என் மலர்
ஆந்திர பிரதேசம்
- படுகாயம் அடைந்த சாவித்திரியை மீட்டு பலாசா அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
- 2 பேர் உயிரிழந்ததால் தொழிலாளர்கள் முந்திரி தோட்டத்திற்கு வேலைக்கு செல்ல அச்சம் அடைந்துள்ளனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் வஜ்ரபு கொத்தூர் அருகே உள்ள அனக்காப்பள்ளியில் ஏராளமான முந்திரி தோட்டங்கள் உள்ளன.
தற்போது முந்திரி பழ சீசன் என்பதால் முந்திரி தோட்டங்களில் தொழிலாளர்கள் பழங்களை பறிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அனக்காப்பள்ளியை சேர்ந்த லோகநாதம் (வயது 47). கூர்மா ராவ் (49), லோகநாதம் மனைவி சாவித்திரி ஆகியோர் நேற்று காலை முந்திரி தோட்டத்தில் பழங்களை பறிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது முந்திரி தோட்டத்தில் வந்த கரடி திடீரென பாய்ந்து சாவித்திரையை தாக்கியது. கரடி தாக்குவதை கண்ட லோகநாதம் மனைவியை காப்பாற்ற முயன்றார்.
அப்போது கரடி லோகநாதத்தையும் தாக்கியது. இதில் இருவரும் வலியால் அலறி கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு அருகே இருந்த கூர்மா ராவ் ஓடி வந்து தம்பதியை காப்பாற்ற முயன்றார். அவரையும் கரடி சரமாரியாக தாக்கியது. 3 பேரும் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தனர்.
பக்கத்து தோட்டத்தில் வேலை செய்து கொண்டு இருந்த தொழிலாளர்கள் ஓடிவந்து கரடியை துரத்தினர். அப்போது கரடி முந்திரி தோட்டத்திற்குள் ஓடி மறைந்தது. ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தவர்களை பரிசோதித்த போது லோகநாதம் மற்றும் கூர்மா ராவ் இறந்தது தெரிந்தது.
இதையடுத்து படுகாயம் அடைந்த சாவித்திரியை மீட்டு பலாசா அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கரடி தாக்கியதில் 2 பேர் உயிரிழந்ததால் தொழிலாளர்கள் முந்திரி தோட்டத்திற்கு வேலைக்கு செல்ல அச்சம் அடைந்துள்ளனர்.
- பா.ஜ.க., மற்றும் ஜனசேனா கட்சியினருடன் சேர்ந்து பிரசாரம்.
- போலீசார் இருதரப்பினரையும் சமாதானம் செய்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் மாச்சர்லா சட்டமன்ற தொகுதியில் தெலுங்கு தேசம் சார்பில் ஜோர்லகண்டா பிரம்மா ரெட்டி என்பவர் போட்டியிடுகிறார்.
இவர் அந்த தொகுதி முழுவதும் பா.ஜ.க., மற்றும் ஜனசேனா கட்சியினருடன் சேர்ந்து பிரசாரம் செய்து வருகிறார்.
நேற்று மாலை ஜங்க மகேஸ்வரம் என்ற கிராமத்தில் பிரசாரத்திற்காக சென்றார். அப்போது அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியினர் 20-க்கும் மேற்பட்டோர் அவர்களது வாகனங்களை மறித்தனர். இந்த கிராமத்திற்குள் நீங்கள் வாக்கு சேகரிக்க செல்லக்கூடாது என கூறினர்.
இதனால் பிரசாரத்திற்கு வந்த தெலுங்கு தேசம், ஜனசேனா கட்சியினருக்கும் ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் பிரசார வாகனங்கள் மீது தாக்கினர்.
இதில் வேட்பாளரின் வாகனத்தின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இருதரப்பினரையும் சமாதானம் செய்தனர்.
மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திர மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் பல்வேறு இடங்களில் தெலுங்கு தேசம், ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியினர் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டுள்ளதால் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
- எங்களது பள்ளி பிரதான சாலையில் அமைந்துள்ளது.
- மது குடித்துவிட்டு குடிமகன்கள் தகாத முறையில் நடந்து வருகின்றனர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் வனஸ்தலிபுரம் சாமநகரில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது.
