என் மலர்tooltip icon

    இந்தியா

    • ஏப்ரல், மே மாதங்களுக்கு கூடுதலாக தேவைப்படும் மின்சாரத்திற்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது.
    • கோடைக்காலத்தில் 22 ஆயிரம் மெகா வாட் மின்சாரம் தேவைப்படும்.

    கோடைக்காலத்தில் தடையின்றி சீரான மின்சார விநியோகம் செய்வது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி ஆலோசனை மேற்கொண்டார்.

    ஆலோசனைக்குப் பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது:-

    * கோடைக்காலத்தில் தடையின்றி மின்சாரம் வழங்குவது தொடர்பாக தலைமை பொறியாளர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

    * கோடைக்காலத்தில் தடையில்லாமல் சீரான மின் விநியோகம் செய்ய ஏற்பாடு.

    * ஏப்ரல், மே மாதங்களுக்கு கூடுதலாக தேவைப்படும் மின்சாரத்திற்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது.

    * கோடைக்காலத்தில் 22 ஆயிரம் மெகா வாட் மின்சாரம் தேவைப்படும்.

    * தமிழ்நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக 78 ஆயிரம் மின்மாற்றிகள் நிறுவப்பட்டுள்ளன.

    * 3-ல் ஒரு பங்கு காலிப்பணியிடங்கள் உள்ளன.

    * மின்சாரத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களில் அவசியமான இடங்கள் நிரப்பப்படும்.

    * துணை மின்நிலையங்களில் காலிப்பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

    * 2030ஆம் ஆண்டுக்குள் மின்வாரியம் மூலம் மின் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை

    இவ்வாறு செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

    • மனோஜ் உடலுக்கு பாரதிராஜாவின் தம்பி ஜெயராஜின் மகன் வினோத் கொள்ளி வைத்தார்.
    • தந்தைக்கு கொள்ளிக்குடம் தூக்கி மகள் அக்ஷிதா இறுதிச்சடங்கு செய்தார்.

    தமிழ் திரை உலகில் இயக்குநர் இமயம் என போற்றப்பட்டு வருபவர் பாரதி ராஜா. இவரது மகன் மனோஜ் (வயது 48) நேற்று திடீரென மாரடைப்பால் காலமானார். இவரது மரணம் திரை உலகினரை மட்டும் இன்றி பொதுமக்கள் மத்தியிலும் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    மனோஜ் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக நீலாங்கரையில் உள்ள பாரதிராஜா வீட்டில் வைக்கப்பட்டு உள்ளது. மனோஜ் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் த.வெ.க. தலைவர் விஜய் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். மேலும், பல்வேறு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் மனோஜ் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.

    இதனை தொடர்ந்து இன்று மாலை அவரது உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. மனோஜ் உடலுக்கு அவரது 2 மகள்களும் கொள்ளிக்குடம் தூக்கி இறுதிச்சடங்கு செய்தனர். மனோஜ் உடலுக்கு பாரதிராஜாவின் தம்பி ஜெயராஜின் மகன் வினோத் கொள்ளி வைத்தார். 

    • பல படங்களில் நடித்துள்ள ஹுசைனிக்கு, விஜய்யின் 'பத்ரி' படம் திருப்புமுனையாக அமைந்தது.
    • ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் ஹூசைனி சிகிச்சை பெற்று வந்தார்.

    1986-ம் ஆண்டு வெளியான 'புன்னகை மன்னன்' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ஷிஹான் ஹுசைனி. மதுரையை சேர்ந்த இவர் கராத்தே மாஸ்டரும் ஆவார். பல படங்களில் நடித்துள்ள ஹுசைனிக்கு, விஜய்யின் 'பத்ரி' படம் திருப்புமுனையாக அமைந்தது.

    கடந்த 2022-ம் ஆண்டில் வெளியான 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தில் இவரது நகைச்சுவை கலந்த நடிப்பு கவனம் ஈர்த்தது.சினிமா தாண்டி வில் வித்தை பயிற்சியாளராகவும் திகழ்ந்த ஹுசைனி, 400-க்கும் மேற்பட்டோருக்கு அதுதொடர்பான பயிற்சிகளை அளித்து வந்தார்.

