search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    குற்றாலநாத சுவாமி கோவிலில் ஐப்பசி விசு திருவிழா கொடியேற்றம்
    X

    குற்றாலநாத சுவாமி கோவிலில் ஐப்பசி விசு திருவிழா கொடியேற்றம்

    • வருகிற 12-ந்தேதி பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு நடக்கிறது.
    • 16-ந் தேதி நடராஜருக்கு பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடைபெறுகிறது.

    குற்றாலத்தில் உள்ள குற்றாலநாத சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி விசு திருவிழா நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கி, வருகிற 18-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.

    இதையொட்டி நேற்று காலை 5.20 மணிக்கு மேல் 6.20 மணிக்குள் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.

    விழா நாட்களில் தினமும் காலை, மாலை சிறப்பு பூஜைகள், சுவாமி - அம்பாள் வீதி உலா ஆகியன நடைபெறுகிறது. வருகிற 12-ந் தேதி பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு, 13-ந் தேதி விநாயகர், முருகன், குற்றாலநாத சுவாமி, குழல்வாய்மொழி அம்மை ஆகிய நான்கு தேர்கள் வடம் பிடித்து இழுக்கப்படுகின்றன.

    15-ந் தேதி காலை 9.30 மணிக்கும் இரவு 7 மணிக்கும் நடராஜமூர்த்திக்கு தாண்டவ தீபாராதனை நடக்கிறது. 16-ந் தேதி காலை 10.30 மணிக்கு சித்திர சபையில் நடராஜ மூர்த்திக்கு அபிஷேகம் மற்றும் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடைபெறுகிறது.

    விழாவின் கடைசி நாளான 18-ந் தேதி காலை 10.40 மணிக்கு விசு தீர்த்தவாரியும், ரிஷப வாகன காட்சியும், இரவில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடக்கின்றது.

    விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை தூத்துக்குடி இணை ஆணையர் அன்புமணி, உதவி ஆணையர்கள் கவிதா, கண்ணதாசன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×