இந்த பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கும் வைஷ்ணவி என்ற மாணவி தெலுங்கானா ஐகோர்ட்டுக்கு கடிதம் ஒன்று எழுதினார். அதில் எங்களது பள்ளி பிரதான சாலையில் அமைந்துள்ளது.
இதன் அருகே மதுக்கடை ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இதில் மது குடித்துவிட்டு குடிமகன்கள் தகாத முறையில் நடந்து வருகின்றனர்.
இந்த பகுதியில் சில கல்லூரிகளும் உள்ளன. கோவிலுக்கு பெண்கள் நடந்து செல்கிறார்கள். குடிமகன்களால் அவர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.
உடனடியாக மதுக்கடையை வேறு இடத்திற்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என அந்த கடிதத்தில் கூறியிருந்தார்.
இந்த கடிதத்தை பொதுநல மனுவாக எடுத்துக்கொண்ட ஐகோர்ட்டு இதற்கு அதிகாரிகள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து தெலுங்கானா தலைமைச் செயலாளர் முதன்மை செயலாளர் மற்றும் மதுவிலக்கு ஆணையர், உள்துறை செயலாளர், மாநகராட்சி கமிஷனர், கலெக்டர், போலீஸ் கமிஷனர் மற்றும் அந்த பகுதி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
- முன்னாள் முதல் மந்திரி ஜனார்த்தன ரெட்டியின் மகன் ராம்குமார் ரெட்டி போட்டியிடுகிறார்.
- பாரளுமன்ற தேர்தலுடன் சேர்ந்து, சட்டசபை தேர்தலும் நடக்கவுள்ளது.
திருப்பதி:
ஆந்திராவில் வருகிற பாரளுமன்ற தேர்தலுடன் சேர்ந்து, சட்டசபை தேர்தலும் நடக்கவுள்ளது. இந்த சட்டசபை தேர்தலில் முன்னாள் முதல் மந்திரிகள் 6 பேரின் மகன்கள் போட்டியிடுகின்றனர்.
முன்னாள் முதல் மந்திரி ராஜசேகர ரெட்டியின் மகனும், இப்போதைய முதல் மந்திரியுமான ஜெகன் மோகன் ரெட்டி, புலிவெந்துலா தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.
முன்னாள் முதல் மந்திரியும், தெலுங்குதேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ், மங்களா கிரி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.

முன்னாள் முதல் மந்திரி என்.டி. ராமாராவின் மகன் நடிகர் பாலகிருஷ்ணா ஹிந்துபூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். முன்னாள் முதல் மந்திரி பாஸ்கரராவின் மகன் மனோகர், தெனாலி தொகுதியில், பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி சார்பில் போட்டியிடவுள்ளார்.
வெங்கடகிரி தொகுதியில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சார்பில், முன்னாள் முதல் மந்திரி ஜனார்த்தன ரெட்டியின் மகன் ராம்குமார் ரெட்டி போட்டியிடுகிறார்.
தோனே தொகுதியில் முன்னாள் முதல் மந்திரி விஜய பாஸ்கர் ரெட்டியின் மகன் சூர்ய பிரகாஷ், ரெட்டி போட்டியிடுகிறார்.
- ஆசிரியை வகுப்பறைக்கு வருவதற்கு முன்பாக ஹேப்பி பர்த்டே மேடம் என பெயர் பலகையில் எழுதி வரவேற்பு அளித்தனர்.
- ஆசிரியை மெய்மறந்து குத்து பாட்டுக்கு ஏற்றார்போல் நடனம் ஆடினார்.
திருப்பதி:
ஆந்திராவில் உள்ள அரசு பள்ளியில் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஆசிரியை வேலை செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் மாணவர்கள் ஆசிரியையின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட ஏற்பாடுகளை செய்தனர்.
காலை ஆசிரியை வகுப்பறைக்கு வருவதற்கு முன்பாக ஹேப்பி பர்த்டே மேடம் என பெயர் பலகையில் எழுதி வரவேற்பு அளித்தனர்.
