாட்டம் இல்லாமல் இருந்தது.
- கேமராக்களை ஆய்வு செய்தபோது லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் அருகே சிறுத்தை நடமாடுவதை உறுதி செய்தனர்.
திருமலை:
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் அலிபிரி நடைபாதையில் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் அருகே சிறுத்தைகள் நடமாட்டம் இருந்து வருகிறது.
ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு ஒரு சிறுமியை அடித்து கொன்றது. அதற்கு முன்பு ஒரு சிறுவன் படுகாயத்துடன் மீட்கப்பட்டான்.
இதனையடுத்து கூண்டுகள் வைத்து அடுத்தடுத்து 6 சிறுத்தைகள் பிடிக்கப்பட்டன. இதனால் கடந்த 3 மாதங்களாக சிறுத்தை நடமாட்டம் இல்லாமல் இருந்தது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக லட்சுமி நரசிம்ம சாமி சன்னதி அருகே உள்ள நடைபாதை அருகே அடிக்கடி மீண்டும் சிறுத்தை நடமாடுவதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் கேமராக்களை ஆய்வு செய்தபோது லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் அருகே சிறுத்தை நடமாடுவதை உறுதி செய்தனர்.
இதையடுத்து நேற்று முன்தினம் இரவு முதல் பக்தர்களுக்கு மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
பக்தர்கள் தனியாக செல்லக்கூடாது, குழுவாக செல்லவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து பக்தர்களுக்கும் மீண்டும் மூங்கில் கம்பு வழங்கி வருகின்றனர்.
இதுதவிர 100 படிக்கட்டுகளுக்கு ஒரு போலீசார் மற்றும் வனத்துறையினர் கயிறு கட்டி தடுப்பு ஏற்படுத்தி முகாமிட்டுள்ளனர். அவர்கள் பக்தர்கள் தனியாக செல்லாதபடி கண்காணித்து 100 பேர் குழுவாக அமைக்கும் பணியை மேற்கொண்டுள்ளனர்.
சிறுவர், சிறுமிகளை அழைத்துச்செல்லும்போது மிக கவனமாக இருக்க வேண்டும் எனவும், மலைப்பாதையில் வனத்துறையினர் மற்றும் போலீசார் மைக் மூலம் அறிவுறுத்தி வருகின்றனர்.
திருப்பதியில் வைகுண்ட ஏகாதசியொட்டி நாளை முதல் 9 இடங்களில் பக்தர்களுக்கு தரிசன டோக்கன்கள் வழங்கப்படுகிறது. அதனை பெற்று நேரடியாக சாமி தரிசனத்திற்கு செல்ல வேண்டும்.
இதன் மூலம் விரைவாக தரிசனம் செய்யலாம். டோக்கன் தீரும் வரை பக்தர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்துள்ளனர்.
இன்று இலவச தரிசனத்தில் 10 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
- உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முன் வந்தனர்.
- முதியவரின் இதயம் ஸ்ரீகாகுளம் ஜேம்ஸ் மருத்துவமனையில் எடுக்கப்பட்டது.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் வனஸ்தலிபுரத்தை சேர்ந்த 11 வயது சிறுமி இதய நோயால் பாதிக்கப்பட்டார். அவருக்கு மாற்று இதயம் பொருத்தினால் மட்டுமே உயிர் வாழ முடியும் என்ற நிலை ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து திருப்பதி பத்மாவதி குழந்தைகள் இதய மையத்தில் இதயம் தானம் கேட்டு பதிவு செய்தனர். இந்த நிலையில் ஸ்ரீகா குளத்தை சேர்ந்த 50 வயது முதியவர் ஒருவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. அவரது உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முன் வந்தனர்.
இதனையடுத்து முதியவரின் இதயத்தை சிறுமிக்கு பொருத்த ஏற்பாடு செய்தனர். இதற்காக முதியவரின் இதயம் ஸ்ரீகாகுளம் ஜேம்ஸ் மருத்துவமனையில் எடுக்கப்பட்டது.
அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் விசாகப்பட்டினத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் சிறப்பு விமான மூலம் திருப்பதி பத்மாவதி குழந்தைகள் இதய மைய ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு இதயமாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. இதன் மூலம் 11 வயது சிறுமி உயிர் பிழைத்தார்.
இது இந்த ஆஸ்பத்திரியில் 10-வது வெற்றிகரமான இதய மாற்று அறுவை சிகிச்சை என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
- சுவாமி சிலை பட்டுத்திரையால் மூடப்பட்டது.
