என் மலர்
நீங்கள் தேடியது "அவதார"
- அவதார் படத்தின் முதல் பாகம் 2009 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் உறைய வைத்தது.
- 13 ஆண்டுகளுக்கு பிறகு அவதார் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் அவதார் படத்தின் முதல் பாகம் 2009 டிசம்பர் மாதம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் உறைய வைத்தது. படத்தில் இடம்பெற்று இருந்த பண்டோரா கற்பனை உலகம் கண்கொள்ளா காட்சியாக அமைந்தது. வசூலிலும் சாதனை நிகழ்த்தி 3 ஆஸ்கார் விருதுகளை வென்றது.
13 ஆண்டுகளுக்கு பிறகு அவதார் படத்தின் இரண்டாம் பாகம் 'அவதார் தி வே ஆப் வாட்டர்' என்ற திரைப்படம் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 16- ந் தேதி வெளியாகி வசூலில் சாதனை படைத்தது
இந்நிலையில், அவதார் படத்தின் 3வது பாகம் ' Avatar: Fire and Ash' படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.
வரும் 25ம் தேதி வெளியாகும் 'The Fantastic Four: First Steps' படத்துடன் திரையரங்குகளில் 'அவதார்' படத்தின் டிரெய்லர் திரையிடப்படும் என அவதார் படக்குழு அறிவித்துள்ளது.
அவதார் படத்தின் 3 ஆம் பாகம் இந்தாண்டு டிசம்பர் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
- 2-ந் தேதி நடக்கிறது.
- அமைச்சர் மனோ தங்கராஜ் விழாவில் பங்கேற்று வள்ளலார் உருவப்படத்தை திறந்து வைக்கிறார்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் வள்ளலார் பேரவையில் திருஅருட்பிரகாச வள்ளலார் வருவிக்கவுற்ற திருநாளின் 201-வது அவதார தினவிழா வருகிற 2-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. மாநில வள்ளலார் பேரவை தலைவர் சுவாமி பத்மேந்திரா தலைமை தாங்குகிறார். பொதுச்செயலாளர் மகேஷ் வரவேற்று பேசுகிறார். கன்னியாகுமரி மாவட்ட திருக்கோவில்கள் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர். அமைச்சர் மனோ தங்கராஜ் விழாவில் பங்கேற்று வள்ளலார் உருவப்படத்தை திறந்து வைக்கிறார். அருட்ஜோதியை, மேயர் மகேஷ், மாநகராட்சி ஆணையாளர் ஆனந்த் மோகன் ஆகியோர் ஏற்றி வைக்கின்றனர்.
போலீஸ் துணை சூப்பிரண்டுகள் நவீன்குமார், சந்திர சேகரன், பிள்ளையார்புரம் சிவந்தி ஆதித்தனார் கல்லூரி செயலாளர் ராஜன், தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற குமரி மாவட்ட தலைவர் பாரத்சிங் உள்பட பலர் விழாவில் கலந்து கொள்கின்றனர்.






