என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
சிவசக்தி பத்ரகாளியம்மன் கோவில் கொடை விழா: பக்தர்கள் அக்னிசட்டி ஊர்வலம்
- மகுடம் தட்டி சுவாமி மயான எல்லை குறிப்பும், உச்சி கால பூஜைகளும் நடந்தது.
- நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
கோவில்பட்டி நடராஜபுரம் தெருவில் உள்ள சிவசக்தி பத்திரகாளியம்மன், மலையாளத்து சுடலை மகாராஜா கோவில் ஆடிக் கொடை விழா மற்றும் பூக்குழி விழா நடைபெற்றது. முதல் நாள் மாலை 4.30 மணிக்கு வெண்கல அக்னி சட்டி ஊர்வலம் நடந்தது. இரவு நையாண்டி மேளமும் கரகாட்டமும் நடைபெற்றது. 2-ம்நாள் அதிகாலை 4.30 மணிக்கு கணபதி ஹோமம், வேள்வி பூஜைகளும், அபிஷேக ஆராதனை பூஜைகளும் நடந்தது. மதியம் 12 மணிக்கு மகுடம் தட்டி சுவாமி மயான எல்லை குறிப்பும், உச்சி கால பூஜைகளும் நடந்தது.
மாலை 6 மணிக்கு பூரண கும்பம் ஏற்றி, முளைப்பாரி ஊர்வலம், அக்னிசட்டி எடுத்து ஊர்வலம் நடந்தது. இரவு 12 மணிக்கு சாமக்கொடை திறளை பூஜைகள் மற்றும் பூக்குழி திருவிழா நடைபெற்றது. பூசாரி சங்கரன் அக்னி சட்டி எடுத்தும், கையில் தீப்பந்தங்களுடனும், கையில் இரட்டைக் குழந்தைகளை வைத்துக்கொண்டும் பூக்குழி இறங்கினார். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்