என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வள்ளலார்"

    • வள்ளலார் பிறந்தநாள் தனிப்பெரும் கருணை நாளாக கொண்டாடப்படுகிறது
    • வள்ளலார் வாழ்ந்த மருதூர் இல்லம் புனரமைப்பு செய்யப்பட்டது

    தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம் மருதூரில் 1823-ம் ஆண்டு அக்டோபர் 5-ந்தேதி அருட்பிரகாச வள்ளலார் பிறந்தார். இவருடைய பெற்றோர் ராமையாபிள்ளை-சின்னமையார் ஆவார். அருட்பிரகாச வள்ளலாரின் இயற்பெயர் ராமலிங்க அடிகள்.

    வள்ளலார் வாடிய பயிரை கண்டு வாடினார். இளைத்த விலங்குகளை கண்டு இளைத்தார். மக்கள் முகங்களில் இளைப்பை கண்டபோது மயங்கினார். பிறர் கண்ணீர் வடிப்பதை பார்த்து தாமும் கண்ணீர் வடித்தார். அனைவரிடமும் இரக்கம் காட்டுவது தான் வள்ளலாரின் ஜீவகாருண்யம்.

    கடவுள் ஒருவர் தான் என்று வள்ளலார் கூறினார். அவர் கடவுளை அருட்பெருஞ்ஜோதியாக கண்டார். அருட்பெருஞ்ஜோதி வழிபாடு எந்த சமயத்திற்கும் பொருந்துவது. 1874-ம் ஆண்டு ஜனவரி 30-ந்தேதி அன்று தமது திருவறையில் அருட்பெருஞ்ஜோதி ஆனார்.

    இந்நிலையில், திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு வள்ளலார் நெடுஞ்சாலை எனப் பெயர் சூட்டப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "நமது திராவிட மாடலில்

    ?வள்ளலார் பிறந்தநாள் தனிப்பெரும் கருணை நாள்

    ?ஓராண்டு தொடர்கொண்டாட்டமாக வள்ளலார் முப்பெரும் விழா

    ?வள்ளலார் வாழ்ந்த மருதூர் இல்லம் புனரமைப்பு என

    வள்ளலாரின் புகழைப் போற்றுவதன் தொடர்ச்சியாக, அயல்நாட்டினரிடமும் வள்ளலாரின் உயரிய கருத்துகளைக் கொண்டு சேர்த்திட, வரும் பிப்ரவரி 15-ஆம் நாள் சென்னை கீழ்ப்பாக்கம் ஏகாம்பரநாதர் பள்ளி வளாகத்தில் அனைத்துலக வள்ளலார் மாநாடு 2026 நடத்தப்படும் என்றும்,

    மேலும், வள்ளலார் நெறியாளர்களின் கோரிக்கையை ஏற்று, திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு வள்ளலார் நெடுஞ்சாலை எனப் பெயர் சூட்டப்படும் என்பதையும் மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன்!" என்று தெரிவித்துள்ளார். 

    • தைப்பூச விழாவில் கலந்து கொள்ள தற்போது பக்தர்கள் வடலூரில் குவிந்து வருகின்றனர்.
    • ஜெர்மன் நாட்டில் இருந்து பக்தர்கள் குழுவினர் தைப்பூச விழாவை காண வடலூருக்கு வந்தனர்.

    வடலூர்:

    கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் கடந்த 1867-ம் ஆண்டு சத்ய தர்மசாலையை நிறுவி அணையா அடுப்பை ஏற்றி வைத்தார்.

    இந்த அணையா அடுப்பு இன்று வரை எரிந்து கொண்டிருக்கிறது. இந்த அணையா அடுப்பு மூலம் நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் பொது மக்களுக்கு இரவு பகலாக தொடர்ந்து அன்னதானங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் வருகிற பிப்ரவரி 1-ந் தேதி வடலூரில் தைப்பூச விழா கோலாகலமாக நடைபெற உள்ளது.

    இந்த தைப்பூச விழாவில் கலந்து கொள்ள தற்போது பக்தர்கள் வடலூரில் குவிந்து வருகின்றனர்.

    அந்த வகையில் ஜெர்மன் நாட்டில் இருந்து பக்தர்கள் குழுவினர் தைப்பூச விழாவை காண வடலூருக்கு வந்தனர்.

