search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    நாகர்கோவிலில் வள்ளலார் அவதார தினவிழா 2-ந்தேதி நடக்கிறது
    X

    நாகர்கோவிலில் வள்ளலார் அவதார தினவிழா 2-ந்தேதி நடக்கிறது

    • நாகர்கோவில் வடசேரியில் உள்ள வள்ளலார் பேரவையில் நடைபெறுகிறது.
    • அருள் அன்னம் நடைபெறுகிறது.

    அருட்பிரகாச வள்ளலாரின் 200-வது அவதார தினவிழா வருகிற 2-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) நாகர்கோவில் வடசேரியில் உள்ள வள்ளலார் பேரவையில் காலை 7 மணிக்கு நடைபெறுகிறது. விழாவுக்கு மாநில வள்ளலார் பேரவை தலைவர் சுவாமி பத்மேந்திரா தலைமை தாங்குகிறார். பத்மநாபபுரம் ஆதிதிராவிட நலத்துறை தனி தாசில்தார் கோலப்பன் அருட்பெருஞ்ஜோதி மகா மந்திரம் உணர்ந்தோதல் நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார்.

    வள்ளலார் பேரவை பொதுச்செயலாளர் மகேஷ் வரவேற்புரையாற்றுகிறார். நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சிலதா, மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் வளர்மதி கேசவன், சுகாதார ஆய்வாளர் ஜாண், வள்ளலார் பேரவை துணை தலைவர் ரெகுராம் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். காலை 8 மணிக்கு வள்ளலார் உருவப்படத்தை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்து விழாவை தொடங்கி வைக்கிறார்.

    அருட்ஜோதியை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் ஏற்றுகிறார். திருவடி புகழ்ச்சி வேள்வியை வள்ளலார் முப்பெரும் விழா அரசு உயர்மட்ட குழு உறுப்பினர் உமாபதி தொடங்கி வைக்கிறார். காலை 8.30 மணிக்கு அருள் அன்னம் ஆகியவை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட வள்ளலார் பேரவையினர் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×