- 4 மணிநேரமும் தரிசனம் ரத்து செய்யப்பட்டிருந்தது.
திருமலை:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 23-ந்தேதி வைகுண்ட ஏகாதசி நடக்கிறது. இதனை முன்னிட்டு நேற்று கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது. காலை 6 மணிக்கு கோவில் தூய்மைப் பணி தொடங்கி 10 மணி வரை 4 மணி நேரம் சுத்திகரிப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதற்காக அதிகாலையில் சுவாமிக்கு திருப்பாவை நிவேதனம் செய்த பின், சுவாமி சிலை பட்டுத்திரையால் மூடப்பட்டது.
அதன்பின் ஆனந்த நிலையத்தில் தொடங்கி, தங்க வாசல் வரை மற்றும் உபகோவில்கள், கோவில் வளாகம், சுவர்கள், மேற்கூரை, பூஜை உபகரணங்கள் உள்ளிட்டவை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்யப்பட்டது.
பிறகு, நாமகோபு, ஸ்ரீசூர்ணம், கஸ்தூரி, மஞ்சள், கற்பூரம், சந்தனப்பொடி, குங்குமம், கிச்சிலிக்கட்டை உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கலந்த புனித நீர் கோவில் முழுவதும் தெளிக்கப்பட்டது.
அதன்பிறகு அர்ச்சகர்கள், சுவாமி சிலையை மறைத்திருந்த துணியை அகற்றி, சிறப்பு பூஜை மற்றும் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடத்தினர். கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்ற 4 மணிநேரமும் தரிசனம் ரத்து செய்யப்பட்டிருந்தது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தேவஸ்தான தலைவர் கருணாகர் ரெட்டி இதுகுறித்து கூறுகையில் பல நூறு ஆண்டுகளாக ஆழ்வார் திருமஞ்சன நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கருவறை மற்றும் உபகோவில்களின் சுவர்களில் எந்தவித அச்சுறுத்தலும் ஏற்படாத வகையில் வாசனை திரவியங்கள் தூவப்பட்டுள்ளன என்றார்.
- திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதன் மூலம் மக்களுக்கு மேலும் சேவை செய்ய பலம் கிடைக்கும்.
- வருகிற 2024 சட்டமன்ற தேர்தலிலும் எனக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும்.
திருப்பதி:
ஆந்திர மாநில சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.
இதில் நடிகையும் மந்திரியுமான ரோஜாவுக்கு மீண்டும் சீட் கிடைக்காது என எதிர்க்கட்சியினர் கேலி கிண்டல் செய்து வருகின்றனர். இதற்கு ரோஜா பதிலடி கொடுத்துள்ளார்.
நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரோஜா சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதன் மூலம் மக்களுக்கு மேலும் சேவை செய்ய பலம் கிடைக்கும். ஆந்திர மாநில மக்கள் நலமடையவும், ஜெகன் மோகன் ரெட்டி மீண்டும் முதல் மந்திரி ஆக வேண்டும். அனைவரும் நலமுடன் இருக்க வேண்டும் என பிரார்த்தனை செய்தேன்.
நான் கட்சி நிகழ்ச்சிகளிலும் அமைச்சரவை கூட்டங்களிலும் முன் வரிசையில் இருந்து வருகிறேன்.
நகரி தொகுதியில் 2 முறை எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றுள்ளேன். வருகிற 2024 சட்டமன்ற தேர்தலிலும் எனக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும். ஆனால் எதிர்க்கட்சிகள் கேலி செய்து வருகின்றனர். அது பலிக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
- ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரின் பிரசாரம் கிராமங்களில் நல்ல வரவேற்பை பெற்றது.
- தெலுங்கானா மக்கள் காந்தி குடும்பத்தை நேசிக்கிறார்கள்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.
மாநிலத்தில் ஆட்சிக்கு வந்த பிறகு முதல் முறையாக தெலுங்கானா காங்கிரசின் அரசியல் விவகார குழு கூட்டம் ஐதராபாத்தில் நேற்று நடந்தது.
இதில் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஏதாவது ஒரு பாராளுமன்ற தொகுதியில் சோனியா காந்தி போட்டியிட வேண்டும் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வட இந்தியாவில் காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு குறைந்து வரும் நிலையில் தென் மாநிலங்களில் சோனியா போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தெலுங்கானா மாநில முன்னாள் மந்திரி சபீர் அலி கூறுகையில்:-
தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்கு சோனியா காந்தி அறிவித்த 6 முக்கிய வாக்குறுதிகள் தான் காரணம். மேலும் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரின் பிரசாரம் கிராமங்களில் நல்ல வரவேற்பை பெற்றது.