    வள்ளலார் எடுத்துரைத்த ஜீவகாருண்ய ஒழுக்கம் என்று கூறப்படும் அனைவருக்கும் உணவளிக்க வேண்டும் என்ற உணர்வால் அன்னதானம் வழங்குவதற்காக அரிசி மூட்டைகளை ஜெர்மன் நாட்டு பயணிகள் தங்கள் தோளில் சுமந்து வந்து கோவில் நிர்வாகத்திடம் வழங்கினார்கள்.

    வள்ளலார் அன்று அனைவருக்கும் உணவளிக்க வேண்டும் என்று கூறியது கடல் கடந்து ஜெர்மன் நாட்டு பயணிகள் அரிசி மூட்டைகளை தங்கள் தோளில் சுமந்து வந்து வழங்கிய சம்பவம் வள்ளலார் பக்தர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

    • தினமும் 3 வேளை சமைக்கப்பட்டு ஆயிரக்கணக்கானோருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
    • வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் நடிகர் சிம்பு தியானம் மேற்கொண்டார்.

    வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்று கூறிய வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை கடலூர் மாவட்டம் வடலூரில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் தைப்பூச ஜோதி தரிசனம் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். மேலும் இங்கு 6 காலங்களில் ஏழு திரைகளை நீக்கி தைப்பூச தினத்தன்று ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும். மேலும் மாதந்தோறும் ஆறு திரைகளை விலக்கி மாத ஜோதி தரிசனம் நடைபெறும்.

    இதனால் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்து சன்மார்க்க அன்பர்கள் மற்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடி ஜோதி தரிசனம் செய்வர். மேலும் இன்று வரை, தருமச்சாலையில் உள்ள அணையா அடுப்பு மூலம் பலரின் பசியைப் போக்கி வருகின்றது. அது மட்டுமின்றி சுனாமி, புயல், வெள்ளம் என எந்தப் பேரிடர் வந்தபோதும் தடையின்றி மக்களுக்கு உணவு வழங்கி தினமும் 3 வேளை சமைக்கப்பட்டு ஆயிரக்கணக்கானோருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

    இந்நிலையில் தமிழக திரை உலகின் பிரபலமான கதாநாயகன், இயக்குநர், பாடகர் என பன்முகத் திறமை கொண்ட நடிகர் சிலம்பரசன் இன்று காலை வடலூர் சத்திய ஞான சபைக்கு வருகை தந்தார். இதனைத் தொடர்ந்து சத்திய ஞான சபை சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக தியானம் மேற்கொண்டு சத்திய தர்மச்சாலை, அணையா அடுப்பு பகுதிகளுக்கு சென்று தரிசனம் செய்தார். இதனைத் தொடர்ந்து வள்ளலார் சித்திப்பெற்ற மேட்டுக்குப்பத்தில் திருவறை தரிசனம், வள்ளலார் தண்ணீரை கொண்டு விளக்கு எரியச் செய்த நற்கருங்குழி ஆகிய பகுதிகளுக்கு சென்று தரிசனம் செய்தார்.

    ஏழை, எளிய, ஆதரவற்றவர்கள் பசியை போக்கி 3 வேளையும் அன்னதானம் வழங்கும் வள்ளலாரை போல தானும் குழந்தைகள் அனைவருக்கும் அன்னதானம் வழங்க வேண்டும் என்று வேண்டி கொண்டேன். அதனால் தான் வள்ளலார் அழைத்த உடன் வடலூர் சத்திய ஞான சபைக்கு வருகை தந்து வள்ளலார் சுவாமிகளை தரிசனம் செய்தேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் நாளை காலை 8.09 மணிக்கு வெளியாகும் என படக்குழு நேற்று அறிவித்தது. இந்நிலையில் இன்று காலை படத்தின் டைட்டில் வெளியான நேரத்தில் வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் நடிகர் சிம்பு தியானம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.



    • வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்.
    • பசியற்ற மனிதர்களைக் காணும் கருணை நிரம்பிய அருட்பிரகாச வள்ளலாரின் பிறந்தநாள் இன்று.