    இந்நிலையில், ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஹூசைனி நேற்று சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

    ஷிஹான் ஹூசைனியின் உடல் மதுரை காஜிமார் தெருவில் உள்ள பெரிய பள்ளியில் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.

    • பாஜக உடன் கூட்டணி கிடையாது, ஒட்டும் கிடையாது, உறவும் கிடையாது எனக் கூறியவர்கள் மணிக்கணக்கில் பேசியுள்ளனர்.
    • என்ன பேசியிருப்பார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.

    அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று டெல்லி சென்றார். டெல்லி செல்லும் எடப்பாடி பழனிசாமி அமித் ஷாவை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், டெல்லியில் உள்ள அதிமுக அலுவலகத்தை பார்வையிடுவதற்காகத்தான் வந்துள்ளேன். யாரையும் சந்திக்கவில்லை என டெல்லி இருந்தபோது தெரிவித்தார்.

    ஆனால் நேற்று மாலை அமித் ஷாவை சந்தித்தார். சந்திப்பின்போது கூட்டணி குறித்து பேசவில்லை என எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார்.

    இந்த நிலையில் அமித் ஷா- எடப்பாடி பழனிசாமி சந்திப்பு குறித்து இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியதாவது:-

    எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக நிர்வாகிகள் அதிமுக கட்டிடத்தை பார்வையிட செல்வதாக கூறினார்கள். ஆனால் அமித் ஷாவை சந்தித்தார்கள். ஏன் இவ்வளவு ஒளிவு மறைவாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க வேண்டிய அவசியம் என்ன?.

    பகிரங்கமாக சந்திக்கலாமே... ஒளிந்து மறைந்து சந்திக்க வேண்டிய அவசியம் இல்லையே... நேற்று கட்டிடத்தை திறந்து வைக்க வந்துள்ளேன் என்றார். இன்று தேர்தலை பற்றி பேசவில்லை. தமிழ்நாடு பிரச்சினை பற்றி பேசினோம் எனச் சொல்கிறார். நிச்சயதார்த்தம் நடைபெற்றிருக்கிறது. கல்யாண தேதி எந்ததேதி என்று தீர்மானித்து இருக்கிறார்கள் என்று தெரியவில்லை... அவ்வளவுதான்...

    பாஜக உடன் கூட்டணி கிடையாது, ஒட்டும் கிடையாது, உறவும் கிடையாது எனக் கூறியவர்கள் மணிக்கணக்கில் பேசியுள்ளனர். என்ன பேசியிருப்பார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். தமிழ்நாடு பிரச்சினை என்றால் சந்திக்க அனுமதி வழங்கியிருக்கமாட்டார்கள். அப்படி வழங்கினாலும் கோரிக்கை மனுவை பெற்று 3 நிமிடத்தில் அனுப்பியிருப்பாரக்ள்.

    அரசியல் உறவே கிடையாது என சத்தியம் பேசிய எடப்பாடி பழனிசாமி, எந்த நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் சந்தித்து பேசினார் எனத் தெரியவில்லை. என்ன நெருக்கடி என்று தெரியவில்லை. ஏதோ ஒரு நெருக்கடிக்கு உள்ளாகி அமித் ஷாவை சந்தித்து பேசியிருக்கிறார். மெல்ல மெல்ல மற்ற செய்திகள் வெளிவரும்.

    இவ்வாறு முத்தரசன் தெரிவித்தார்.

    • தேர்தல் கூட்டணியை பொறுத்தவரை எந்த கட்சியும் நிலையாக இருந்தது இல்லை என்று இ.பி.எஸ். தெரிவித்தார்.
    • கடந்த கால அரசியலை பேசிக் கொண்டிருந்தால் எந்தக் கட்சியும், எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்க முடியாது

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசியது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய எடப்பாடி பழனிச்சாமி, செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை தி.மு.க.-வை வீழ்த்துவது ஒன்றுதான் குறிக்கோள். தி.மு.க. ஆட்சியை வீழ்த்துவதற்காக அ.தி.மு.க. எல்லா முயற்சிகளும் எடுக்கும். தேர்தல் நேரத்தில் அமையும் சூழலை பொறுத்துதான் கூட்டணி குறித்து முடிவு எடுப்போம்" என்று தெரிவித்தார்.

