search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருப்பதி கோசாலையில் கோபூஜை 16-ந்தேதி நடக்கிறது
    X

    திருப்பதி கோசாலையில் கோபூஜை 16-ந்தேதி நடக்கிறது

    • துளசி பூஜை, கோபம்மா பூஜை ஆகியவை நடக்கிறது.
    • பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கப்படுகிறது.

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பதியில் உள்ள தேவஸ்தான கோசாலையில் 16-ந்தேதி கோபூஜை மஹோற்சவம் நடக்கிறது. அன்று காலை 6 மணிக்கு வேணுகான இசையுடன் சிறப்பு நிகழ்ச்சிகள் தொடங்கி, வேத பாராயணம், வேணுகோபாலசாமி பூஜை, துளசி பூஜை, கோபம்மா பூஜை ஆகியவை நடக்கிறது.

    பின்னர் மாடுகள், குதிரைகள், யானைகளுக்கு சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு வெல்லம், பழம், பச்சரிசி, தீவன புல், கரும்பு ஆகியவை வழங்கப்படுகின்றன. அதேபோல் பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

    Next Story
    ×