    வள்ளலாரின் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்" என, பசியற்ற மனிதர்களைக் காணும் கருணை நிரம்பிய அருட்பிரகாச வள்ளலார் அவர்களின் பிறந்தநாளான இந்த #தனிப்பெருங்கருணை_நாள்-இல், அவர் கூறிய "மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்" என்ற உயர்ந்த நிலை அனைத்து உள்ளங்களிலும் நிலைநிற்கட்டும்!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடவுள் ஒருவரே, அவர் அருட்பெருஞ்ஜோதியர் என்று வள்ளலார் கூறினார்.
    • சாதி, சமயம் முதலிய எவ்வித வேறுபாடும் கூடாது என்று வள்ளலார் எடுத்துரைத்தார்.

    தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம் மருதூரில் 1823-ம் ஆண்டு அக்டோபர் 5-ந்தேதி அருட்பிரகாச வள்ளலார் பிறந்தார். இவருடைய பெற்றோர் ராமையாபிள்ளை-சின்னமையார் ஆவார். அருட்பிரகாச வள்ளலாரின் இயற்பெயர் ராமலிங்க அடிகள்.

    வள்ளலார் பிறந்த ஆறாவது மாதத்திலேயே தந்தையை இழந்தார். அதன்பின் தாய் சின்னமையார் வள்ளலார் மற்றும் அவருடன் பிறந்த 4 பேரையும் அழைத்துக்கொண்டு சென்னைக்கு குடிபெயர்ந்தார். வள்ளலார் தமது ஆசிரியராகிய காஞ்சீபுரம் மகாவித்துவான் சபாபதியிடம் கல்வி கற்றார்.

    வள்ளலார் இடையில் அணியும் ஆடையை முழங்கால் மறையும் அளவுக்கு அணிவார். மேலாடையை உடல் முழுவதும் போர்த்தி இருப்பார். தலை முழுவதும் முக்காடு அணிந்திருப்பார். வள்ளலார் எப்போதும் கைகட்டி கொண்டே இருப்பார். சில நாட்களில் தூய வெண்ணிற ஆடையை உடுத்தி வந்தார். வாடிய பயிரை கண்டு வாடினார். இளைத்த விலங்குகளை கண்டு இளைத்தார். மக்கள் முகங்களில் இளைப்பை கண்டபோது மயங்கினார். பிறர் கண்ணீர் வடிப்பதை பார்த்து தாமும் கண்ணீர் வடித்தார். அனைவரிடமும் இரக்கம் காட்டுவது தான் வள்ளலாரின் ஜீவகாருண்யம்.

    கடவுள் ஒருவரே, அவர் அருட்பெருஞ்ஜோதியர். உயிர் பலி கூடாது. புலால் உண்ண கூடாது. ஏழைகளின் பசி தவிர்த்தல் ஆகிய ஜீவ காருண்ய ஒழுக்கமே பேரின்ப வீட்டின் திறவுக்கோல், சாதி, சமயம் முதலிய எவ்வித வேறுபாடும் கூடாது. எவ்வுயிரையும் தம் உயிர்போல் எண்ண வேண்டும். ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையை கைகொள்ள வேண்டும் என்பன வள்ளலாரின் சுத்த சன்மார்க்க கொள்கை ஆகும்.

    ஜாதி,மத,சமய,சாஸ்திர,கோத்திர சண்டையில் ஈடுபட்டு அலைந்து வீணாக அழிவது அழகல்ல என்றார் வள்ளலார்.வருணம், ஆசிரமம், ஆச்சாரம் இவைகள் சொல்லுவது சிறுபிள்ளைத்தனமானது என்று சாடினார் வள்ளலார்.வேதம், ஆகமம், புராண, இதிகாசம் இவைகள் சொல்கிற நெறிகள் அனைத்தும் சூது என உணர வைத்தாயே என அவர் பாடினார்

    'உருவமாகியும், அருவமாகியும், அரு உருவமாகியும் கடவுள் ஒருவரே' உள்ளார். கடவுள் ஒருவர் தான் என்று வள்ளலார் கூறினார். அவர் கடவுளை அருட்பெருஞ்ஜோதியாக கண்டார். அருட்பெருஞ்ஜோதி வழிபாடு எந்த சமயத்திற்கும் பொருந்துவது. 1874-ம் ஆண்டு ஜனவரி 30-ந்தேதி அன்று தமது திருவறையில் அருட்பெருஞ்ஜோதி ஆனார். 

