search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருச்சானூரில் 3-வது நாளாக சுந்தரராஜசாமி அவதார மகோற்சவம்
    X

    திருச்சானூரில் 3-வது நாளாக சுந்தரராஜசாமி அவதார மகோற்சவம்

    • கருட வாகன வீதிஉலா நடந்தது.
    • சுந்தரராஜசாமிக்கு அபிஷேகமும், ஊஞ்சல் சேவை நடந்தது.

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் சுந்தரராஜசாமி அவதார மகோற்சவம் நடந்தது வந்தது.

    விழாவின் 3-வது நாளான நேற்று கோவில் அருகில் உள்ள ஸ்ரீகிருஷ்ணர் முக மண்டபத்தில் உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி, சுந்தரராஜசாமிக்கு காலை அபிஷேகமும், மாலை ஊஞ்சல் சேவையும் நடந்தது.

    இரவு கருட வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் சுந்தரராஜசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    விழாவில் கோவில் உதவி அதிகாரி ரமேஷ் உள்பட கலந்து கொண்டனர்.

    Next Story
    ×