    இதனிடையே, பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறீர்களா? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தேர்தல் கூட்டணியை பொறுத்தவரை எந்த கட்சியும் நிலையாக இருந்தது இல்லை என்று கூறினார்.

    இந்நிலையில், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனிடம் தேர்தல் கூட்டணி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    குறிப்பாக "கடந்த காலங்களில் ஜெயலலிதா, எம்ஜிஆர் பற்றி அண்ணாமலை மிகக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளாரே.." என்று கேள்விக்கு பதில் அளித்த அவர் "தலைமை எந்தக் கூட்டணி அமைத்தாலும் மகிழ்ச்சிதான். கடந்த கால அரசியலை பேசிக் கொண்டிருந்தால் எந்தக் கட்சியும், எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்க முடியாது" என்று தெரிவித்தார்.

    • கலைஞர் கனவு இல்லம் திட்டத்திற்காக ரூ. 3,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 1,122 கோடி ரூபாயில் 3 ஆயிரம் பள்ளி கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.

    தமிழக சட்டசபையில் உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் ஐ. பெரியசாமி அளித்த பதில் பின்வருமாறு:-

    * கலைஞர் கனவு இல்லம் திட்டத்திற்காக ரூ. 3,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    * இதுவரை 25,000 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. ரூ. 2,418 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

    * அடுத்த மார்ச் மாதத்திற்குள் கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் 2 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்படும்

    * திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 1,122 கோடி ரூபாயில் 3 ஆயிரம் பள்ளி கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.

    * 4 ஆயிரம் கோடி ரூபாயில் 10,545 கிலோ மீட்டர் தூரம் சாலைகள் போடப்பட்டுள்ளன.

    * தமிழ்நாட்டில் இன்னும் 8 கிராமங்கள்தான் இணைக்கப்படாமல் உள்ளன.

    இவ்வாறு ஐ. பெரியசாமி தெரிவித்தார்.

    • சென்செக்ஸ் 0.93 சதவீதமும் நிஃப்டி 0.77 சதவீதமும் சரிந்து இன்று வர்த்தகம் ஆனது.
    • சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 24 நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தது.

    தொடர்ந்து 7 நாட்களாக ஏற்றம் கண்டு வந்த சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 0.93 சதவீதமும் நிஃப்டி 0.77 சதவீதமும் சரிந்து இன்று வர்த்தகம் ஆனது.

    மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நேற்று 78,017.19 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்த நிலையில், இன்று காலை 77,966.59 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது.

    அதன்பின் இறங்குவதுமாகவே சென்செக்ஸ் இருந்தது. இன்று குறைந்தபட்சமாக 77,194.22 புள்ளிகளிலும் அதிகபட்சமாக 78,167.87 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 728.93 புள்ளிகள் சரிந்து 77,288.50 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

    சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 24 நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தது. 6 நிறுவன பங்குகள் உயர்ந்து காணப்பட்டன.

    மும்பை பங்குச் சந்தை போன்று இந்திய பங்குச் சந்தை நிஃப்டியும் இன்று சரிவை சந்தித்தது.

    நேற்று நிஃப்டி 23,668.65 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்த நிலையில், இன்று காலை 23,685.85 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது.

    அதன்பின் இறங்குவதுமாகவே நிஃப்டி இருந்தது. இன்று குறைந்தபட்சமாக 23,451.70 புள்ளிகளிலும், அதிகபட்சமாக 23,736.50 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக நிஃப்டி 181.80 புள்ளிகள் சரிந்து 23,486.85 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

    நிஃப்டி பட்டியலில் உள்ள 50 நிறுவனங்களில் 41 நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தது. 9 நிறுவன பங்குகள் உயர்ந்து காணப்பட்டன.

