என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
முக்காணி ஆதி பரமேஸ்வரி அம்மன் கோவில் கொடை விழா
- தாமிரபரணி ஆற்றிலிருந்து அம்பாளுக்கு மேளதாளத்துடன் திருமஞ்சன வீதி வலம் நடந்தது.
- இரவு ஒரு மணி அளவில் நகர்வலம் வருதல் நடைபெற்றது.
முக்காணி குருவித்துறை ஆதி பரமேஸ்வரி அம்மன் கோவில் கொடை விழா முக்காணி யாதவர் சமுதாயம் சார்பில் நடைபெற்றது. முதல்நாளில் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. நேற்று முன்தினம் கோவிலில் கணபதி ஹோமமும், அதனைத் தொடர்ந்து காலை 8 மணியளவில் யானை ஊர்வலத்துடன் தாமிரபரணி ஆற்றில் இருந்து அம்பாளுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து வர மேளதாளத்துடன் ரத வீதி வலம் வருதலும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர்.
அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகம், உச்சிகால பூஜையும் நடைபெற்றது. மாலையில் தாமிரபரணி ஆற்றிலிருந்து அம்பாளுக்கு மேளதாளத்துடன் திருமஞ்சன வீதி வலம் நடந்தது. இரவு 12 மணியளவில் அம்பாளுக்கு அலங்காரம் சிறப்பு தீபாராதனை, வாணவேடிக்கையும், அதனைத் தொடர்ந்து அம்பாள் இரவு ஒரு மணி அளவில் நகர்வலம் வருதல் நடைபெற்றது.
நேற்று காலையில் அம்பாள் மஞ்சள் நீராடி மேல தாளத்துடன் வீதி வலம் நடந்தது. விழா நாட்களில் தினமும் இரவு பட்டிமன்றம், பக்தி சொற்பொழிவு, திரைப்பட கச்சேரி, வாணவேடிக்கை, கரகாட்டம், வில்லிசை ஆகியவை நடைபெற்றது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்