தெலுங்கானா தனி மாநிலம் உருவாக காரணமாக இருந்த சோனியா காந்திக்கு தெலுங்கானா மக்கள் நன்றி தெரிவிக்கும் விதமாக வெற்றியை தருவார்கள்.
இந்திரா காந்தி அரசியல் ரீதியாக கடினமான காலத்தை எதிர்கொண்டபோது ஒருங்கிணைந்த ஆந்திராவில் உள்ள மேடக் தொகுதியில் தான் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
தெலுங்கானா மக்கள் காந்தி குடும்பத்தை நேசிக்கிறார்கள். அதனால் சோனியா காந்தி தெலுங்கானாவில் போட்டியிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஜாமீனில் வெளிய வந்த பிரசாத் வழக்கு விசாரணை செலவிற்காக தனது நண்பன் பிரசாந்திடம் ரூ.2 லட்சம் கடன் வாங்கினார்.
- மாயமான நண்பனை தேடுவது போல் பிரசாந்த் நடித்தார். நண்பன் குடும்பத்துக்கு தேவையான உதவி செய்தார்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், நிஜாமாபாத் மாவட்டம், மேக்லூர் அடுத்த கேந்திராவை சேர்ந்தவர் பிரசாத் (வயது 33). இவரது மனைவி ரமணி (30). சைத்ரிக்( 7) சைத்திரிகா (7) என்ற இரட்டை மகள்கள், ஸ்வப்னா (27), ஸ்ரவந்தி (24) என்ற தங்கைகளும் இருந்தனர்.
அதே பகுதியை சேர்ந்த இவரது நண்பர் பிரசாந்த் (வயது 30). இருவரும் உயிருக்கு உயிராக பழகி வந்தனர்.
அந்தப் பகுதியை சேர்ந்தவர்கள் நண்பர்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என ஆச்சரியப்படும் அளவிற்கு இருந்தனர். மனைவி, மகள்களுடன் வாழ்ந்த பிரசாத்துக்கு இளம்பெண் ஒருவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது.
இளம்பெண் திடீரென தற்கொலை செய்துகொண்டார். இதனால் ஊர் பெரியவர்கள் பிரசாத் குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தனர். மேலும் போலீசார் பிரசாத்தை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
ஜாமீனில் வெளிய வந்த பிரசாத் வழக்கு விசாரணை செலவிற்காக தனது நண்பன் பிரசாந்திடம் ரூ.2 லட்சம் கடன் வாங்கினார்.
சில மாதங்கள் கழித்து பிரசாந்த் தனக்கு தரவேண்டிய கடன் பாக்கிக்காக பிரசாத் வீட்டை தனது பெயருக்கு மாற்றிக் கொடுக்க வேண்டும் என கூறினார். பிரசாத் வீட்டை நண்பன் பெயருக்கு மாற்றி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். திடீரென பிரசாத் வீட்டை காலி செய்து கொண்டு காமிரெட்டி மாவட்டம், பல்வஞ்சா என்ற இடத்திற்கு குடிபெயர்ந்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த பிரசாந்த் நண்பனின் ரூ.25 லட்சம் மதிப்பிலான சொத்துக்களை அடைய வேண்டும். பிரசாத் உயிருடன் இருக்கும் வரை சொத்துக்களை அடைய முடியாது என எண்ணி அவரை கொலை செய்ய முடிவு செய்தார்.
அதன்படி கடந்த மாதம் 28-ந் தேதி பிரசாத் வீட்டிற்கு பிரசாந்த் சென்றார். டிச்சப்பள்ளி புறநகர் பகுதிக்கு பிரசாத்தை அழைத்துச் சென்று அங்கு அவரை வெட்டி கொலை செய்து குழி தோண்டி புதைத்தார்.
பின்னர் மாயமான நண்பனை தேடுவது போல் பிரசாந்த் நடித்தார். நண்பன் குடும்பத்துக்கு தேவையான உதவி செய்தார்.
இதையடுத்து பிரசாத்தின் மனைவியை ஏமாற்றி காரில் அழைத்துச் சென்று கோதாவரி ஆற்றில் தள்ளி கொலை செய்தார்.
தண்ணீரில் அவர் அடித்து செல்லப்பட்டார். பின்னர் பிரசாத்தின் மகள்கள் சைத்ரிக், சைத்ரிகா ஆகியோரை ஏமாற்றி அழைத்துச் சென்று பால்கோண்டா என்ற இடத்தில் கொலை செய்து முட்புதரில் வீசிவிட்டு வந்தார்.
