என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
கீழ ஆசாரிபள்ளம் புனித பனிமய அன்னை ஆலய திருவிழா நாளை தொடங்குகிறது
- இந்த திருவிழா நாளை தொடங்கி 8-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
- 8-ந்தேதி ஆடம்பர அன்னையின் அலங்கார தேர்பவனி நடக்கிறது
நாகர்கோவில் கீழ ஆசாரிபள்ளத்தில் புனித பனிமய அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் குடும்ப விழா நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்கி 8-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
விழாவில் நாளை காலை 6 மணிக்கு திருப்பலி, மாலை 6.15 மணிக்கு கொடியேற்றம், திருப்பலி நடைபெறுகிறது. இதற்கு கோட்டார் மறை வட்ட குருகுல முதல்வர் ஆண்டனி சகாய ஆனந்த் தலைமை தாங்குகிறார். அருட்பணியாளர் வினோ செலுக்கஸ் அருளுரை வழங்குகிறார். விழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலை திருப்பலி, ஜெபமாலை நடைபெறுகிறது.
4-ந்தேதி காலை 6.30 மணிக்கு திருமுழுக்கு திருப்பலி நடக்கிறது. இதற்கு கோட்டார் மறை மாவட்ட சான்சிலர் அருட்பணியாளர் இம்மானுவேல் ராஜ் தலைமை தாங்க, அருட்பணியாளர் ஆண்டனி கிளாரட் அருளுரை வழங்குகிறார். மாலை 5 மணிக்கு நற்கருணை பவனி நடக்கிறது. இரவு 9 மணிக்கு மறைக்கல்வி ஆண்டு விழா நடைபெறுகிறது.
6-ந்தேதி காலை 6 மணிக்கு திருப்பலி, 6.15 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி நடக்கிறது. இதற்கு கனடா குருத்துவ கல்லூரி பேராசிரியர் அருட்பணியாளர் மார்சிலின் டிபோரஸ் தலைமை தாங்க, அருட்பணியாளர் ஜோசப் காலின்ஸ் அருளுரை வழங்குகிறார். இரவு 9 மணிக்கு புனித வளனார் தேர்பவனி நடக்கிறது.
7-ந்தேதி காலை 6.45 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி நடைபெறுகிறது. இதற்கு கோட்டார் மறை மாவட்ட குருகுல முதல்வர் ஹிலாரியுஸ் தலைமை தாங்கி, அருளுரை வழங்குகிறார். 10 மணிக்கு புனித வளனார் தேர்பவனி நடக்கிறது. இரவு 10 மணிக்கு அன்னையின் அலங்கார தேர் பவனி நடைபெறுகிறது.
8-ந்தேதி காலை 7 மணிக்கு திருவிழா ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடக்கிறது. நிகழ்ச்சிக்கு அருட்பணியாளர் பெலிக்ஸ் தலைமை தாங்குகிறார். அருட்பணியாளர் லியோன் ஹென்சன் அருளுரை வழங்குகிறார். 10 மணிக்கு அன்னையின் அலங்கார தேர்பவனி, மாலை 5 மணிக்கு திருக்கடையூர் டி.எஸ்.எம். உமாசங்கரின் நாதஸ்வர கச்சேரி ஆகியவை நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை ஆலய பங்குத்தந்தை அருள்ஜோ மற்றும் பங்கு நிர்வாகிகள், பங்குமக்கள், அருட்சகோதரிகள் இணைந்து செய்து வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்