    • MGNREGA நிதி ரூ.4034 கோடி தராமல் ஒன்றிய அரசு வஞ்சித்து வருகிறது.
    • 100 நாள் வேலை வாய்ப்பால் பயன்பெறுவோரைத் திரட்டி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 9ஆம் தேதி நடைபெற்ற "தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் "திமுக மக்களவை- மாநிலங்களவை உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றும்போது, "தமிழ்நாடு மாநில நலன் குறித்து கேள்விகள் எழுப்பி, அதற்குரிய பதிலை ஒன்றிய அரசிடம் பெற வேண்டும்" என்றும்; அத்துடன் 'ஒன்றிய அரசு கடந்த நான்கரை மாதங்களாக தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய ரூ.4034 கோடி அளவுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட (MGNREGA) நிதியை வழங்காதது' குறித்து கேள்வி எழுப்பிட வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

    தலைவர் அறிவுரைக்கிணங்க, "ஒன்றிய அரசு கடந்த நான்கரை மாதங்களாக தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய ரூ.4034 கோடி அளவுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட (MGNREGA) நிதியை வழங்காதது குறித்து நேற்று தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியபோது, அதற்கு எவ்வித பதிலையும் தராமலும் - தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய ரூ.4034 கோடி அளவுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட (MGNREGA) நிதியை வழங்காமலும், மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வரும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து தி.மு.க. சார்பில் 29.3.2025 சனிக்கிழமை காலை அனைத்து திமுக ஒன்றியங்களிலும் தலா இரண்டு அனுமதிக்கப்பட்ட இடங்களில் 100 நாள் வேலை வாய்ப்பால் பயன்பெறுவோரைத் திரட்டி "மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்" நடைபெறும்.

    மாவட்ட திமுக நிர்வாகிகள் - திமுக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமையில், திமுக முன்னணியினர் முன்னிலையில் நடைபெறும் இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளை செயலாளர்கள்- நிர்வாகிகள், அனைத்து அமைப்புகளில் உள்ள அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்கின்ற வகையில் மாவட்டக் செயலாளர்கள் உரிய ஏற்பாடுகளைச் செய்து, தமிழ்நாடு அரசை வஞ்சிக்கும் ஒன்றிய பாசிச பா.ஜ.க. அரசுக்கு தங்கள் கண்டனத்தை பதிவு செய்திட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு துரைமுரகன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

    • வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் ஆஃபரை வழங்கியுள்ளனர்.
    • இந்த ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை, சிபிஐ உடனடியாக விசாரணையைத் தொடங்கும் என்று நம்புகிறேன்"

    உத்தரப் பிரதேச தலைநகர் நொய்டாவில் மதுக்கடைகளில் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்று அறிவிக்கப்பட்ட ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உ.பி. வாழ் மதுபிரியர்கள் ஒயின் ஷாப்களுக்கு படையெடுத்து வருகின்றனர். நீண்ட வரிசையில் அவர்கள் காத்திருக்கும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. இந்த விவகாரம் உ.பி. பாஜக அரசு மீது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி வருகிறது.

    உத்தரப் பிரதேசத்தில் கலால் துறையின் நிதியாண்டு மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. விதிகளின்படி, மதுபான ஒப்பந்ததாரர்கள் தங்கள் முழு இருப்பையும் அன்றைய தினம் நள்ளிரவு 12 மணிக்குள் காலி செய்ய வேண்டும்.

    இல்லையெனில் மீதமுள்ள மதுபானங்கள் அரசாங்கக் கணக்கில் சேர்க்கப்படும் மற்றும் அதன் விற்பனை தடை செய்யப்படும். இந்தக் காரணத்திற்காக, மதுபான விற்பனையாளர்கள் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் ஆஃபரை வழங்கியுள்ளனர்.

    இந்நிலையில் வீடியோக்கள் வைரலானதை தொடர்ந்து நோய்டாவை ஒட்டியுள்ள தலைநகர் டெல்லி அரசியலிலும் இந்த விவகாரம் எதிரொலித்துள்ளது.

