search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    தெற்கு கள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா ஆலய திருவிழா கொடியேற்றம்
    X

    தெற்கு கள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா ஆலய திருவிழா கொடியேற்றம்

    • இந்த திருவிழா 10 நாட்கள் நடக்கிறது.
    • தினமும் திருப்பலி, ஜெபமாலை மறையுரையுடன் நற்கருனை ஆசீரும் நடக்கிறது.

    தெற்கு கள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா ஆலய திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு 137-வது திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 5 மணி முதல் திருப்பலி, திருயாத்திரை திருப்பலி நடந்தது. மாலையில் பக்தர்கள் தங்களது நேர்த்தி கடனாக தத்து கொடியை ஆலயத்தை சுற்றி வந்து காணிக்கையாக செலுத்தி தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர்.

    பின்பு நற்கருணை ஆசீருடன் கொடியை தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் பங்குதந்தைகள் நெல்சன் பால்ராஜ், ரூபன், பீட்டர் பாஸ்டியான் ஆகியோர் அர்ச்சித்து தர்மகர்த்தா டாக்டர் ஜெபஸ்டின் ஆனந்த் கொடியை ஏற்றி வைத்தார்.

    இதில் தமிழகத்தில் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் பல்லாயிரக்கணக்கனோர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து 10 நாட்கள் நடக்கும் திருவிழாவில் தினமும் காலையில் திருயாத்திரையுடன் திருப்பலி, மாலையில் ஜெபமாலை மறையுரையுடன் நற்கருனை ஆசீரும் நடக்கிறது. 9-ம் திருவிழாவான வருகிற 4-ந் தேதி காலையில் திருப்பலி, திருயாத்திரை, மாலையில் பாளையங்கோட்டை மறை மாவட்ட ஆயர் அந்தோணி சாமி தலைமையில் ஜெபமாலை, மன்றாட்டு மாலை நடக்கிறது. அதனை தொடர்ந்து மலையாள திருப்பலி நடக்கிறது. நள்ளிரவு 12 மணிக்கு பரிசுத்த அதிசய பனிமாதா தேரில் எழுந்தருளி வீதி உலா வருதல் நடக்கிறது.

    10-ம் திருவிழாவான 5-ந் தேதி கூட்டு திருப்பலி நிகழ்ச்சி நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை பங்குதந்தை ஜெரால்ட் ரவி, உதவி பங்கு தந்தை சிபுஜோசப், தர்மகர்த்தா டாக்டர் ஜெபஸ்டின் ஆனந்த் மற்றும் தெற்கு கள்ளிகுளம் கத்தோலிக்க கிறிஸ்தவ நாடார் மகமை சங்க நிர்வாககுழு உறுப்பினர்கள், இறை மக்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×