பின்னர் வகுப்பறையில் பிறந்தநாள் கேக் வெட்டி ஆசிரியைக்கு ஊட்டினர். தங்களது செல்போனில் இந்தி படத்தில் இருந்து குத்துபாட்டை ஒலி பரப்பினர்.
அப்போது ஆசிரியை மெய்மறந்து குத்து பாட்டுக்கு ஏற்றார்போல் நடனம் ஆடினார். மாணவர் ஒருவர் ஆசிரியையின் சேலை முந்தானையை எடுத்து அவரது முகத்தை மூடியபடி நடனம் ஆடினார்.
இந்த காட்சிகளை வகுப்பறையில் உள்ள மாணவர் ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார்.
ஆசிரியையின் நடனத்தை பார்த்த பலரும் குத்துப்பாட்டுக்கு நடனம் ஆடுவது தவறில்லை. ஆனால் வகுப்பறையில் நடனம் ஆடியதால் அவர் ஆசிரியையாக இருப்பதற்கு தகுதியற்றவர் எனவும், ஆசிரியை வகுப்பறையில் நடனம் ஆடியது தவறில்லை எனவும் பல்வேறு விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.
- 'ஐ.ஐ.டி-மெட்ராஸ்- இன்குபேட்டட் ஸ்பேஸ் ஸ்டார்ட்-அப்' அக்னிபான் ராக்கெட்டை தயாரித்தது.
- செயற்கைகோள் எதுவும் இன்றி சோதனை முயற்சியாக ராக்கெட் ஏவப்பட இருந்தது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2 ஏவுதளங்கள் மூலம் பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., மற்றும் எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகள் விண்ணில் ஏவப்படுகிறது.
இந்த சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய வளாகத்தில் சென்னையை சேர்ந்த விண்வெளி தொழில்முனைவோரால் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மற்றொரு தனியார் ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான ஏவுதளம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
அதில் இருந்து முதன் முறையாக சென்னையை தளமாக கொண்ட, 'ஐ.ஐ.டி-மெட்ராஸ்- இன்குபேட்டட் ஸ்பேஸ் ஸ்டார்ட்-அப்' தயாரித்த 'அக்னிபான்' ராக்கெட் நாளை காலை 9 மணி அளவில் விண்ணில் ஏவப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அக்னிபான் ராக்கெட்டில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக நாளை விண்ணில் ஏவப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தொழில்நுட்ப கோளாறு சீரான பிறகு, விண்ணில் ஏவப்படுவது குறித்து அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செயற்கைகோள் எதுவும் இன்றி சோதனை முயற்சியாக இந்த ராக்கெட் ஏவப்பட இருந்தது குறிப்பிடத்தக்கது.
- ஆந்திரா சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு 10 தொகுதிகளும், 6 பாராளுமன்ற தொகுதிகளும் ஒதுக்கப்பட்டு உள்ளன.
- தெலுங்கு தேசம் கட்சி சார்பில் பா.ஜ.க கேட்ட தொகுதிகளை ஒதுக்க மறுப்பு தெரிவித்தனர்.
திருப்பதி:
ஆந்திராவில் தெலுங்கு தேசம் பா.ஜ.க மற்றும் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.
ஆந்திரா சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு 10 தொகுதிகளும், 6 பாராளுமன்ற தொகுதிகளும் ஒதுக்கப்பட்டு உள்ளன.
பா.ஜ.கவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ள சட்டமன்ற தொகுதியான விஜயவாடா (மத்தி), மச்சிலிப்பட்டினம், குண்டூர் (மேற்கு), நெல்லூர், கதிரி, அரக்கு, மதனப்பள்ளி, ஸ்ரீகாளஹஸ்தி உள்ளிட்ட தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என தெலுங்கு தேசம் கட்சியிடம் கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் பா.ஜ.க கேட்ட தொகுதிகளை ஒதுக்க மறுப்பு தெரிவித்தனர். இதனால் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கல் நீடிக்கிறது.
ஆந்திர மாநில பா.ஜ.க. தலைவர் புரந்தரேஷ்வரி, மாநில அமைப்பு செயலாளர் மதுகர் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் நிர்வாகிகள் டெல்லியில் முகாமிட்டு உள்ளனர்.
