search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    காளியம்மன் கோவில் வைகாசி திருவிழா
    X

    காளியம்மன் கோவில் வைகாசி திருவிழா

    • காளியம்மனுக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
    • அம்மன் புஷ்ப பல்லக்கில் வீதியுலா நடைபெற்றது.

    மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூர் அருகே திருபஞ்சாகையில் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் வைகாசி திருவிழா கடந்த 3-ந் தேதி தொடங்கியது. அதனைத்தொடர்ந்து தினமும் காளியம்மனுக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதனையடுத்து நேற்று மாலை 6 மணி அளவில் ஆற்றங்கரையில் இருந்து திரளான பக்தர்கள் கரகம் மற்றும் பால்குடம், அலகு காவடி, பறவைக் காவடி எடுத்து அன்னப்பன்பேட்டை மெயின் ரோடு வழியாக ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தனர்.

    அதனைத்தொடர்ந்து காளியம்மனுக்கு பால், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இரவு அம்மன் புஷ்ப பல்லக்கில் வீதியுலா நடைபெற்றது.இதற்கான ஏற்பாடுகளை கிராமமக்கள் செய்திருந்தனர். திருவிழாவை முன்னிட்டு செம்பனார்கோவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×