என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
ஆத்திக்காட்டுவிளை இசக்கியம்மன் கோவில் கொடை விழா நாளை தொடங்குகிறது
- இன்று நள்ளிரவு 12 மணிக்கு அலங்கார தீபாராதனையும் நடைபெறுகிறது.
- நாளை நீலசாமி இசக்கியம்மனுக்கு அர்த்தசாம அலங்கார தீபாராதனை நடக்கிறது.
ஆத்திக்காட்டுவிளை நீலசாமி இசக்கியம்மன் குடும்ப கோவில் கொடை விழா இன்று (வியாழக்கிழமை) தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. இன்று விக்னேஸ்வர பூஜையும், தீப லெட்சுமி பூஜையும், மகா சுதர்சனஹோமமும், 9 மணிக்கு அபிஷேகம், தீபாராதனையும், மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜையும், இரவு 8 மணிக்கு மஞ்சள்காப்பு மற்றும் மாகாப்பு பூஜையும், 8.30 மணிக்கு வில்லிசையும், நள்ளிரவு 12 மணிக்கு அலங்கார தீபாராதனையும் நடைபெறுகிறது.
நாளை (வெள்ளிக்கிழமை) காலை 8.30 மணிக்கு வில்லிசையும், பகல் 12 மணிக்கு நீலசாமி இசக்கியம்மனுக்கு அலங்கார தீபாராதனையும், அன்னதானமும், மாலை 6 மணிக்கு வில்லிசையும், இரவு 8.30 மணிக்கு பிரம்மசக்தி அம்மனுக்கு அலங்கார தீபாராதனையும், வில்லிசையும், நள்ளிரவு 12 மணிக்கு நீலசாமி இசக்கியம்மனுக்கு அர்த்தசாம அலங்கார தீபாராதனையும் நடைபெறுகிறது.
10-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு வில்லிசையும், காலை 6 மணிக்கு வன்னியடி மறவர் சாமிக்கு அலங்கார தீபாராதனையும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை நீலசாமி இசக்கியம்மன் கோவில் குடும்பத்தார் செய்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்