பா.ஜ.க. மாநில தலைமை கேட்ட தொகுதிகளை ஒதுக்க சந்திரபாபு நாயுடுவிடம் வலியுறுத்த வேண்டுமென பா.ஜ.க. தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதனால் ஆந்திராவில் உள்ள பா.ஜ.க. நிர்வாகிகள் தொண்டர்கள் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்காமல் சோர்வடைந்து உள்ளனர்.
- சர்மிளாவின் சம்பந்தியின் ஓட்டலில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக புகுந்தனர்.
- ஐதராபாத் பெருநகரத்தில் சர்மிளாவின் உறவினருக்கு சொந்தமான ஓட்டல் என்பதால் இந்த சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்பதி:
ஆந்திர மாநில முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை சர்மிளா. இவர் ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவராக உள்ளார். சமீபத்தில் இவரது மகனுக்கும் ஐதராபாத்தில் உள்ள பிரபல ஓட்டல் அதிபர் ஒருவரின் மகளுக்கும் திருமணம் நடந்தது.
சர்மிளாவின் சம்பந்தியின் ஓட்டலில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக புகுந்தனர்.
அங்குள்ள அறைகள் மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தினர். மேலும் பலவிதமான ஆவணங்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
ஐதராபாத் பெருநகரத்தில் சர்மிளாவின் உறவினருக்கு சொந்தமான ஓட்டல் என்பதால் இந்த சோதனை அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஓட்டலில் பணம் ஆவணங்கள் கைப்பற்றியது குறித்து ஓட்டல் நிர்வாகம் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் எந்தவிதமான அதிகாரப்பூர்வமான அறிக்கையும் வெளியிடவில்லை.
- பிடிபட்ட 6 சிறுத்தைகளின் நகம் ரத்த மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன.
- வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளதால் பக்தர்கள் கூட்டமாக செல்ல வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பக்தர்கள் நடந்த செல்லக்கூடிய அலிப்பிரி நடைபாதையில் வன விலங்குகள் நடமாட்டம் உள்ளது.
கடந்த 7 மாதங்களுக்கு முன்பு நெல்லூர் மாவட்டம் போத்தி ரெட்டிபாளையத்தை சேர்ந்த தம்பதியினர் அவர்களது 3 வயது மகள் லக்ஷிதாவுடன் சென்றனர்.
இரவில் மின்விளக்கு வெளிச்சத்தில் பெற்றோரை பிரிந்து சிறுமி படிக்கட்டுகளில் ஓடிக் கொண்டிருந்தாள். அப்போது சிறுத்தை சிறுமியை தூக்கி சென்று கடித்துக் கொன்றது.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து மலைப்பாதையில் வைக்கப்பட்ட கூண்டில் அடுத்தடுத்து 6 சிறுத்தைகள் சிக்கின. இதில் குழந்தையை கொன்ற சிறுத்தையை மீண்டும் காட்டிற்கு விடக்கூடாது அது மீண்டும் மனிதர்களை தாக்கும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.
பிடிபட்ட 6 சிறுத்தைகளின் நகம் ரத்த மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன.
முதற்கட்டமாக 4 சிறுத்தைகள் சிறுமியை கொல்லவில்லை என்பது தெரிய வந்தது. அந்த 4 சிறுத்தைகள் மீண்டும் திருப்பதி வனப்பகுதியில் விடப்பட்டன.
மேலும் 2 சிறுத்தைகளுக்கு ஆய்வு நடத்தப்பட்டது. அதில் ஒரு பெரிய சிறுத்தை சிறுமியைக் கொன்றது தெரியவந்தது .
இதனை தொடர்ந்து அந்த சிறுத்தை திருப்பதி பூங்காவில் உள்ள கூண்டில் நிரந்தரமாக அடைக்க முடிவு செய்தனர்.
மேலும் உள்ள ஒரு சிறுத்தையை காட்டில் விட நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இது ஒரு புறம் இருக்க நேற்று திருப்பதி மலைபாதையில் கரடி ஒன்று நடமாடியது. இதனைக் கண்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளதால் பக்தர்கள் கூட்டமாக செல்ல வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.
