search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    தூத்துக்குடி பனிமயமாதா ஆலயத்தில் நற்கருணை பவனி
    X

    தூத்துக்குடி பனிமயமாதா ஆலயத்தில் நற்கருணை பவனி நடந்த போது எடுத்த படம்.

    தூத்துக்குடி பனிமயமாதா ஆலயத்தில் நற்கருணை பவனி

    • வருகிற 4-ந்தேதி பெருவிழா மாலை ஆராதனை நடக்கிறது.
    • 5-ந்தேதி பெருவிழா நிறைவு திருப்பலி நடக்கிறது.

    உலக பிரசித்தி பெற்ற தூத்துக்குடி பனிமயமாதா பேராலய திருவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து விழா நாட்களில் செபமாலை, மறையுரை, அருளிக்க ஆசீர், நற்கருணை ஆசீர் மற்றும் சிறப்பு திருப்பலிகள் நடந்து வந்தன. 6-ம் திருநாளான நேற்று காலை 5 மணிக்கு முதல் திருப்பலி, 5.45 மணிக்கு 2-ம் திருப்பலி, 6.30 மணிக்கு 3-ம் திருப்பலி நடந்தது. 7.30 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் தலைமையில் புதுநன்மை திருப்பலி நடந்தது. காலை 10 மணிக்கு மலையாள திருப்பலி, 11.30 மணிக்கு பிஷப் இவோன் அம்புரோஸ் தலைமையில் மறைமாவட்ட துறவியருக்கான சிறப்பு திருப்பலியும், மாலை 4 மணிக்கு ஏழுகடல் துறை, கடலோர பங்குகளின் இறைமக்களுக்கான திருப்பலியும் நடந்தது. 6.15 மணிக்கு பிஷப் ஸ்டீபன் தலைமையில் நற்கருணை பவனி நடந்தது.

    அப்போது அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் பிஷப் ஸ்டீபன் நற்கருணை பேழையை கையில் பிடித்தபடி வந்தார்.

    தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டு இருந்த மேடையில் நற்கருணை ஆசீர் நடந்தது. நிகழ்ச்சியில் பங்குதந்தை குமார்ராஜா மற்றும் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

    வருகிற 4-ந்தேதி 10-ம் திருவிழா அன்று இரவு 7 மணிக்கு பிஷப் ஸ்டீபன் தலைமையில் பெருவிழா மாலை ஆராதனை நடக்கிறது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியாக 5-ந்தேதி காலை 7.30 மணிக்கு பெருவிழா கூட்டு திருப்பலியும், 9 மணிக்கு மறைமாவட்ட முதன்மை குரு பன்னீர் செல்வம் தலைமையிலும், 10 மணிக்கு பிஷப் இவோன் அம்புரோஸ் தலைமையிலும் சிறப்பு திருப்பலிகள் நடக்கிறது. மாலை 5 மணிக்கு பாளையங்கோட்டை மறை மாவட்ட பிஷப் அந்தோணிசாமி தலைமையில் பெருவிழா நிறைவு திருப்பலி நடக்கிறது. இரவு 7 மணிக்கு நகர வீதிகளில் அன்னையின் திருவுருவ பவனி நடக்கிறது.

    Next Story
    ×