என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
அம்மைய நாயக்கனூர் முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா
Byமாலை மலர்1 April 2022 7:17 AM GMT (Updated: 1 April 2022 7:17 AM GMT)
அம்மையநாயக்கனூர் முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு கேடய வாகனத்தில் அம்மன் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அம்மையநாயக்கனூர் முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா நடைபெற்று வருகிறது. முதல்நாளில், இளைஞர் நற்பணி மன்றத்தின் மண்டகப்படியையொட்டி கேடய வாகனத்தில் அம்மன் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முன்னதாக கொடி ஏற்றம், கம்பம் வெட்டுதல், கரகம் அழைத்தல் போன்ற நிகழ்ச்சியும், இரவில் கலைநிகழ்ச்சியும் நடைபெற்றது.
2-வது நாளான நேற்று முக்குலத்தோர் மண்டகப்படி சார்பில் அம்மன் பூச்சப்பர பவனி முக்கிய தெருக்கள் வழியாக சென்றது. அப்போது வழிநெடுகிலும் அம்மனுக்கு அபிஷேகம் செய்து பக்தர்கள் வழிபட்டனர். முன்னதாக இரவு இன்னிசை கச்சேரி, வாணவேடிக்கை நிகழ்ச்சி நடந்தது.
விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் தங்கப்பாண்டியன், செயலாளர் காசிபாண்டி, பொருளாளர் ராமகிருஷ்ணன், முக்குலத்தோர் மண்டகப்படி தலைவர் ரமேஷ்பாண்டியன் மற்றும் விழா நிர்வாக குழு, விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர். நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு சுகுமார் தலைமையில் அம்மையநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முக லட்சுமி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயபாண்டியன், சேகர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
2-வது நாளான நேற்று முக்குலத்தோர் மண்டகப்படி சார்பில் அம்மன் பூச்சப்பர பவனி முக்கிய தெருக்கள் வழியாக சென்றது. அப்போது வழிநெடுகிலும் அம்மனுக்கு அபிஷேகம் செய்து பக்தர்கள் வழிபட்டனர். முன்னதாக இரவு இன்னிசை கச்சேரி, வாணவேடிக்கை நிகழ்ச்சி நடந்தது.
விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் தங்கப்பாண்டியன், செயலாளர் காசிபாண்டி, பொருளாளர் ராமகிருஷ்ணன், முக்குலத்தோர் மண்டகப்படி தலைவர் ரமேஷ்பாண்டியன் மற்றும் விழா நிர்வாக குழு, விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர். நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு சுகுமார் தலைமையில் அம்மையநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முக லட்சுமி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயபாண்டியன், சேகர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X