search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    நெடுவிளை ஊசிக்காட்டு சுடலைமாடசாமி கோவிலில் சித்திரை கொடை விழா நாளை தொடங்குகிறது
    X

    நெடுவிளை ஊசிக்காட்டு சுடலைமாடசாமி கோவிலில் சித்திரை கொடை விழா நாளை தொடங்குகிறது

    • இரவு சிறப்பு பூஜையும், அன்னதானமும் நடைபெறுகிறது.
    • சுடலை மாட சுவாமி கதை மகுட ஆட்டம் நடக்கிறது.

    ஈத்தாமொழி அருகே உள்ள நெடுவிளை ஊசிக்காட்டு சுடலைமாட சாமி கோவிலில் சித்திரை கொடை விழா நாளை (திங்கட்கிழமை) தொடங்கி 29-ந்தேதி வரை 6 நாட்கள் நடக்கிறது.

    நாளை மாலை 6 மணிக்கு சமய சொற்பொழிவும், இரவு 9 மணிக்கு சிறப்பு பூஜையும், அதைத்தொடர்ந்து புதூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 2021-2022-ம் கல்வி ஆண்டில் பயின்ற 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்குவதும், முன்னாள் ஊர் பொறுப்பாளர்களை கவுரவிப்பதும் நடைபெறுகிறது. இரவு நடைபெறும் அன்னதானத்தை தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தொடங்கி வைக்கிறார்.

    நாளைமறுநாள் (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜையும், இரவு 9 மணிக்கு சிறப்பு பூஜையும், 9.30 மணிக்கு அன்னதானமும் நடக்கிறது. 26-ந் தேதி பிற்பகல் 3 மணிக்கு ஈத்தாமொழி கோம்பேஸ்வரர் கோவில் தீர்த்த இடத்தில் புனித நீர் எடுத்து யானை முன் செல்ல ஊர்வலமாக கோவில் வருவதும், இரவு சிறப்பு பூஜையும், அன்னதானமும் நடைபெறுகிறது.

    27-ந் தேதி காலை 6 மணிக்கு மகா கணபதி ஹோமமும், லெட்சுமி ஹோமமும், இரவு 9 மணிக்கு குருசாமி கதை மகுட ஆட்டமும், 11.30 மணிக்கு தீபாராதனையும், 12 மணிக்கு ஊசிக்காட்டு சுடலை மாட சுவாமி கதை மகுட ஆட்டமும், நள்ளிரவு 1 மணிக்கு அலங்கார தீபாராதனையும் நடக்கிறது.

    28-ந் தேதி காலை 11.30 மணிக்கு கால சாமிக்கு பூஜையும், மதியம் 1.30 மணிக்கு ஊசி காட்டு சுடலை மாட சுவாமிக்கு சிறப்பு பூஜையும், தீபாராதனையும், 2.30 மணிக்கு அன்னதானமும், இரவு 9 மணிக்கு அரிச்சந்திரா கதை மகுட ஆட்டமும், நள்ளிரவு 1 மணிக்கு அலங்கார தீபாராதனையும் நடைபெறுகிறது. 29-ந் தேதி காலை 10 மணிக்கு பலவேசக்கார சுவாமிக்கு பூஜையும், 6 மணிக்கு அன்னதானமும் நடைபெறுகிறது.

    கொடை விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் தலைவர் ஆர். ஜோதிலிங்கம், செயலாளர் எல்.வேல்செல்வன், பொருளாளர் எஸ்.குமரேசன், துணைத் தலைவர் சி.அய்யப்பன், துணைச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன், ஆலோசகர் என்.எம்.வெற்றிசெல்வன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள் இணைந்து செய்து வருகின்றனர்.

    Next Story
    ×