என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
ஏமகண்டனூரில் ஆட்சி அம்மன் கோவிலில் ஆடிப்பூர மகா உற்சவம் இன்று தொடங்குகிறது
- இன்று மாலை 6 மணிக்கு மகா தீபாராதனை நடக்கிறது.
- நாளை ஸ்ரீ மங்கல மகா சண்டி ஹோமத்தின் மகாபூர்ணாகுதி நடக்கிறது.
கொடுமுடி ஏமகண்டனூரில் பிரசித்தி பெற்ற ஆட்சி அம்மன் கோவில் உள்ளது. மேலும் இந்த கோவிலில் சித்திரகுப்த, சந்திரகுப்த சமேத எமதர்மராஜாவுக்கு தனி சன்னதியும் உள்ளது. இந்த கோவிலில் 12-ம் ஆண்டு ஆடிப்பூர மகா உற்சவம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7.30 மணிக்கு மங்கள இசை மற்றும் கணபதி யாகத்துடன் தொடங்குகிறது.
இதைத்தொடர்ந்து ஸ்ரீவித்யாக்ரம ஆபரண பூஜை மற்றும் மகாயாகம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. மாலை 3 மணிக்கு காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சியும், 6 மணிக்கு ஸ்ரீதேவி மகாத்மியம் 700 ஸ்லோகங்கள் பாராயணமும், ஸ்ரீ சதுஷ்சஷ்டி யோகினி பைரவ பைரவி பலி பூஜையும், மகா தீபாராதனை நிகழ்ச்சியும் நடக்கிறது.
நாளை (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு மங்கள இசையுடன் ஸ்ரீ மகா சண்டி ஹோமம், வடுக பூஜை, கன்னியா பூஜை, சுமங்கலி பூஜை, சுகாசினி பூஜை, தம்பதி பூஜை, கோ பூஜை, ஸ்ரீ அஸ்வா பூஜை மற்றும் ஸ்ரீ கஜா பூஜைகள் நடைபெறுகின்றன. 3 மணிக்கு மேல் ஸ்ரீ மங்கல மகா சண்டி ஹோமத்தின் மகாபூர்ணாகுதி நடக்கிறது.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீமதி ராணி பூர்ணாம்பாள் தலைமையில் பக்தர்கள் செய்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்