    இந்த வீடியோவை பகிர்ந்து பதிவிட்டுள்ள டெல்லி முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மியின் முக்கிய தலைவருமான அதிஷி, "நீங்கள் ஒரு பாட்டில் இலவச மதுபானத்தைப் வழங்குகிறீரங்கள்… இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க இப்போது பாஜகவினர் வருவார்கள் என நம்புகிறேன். இந்த ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை, சிபிஐ உடனடியாக விசாரணையைத் தொடங்கும் என்று நம்புகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

    டெல்லி மதுபான கொள்கை வழக்கில் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு 6 மாதம் வரை சிறையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.  

    • தமிழ்நாட்டில் ரூ.8000 கோடி அளவுக்கு முதலீடு செய்ய திட்டமிட்டிருந்த இரு வெளிநாட்டு நிறுவனங்கள் ஸ்ரீ சிட்டியில் முதலீடு செய்ய முடிவு.
    • தமிழகத்தில் தொழில் தொடங்க பன்னாட்டு நிறுவனங்கள் தயாராக இல்லை என்பதையே இது காட்டுகிறது.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் ரூ.8000 கோடி அளவுக்கு முதலீடு செய்ய திட்டமிட்டிருந்த இரு வெளிநாட்டு நிறுவனங்கள், தமிழகத்தில் சாதகமான சூழல் இல்லை என்று கூறி, ஆந்திர மாநிலம் ஸ்ரீ சிட்டியில் முதலீடு செய்ய முடிவு செய்திருக்கின்றன.

    தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு சிறந்து விளங்குவதாக திமுக அரசு கூறி வந்த நிலையில், தமிழகத்தில் தொழில் தொடங்க பன்னாட்டு நிறுவனங்கள் தயாராக இல்லை என்பதையே இது காட்டுகிறது.

    அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட கேரியர் என்ற உலகின் முன்னணி குளிரூட்டி நிறுவனம் அதன் உற்பத்தி மையத்தை சென்னை புறகரில் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் அமைக்க திட்டமிட்டிருந்தது. ஆனால் இப்போது சென்னைக்கு மிக அருகில் உள்ள ஆந்திர மாநிலத்தின் ஸ்ரீ சிட்டி பகுதியில் அமைக்க முடிவு செய்து, அதற்கான ஒப்பந்தத்தில் ஆந்திர அரசுடன் விரைவில் கையெழுத்திடவுள்ளது.

    அதேபோல், தென்கொரியாவைச் சேர்ந்த எல்.ஜி நிறுவனம் தென்னிந்தியாவில் ரூ. 5000 கோடி மதிப்பில் அதன் முதல் உற்பத்தி மையத்தை தமிழ்நாட்டில் அமைக்க திட்டமிட்டிருந்தது. ஆனால், தமிழகத்தை விட ஆந்திரத்தில்தான் முதலீட்டு சூழல் சிறப்பாக இருப்பதாகக் கூறி அங்கு முதலீடு செய்ய முடிவு செய்திருக்கிறது. அதனால், அதற்கு உதிரி பாகங்களை தயாரித்து வழங்கும் 6 நிறுவனங்களும் ரூ.2000 கோடி மதிப்பிலான தங்களின் உற்பத்தி ஆலைகளை ஸ்ரீசிட்டியில் அமைக்க முடிவு செய்துள்ளன.

    தொழில் தொடங்குவதற்கான அனுமதி ஆந்திரத்தில் மிகவும் எளிதாகவும், விரைவாகவும் கிடைப்பதால்தான் இந்த நிறுவனங்கள் ஆந்திராவில் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளன. தமிழ்நாட்டில் தொழில் முதலீடு செய்ய முன்வரும் நிறுவனங்கள் அதற்கான அரசின் அனுமதியையும், ஒப்புதலையும் பெறுவதில் கடும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

    அவை உண்மை என்பதை தமிழ்நாட்டுக்கு வந்திருக்க வேண்டிய இரு முதன்மை நிறுவனங்களும், 6 துணை நிறுவனங்களும் ஆந்திராவுக்கு சென்றிருப்பது காட்டுகிறது.

    திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முதலீடுகளை ஈர்க்கும் திறன் தமிழ்நாட்டுக்கு குறைந்து வருகிறது என்பதுதான் உண்மை. மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட தொழில் தொடங்குவதற்கு ஏற்ற மாநிலங்கள் பட்டியலில் கடந்த முறை மூன்றாவது இடத்தில் இருந்த தமிழ்நாடு, இம்முறை பட்டியலில் இருந்தே நீக்கப்பட்டுள்ளது.

    தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு ஏற்ற சூழலை உருவாக்குவதற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள 30 வகையான சீர்திருத்தங்களில் பெரும்பான்மையானவற்றை தமிழக அரசு செய்யவில்லை என்பதுதான் இதற்குக் காரணம் ஆகும்.

    ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் முதலீடுகள் குவிவதைப் போன்றத் தோற்றத்தை ஏற்படுத்த திமுக அரசு முயன்று வருகிறது. கடந்த மூன்றரை ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடிக்கும் கூடுதலான முதலீடுகள் வந்திருப்பதாக தமிழக அரசு தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால், அதுகுறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பா.ம.க. பலமுறை வலியுறுத்தியும் அதை செய்ய திராவிட மாடல் அரசு மறுக்கிறது.

    எனவே, பயனற்ற செய்வதை விடுத்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு உகந்த சூழலை ஏற்படுத்தி, வெளிநாடுகளில் இருந்தும், உள்நாட்டில் இருந்து அதிக அளவில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டுக்கு வந்துள்ள தொழில் முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

    இவ்வாறு டாக்டர் ராமதாஸ் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

    • அ.தி.மு.க.வைப்பொறுத்தவரை தி.மு.க.வை வீழ்த்துவது ஒன்றுதான் குறிக்கோள்.
    • தி.மு.க. ஆட்சியை வீழ்த்துவதற்காக அ.தி.மு.க. எல்லா முயற்சிகளும் எடுக்கும்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * தமிழ்நாட்டில் உள்ள பிரச்சனைகள் தொடர்பாக மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து மனு கொடுத்தோம்.

    * அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை தி.மு.க.-வை வீழ்த்துவது ஒன்றுதான் குறிக்கோள்.

    * தி.மு.க. ஆட்சியை வீழ்த்துவதற்காக அ.தி.மு.க. எல்லா முயற்சிகளும் எடுக்கும்.

    * தேர்தல் நேரத்தில் அமையும் சூழலை பொறுத்துதான் கூட்டணி குறித்து முடிவு எடுப்போம் என்றார்.

    இதனிடையே, பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறீர்களா? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தேர்தல் கூட்டணியை பொறுத்தவரை எந்த கட்சியும் நிலையாக இருந்தது இல்லை என்று கூறினார். 

    • அரசு ஊழியர்களுக்கு மாதந்தோறும் 1-ந்தேதி அன்று அவரவர்களின் வங்கி கணக்கில் ஊதியம் வரவு வைக்கப்படும்.
    • வங்கிகள் வருடாந்திர கணக்கு முடிக்கும் நிலையில் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

    சென்னை:

    தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு மாதந்தோறும் 1-ந்தேதி அன்று அவரவர்களின் வங்கி கணக்கில் ஊதியம் வரவு வைக்கப்படும். இந்த நிலையில், வருகிற ஏப்ரல் மாதம் 2-ந்தேதி தான் ஊதியம் வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக, தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழ்நாடு அரசின் கீழ் பணிபுரியும் சுமார் 9.30 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், 7.05 லட்சம் ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் ஆகியோரது மார்ச் மாதச் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் /குடும்ப ஓய்வூதியம் ஆகியவை இவ்வாண்டு ஏப்ரல் 1 அன்று வருடாந்திர கணக்கு முடிவு காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை என்பதால், பணியாளர் மற்றும் ஓய்வூதியர்களின் வங்கிக் கணக்கில் 02.04.2025 வரவு வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

    ×