search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஒரே நேரத்தில் தேர்வு எழுதிய அண்ணன்-தங்கை எஸ்.ஐ.க்களாக தேர்வு: வலைத்தளங்களில் குவியும் பாராட்டு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    ஒரே நேரத்தில் தேர்வு எழுதிய அண்ணன்-தங்கை எஸ்.ஐ.க்களாக தேர்வு: வலைத்தளங்களில் குவியும் பாராட்டு

    • தேஜா மற்றும் ஹாரிகா ஆந்திராவில் நடந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் கலந்து கொண்டனர்.
    • தேஜா, ஹாரிகா ஆகியோர் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு தேர்வானார்கள்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், எர்ரவாரி பாலம், பாக்ரா பேட்டையை சேர்ந்தவர் சுதா கீதா. பாக்ரா பேட்டையில் உள்ள தொடக்கப் பள்ளியில் தெலுங்கு ஆசிரியராக வேலை செய்து வருகிறார்.

    இவரது மகன் தேஜா, மகள் ஹாரிகா. தேஜா விசாகப்பட்டினத்தில் உள்ள ஜிஎஸ்டி தணிக்கை துறையில் ஆய்வாளராக வேலை செய்தார். தற்போது சித்தூர் கங்காதர நல்லூர் பஞ்சாயத்து செயலாளராக உள்ளார்.

    இந்த நிலையில் தேஜா மற்றும் ஹாரிகா ஆந்திராவில் நடந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் கலந்து கொண்டனர்.

    தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் தேஜா, ஹாரிகா ஆகியோர் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு தேர்வானார்கள்.

    அண்ணன், தங்கை இருவரும் ஒரே நேரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு தேர்வானது குறித்து சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

    Next Story
    ×