search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆடி முளைக்கொட்டு திருவிழா தொடங்கியது
    X

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆடி முளைக்கொட்டு திருவிழா தொடங்கியது

    • நாளை மூலவர், மீனாட்சி அம்மனுக்கு உச்சிகால பூஜையில் ஏற்றி, இறக்குதல் வைபவம் நடைபெறுகிறது.
    • 26-ந்தேதி சுவாமி, அம்மன் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெறும்.

    "ஆடிப்பட்டம் தேடி விதை" என்ற முன்னோர் வாக்கின்படி விவசாயப் பெருமக்கள் ஆடி மாதத்தில் விதை விதைத்து நாற்று நட்டு விவசாயப் பணிகளை தொடங்குவர். பயிர்கள் அமோக விளைச்சல் வேண்டி முளைக்கட்டு வைத்து இறைவனை வழிபடுவார்கள்.

    உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்கள் திருவிழா நடைபெறும். அதில் மீனாட்சி அம்மனுக்கு மட்டும் ஆடி முளைக்கொட்டுத் திருவிழா, ஐப்பசி கோலாட்ட உற்சவம், நவராத்திரி கலை விழா, மார்கழி எண்ணெய் காப்பு திருவிழா ஆகியவை நடைபெறும். இந்தாண்டு ஆடி முளைக்கொட்டுத் திருவிழா நேற்று தொடங்கி 29-ந் தேதி வரை நடக்கிறது

    இதையொட்டி அம்மன் சன்னதி முன்புள்ள கொடி மரத்தில் நேற்று காலை 10.35 மணி முதல் 10.59 மணிக்குள் கொடியேற்றம் நடந்தது. அப்போது மீனாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். அம்மனுக்கும், கொடிமரத்திற்கும் சிறப்பு தீபாராதனை நடந்தது.

    இன்றைய தினத்தில் இருந்து திருவிழா நடைபெறும் 10 நாட்கள் மீனாட்சி அம்மன் பஞ்ச மூர்த்திகளுடன் காலை, மாலை ஆகிய இருவேளை ஆடி வீதியில் வீதி உலா வந்து பக்தர்கள் காட்சி அளிப்பார்.

    விழாவில் 3-ம் நாளான நாளை (சனிக்கிழமை) ஆடிப்பூரத்தன்று மூலவர், உற்சவர் மீனாட்சி அம்மனுக்கு உச்சிகால பூஜையில் ஏற்றி, இறக்குதல் வைபவம் நடைபெறுகிறது.

    7-ம் நாளான 26-ந் தேதி இரவில் வீதிஉலா முடிந்த பின் உற்சவர் சன்னதில் சுவாமி, அம்மன் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெறும். விவசாயம் பெருகவும், நாடு செழிக்கவும் அமைந்ததே ஆடி முளைக்கொட்டுத் திருவிழாவாகும். திருவிழா நடைபெறும் நாட்களில் கோவில் சார்பில் உபய திருக்கல்யாணம், தங்கத்தேர் போன்றவை நடைபெறாது. ஏற்பாடுகளை கோவில் இணை கமிஷனர் கிருஷ்ணன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

    Next Story
    ×