என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
தண்ணீரை மிச்சமாக்க கடைபிடிக்க வேண்டியவை...
Byமாலை மலர்22 Nov 2019 7:32 AM GMT (Updated: 22 Nov 2019 7:32 AM GMT)
நாம் ஒவ்வொருவரும் அன்றாட வாழ்க்கையில் சிறிய மாற்றங்களை செய்வதன் மூலமும், சில செயல்களை தவிர்ப்பதன் மூலமும் நிச்சயம் மாற்றங்களை உருவாக்க முடியும்.
சுற்றுச்சூழலை சிதைக்காமல் இயற்கைக்கு இணக்கமாக வாழ்வது ஒன்றும் குதிரைக் கொம்பு இல்லை. நாம் ஒவ்வொருவரும் அன்றாட வாழ்க்கையில் சிறிய மாற்றங்களை செய்வதன் மூலமும், சில செயல்களை தவிர்ப்பதன் மூலமும் நிச்சயம் மாற்றங்களை உருவாக்க முடியும். அந்த யோசனைகள் நமக்கு ஏற்கனவே தெரிந்தவைதான். கீழ்க்காணும் விஷயங்களை கடைப்பிடிக்க முயற்சிக்கலாமே.
தினசரி காலையில் பல் துலக்கும்போது குழாயை திறந்து வைத்துக்கொண்டே, பல் துலக்குகிறோமா என்பதை கவனிக்க வேண்டும். நம்மில் பெரும்பாலானோர், குறிப்பாக நகரங்களில் வசிப்போர் பல் துலக்கும்போதும், முகச்சவரம் செய்யும்போதும் குழாயை மூடுவதில்லை. ஒருவர் இப்படிச் செய்வதால் மட்டும் 3 லிட்டர் தண்ணீர் வீணாகிறது. உண்மையில் இந்தச் செயல்களுக்கு ஒரு கப் தண்ணீரே போதுமானது. ஷவரில் குளித்தால் அதிக நேரம் எடுத்துக் கொள்கிறோம். இதனால் தண்ணீர் வீணாகிறது. வாளியில் குளித்தால் அதைவிட குறைந்த தண்ணீரே செலவழியும்.
பழுதடைந்த குழாய்கள், பைப்புகளாலும் தண்ணீர் வீணாகும். எடுத்துக்காட்டாக, ஒரு குழாயில் இருந்து 30 சொட்டு தண்ணீர் ஒரு நிமிடத்துக்கு வெளியேறினால், ஒரு நாளைக்கு பல லிட்டர் தண்ணீர் வீணாகும். எனவே, வீட்டிலும் அலுவலகத்திலும் குழாய் பழுதடைந்து இருந்தால் உடனே அவற்றை சரிசெய்ய வேண்டும். கழிப்பறையில் உள்ள பிளஷில் இருந்தும் தண்ணீர் கசிந்து வீணாகும்.
இதை அறிய பேனாமையை கரைத்து விட்டால் தெரியும். காய்கறி, அரிசி போன்றவற்றை கழுவிய நீரை செடிகளுக்கு ஊற்றலாம். பாத்திரங்களைக் கழுவும்போது குழாயை திறந்து விட்டுக் கொண்டே கழுவுவதைவிட, ஒரு பெரிய பாத்திரத்தில் மற்ற பாத்திரங்களை தேய்த்து வைத்துக் கொண்டு, மற்றொரு பாத்திரத்தில் நிரப்பப்பட்ட நல்ல நீரில் இரண்டொரு முறை முக்கி எடுத்தால் தண்ணீர் தேவையின்றி விரயம் ஆகாது.
இதையெல்லாம் செய்தாலே சாக்கடை குறைந்து சுற்றுச்சூழல் சீரடையும். வீடுதோறும் தண்ணீர் பெருமளவு மிச்சமாகும் என்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.
தினசரி காலையில் பல் துலக்கும்போது குழாயை திறந்து வைத்துக்கொண்டே, பல் துலக்குகிறோமா என்பதை கவனிக்க வேண்டும். நம்மில் பெரும்பாலானோர், குறிப்பாக நகரங்களில் வசிப்போர் பல் துலக்கும்போதும், முகச்சவரம் செய்யும்போதும் குழாயை மூடுவதில்லை. ஒருவர் இப்படிச் செய்வதால் மட்டும் 3 லிட்டர் தண்ணீர் வீணாகிறது. உண்மையில் இந்தச் செயல்களுக்கு ஒரு கப் தண்ணீரே போதுமானது. ஷவரில் குளித்தால் அதிக நேரம் எடுத்துக் கொள்கிறோம். இதனால் தண்ணீர் வீணாகிறது. வாளியில் குளித்தால் அதைவிட குறைந்த தண்ணீரே செலவழியும்.
பழுதடைந்த குழாய்கள், பைப்புகளாலும் தண்ணீர் வீணாகும். எடுத்துக்காட்டாக, ஒரு குழாயில் இருந்து 30 சொட்டு தண்ணீர் ஒரு நிமிடத்துக்கு வெளியேறினால், ஒரு நாளைக்கு பல லிட்டர் தண்ணீர் வீணாகும். எனவே, வீட்டிலும் அலுவலகத்திலும் குழாய் பழுதடைந்து இருந்தால் உடனே அவற்றை சரிசெய்ய வேண்டும். கழிப்பறையில் உள்ள பிளஷில் இருந்தும் தண்ணீர் கசிந்து வீணாகும்.
இதை அறிய பேனாமையை கரைத்து விட்டால் தெரியும். காய்கறி, அரிசி போன்றவற்றை கழுவிய நீரை செடிகளுக்கு ஊற்றலாம். பாத்திரங்களைக் கழுவும்போது குழாயை திறந்து விட்டுக் கொண்டே கழுவுவதைவிட, ஒரு பெரிய பாத்திரத்தில் மற்ற பாத்திரங்களை தேய்த்து வைத்துக் கொண்டு, மற்றொரு பாத்திரத்தில் நிரப்பப்பட்ட நல்ல நீரில் இரண்டொரு முறை முக்கி எடுத்தால் தண்ணீர் தேவையின்றி விரயம் ஆகாது.
இதையெல்லாம் செய்தாலே சாக்கடை குறைந்து சுற்றுச்சூழல் சீரடையும். வீடுதோறும் தண்ணீர் பெருமளவு மிச்சமாகும் என்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X