search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆற்றூர் புளிமூடு அய்யா வைகுண்டசாமி நிழல்தாங்கலில் திருஏடு வாசிப்பு திருவிழா நாளை தொடங்குகிறது
    X

    ஆற்றூர் புளிமூடு அய்யா வைகுண்டசாமி நிழல்தாங்கலில் திருஏடு வாசிப்பு திருவிழா நாளை தொடங்குகிறது

    • திருவிழா நாளை தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
    • 30-ந்தேதி பட்டாபிஷேக திருஏடு வாசிப்பு நடக்கிறது.

    ஆற்றூர் புளிமூடு அய்யா வைகுண்டசாமி நிழல்தாங்கலில் திருஏடுவாசிப்பு திருவிழா நாளை(வெள்ளிக்கிழமை) தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. இதைெயாட்டி நாளை அதிகாலை 4 மணிக்கு பள்ளியுணர்த்தல், 5.45 மணிக்கு பணிவிடை, உகப்படிப்பு, மாலை 4.15 மணிக்கு பணிவிடை, 4.30 மணிக்கு திருஏடு வாசிப்பு, இரவு 8.30 மணிக்கு உகப்படிப்பு, 9 மணிக்கு அன்னதர்மம் ஆகியவை நடக்கிறது.

    விழா நாட்களில் தினமும் அதிகாலை 5 மணிக்கு பள்ளியுணர்த்தல், மாலை 4.15 மணிக்கு பணிவிடை, 4.30 மணிக்கு திருஏடு வாசிப்பு, இரவு 8.30 மணிக்கு உகப்படிப்பு, அன்னதர்மம் ஆகியவை நடக்கிறது.

    விழாவில் 8-ம் நாளான 28-ந்தேதி இரவு 8 மணிக்கு சுருள் நியமித்தல், 8.30 மணிக்கு திருக்கல்யாண திருஏடு வாசிப்பு, இரவு 10 மணிக்கு உகப்படிப்பு, 11 மணிக்கு அன்னதர்மம் நடக்கிறது.

    விழாவின் இறுதிநாளான 30-ந்தேதி காலை 10.30 மணிக்கு பணிவிடை, நண்பகல் 12 மணிக்கு உச்சிப்படிப்பு, மாலை 4.30 மணிக்கு பட்டாபிஷேக திருஏடு வாசிப்பு, இரவு 9.30 மணிக்கு உகப்படிப்பு, 10 மணிக்கு அன்னதர்மம் ஆகியவை நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×