- ஏராளமான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
- அங்கிருந்த சிலர் தங்களது செல்போன்களில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தனர்.
திருப்பதி:
ஆந்திராவில் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்திற்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் ஆந்திராவில் தேர்தல் பிரசாரம் களைகட்டி வருகின்றன.
சத்திய சாய் மாவட்டம், புட்டபர்த்தி தொகுதி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வேட்பாளர் குட்டகுண்ட ஸ்ரீதர் ரெட்டி நேற்று தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். இதில் ஏராளமான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தொண்டர் அனில் குமார் என்பவர் மேளம் அடித்தபடி கட்சிப் பாடல்களை பாடினார்.
கொத்த செருவு பி.சி காலனியில் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்தபோது அரசு அரசு ஊழியராக வேலை செய்யும் தன்னார்வலர் ஹர்ஷத் என்பவர் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் துண்டை தோலில் அணிந்து கொண்டு தன்னிலை மறந்து விசில் அடித்தபடி நடனம் ஆடினார்.

ஷர்ஷத் தான் ஒரு அரசு ஊழியர் என்பதை மறந்து நடனம் ஆடுவதை அங்கிருந்த சிலர் தங்களது செல்போன்களில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தனர்.
இந்த வீடியோவை பார்த்த எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து நடனமாடிய அரசு ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
ஆந்திராவில் ஏற்கனவே ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் பேரணியில் கலந்து கொண்ட தன்னார்வலர்கள் 11 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர்.
- 3-வது முறையாக நகரியில் நடிகை ரோஜா வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.
- தெலுங்கு தேசம், பா.ஜ.க நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனா என கூட்டணி பலமாக உள்ளது.
திருப்பதி:
ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலில் சுற்றுலாத்துறை மந்திரி ரோஜா 3-வது முறையாக நகரி தொகுதியில் போட்டியிடுகிறார்.
1999-ம் ஆண்டு அரசியலில் அடியெடுத்து வைத்த ரோஜா தெலுங்கு தேசம் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி 2011-ம் ஆண்டு ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
2014-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் ரோஜாவுக்கு தமிழக எல்லையில் உள்ள நகரி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. தமிழர்கள் கணிசமாக வசிக்கும் அந்த தொகுதியில் ரோஜாவிற்கு வரவேற்பும் கிடைத்தது.
அந்த தேர்தலில் 73 ஆயிரத்து 924 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்து போட்டியிட்ட தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் கலிமுத்து கிருஷ்ணம்மா என்பவரை 858 ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
அப்போது எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.வாக இருந்த ரோஜா பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு தொகுதி மக்களிடம் மேலும் பெயர் பெற்றார்.
இதனால் 2019-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் ஜெகன் மோகன் ரெட்டி அவருக்கு போட்டியிட வாய்ப்பு அளித்தார்.
2-வது முறையாக நகரி தொகுதியில் போட்டியிட்ட ரோஜா அந்த தேர்தலில் 80,333 வாக்குகள் பெற்றார். இதன் மூலம் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் கலிபானு பிரகாஷ் என்பவரை 2,708 வாக்குகள் வித்தியாசத்தில் ரோஜா வீழ்த்தினார். இதனால் ரோஜாவுக்கு சுற்றுலா துறை மந்திரி பதவியும் கிடைத்தது.
ஆளுங்கட்சி மந்திரியான ரோஜா அவரது கட்சி, ஜெகன் மோகன் ரெட்டி பற்றி யார் விமர்சித்தாலும் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்து வந்தார்.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பாகவே நகரி தொகுதியில் பொதுமக்களை வீடுவீடாக சந்தித்து ஏன் மீண்டும் வேண்டும் ஜெகன் அண்ணா என்ற வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி பிரசாரத்தில் ஈடுபட்டார்.
மேலும் அவரது தொகுதியில் உள்ள கிராமங்களில் இரவு நேரங்களில் தங்கி இருந்து அந்த மக்களுக்கு என்னென்ன அடிப்படை வசதிகள் தேவை என்பதை கண்டறிந்து பூர்த்தி செய்தார்.
