search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆத்திக்காட்டுவிளை இசக்கியம்மன் கோவில் கொடை விழா நாளை தொடங்குகிறது
    X

    ஆத்திக்காட்டுவிளை இசக்கியம்மன் கோவில் கொடை விழா நாளை தொடங்குகிறது

    • இன்று நள்ளிரவு 12 மணிக்கு அலங்கார தீபாராதனையும் நடைபெறுகிறது.
    • நாளை நீலசாமி இசக்கியம்மனுக்கு அர்த்தசாம அலங்கார தீபாராதனை நடக்கிறது.

    ஆத்திக்காட்டுவிளை நீலசாமி இசக்கியம்மன் குடும்ப கோவில் கொடை விழா இன்று (வியாழக்கிழமை) தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. இன்று விக்னேஸ்வர பூஜையும், தீப லெட்சுமி பூஜையும், மகா சுதர்சனஹோமமும், 9 மணிக்கு அபிஷேகம், தீபாராதனையும், மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜையும், இரவு 8 மணிக்கு மஞ்சள்காப்பு மற்றும் மாகாப்பு பூஜையும், 8.30 மணிக்கு வில்லிசையும், நள்ளிரவு 12 மணிக்கு அலங்கார தீபாராதனையும் நடைபெறுகிறது.

    நாளை (வெள்ளிக்கிழமை) காலை 8.30 மணிக்கு வில்லிசையும், பகல் 12 மணிக்கு நீலசாமி இசக்கியம்மனுக்கு அலங்கார தீபாராதனையும், அன்னதானமும், மாலை 6 மணிக்கு வில்லிசையும், இரவு 8.30 மணிக்கு பிரம்மசக்தி அம்மனுக்கு அலங்கார தீபாராதனையும், வில்லிசையும், நள்ளிரவு 12 மணிக்கு நீலசாமி இசக்கியம்மனுக்கு அர்த்தசாம அலங்கார தீபாராதனையும் நடைபெறுகிறது.

    10-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு வில்லிசையும், காலை 6 மணிக்கு வன்னியடி மறவர் சாமிக்கு அலங்கார தீபாராதனையும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை நீலசாமி இசக்கியம்மன் கோவில் குடும்பத்தார் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×