search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தேர்தலில் 6 முன்னாள் முதல் மந்திரிகளின் வாரிசுகள் போட்டி
    X

    தேர்தலில் 6 முன்னாள் முதல் மந்திரிகளின் வாரிசுகள் போட்டி

    • முன்னாள் முதல் மந்திரி ஜனார்த்தன ரெட்டியின் மகன் ராம்குமார் ரெட்டி போட்டியிடுகிறார்.
    • பாரளுமன்ற தேர்தலுடன் சேர்ந்து, சட்டசபை தேர்தலும் நடக்கவுள்ளது.

    திருப்பதி:

    ஆந்திராவில் வருகிற பாரளுமன்ற தேர்தலுடன் சேர்ந்து, சட்டசபை தேர்தலும் நடக்கவுள்ளது. இந்த சட்டசபை தேர்தலில் முன்னாள் முதல் மந்திரிகள் 6 பேரின் மகன்கள் போட்டியிடுகின்றனர்.

    முன்னாள் முதல் மந்திரி ராஜசேகர ரெட்டியின் மகனும், இப்போதைய முதல் மந்திரியுமான ஜெகன் மோகன் ரெட்டி, புலிவெந்துலா தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.

    முன்னாள் முதல் மந்திரியும், தெலுங்குதேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ், மங்களா கிரி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.


    முன்னாள் முதல் மந்திரி என்.டி. ராமாராவின் மகன் நடிகர் பாலகிருஷ்ணா ஹிந்துபூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். முன்னாள் முதல் மந்திரி பாஸ்கரராவின் மகன் மனோகர், தெனாலி தொகுதியில், பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி சார்பில் போட்டியிடவுள்ளார்.

    வெங்கடகிரி தொகுதியில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சார்பில், முன்னாள் முதல் மந்திரி ஜனார்த்தன ரெட்டியின் மகன் ராம்குமார் ரெட்டி போட்டியிடுகிறார்.

    தோனே தொகுதியில் முன்னாள் முதல் மந்திரி விஜய பாஸ்கர் ரெட்டியின் மகன் சூர்ய பிரகாஷ், ரெட்டி போட்டியிடுகிறார்.

    Next Story
    ×