    • அக்டோபர் 5ந்தேதி எமது வரலாற்றில் ஒரு சிறப்பான நாள்.
    • இன்றைய தலைமுறைக்கு பொருத்தமாக, சமகால சிக்கல்களுக்கு இணைத்து விளக்க வேண்டும்.

    சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் வள்ளலாரின் 202-வது பிறந்த நாளையொட்டி, சமரச சுத்த சன்மார்க்க இளைஞர்கள் கருத்தரங்கம் இன்று நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் சுமார் 300 இளைஞர்கள் பங்கேற்றனர்.

    கருத்தரங்கை தொடங்கி வைத்து ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-

    நாளை மிக, மிக முக்கியமான நாள். அக்டோபர் 5ந்தேதி எமது வரலாற்றில் ஒரு சிறப்பான நாள். ஏனெனில் அந்த நாளில் தான் தெய்வீகம் இந்த மண்ணில் அவதரித்தது. நாம் அவரை சுவாமி வள்ளலார் என்று அறிந்திருக்கிறோம்.

    நாளை அவர் அவதரித்ததற்கான 202வது ஆண்டு விழா. நாம் இங்கு கூடியிருப்பதன் நோக்கம் – அவரின் போதனைகள், அவரின் வாழ்க்கை, அவரின் பணிகள் குறித்து பேசவும், பகிரவும், கொண்டாடவும் ஆகும். இங்கு மாணவர்கள் அதிகமாக இருப்பதை நான் புரிந்து கொள்கிறேன்.

    நான் உங்களை வலியுறுத்த விரும்புவது– வள்ளலாரின் போதனைகளை மட்டும் அல்லாமல், அவர் ஏன், எப்போது, எந்த சூழலில் அவதரித்தார் என்பதைப் புரிந்து கொள்ளும் பொருட்டும் ஆராயுங்கள். அந்தப் பின்னணி, அந்தக் கால சூழலை நன்றாக அறிந்தால், அவர் சொன்னது எதற்காக, எவ்வாறு வாழ வேண்டும் என்பதையும் தெளிவாக புரிந்துகொள்ள முடியும்.

    உலகம் இன்று சந்திக்கும் 3 முக்கிய பிரச்சினைகள்– வறுமை, சூழல் , போர் இவைகளுக்கான பதில் வள்ளலாரின் போதனையில் உள்ளது. ஆனால் அதை இன்றைய காலத்திற்கு ஏற்ற மொழியிலும் வடிவிலும் நாம் முன்வைக்க வேண்டும். அவரின் போதனைகள் சில தொகுப்புகளில் இருந்தாலும், அவை விதைகள் போன்றவை. ஒவ்வொரு விதையும் பெரும் மரமாக வளரக்கூடியது. அதை இன்றைய தலைமுறைக்கு பொருத்தமாக, சமகால சிக்கல்களுக்கு இணைத்து விளக்க வேண்டும்.

    வள்ளலார் எல்லா உயிர்களையும் நேசிக்க கற்று தந்தார். அவரது சிந்தனைகளை இளைஞர்கள் பின்பற்ற வேண்டும். அப்போது தான் சமூக பாகுபாடு இல்லாமல், வறுமை இல்லாமல், இயற்கையோடு சண்டை இல்லாமல், ஒற்றுமையோடு வாழ முடியும். அதுவே வள்ளலாருக்கு செய்யும் உண்மையான அஞ்சலியும், நம் வாழ்க்கையின் பணி ஆகும். நண்பர்களே, நீங்கள் இன்று இங்கு வந்திருப்பது உங்கள் அர்ப்பணிப்பைக் காட்டுகிறது. இதை முன் னோக்கி கொண்டு செல்வீர்கள் என நான் நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மதத்தின் பெயரில் நடக்கும் வெறுப்பு அரசியலை முறியடிக்க வேண்டும்
    • அமைச்சர் மனோ தங்கராஜ் பேச்சு

    நாகர்கோவில்:

    தமிழகம் முழுவதும் அறநிலையத்துறை சார்பில் வள்ள லார் முப்பெரும் விழா கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு கட்டமாக குமரி மாவட்ட அறநிலையத்துறை சார்பில் நாகர்கோவிலில் உள்ள ஒரு திருமண மண்ட பத்தில் நேற்று வள்ளலார் முப்பெரும் விழா நடந்தது. இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் சுவிதா பிரியதர்ஷினி தலைமை தாங்கினார். வள்ளலார் பேரவை தலைவர் பத்மேந்திரா முன்னிலை வகித்தார்.