மேலும் பிரசாத்தின் மூத்த சகோதரி ஸ்வப்னாவை மேடக் செகுண்டா மலை அடிவாரத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவரை கொலை செய்து பெட்ரோல் ஊற்றி எரித்தார்.
இதேபோல் இளைய சகோதரி ஸ்ரவந்தியை காமெடி சதாசிவ நகர் பூப்பள்ளி என்ற இடத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு வைத்து அவரை கொலை செய்து பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டு சென்றார்.
அடையாளம் தெரியாத இளம்பெண் ஒருவர் எரிக்கப்பட்டு இருப்பதாக அப்பகுதி மக்கள் சதாசிவ நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில் பிரசாந்த் ஸ்ரவந்தியை கொலை செய்து எரித்தது தெரியவந்தது. சினிமாவை மிஞ்சும் இந்த கொடூர சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
போலீசார் வழக்கு பதிவு செய்து பிரசாத்தின் தாய் வீட்டில் இருப்பதால் அவரை பிரசாந்த் கொலை செய்ய முயற்சிக்கலாம் என எண்ணி அவரது வீட்டிற்கு சென்றனர்.
அப்போது பிரசாத்தின் தாய் சுசிலாவை பிரசாந்த் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சி செய்து கொண்டு இருந்தார்.
இதனை கண்ட போலீசார் பிரசாந்தை கைது செய்தனர். பிரசாந்திடம் போலீசார் நடத்திய விசாரணையில் உயிர் நண்பன் என்றும் பாராமல் அவரது மனைவி, மகள்கள், தங்கைகளை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். நண்பனின் சொத்துக்கு ஆசைப்பட்டு அவரது குடும்பத்தையே அடுத்தடுத்து கொலை செய்த சம்பவம் தெலுங்கானாவையே உலுக்கி உள்ளது.
- கல்லூரி மாணவிகள் படிப்பு செலவுக்காக பகுதி நேரமாக பைக் டாக்ஸி ஓட்டுகின்றனர்.
- சம்பந்தப்பட்ட டாக்சி நிறுவனம் எங்களுக்கு பெண் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை அதிகமாக தர வேண்டும்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் செல்போனில் அழைத்த சில நிமிடங்களில் பைக் டாக்சி வந்து நிற்கிறது. அதிலும் டிரைவர்களாக பெண்கள் பணியாற்றி வருகின்றனர். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
பிரபல பைக் டாக்சி நிறுவனத்தின் கீழ் பெண்கள் பலர் பைக் ஓட்ட தொடங்கியுள்ளனர்.
இதன் மூலம் இவர்களுக்கு நல்ல வருமானம் கிடைப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். கல்லூரி மாணவிகள் படிப்பு செலவுக்காக பகுதி நேரமாக பைக் டாக்ஸி ஓட்டுகின்றனர்.
மேலும் திருமணமான பெண்கள் கணவரின் மது பழக்கத்தால் குடும்பம் மற்றும் குழந்தைகளை காப்பாற்றுவதற்காகவும் பைக் டாக்ஸி ஓட்டுவதாக தெரிவித்துள்ளனர்.
பைக் டாக்சி தொழிலில் குடும்பத்தை நடத்த தேவையான வருமானம் கிடைக்கிறது. எங்கள் நிறுவனம் ஒதுக்க கூடிய வாடிக்கையாளர்களை நாங்கள் ஏற்றி சென்று விடுகிறோம்.
இதில் சில வாடிக்கையாளர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தகாத முறையில் நடந்து பாலியல் தொல்லை தருகிறார்கள். வேலையை சுற்றியுள்ள ரகசியம் காரணமாக இது போன்ற சம்பவங்களை போலீசில் புகார் அளிப்பது சவாலாக உள்ளது.
இது போன்ற நிலையை தடுக்க சம்பந்தப்பட்ட டாக்சி நிறுவனம் எங்களுக்கு பெண் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை அதிகமாக தர வேண்டும்.
மேலும் பல பெண்கள் பைக்டாக்சி ஓட்ட தயாராக இருந்தாலும் இது போன்ற இக்கட்ட சூழ்நிலையால் அவர்கள் இந்த தொழிலுக்கு வர பயப்படுகின்றனர்.
பெண்கள் ஒட்டும் பைக் டாக்ஸியில் செல்வதன் மூலம் பாதுகாப்பான சூழலை உணர முடியும் என்பதால் தற்போது பெண் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.






