என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
ஆரல்வாய்மொழி புலமாடன் சாமி கோவில் கொடை விழா நாளை தொடங்குகிறது
- கொடை விழா நாளை தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.
- 27-ந் தேதி சாமிகள் ஊர் சுற்றி வருதல் நடக்கிறது.
ஆரல்வாய்மொழி யாதவர் சமுதாய புலமாடன், ஈனன், பேச்சியம்மன் சாமி கோவில் கொடை விழா நாளை (வியாழக்கிழமை) தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. நாளை மாலை 5 மணிக்கு திருவிளக்கு பூஜை, தொடர்ந்து குடியழைப்பு, தீபாராதனை நடக்கிறது. நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்களும், பூஜைகளும் நடைபெறும்.
பூஜைகளை ஆரல்வாய்மொழி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் மேல்சாந்தி பாலசுப்பிரமணிய சிவாச்சாரியார் நடத்துகிறார். தொடர்ந்து காலை 9 மணிக்கு அகலிகை ஊற்று பிள்ளையார் கோவிலில் இருந்து பக்தர்கள் மேளதாளங்களுடன், முளைப்பாரி, பால்குடங்களுடன் ஊர்வலமாக கோவில் வருதல் நடைபெறும். ஊர்வலத்தை ஆரல்வாய்மொழி பேரூராட்சித் தலைவர் முத்துக்குமார் தொடங்கி வைக்கிறார்.
பின்னர் உச்சிகால தீபாராதனை, மதியம் 1 மணிக்கு அன்னதானம், மாலை 4 மணிக்கு பொங்கல் வழிபாடு, இரவு 8 மணிக்கு சாமி கதைபாடுதல், நள்ளிரவு 12 மணிக்கு தீபாராதனை, படைப்பு, பிரசாதம் வழங்குதல் போன்றவை நடைபெறும். வருகிற 27-ந் தேதி மதியம் 12 மணிக்கு உச்சிகால தீபாராதனை, மாலை 3 மணிக்கு சாமிகள் ஊர் சுற்றி வருதல் நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்