    நிகழ்ச்சியில் சிறப்பு விருந் தினராக அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    சமயங்கள், மதங்களின் அடிப்படையில் மக்களை அடிமைப்படுத்தி ஒரு கூட் டம் வளர்ந்து வந்தது. அதை எதிர்த்தவர் வள்ளலார். ஆனால் இன்றைய உலகில் பொறாமையும், பகைமையும் வளர்ந்து வருகிறது. கடவுளை யும், இயற்கையையும் நேசிக்க வேண்டும். ஆனால் இப் போது கடவுளின் பெயரால் இயற்கையை அழிக்கிறோம்.

    அனைத்து மதங்களும், சமயங்களும் அன்பையும், நீதியையும்தான் போற்று கின்றன. அனைவரும் சமம். அன்பு ஒன்றுதான் இந்த உலகில் நிலையானது. வள்ள லார் கூறிய பல சித்தாந்தங் கள் இப்போது மிகவும் அவ சியமாகிறது. அமைதியும், நீதியும்தான் மக்களை நல்வ ழிப்படுத்தும் தற்போது சிலர் மக்கள் மத்தியில் வெறுப்பு பிரசாரத்தை மேற் கொண்டு வருகிறார்கள். குமரி மாவட் டத்தில் பரவி வரும் இந்த வெறுப்பு பிரசாரத்தை முறியடிக்க வேண்டும். நமது நாட் டில் மதத்தின் பெயரால் வெறுப்பு அரசியல் செய்ய நினைப்பவர்களின் முயற் சியை நாம் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும்

    இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து அவர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு வழங்கினார்.

    விழாவில் கலெக்டர் அர விந்த், மாநகராட்சி மேயர் மகேஷ், அருட்பெருஞ்ஜோதி அகல் விளக்கு மன்ற தலை வர் சவுந்தர்ராஜன், வடலூர் வள்ளலார் உலக மய தலை வர் சூரியமூர்த்தி, அறநிலை யத்துறை உதவி ஆணையர் தங்கம், அறநிலையத்துறை பொறியாளர்ராஜ்குமார் உள் பட பலர் கலந்து கொண்டனர்.

    • 5-ந்தேதி அனைத்து மதுபான க்கூடங்கள் இயங்காது என மாவட்ட கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார்.
    • தனியார் மதுபானக் கூடங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் உத்தவிட்டுள்ளார்.

    விழுப்புரம்: 

    வடலூர் ராம லிங்கர் நினைவு தினத்தை முன்னிட்டு, 5-ந்தேதி அனைத்து மதுபான க்கூடங்கள் இயங்காது என மாவட்ட கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது:-

    வடலூர் இராமலிங்கர் நினைவு நாள் நாளை 5-ந்தேதி (ஞாயிற்று க்கிழமை) விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள், அரசு டாஸ்மாக் மதுபானக் கூடங்கள் மற்றும் தனியார் மதுபானக் கூடங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் உத்தவிட்டுள்ளார். தமிழ்நாடு மதுபான சில்லறை வணிகம் விதிகள் (கடைகள் மற்றும் மதுபானக் கூடங்கள்) 2003 உரிம விதிகள் மற்றும் அரசாணை ஆகியவற்றில் குறிப்பிட்டுள்ளவாறு 5-ந்தேதியை டிரை டே ஆக அனுசரித்து அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள், அரசு டாஸ்மாக் மதுபானக் கூடங்கள் மற்றும் தனியார் மதுபானக் கூடங்கள் மூடப்பட வேண்டும் என நெறிமுறை வரையறுக்கப்பட்டுள்ளது. எனவே, மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி நாளை வடலூர் இராமலிங்கர் நினைவு நாளன்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள் டாஸ்மாக் மதுபானக் கூடங்கள் மற்றும் தனியார் மதுபானக் கூடங்கள் இயங்காது இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • ராமநாதபுரத்தில் வள்ளலார் 200-வது ஆண்டு முப்பெரும் விழா நடந்தது.
    • தமிழ்நாடு அரசின் சார்பில் இந்து சமய அறநிலையத்துறை மூலம் நடந்தது.