ஆடுதாம் ஆந்திரா என்ற பெயரில் மாநிலம் முழுவதும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
நகரி தொகுதியில் ஒவ்வொரு கிராமங்களுக்கும் ரோஜா நேரில் சென்று போட்டிகளை தொடங்கி வைத்தார். அப்போது இளைஞர்களுடன் கபடி விளையாடி அசத்தி கவர்ந்தார்.
நகரி தொகுதியில் முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் நடந்த பிரமாண்ட விழாவில் ஜனசேனா கட்சித் தலைவரான நடிகர் பவன் கல்யாண், சந்திரபாபு நாயுடு ஆகியோரை கடுமையாக விமர்சனம் செய்தார். அந்தக் கூட்டத்தில் ரோஜா பேசுகையில்
நடிகர் ரஜினி நடித்த ஜெயிலர் படத்தில் ஒரு வசனம் வரும். குறைக்காத நாயும் இல்லை. குறை சொல்லாத வாயும் இல்லை இது ரெண்டும் இல்லாட்டி ஊரும் இல்லை. புரிஞ்சிதா ராஜா அர்த்தமாய்ந்தா ராஜா என்றார். இது ரஜினி ரசிகர்கள் அவர் மீது வைத்திருந்த விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளியாக அமைந்தது.
எதிர்க்கட்சிகளுக்கு சிம்ம சொப்பனாக திகழ்ந்துவரும் ரோஜாவுக்கு இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பே கிடைக்காது. அவர் தொகுதி மாறிவிடுவார் எம்.பி.தேர்தலில் போட்டியிடப் போகிறார் என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன.
அதையெல்லாம் தாண்டி 3-வது முறையாக நகரியில் நடிகை ரோஜா வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.
இந்த முறையும் அவரை எதிர்த்து தெலுங்கு தேசம் கட்சி சார்பில் கலிபானு பிரகாஷ் போட்டியிடுகிறார். ஆந்திராவைப் பொறுத்தவரை தெலுங்கு தேசம், பா.ஜ.க நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனா என கூட்டணி பலமாக உள்ளது.
ஆனால் ரோஜா சார்ந்துள்ள ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுகிறது. நகரி தொகுதியில் உள்ள ஒய். எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் சிலர் ரோஜா மீண்டும் போட்டியிட எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களை சமாதானம் செய்யும் முயற்சியில் ரோஜா ஈடுபட்டு வருகிறார். கட்சி தொண்டர்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டுகிறார்.
3-வது முறையாக நகரி தொகுதியில் வெற்றி பெறும் முனைப்பில் ரோஜா தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
ஜெகன்மோகன் ரெட்டி கட்சியின் முக்கிய தலைவராக வலம் வரும் ரோஜாவை இந்த தேர்தலில் எப்படியாவது வீழ்த்த வேண்டும் என தெலுங்கு தேசம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் வரிந்து கட்டிக்கொண்டு தேர்தல் வேலையில் இறங்கி உள்ளன.
- ஜெகன் மோகன் ரெட்டி பிரசாரத்திற்காக நவீன வசதிகளுடன் பஸ் ஒன்று தயார் செய்யப்பட்டுள்ளது.
- பஸ்சில் மாநிலம் முழுவதும் 21 நாட்கள் யாத்திரையாக சென்று ஜெகன்மோகன் ரெட்டி பிரசாரம் செய்ய உள்ளார்.
திருப்பதி:
ஆந்திராவில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபைக்கும் தேர்தல் வருகிற மே மாதம் 13-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் ஒய்.எஸ்ஆர். காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுறது . முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி பிரசாரத்திற்காக நவீன வசதிகளுடன் பஸ் ஒன்று தயார் செய்யப்பட்டுள்ளது.
இந்த பஸ்சில் மாநிலம் முழுவதும் 21 நாட்கள் யாத்திரையாக சென்று ஜெகன்மோகன் ரெட்டி பிரசாரம் செய்ய உள்ளார்.
இந்த பயணத்தில் காலை நேரத்தில் பொது மக்கள் மத்தியில் பேசுகிறார். மாலை மற்றும் இரவு நேரங்களில் பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.






