search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில் தெப்பத்திருவிழா: சுவாமி-அம்பாள் 5 முறை வலம் வந்தனர்
    X

    தெப்ப உற்சவம் நடந்தபோது எடுத்த படம். (உள்படம்-சிறப்பு அலங்காரத்தில் சுவாமி-அம்பாள்)

    மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில் தெப்பத்திருவிழா: சுவாமி-அம்பாள் 5 முறை வலம் வந்தனர்

    • இன்று தீர்த்தவாரியுடன் தெப்பத்திருவிழா நிறைவு பெறுகிறது.
    • திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்

    தென்கயிலாயம் என்று போற்றப்படும், திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி தெப்பத்திருவிழா கடந்த மாதம் 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி-அம்பாள் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் நேற்று இரவு நடைபெற்றது. முன்னதாக மதியம் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மாலை 6.15 மணிக்கு சுவாமி-அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மலைக்கோட்டை உள்வீதி, சின்னக்கடை வீதி, என்.எஸ்.பி.ரோடு வழியாக தெப்பக்குளத்தை வந்தடைந்தனர்.

    பின்னர், தெப்பக்குளத்தில் பனை ஓலைகள் கொண்டு சுமார் 40 அடி உயரத்தில் தயார் நிலையில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் இரவு 7.40 மணிக்கு எழுந்தருளினர். பின்னர் சுவாமியும், அம்பாளும் தெப்பத்தை 5 முறை வலம் வந்தனர். அதை தொடர்ந்து தெப்பக்குளத்தின் நடுபகுதியில் உள்ள நீராழி மண்டபத்தில் சுவாமி-அம்பாள் பஞ்ச மூர்த்திகளுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர். பின்னர் இரவு 11.45 மணிக்கு மேல் தெப்பத்தில் இருந்து சுவாமி-அம்பாள் வெளியே வந்தனர். அதைத்தொடர்ந்து நந்தி கோவில் தெரு, ஆண்டாள் வீதி, சறுக்குப் பாறை வழியாக இரவு 12.30 மணிக்கு மேல் சுவாமி அம்பாள் மீண்டும் கோவிலை சென்றடைந்தனர். தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணியளவில் அதே தெப்பக்குளத்தில் தீர்த்தவாரியுடன் தெப்பத்திருவிழா நிறைவு பெறுகிறது.

    தெப்பத் திருவிழாவையொட்டி தெப்ப குளத்தை சுற்றி உள்ள நான்கு வீதிகளிலும் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. மேலும் பக்தர்களின் வசதிக்காக தெப்பக் குளத்தை சுற்றி அமைக்கப்பட்டு இருந்த கடைகள் அகற்றப்பட்டன.

    Next Story
    ×