    ராமநாதபுரம்

    தமிழ்நாடு அரசின் சார்பில் இந்து சமய அறநிலையத்துறை மூலம் ராமநாதபுரம் அரண்மனை மேற்குத்தெரு பகுதியில் உள்ள திருமண அரங்கத்தில் வள்ளலார் என்ற ராமலிங்க சுவாமிகள் இந்த உலகத்திற்கு வந்து 200-வது ஆண்டு தொடக்கம், தர்மச்சாலை தொடங்கி 156-வது ஆண்டு தொடக்கம், ஜோதி தரிசனம் தந்த 152-வது ஆண்டு ஆகிய முப்பெரும் விழா நடந்தது.

    மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் தலைமை தாங்கினார். வள்ளலார் முப்பெரும் விழாவினை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கிடையே நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டுச்சான்றிதழ்களை மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் சிவராம்குமார், ராமநாதபுரம் சமஸ்தானம் இளைய மன்னர் நாகேந்திர சேதுபதி, மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் சுப்புராயலு, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஞானசேகரன், வள்ளலார் உயர்மட்ட குழுவினர்கள் உமாபதி சிவம், அருள்நந்தி சிவம், தனி வட்டாட்சியர் (ஆலய நிலங்கள்) சுகுமாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 2-ந் தேதி நடக்கிறது.
    • அமைச்சர் மனோ தங்கராஜ் விழாவில் பங்கேற்று வள்ளலார் உருவப்படத்தை திறந்து வைக்கிறார்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் வள்ளலார் பேரவையில் திருஅருட்பிரகாச வள்ளலார் வருவிக்கவுற்ற திருநாளின் 201-வது அவதார தினவிழா வருகிற 2-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. மாநில வள்ளலார் பேரவை தலைவர் சுவாமி பத்மேந்திரா தலைமை தாங்குகிறார். பொதுச்செயலாளர் மகேஷ் வரவேற்று பேசுகிறார். கன்னியாகுமரி மாவட்ட திருக்கோவில்கள் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர். அமைச்சர் மனோ தங்கராஜ் விழாவில் பங்கேற்று வள்ளலார் உருவப்படத்தை திறந்து வைக்கிறார். அருட்ஜோதியை, மேயர் மகேஷ், மாநகராட்சி ஆணையாளர் ஆனந்த் மோகன் ஆகியோர் ஏற்றி வைக்கின்றனர்.

    போலீஸ் துணை சூப்பிரண்டுகள் நவீன்குமார், சந்திர சேகரன், பிள்ளையார்புரம் சிவந்தி ஆதித்தனார் கல்லூரி செயலாளர் ராஜன், தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற குமரி மாவட்ட தலைவர் பாரத்சிங் உள்பட பலர் விழாவில் கலந்து கொள்கின்றனர்.

    • வள்ளலார் திருஉருவப்படம் திறந்து வைத்த நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ்
    • தலைமையாசிரியர் நாகம்மாள் நல்லாசிரியர் விருது பெற்றமைக்கு பாராட்டி வள்ளலார் விருது வழங்கப்பட்டது

    நாகர்கோவில் :

    நாகர்கோவில், வடசேரி, ரவிவர்மன் புதுத்தெருவில் அமைந்துள்ள வள்ளலார் பேரவையில் திருவருட்பிரகாச வள்ளலார் (வருவிக்கவுற்ற திருநாள்) 201-வது அவதார தின விழா நடைபெற்றது. மாநில வள்ளலார் பேரவை தலைவர் சுவாமி பத்மேந்திரா தலைமை தாங்கினார். வள்ளலார் பேரவை பொதுச்செயலாளர் டாக்டர் மகேஷ் வரவேற்றார்.

    திருஅகவல், திருவடிப்புகழ்ச்சி பாராயணம் அங்ரி சுஜித், எம்.பி. ஆதிரா நிகழ்த்தினார். இந்த நிகழ்ச்சியை கன்னியாகுமரி மாவட்ட இந்து சமய அறநிலைத்துறை அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    வள்ளலார் திருஉருவப்படம் திறந்து வைத்து நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ஆனந்த் மோகன் ஆகியோர் அருட்பெருஞ்ஜோதி மகா தீபம் ஏற்றி விழாவினை தொடங்கி வைத்தனர்.

    தூய்மை பணியாளர்களுக்கு வஸ்திரதானத்தை நாகர்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு நவீன்குமார், மதுவிலக்கு அமலாக்க பிரிவு துணை சூப்பிரண்டு சந்திரசேகரன் ஆகியோர் வழங்கினர்.

    10-வது வார்டு மாமன்ற உறுப்பினர் வளர்மதி கேசவன், தேவசம் பொறியாளர் ராஜகுமார், சுகாதார ஆய்வாளர் ராஜா, ஆர். ஏ. ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற மாவட்ட தலைவர் பாரத்சிங், ரீத்தாபுரம் ஜான் போஸ்கோ, முன்னாள் மாநில கைத்தறி குழு உறுப்பினர் பன்னீர்செல்வம், ஊர்வகை தலைவர் சுப்பிரமணியன், எஸ்.எம்.ஆர்.வி. மேல்நிலைப்பள்ளி செயலாளர் சுப்ரமணியன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

    அன்னதானத்தை ஹெச்.சி.எல். திட்ட மேலாளர் சிவா, பிரிமியர் ரேடியோ உரிமையாளர் சுஜித், பாவநாசம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். எஸ்.எம்.ஆர்.வி. மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் நாகம்மாள் நல்லாசிரியர் விருது பெற்றமைக்கு பாராட்டி வள்ளலார் விருது வழங்கப்பட்டது. மாவட்ட கலெக்டர் குடும்ப நல ஆலோசனை மையம் ஆலோசகர் தினேஷ் கிருஷ்ணன் நன்றி கூறினார்.

    • அரியலூர் அடுத்த வள்ளலார் கல்வி நிலையத்தில் சொற்பொழிவு நடைபெற்றது
    • சன்மார்க்க சொற்பொழிவாளர் கிருஷ்ணமூர்த்தி புகழாரம்

    அரியலூர்,  

    வள்ளலாரின் 201-வது பிறந்த நாளை முன்னிட்டு அரியலூர் அடுத்த வள்ளலார் கல்வி நிலையத்தில் சொற்பொழிவு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வள்ளலார் கல்வி நிலையத் தலைவர் சீனி.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். வெங்கிடகிருஷ்ணாபுரம் ஊராட்சித் தலைவர் வள்ளியம்மை ராமசாமி முன்னிலை வைத்தார் . பள்ளிச் செயலர் புகழேந்தி வரவேற்றார். இதில் சன்மார்க்க சொற்பொழிவாளர் கிருஷ்ணமூர்த்தி கலந்துகொண்டு சொற்பொழிவாற்றினார். அவர் பேசியதாவது:-

    உயரிய ஆன்மீக நெறிகளையும் சமூக சீர்திருத்தங்களையும் தம் வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்தவர் வள்ளலார். அவர் உலக மக்களையும் அவ்வாழ்க்கைக்கு அழைத்துச் செல்ல விரும்பினார். அதற்கென மக்களுக்கு அருளுரைகளும் அருட்பாக்களும் அருளியதோடு நிற்காமல், அக்கொள்கைகளுக்கு அடித்தளமாக சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம், சத்திய தருமச்சாலை, சத்திய ஞான சபை ஆகிய முப்பெரும் அமைப்புகளை ஏற்படுத்தி அவற்றின் வழி ஜீவகாருண்ய ஒழுக்கம், பசிப்போக்கும் அறம், அருட்பெருஞ்ஜோதி இறைவன் என்னும் மகத்தான ஆன்மீக சமூக சீர்திருத்தங்களை மக்கள் பின்பற்றி உய்வதற்கு வழி செய்தார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    சொற்பொழிவாளர் சாந்தி பாலசுப்ரமணியன், புலவர் சி.இளங்கோ, நல்லப்பன் ஆகியோர் பேசினர்.

    நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சிவகுமார் , ராமஜெயவேல் ஆகியோர் மாணவர்களுக்கு சீருடை மற்றும் இனிப்புகளை வழங்கினர்.முடிவில் தலைமை ஆசிரியர் சௌந்தரராஜன் நன்றி தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், அப்பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    ×